-
22nd June 2013, 09:13 PM
#701
Junior Member
Devoted Hubber
MURASU தொலைகாட்சியில் பலமுறையாக ......! திரையிடப்பட்டு வந்த மெகா ஹிட் திரைப்படம், நடிக மாமன்னன் திரை உலகின் சித்தர் சிவாஜி கணேசன் பார்த்திபனாக, விக்ரமனாக அனைத்து நடிகர்களுக்கும் நாயகன், வில்லன் பாத்திரத்தை எப்படி நடிக்கவேண்டும் என்று கற்றுகொடுத்த "உத்தம புத்திரன்"
-
22nd June 2013 09:13 PM
# ADS
Circuit advertisement
-
22nd June 2013, 09:18 PM
#702
Junior Member
Newbie Hubber

Originally Posted by
NTthreesixty Degree
அட .....கோபால் சார் ....தாங்களா இப்படி கூறுவது? அதுவும் lorry driver rajakannu மற்றும் 80 களில் வந்த நடிகர் திலகம் திரைப்படங்களை பற்றி கூறுவது.......என்ன அதிசயம் !!
நீங்கள் தான் 80 களில் வந்த திரைப்படங்களை கரித்து கொட்டுவீர்களே? ஏன் இந்த திடீர் மனமாற்றம் ? இதை போல மிருதங்க சக்ரவர்த்தி, ராஜ ராஜ சோழன்(80 களில் வந்த திரைப்படம் இல்லையென்றாலும் ), கருட சௌக்யமா?, திரைப்படத்தில் உங்கள் எண்ணங்களில் ஏதேனும் மாற்றம் உள்ளதா? பொதுவாக முதல் மரியாதை மற்றும் தேவர் மகன் (திரு.கமலஹாசன் படம் என்பதால்) இந்த இரண்டு படங்களை மட்டுமே பாராட்டியவர் ஆயிற்றே தாங்கள் !
ஏதோ நடக்கிறது ! ஹ்ம்ம்...! நடப்பவை நல்லதாக இருந்தால் சரி !
ஏன் துணையை மனமுவந்து பாராட்டியுள்ளேனே ?
-
22nd June 2013, 10:06 PM
#703
Junior Member
Devoted Hubber
நம்முடைய திரி நண்பர்களுக்கு -
மையம் திரியில் முதன் முதலாக நாட்டிய பேரொளி பத்மினி அவர்களின் பேட்டி - நடிகர் திலகம் பற்றி அவர் உரைப்பது கேட்டாலே மெய்சிலிர்கிறது ! சிவாஜி மாதிரி இன்னொரு நடிகர் வரமுடியாது ! அவரோடது ஒரு Era !
Part 1
-
23rd June 2013, 12:06 AM
#704
தவிர்க்க இயலாத சூழல், இரவு நேரங்களில் ஏற்படும் குறைந்த மின் அழுத்தம் ஆகியவற்றின் காரணமாக ஒரு வாரமாக எந்தப் பதிவும் இட முடியவில்லை. Sorry. பதிவுகளிட்டு கலக்கிக் கொண்டிருக்கும் அனைவருக்கும் வாழ்த்துகள்.
கார்த்திக்,
உங்கள் பாராட்டுகளுக்கு மிக்க நன்றி. கிட்டத்தட்ட ஒரு பத்து பதினைந்து வருடங்கள் அதாவது 1967 முதல் 1982 வரை என்று வைத்துக் கொள்ளலாம் அந்தக் காலக் கட்டங்களில் நடைபெற்ற திரைப்பட அரசியல் நிகழ்வுகள் நமது நெஞ்சிலே பசுமரத்தாணி போல பதிந்திருப்பதால் அந்த நாட்களைப் பற்றி எழுதும் போது நடையில் ஒரு உற்சாகம் வருகிறது.
இதை அடிக்கடி தொடர முயற்சிக்கிறேன்.
