-
5th February 2013, 01:58 PM
#1621
Junior Member
Newbie Hubber

Originally Posted by
P_R
கிஞ்சித்தும் குறைவில்லாத என்று சொல்ல முடியுமா. நடிப்பைப் பத்தி சொல்கிறீர்களா, பாத்திரப்படைப்பையுமா?
பசும்பொன்னை எல்லா காட்சிகளும் நினைவில் இல்லை. ஆனால் அது பெரிய தேவர் அளவு பற்பல எண்ண ஓட்டங்கள், சூழ்நிலைகள் இருந்தனவா?
சிவாஜியின் சிறப்பம்சங்களில் ஒன்று - ஒரே நேரத்தில் பற்பல உணர்ச்சிகளை தெளிவாக வெளிப்படுத்துவது. கோவம்-அவமானம், கையாலாகாமை-வெறுமை, ஊர்த்தலைவனாக சோகம் - தந்தையாக பெருமிதம் - என்று மிக நுட்பமான தருணங்கள். அவை கமலுடைய எழுத்தின் ஆழத்தால் கைகூடியவை. இப்படிப்பட்டவருக்குத் தான் அப்படிப்பட்ட காட்சிகளை எழுத முடியும் என்பது needless to say.
பாரதிராஜாவின் signature ஒரு உணர்ச்சியை எடுத்துக்கொண்டு அதைத் தீவிரமாக வெளிப்படுத்துவது என்று சொல்ல நினைக்கிறேன். அத்தகைய ஒரு நடிப்பை சிவாஜியிடம் பெற்றுக்கொண்டார் என்று நினைக்கிறேன். நடிப்பளவில் ஒன்றுக்கொன்று குறை என்று சொல்வதற்கில்லை. அந்த கதை சொல்லும் முறை, காட்சி-படத்தின் அழகியலுக்குத் தகுந்தது. நீங்கள் குறிப்பிட்ட காட்சியில் அதைப் பார்க்கலாம்.
முதல்மரியாதை வேறு பிராணி - அதில் ஒரு sexual frustration undercurrent இருக்கும். அதை மிகக்கச்சிதமாகக் கையாண்டிருப்பார். அந்த flirtatiousness கொஞ்சம் பிசகினாலும் நன்றாக வந்திருக்காது. ஆனால் கதைக்கு அது மிக முக்கியம். என்றாலும் கூட ஒரு காட்சியில் அனேகமாக 'ஒரு உணர்ச்சி'யே மேலோங்கி நிற்கும். அதை சிறப்பாக வெளிக்கொணர்வதே அவர் பாணி என்பேன் (Let me know if any of you disagree, it would be interesting to hear).
ஆனால் கமல் - அவரது எழுத்துப் பொற்காலமான 89-95ல் எழுதிய கதைகளில் பல simultaneity of multiple emotions வந்துகொண்டே இருக்கும். சில நேரம் ஒரே காட்சியில் இருவேறு கதைமாந்தர்கள் இருவேறு விதமாக ரியாக்ட் செய்து கொண்டு இருப்பார்கள். ஒரு திரையெழுத்தாளராக தன்னைத் தானே challenge செய்துகொள்ளும் இடங்கள் அவை.
ஆனால் சிவாஜி கிடைத்ததும் ஒரே நபருக்கே ஒரே தருணத்தில் உருவாக்கி விளையாடியிருப்பார்கள். What fun he must have had writing those scenes with Sivaji in mind! He would have tried to up the challenge: let us make the emotions more and more complex, let us create more moments where the acting would shine through, where a crackle of the voice and demeanor would convey the emotion of the scene.
Vankv, உங்கள் இளைய மகன்-அப்பா insightஐ ரசித்தேன். கமலும் ஒரு கடைசிப்பிள்ளை.
அப்பாடா,
வந்தாரப்பா இந்த திரியின் கடை குட்டி செல்ல பிள்ளை.
உன்னுடன் 100% உடன் படுகிறேன். நடிகர்திலகத்தின் நடிப்பு, herzog இயக்கிய nosferatu போன்ற படங்களில் உபயோக படுத்த பட்டிருந்தால்,எத்தனை எத்தனை depth கிடைத்திருக்கும். நானே, அவரின் வித விதமான scene களை தொகுத்து ஒரு multi -layered திரைகதையில் கற்பனையில் பொருத்தி பார்ப்பேன்.
