-
18th May 2013, 07:10 AM
#11
Senior Member
Seasoned Hubber

Originally Posted by
Gopal,S.
இந்தியாவின் ஒரே உலக அதிசயம்.-பாகம்-31
.....
இந்த முறையில் சராசரியாக நாம் வாழ்க்கையில் காட்டும் முகபாவங்கள், வெளியீட்டு முறைகள் நிராகரிக்க பட்டு , நடிகர்கள் முகத்தை ரப்பர் போல இஷ்டத்துக்கு வளைத்து, கண் மூக்கு வாய் எல்லாவற்றையும் மிக கொடூரமாக உபயோக படுத்தி, வலிதரும் எண்ணங்களை,மிக மிக வலிமையுள்ள நினைவெழுச்சிகள்,மிகை உணர்ச்சிகளை ,நடிப்பை உள்மன போராட்ட நிலைக்கு எடுத்து சென்று , பார்ப்பவரின் ஆத்மாவை உலுக்கி எடுக்க வலியுறுத்தினார். இந்த முறை நடிப்புக்கு இந்தியாவில் ஒரு நடிகரும் தகுதி பெற முடியவே முடியாது ,நம் ஒரே உலக மேதையை தவிர.
....
Perfect statement
நடிகர்திலகம் மட்டுமே மற்றவர்களால் இஷ்டப்படி இயக்கி கொள்ள முடியாத involuntary muscles என்பதையும் அவர் இயக்கி கொள்ளும் திறமை பெற்றிருந்ததால்(ஒரு டாக்டர் குறிப்பிட்டதாய் ஞாபகம்) அவரால் மற்றவர்களை விட அதிகமாக முகபாவங்களை காட்டி (அமெரிக்க நடிப்பு பள்ளி ஒன்றில் இது நிரூபிக்க பட்டது)இந்த வகை நடிப்பிலும் தேர்ந்து விளங்கினார்.
பல்வேறு சமயங்களில் பல்வேறு மருத்துவர்கள் இதை கூறியுள்ளனர். அவருடைய குடும்ப டாக்டர் ராதாகிருஷ்ணன், டாக்டர் ரங்க பாஷ்யம், போன்ற உலகப் புகழ் பெற்ற டாக்டர்கள் இதை கூறியுள்ளனர். அந்தந்த கால கட்டத்தில் நடிகர் திலகத்தைப் பற்றிய இவர்களுடைய அபிப்ராயம் கோரப் பட்ட போது கிடைத்தவை இந்தத் தகவல்கள்.
எதற்கு எங்கெங்கோ போவானேன்?புதிய பறவை climax காட்சி ஒன்று போதுமே! அதை chekhov பாணியில் ஆன stylised நடிப்பு என்றுதானே பார்த்தோம்?ஆனால் அதில் முழு காட்சியிலும் Astraud cruelty முறை பயன் படுத்த பட்டு அந்த காட்சி நம் ஆத்மாவில் ஊடுருவி நம் sub -conscious level உணர்விலும் ஊடுருவும் அதிசயத்தை நிகழ்த்தி Focus reach என்ற Acting Miracle நிகழ்ந்தது.
பிரமை பிடித்து உட்கார்ந்திருக்கும் நடிகர்திலகம் சித்ராவின் அண்ணன் pilot ராஜு வந்து விட்டதை படி படியாய் உள்வாங்கி அப்படியே பிரமை நீங்கி ,stress relieve ஆகி, ecstatic உணர்வை நம்பிக்கையின் உச்சத்திற்கே செல்வதை காட்டும் அந்த expression .
ரேகையைப் பற்றி சொல்லும் போதே இது ஆரம்பித்து விடும்.
அதே மாதிரி confession முடித்து விட்டு train இல் சித்ரா உடல் சிதையும் காட்சியை மனக்கண்ணால் பார்த்து அலறும் போது கொடுக்கும் expression .
மனக்கண்ணால் காட்சியை உருவகப் படுத்தி அதற்கு REACTION கொடுப்பதும் தனிக் கலை. இந்த வகை நடிப்பு வெளிநாட்டுத் திரைப்படங்களில் அதிகம் காண முடியாது. நம் நாட்டிலும் இதனை சித்தரிக்க வளையம் வளையமாய் ஒரு fillerஐப் போட்டு விட்டு flash back காட்சிக்குள் போய் விடுவார்கள். ஆனால் நடிகர் திலகம் மட்டுமே அந்த காட்சியின் தொடர்பை தன் நடிப்பில் கொண்டு வந்து அதனை முழுமையாய் முடித்து வைப்பார். This is possible only to NT.
That is why I strongly pronounce that Nadigar Thilagam Acting is a School in itself. There is a Separate School of Acting of NT and we can proudly proclaim it as Sivaji Ganesan School of Acting which would serve as an encylopaedia for actors throughout the globe.
எனவே நடிகர் திலகம் நடிப்பிலக்கணம் என்பது தனி பாடம். அவருக்கு முன் இருந்த பாடங்களில் குறிப்பிடப் படாத பல்வேறு வகையான நடிப்பு முறைகளை அவருடைய நடிப்பில் காணலாம். அவருக்குப் பின்னர் அதன் தாக்கம் இல்லாதவர்களே கிடையாது என்ற அடிப்படையில் பார்த்தோமானால் சிவாஜி கணேசன் நடிப்பிலக்கணம் - Sivaji Ganesan School of Acting is the BEST, FIRST AND ROLE MODEL FOR ACTING FOR THE ACTORS THROUGHOUT THE WORLD, IRRESPECTIVE OF THE NATIVITY, ORIGIN, CULTURE.
Last edited by RAGHAVENDRA; 18th May 2013 at 07:13 AM.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
18th May 2013 07:10 AM
# ADS
Circuit advertisement
Bookmarks