அன்புடன்
-
23rd June 2013, 12:12 AM
#705
வாசு சார்,
முதலில் பிடியுங்கள் உங்களுக்கான பாராட்டுகளை. நாயகியர் விஷுவல் தொடர், சண்டைக் காட்சி தொடர் இவற்றை தொடர்ந்து ஆடை அலங்கார அணிவகுப்பு தொடரும் அற்புதம். இதை ஆரம்பிக்க போகிறீர்கள் என் நீங்கள் சொன்னபோது உங்களுக்கு வாழ்த்து தெரிவித்த நான் என்ன நினைத்திருந்தேன் என்றால் நடிகர் திலகம் ஆடை அலங்காரத்தில் ஜொலித்த சில பல படங்களை நீங்கள் மேற்கோள் காட்டப் போகிறீர்கள் என்று. ஆனால் முதல் படம் தொட்டு ஒவ்வொன்றையும் அலச போகிறீர்கள் என்பது sweet surprise. அதிலும் திரும்பிப் பார் பதிவின் மூலமாக இந்த திரியின் Super Star பதிவாளர் என்ற நிலைக்கு உயர்ந்து விட்டீர்கள் என்று சொன்னால் அது மிகையில்லை. நமது மையத்தின் வேறு சில section-களில் மட்டுமே தென்படும் ஒரு சிலரை [சின்ன கண்ணன் மற்றும் காட்டு பூச்சி போன்றவர்களை எல்லாம்] இந்த திரியின் பதிவாளர்களாக மாற்றியிருக்கிறீர்கள் என்று சொன்னால் அது பாராட்டப்பட வேண்டிய விஷயம்.
[சின்ன கண்ணன், நீங்கள் மதுரையா? என்னைப் போல் ஒருவன், தங்கம் என்ற வார்த்தைகளைப் பார்த்ததும் ஒரே சந்தோஷம்]
பாச மலர் படத்தின் வெள்ளி விழாப் புகைப்படங்களுக்கு நீங்கள் நன்றி சொல்ல வேண்டியது நடிகர் R.S சிவாஜி அவர்களுக்குதான். தயாரிப்பாளர் நடிகர் M.R சந்தானம் அவர்களின் மகனும் இயக்குனர் சந்தான பாரதி அவர்களின் சகோதரருமான இவர்தான் இந்த புகைப்படங்களை முதன் முதலாக Facebook-ல் அப்டேட் செய்தார்.[இந்தப் படத்தை மோகன் ஆர்ட்ஸ் மோகன் அவர்களுடன் இணைந்து தயாரித்தவர் M.R சந்தானம் எனபது உங்களுக்கு தெரிந்த செய்தி. பின்னர் அவர்கள் இருவரும் இதே பானரில் குங்குமம் படத்தையும் தயாரித்தனர்].ஆனால் அங்கிருந்து அதை மற்றவர்கள் எடுத்து போட்டுக் கொண்டனர்.
இனி உங்கள் main விஷயத்திற்கு வருகிறேன். ஞான ஒளி திரைப்படத்தை நமது NT FAnS அமைப்பின் சார்பில் நிச்சயமாக திரையிடுவோம். ஆனால் அது நண்பர் கோபால் வரும் போது இயலுமா என்று தெரியவில்லை. காரணம் கோபால் அடுத்த மாதம் வருவதாக சொல்லியிருக்கிறார்.
அடுத்த மாதம் [ஜூலை] அருண் போலவே மிக முக்கியமான நபர் ஒருவர், அவர்தம் [திரைப்பட] வாழ்க்கையில் சிறப்பான கட்டத்தை கடக்க இருக்கிறார். அவருக்கு உரிய மரியாதை கொடுத்து சிறப்பு செய்ய வேண்டுமென்று முயற்சிகள் எடுத்துக் கொண்டிருக்கிறோம். அநேகமாக ஜூலை 14-ந் தேதி அந்த நிகழ்வு இருக்கலாம். ஆகையால் அதற்கு அடுத்து வரும் மாதங்களில் நாம் ஆண்டனி/அருண் இருவரையும் வரவேற்போம்.
அன்புடன்
-
23rd June 2013, 12:15 AM
#706
சின்ன கண்ணன் வேலாலே விழிகள் பற்றி சொன்னார். அவருக்காக இந்த பதிவு.