Last edited by Gopal.s; 5th February 2013 at 02:02 PM.
-
5th February 2013 01:58 PM
# ADS
Circuit advertisement
-
5th February 2013, 02:01 PM
#1622
Junior Member
Newbie Hubber
vanaja ,
Brilliant write-up with lot of depth.
Kaveri Kannan
Thanks a lot and it is nice hear from the man whose writing ,I enjoy a lot.
Vasu Sir,
Dharmam Enge-A good scene well chorepgraphed and designed fight. Thanks for Nice still on Banumathi.
-
5th February 2013, 02:40 PM
#1623
Senior Member
Diamond Hubber
நன்றி பிரபுராம் சார்.
அருமை. நடிப்பைப் பற்றித்தான் சொல்கிறேன். என்னுடைய ஆதங்கம் பசும்பொன் பேசவோ அலசவோ படவே இல்லை என்பது. குறிப்பிட்ட அந்த சீனில் "ச்சே !என்னடா இது" என்ற சலிப்பு பேசப்பட்டிருக்க வேண்டும் என்பதே! இன்னும் கூட அற்புதங்கள் இருக்கிறது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு திரியில் தங்கள் பதிவு வந்ததற்கு மிக மிக சந்தோஷம் கொள்கிறேன். தங்களுடைய எவர்க்ரீன் பதிவான தேவர் மகனை நான் எத்தனை முறை படித்தேன் என்று எனக்கே தெரியாது. அதுபற்றி கோபாலும் நானும் பலமுறை அலைபேசியில் உரையாடி மகிழ்ந்திருக்கிறோம். தேவர் மகன் பற்றிய பதிவுகள் மட்டுமல்லாமல் மற்ற தங்களுக்குப் பிடித்தமான பதிவு அலசல்களுக்கும் நீங்கள் வரவேண்டும் என்பதே அனைவருடைய விருப்பமும். நன்றி!
(நீங்கள் என் பெயரை தாராளமாய் குறிப்பிட்டு எழுதலாம்)
-
5th February 2013, 03:13 PM
#1624
Junior Member
Newbie Hubber

Originally Posted by
Vankv
PR குறிப்பிட்டது போல முதல் மரியாதை தேவரின் sexual frustration ஐப்பற்றி நம்ம கோபாலாண்ணா விரிவாக - a psychological analysis எழுதலாமே. there are many things to be said about that poor fellow, I mean Thevar!
தங்கச்சி,
எனக்கு மிக மிக பிடித்த முதல் மரியாதையை எழுத ஆசை. ஆனால்,பிரபுவிற்கும்,எனக்கும் ஒரு ஒப்பந்தம். அதை அவன்தான் எழுதணு ம்னு, அவனுக்கு நிபந்தனை போட்டு விட்டு,காத்திருக்கிறேன்.
-
5th February 2013, 03:14 PM
#1625
Junior Member
Seasoned Hubber
Madam congratulation for reaching the 500 posts. Pls reach 5000 posts
at the earliest.
-
5th February 2013, 03:16 PM
#1626
Moderator
Platinum Hubber
மூவா? முதல்வா! இனியெம்மைச் சோரேலே
-
5th February 2013, 03:19 PM
#1627
Moderator
Platinum Hubber

Originally Posted by
Gopal,S.
தங்கச்சி,
எனக்கு மிக மிக பிடித்த முதல் மரியாதையை எழுத ஆசை. ஆனால்,பிரபுவிற்கும்,எனக்கும் ஒரு ஒப்பந்தம். அதை அவன்தான் எழுதணு ம்னு, அவனுக்கு நிபந்தனை போட்டு விட்டு,காத்திருக்கிறேன்.
அவ்வளவு எல்லாம் pressure போடாதீங்க. கொஞ்ச நாளாவே செய்ய நினைச்சு நேரம் கிடைக்கமாட்டேங்குது. I'll feel if I am holding you all up.
இந்தத் திரி'ல நான் முதல்ல ஒரு வாசகன். அதுனால நீங்கல்லாம் பேசுங்க, நானும் ஜோதில ஐக்கியம் ஆயிக்குவேன்.
