-
21st March 2016, 12:50 AM
#1
Junior Member
Senior Hubber
Nadigar Thilagam Sivaji Ganesan Part-18
எந்த ஒரு நல்ல காரியம் துவக்கினாலும், அந்த கணேசப்
பெருமானை வணங்கித்
துவக்குதல் நலமென்பார்கள்.
நல்ல மனங்கள் மெச்சும் நடிகர்
திலகத்தின் புகழ் மணக்க,
திரியின் பதினெட்டாம் பாகம்
ஆரம்பித்து வைக்கிற நல்ல காரியம் துவக்குகிற நானும்
கணேசப் பெருமானை வணங்கித் துவக்குகிறேன்.
அன்னை பார்வதிக்கும், அப்பன்
பரமனுக்கும் அருந்தவப்புதல்வனாய் அவதரித்து,
அன்றாடங்கள் தருகிற துன்பங்கள் தாங்காமல் அழுதோடி வரும் கூட்டத்தின்
கவலைகள் தீர்த்து வைத்து,
"என்னைத் தேடி வந்தால் இன்பமுண்டு எல்லோருக்கும்"
எனும் உறுதி தந்து சிரிக்கின்ற
அந்த கணேசப் பெருமானை
மட்டுமல்ல...
அன்னை ராஜாமணியாருக்கும்,
அய்யன் சின்னையருக்கும்
அருந்தவப் புதல்வனாய் அவதரித்து,
அன்றாடங்கள் தருகிற துன்பங்கள் தாங்காமல் அழுதோடி வரும் கூட்டத்தின்
கவலைகள் தீர்த்து வைத்து,
"என்னைத் தேடி வந்தால் இன்பமுண்டு எல்லோருக்கும்"
எனும் உறுதி தந்து சிரிக்கின்ற
கலை தெய்வம் சிவாஜி கணேசப் பெருமானையும்
வணங்கித் துவக்குகிறேன்.
-
Post Thanks / Like - 2 Thanks, 5 Likes
-
21st March 2016 12:50 AM
# ADS
Circuit advertisement
Bookmarks