மெல்லிசை மன்னரின் ஒரு இசை நிகழ்ச்சியில் கேட்ட தகவல். பொதுவாக கர்நாடக இசைக் கச்சேரிகளில் பல்வேறு ராகங்களில் அமைந்துள்ள பல்வேறு கீர்த்தனைகள் பாடப்படும். ஆனால் ராகங்களில் காலையில் பாடும் ராகம் மாலையில் பாடும் ராகம் என்றெல்லாம் உண்டு. அவற்றை முறையற்ற நேரங்களில் பாடினால் ராக தோஷம் ஏற்படும் என்றும் அது பாடகருக்கு நன்மை செய்யாது என்று ஒரு நம்பிக்கை. ஆனால் கச்சேரி என்று வந்து விட்டால் இன்ன ராகத்தை பாட மாட்டேன் என்றெல்லாம் ஒதுக்க முடியாது. ஆகவே ராக தோஷம் ஏறபடக் கூடிய பாடல்களை பாடிய பிறகு கச்சேரியை நிறைவு செய்வதற்கு முன் தோஷ நிவாரணியான ராகத்தில் அமைந்துள்ள பாடலை பாடகர் பாடி தோஷ நிவர்த்தி செய்துக் கொள்வது வழக்கமாம்! அப்படி தோஷ நிவர்த்தி தரும் ராகம் மத்யமாவதி. அந்த மத்யமாவதி ராகத்தில் அமைந்திருக்கும் பாடல்தான் வேலாலே விழிகள். இந்த தகவலை சொல்லிவிட்டு அந்த மெல்லிசை நிகழ்ச்சியில் இந்த அமுதத்தை செவிக்குணவாக வழங்கினார்கள்!
அன்புடன்
-
23rd June 2013, 12:16 AM
#707
பாஞ்சாலகுறிச்சியின் சிங்கத்தை வரவேற்க தயாராவோம். நமது திரியில் மட்டுமல்ல. மும்பை நகரத்தில் இந்த சிங்கத்திற்கு மெருகேற்றும் வேலை மிக சுறுசுறுப்பாக நடைபெறுகிறதாமே ? படத்தின் உரிமையை வைத்திருப்பவர்கள் இப்போதே வணிகம் பேச ஆரம்பித்து விட்டனராமே? City NSC ஏரியாவின் வணிக தொகையை கேட்டாலே அதிருகிறதாமே?
அன்றும் இன்றும் என்றென்றும் சாதனை சித்திரத்தின் மறு பெயராக விளங்கி கொண்டிருக்கும் சிம்மக் குரலோனின் Magnum Opus-ஐ வரவேற்க தயாராவோம்!
அன்புடன்
-
23rd June 2013, 01:12 AM
#708
Senior Member
Seasoned Hubber

Originally Posted by
Murali Srinivas
அடுத்த மாதம் [ஜூலை] அருண் போலவே மிக முக்கியமான நபர் ஒருவர், அவர்தம் [திரைப்பட] வாழ்க்கையில் சிறப்பான கட்டத்தை கடக்க இருக்கிறார். அவருக்கு உரிய மரியாதை கொடுத்து சிறப்பு செய்ய வேண்டுமென்று முயற்சிகள் எடுத்துக் கொண்டிருக்கிறோம். அநேகமாக ஜூலை 14-ந் தேதி அந்த நிகழ்வு இருக்கலாம். ஆகையால் அதற்கு அடுத்து வரும் மாதங்களில் நாம் ஆண்டனி/அருண் இருவரையும் வரவேற்போம்.
அன்புடன்
பிராணநாதா, பிரபோ, லிங்கேஸ்வரா, சித்தமெல்லாம் நிறைந்தவனே, என்னைப் பார்க்க மாட்டாயா...
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
23rd June 2013, 07:11 AM
#709
Senior Member
Seasoned Hubber
Congratulations Sowri Sir for reaching 100 valuable posts within a short span of time. Keep on posting more and more to reach many landmark numbers

This image is in 3D. view with 3d glasses.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
23rd June 2013, 07:31 AM
#710
Junior Member
Newbie Hubber
அட பாவிகளா,
வேண்டியவனாக இருந்தால் பத்து, இருபதெல்லாம் கொண்டாடி மகிழ்வீர்கள் போல ?
நூறுக்கு வாழ்த்துக்கள்.
Bookmarks