மூவா? முதல்வா! இனியெம்மைச் சோரேலே
-
5th February 2013, 03:21 PM
#1628
Junior Member
Seasoned Hubber
Shortly Mr Neyveli Vasudevan also will reach the magic figure of 3000 posts
and in another short time he will reach 300000000000000000 posts
-
5th February 2013, 05:19 PM
#1629
Junior Member
Newbie Hubber
பார்த்தசாரதி சார்,
குறுகிய காலத்தில் இரண்டு இன்ப அதிர்ச்சிகள் அடுத்தடுத்து. மிக அழகிய பதிவு.நான் சிறிதே சேர்க்க விழைகிறேன்.
இது நீங்கள் சொன்ன மாதிரி fantasy genre அல்ல. sur -realistic என படும் வகை. இந்த scene low key lighting with seperation lighting இல் கேமரா மேதை பிரசாத் விளையாடி இருப்பார்.
எனது கைகள் நீட்டும் போது வரிகளில், தனது கையை தானே தூர படுத்தி ,அந்நிய படுத்துவார். follow thru eye movement இந்த alienation ஐ highlight செய்யும். பொதுவாக இந்த பாட்டின் hand -eye coordination with graceful foot movement ஒரு தேர்ந்த ballet கலைஞனை நினைவு படுத்தும்.
இந்த பாடல் திரை பட வரலாற்றில் நீடித்த குறிஞ்சி மலர். நன்றி சாரதி.
-
5th February 2013, 05:45 PM
#1630
Junior Member
Devoted Hubber
இந்த சிறுவனையும் மதித்து தன் அருமையான பதிவை எனக்கு சமர்ப்பணம் செய்துள்ள வாசு அவர்களுக்கு மனமார்ந்த நன்றி..
வனஜா அம்மணியாரின் தேவர் மகன் அலசல், அசத்தல்.கேரளாவில் பால் பாயசம் செய்வது ஒரு புது முறையில்.வாய் அகன்ற ஒரு அண்டாவில் பாலை சுண்டக்காய்ச்சுவார்கள்.பால் காய்ந்து காய்ந்து குறுகி வரும்.அதன் வெள்ளை நிறம் மறைந்து சற்றே மஞ்சள் நிறம் வரும் போது சர்க்கரையை சேர்த்து சிறிது நேரத்தில் பாதம்,குங்குமப்பூ சேர்த்து இறக்குவார்கள்.ஒரு தேக்கரண்டி சாப்பிட்டால் உச்சி முதல் பாதம் வரை இனிப்பு பரவுவது தெரியும்.கண்கள் கிறங்கும்..1952 இல் கறக்கப்பட்ட பசும் பால் சுமார் நாற்பது ஆண்டுகள் சுண்டக்காய்ச்சப்படுகிறது.
கமல்,எனும் சர்க்கரை சேர்க்கப்பட்டு,திரைக்கதை எனும் பாதம்,இளைய ராஜா எனும் குங்குமப்பூ சேர்த்து பரிமாறப்படுகிறது.எததனை குடித்தாலும் அலுக்குமா என்ன ??
அறுசுவை நடராஜன் (வனஜா அம்மணி) செய்த பாயசத்தின் ருசி , சிலகாலம் மறைந்திருந்த நள மகராஜனையும் வெளிக்கொணர்ந்து விட்டது.Welcome Back Prabhu..Keep posting..
நாம் எல்லோரும் தமிழில் எழுதிக்கொண்டிருக்க, காவேரி கண்ணனோ தமிழில் விளையாடிக்கொண்டிருக்கிறார்.
இவர் எழுத்து, மூன்று நிறம் தெரியும் பொறை உள்ள மைசூர் பாக்..(க் மிகவும் முக்கியம்;மைசூர் பா என்ற சமீப கால கொடுமை, மணிரத்னம் இயக்கத்தில்,"தில்லானா மோகனாம்பாள்" எடுப்பதற்கு நேர்)
இதோ ஜெயா சானலில் புதியபறவை பறந்து கொண்டிருக்கிறது.இந்த ஒரு படம் கி.பி 2113 இல் கூட fresh ஆக இருக்கும்..
ஆமாம்! வியட்நாம் வீட்டில், ஜெயா தெரியுமோ?
Bookmarks