Results 1 to 10 of 503

Thread: KAVICH CHAARAL [ SIVAMAALAA]

Threaded View

  1. #10
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Oct 2005
    Location
    My
    Posts
    1,485
    Post Thanks / Like
    Quote Originally Posted by chinnakkannan View Post
    முதலில் ஒரு நேரிசை ஆசிரியப்பாவில் முயலலாம் என நினைத்தேன்.. அதற்கு முன் வெகு காலம் முன் வெண்பா கற்கையில் எழுதிப் பார்த்தஒரு வெண்பா(?)
    கடைசி இருவ்ரி மாற்றி இடுகிறேன்..

    வானத்தைப் பார்த்து வரும்மழை என்றெண்ணி
    கான மயிலும் களிநடனம் ஆடிவிடும்:
    மேகம் கலைந்துவிட மண்ணும் நனையாது
    வேகமாய் ஆடும் ஒயிலாட்டம் நிற்காது
    கற்பனை வெள்ளம் கரைபுரண் டோடுகையில்
    சொற்பொருள் மாறிவிட்ட தே..

    (Hope you are cool now)
    அன்புடன்
    சி.க.


    நீங்கள் சொல்வது: மயில்கள் தெரியாத்தனமாக ஆடிவிட்டன. மண்ணோ சிறிதும் நனையவில்லை. ஒயிலாட்டம் ஆடுகிறவர்கள், மழை வருகிறதோ இல்லையோ அவர்கள் தொடர்ந்து ஆடிக்கொண்டிருந்தார்கள். அதாவது, ஒரு புறம் மயில் மழை இவைகளுக்கும் மற்றொருபுறம் ஒயிலாட்டக்கார்களுக்கும் தொடர்பொன்றுமில்லை. உங்களுக்கு மட்டும் எப்படி வெள்ளம் கரைபுரண்டது, மழையே இல்லாதவேளையில்! உங்களுக்குக் கற்பனையில்தான் கரைபுரள்கிறது என்றாலும், நீங்கள் சொன்ன இயற்கைக் காட்சிகள், நடனங்களோடு என்ன பொருத்தம் என்று நீங்கள்தான் விளக்கவேண்டும்.

    மழை வராவிட்டலும் ஆடிய மயில்கள்போல, கரை புரளாவிட்டலும் நீங்கள் சொற்பிழை செய்திருந்தால் அது பொருத்தம் என்று சொல்லலாம். அதாவது நான் சொல்வது உவமை, மற்றும் காட்சிப் பொருத்தங்களை!

    மேகங்கள் கலைந்துவிட்டதனால் ஏமாந்துவிட்ட மயில்போல, கற்பனை உருப்பெறாததனால் சொற்பிழையில் ஏமாந்துவிட்டேன் என்றால் இன்னும் பொருத்தம்.

    Let us hear from chi.ka avl.

    anbudan
    Last edited by bis_mala; 17th February 2013 at 04:31 PM.
    B.I. Sivamaalaa (Ms)

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •