Quote Originally Posted by softsword View Post
enakku andha yaanai mattum yaen bolda irukkunu sollunga...
"பிள்ளை"யார் மறந்து "யானை"யார் தோன்றுவது தான் - அது பிடித்துப் போகக் காரணம்!

தாம்பரம்-வேளச்சேரி சாலை விலக்கில் - மாடம்பாக்கம்-னு ஒரு ஊர் இருக்கு; அங்கேயும், திருவேற்காட்டிலேயும் இருக்கும் சிவன் கோயில்கள் 10ஆம் நூற்றாண்டின் இடைப்பகுதியில் (960 ce வாக்கில்) கட்டப்பட்டவை. அவ்விரு கோவிலின் கருவறை - யானை வடிவில் இருக்கும்; உள்ளே இருக்கும் "லிங்கமும்" லிங்கமன்று! "நடுகல்" / "முலைக்கல்" எனப்படும் தமிழ் மரபின் மறத்திணை தலைவர்க்கு எழுப்பப்படும் நினைவுச் சின்னங்களை - பிற்பாடு 'வர்ணப்பசுக்கள்' லிங்கங்களாக மாற்றியது புரியும்!

யானை வடிவிலான கருவறை - வீரத்தலைவனுக்கான சின்னம் - இது மறைக்கப்பட்டு அதன் மேல் சமயச் சாயம் பூசப்பட்டு விட்டது; அதே போல், திராவிட இந்தியக் கண்டத்தின் பழங்கால பண்பாட்டு/வெற்றிச் சின்னமான யானை - 'வர்ணக் கூட்டத்தாரால்' உள்வாங்கப்பட்டு - பிள்ளையாராகிய வர்ண சமயச் சின்னமாக உருமாறுகிறது. இது வரலாற்று அகழ் பார்வை.

இந்தப் பார்வையைத் தொட்டுச் சொல்லுகிறது(உட்கிடையாக) என் கவிதையின் இறுதியில் வரும் "யானை".