-
4th September 2013, 09:31 PM
#1741
Senior Member
Seasoned Hubber
வாசு சார்
கோபால் சாரின் ஆய்வுக் கட்டுரை ஒரு பக்கம் என்றால் மறுபக்கம் தங்களுடைய ஆய்வுக் கட்டுரை என ஞான ஒளி திரைக்காவியத்தை அக்கு வேறு ஆணிவேறாக அலசி விட்டீர்கள். இனி இதற்கு மேல் மற்றவர்களுக்கு புதியதாய்த் தோன்றினால் தான் உண்டு.
சூப்பர்... கலக்குங்கள்...
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
4th September 2013 09:31 PM
# ADS
Circuit advertisement
-
4th September 2013, 09:50 PM
#1742
Senior Member
Devoted Hubber

Originally Posted by
vasudevan31355
ஆண்டனியின் அட்டகாசங்கள். (ஒரு கூர்பார்வை)
இன்னும் அந்தக் காட்சி தொடரும். "...... ஆண்டவன் இந்தப் பயலை எனக்குக் கொடுத்தாரு... இவன் மூலமா உன்னைக் கொடுத்தாரு" என்று சாரதாவிடம் பாதிரியார் கூற நடிகர் திலகம் சற்றே உணர்ச்சிவசப்பட்ட நிலையில் பாதிரியாரின் மடியின் கீழ் சிறு குழந்தை போல அமர்ந்து லேசான சிரிப்புடன் (உள்மனதில் தான் பட்ட கஷ்டங்களை நினைத்தபடி) அவரது கைகளைப் பிடித்தபடியே அமர்ந்திருப்பார். "பாவம்... வாழ்க்கையிலே எந்தவிதமான சுகத்தையும் காணாதவன்" என்று பாதிரியார் சாரதாவிடம் சொல்லி இவரிடம் இரக்கம் கொள்ளும்போது அமைதியான விசும்பலுடன் பாதிரியாரின் கைகளை இறுகப் பிடித்து அழுத்த முத்தங்கள் கொடுத்தபடியே முத்திரை நடிப்பைப் பதித்து பார்ப்பவர் இதயங்களை இடி விழுந்தது போல கலங்க வைப்பாரே! (எப்பேர்ப்பட்ட ஆய்வாளரும் இந்த ஒரு காட்சியில் நடிகர் திலகம் நடிக்கும் நடிப்புக்கான அர்த்தத்தை விளக்கி விடுங்கள் பார்ப்போம்!). அதுதான்யா என் தெய்வம்...எவராலும் நெருங்க முடியாத நடிகர் திலகம். இந்தக் காட்சியில் நான் எத்தனை முறை கதறி இருக்கிறேன் என்பதை என்னால் கூற முடியாது. நெஞ்சடைக்க, வாயடைக்க மேற்கண்ட பாராவை எழுதுவதற்குள் பெரும்பாடு பட்டு விட்டேன். இனி எழுதத் திராணி இன்று இல்லை.
நாளை தொடர்கிறேன்.
இனம் புரியா மனச் சுமையுடன்
ஆண்டனியின் அடிமை வாசுதேவன்.
டியர் வாசு சார்,
மிக நீண்ட இடைவெளிக்கு பின் தங்கள் அபிமான ஞான ஒளி அற்புத பதிவின் மூலம் வந்து உள்ளீர்கள்.
திரு கோபால் அவர்கள் கூறியது போல் தாங்கள் பதிவு செய்த ஸ்டில் களை பார்க்கும் போது தெரியாத நுணுக்கங்கள் தங்களின் நீண்ட உணர்ச்சி மிக்க பதிவை கண்டவுடன் தெரிந்தது.
அன்றும் இன்றும் என்றும் நடிகர்திலகத்தின் நிரந்தர ரசிகன்
-
4th September 2013, 10:14 PM
#1743
Junior Member
Devoted Hubber

Originally Posted by
vasudevan31355
திரியின் புதிய அங்கத்தினர் திரு.ராமச்சந்திரன் சார்,
வருக! வருக! நடிகர் திலகத்தின் புகழ் பாட வருக!
வரவேற்று வாழ்த்தும்
நெய்வேலி வாசுதேவன்.
ஞானஒளி திரைப்படத்தில் வரும் பாதிரியாரின் குரலில் -
யாரது ......வாசுதேவனா .....இபுடிதான் நீ சின்ன வயசுல....எதுகெடுத்தாஆஆஆஆஆலும் பொசுக்கு..பொசுக்குன்னு கொவிசுப்பே...அபெல்லாம் உனக்கு இந்த ஞானஒளி ஒலிச்சித்திரம் தான் நான் போட்டு காட்டுவேன்.....மறந்துட்டியா...இங்க ரெகுலரா வாடா.....மொரட்டு பயலே ......
-
4th September 2013, 10:21 PM
#1744
Junior Member
Devoted Hubber
Dear RC,
Welcome to the family of nadigar thilagam hubbers forum.
Heartiest thanks for your contributions, comments etc., that have come, that are about to come and that will come !!
Dedicating a song for you
Regards
-
5th September 2013, 07:31 AM
#1745
Junior Member
Newbie Hubber
உலக தமிழர்களின் ஒரே பெருமையான நம் தேவர் குலத்தில் உதித்த நடிப்பு தேவன் பிறந்த விழா கொண்டாட்டங்களுக்கு தயாராகி கொண்டிருக்கும் ரசிக பக்த நிர்வாகி மக்களுக்கு எனது பணிவான வேண்டுகோள்.
அங்கீகாரம் வேண்டுவது மனிதனின் பிறந்த குணம். அவற்றை உணர்ந்து மற்றவர்களை அங்கீகரித்தவர்களே சிறந்த தலைவர்களாக,நிர்வாகிகளாக ,மனிதர்களாக உயர முடிந்தது. இதை public relations ,marketing ,Loyalty building என பல கோணங்களில் பார்க்க வேண்டும். உலகத்திலேயே அதி உன்னத திறமையின் பின் கட்டுண்டிருக்கும் நாம் நம்மவர்களை அங்கீகரிக்கவும் கற்க வேண்டும்,அதுவும் உரிய நேரத்தில்.
அவரோடு பணி புரிந்த,நம்மிடையே வாழும் கலைஞர்களை அங்கீகரித்து கவுரவிப்பது முக்கியம். மறுக்கவில்லை. ஆனால் அதே மேடையில், அவர் புகழை தரணியில் காலமெல்லாம் நிலைத்திருக்க பலன் கருதாது உழைக்கும் நம் கிரிஜா ,ராகவேந்தர்,பம்மல் சுவாமி நாதன், பேரவை சந்திர சேகர் போன்றவர்களையும் மேடையேற்றி மரியாதை செய்வது இன்றியமையாதது அல்லவா?
சச்சுவும் ,ராஜசுலோச்சனாவுமா ,விழுந்து விழுந்து அவர் மணி மண்டபத்துக்காகவும்,ஆவணங்கள் சேர்த்து சாதனைகளை உலகுக்கு ஓங்கி சொல்லவும்,வெப்சைட் தொடங்கி உயிரை கொடுத்து தினமும் அதை அப்டேட் செய்து, ஊரூராக நிகழ்ச்சிகள் நடத்தி பத்திரிகைகள் நாளிதழ்கள் நம்மை கவனிக்கும் படி செய்கின்றனர்?
அங்கீகாரத்தின் மூலம் பழைய மனமாச்சரியங்களை துறந்து அவருக்காக ஒருங்கிணைந்து பாடு பட வேண்டிய தருணம் வந்து விட்டதை கர்ணன் உணர்த்தவில்லையா?
நான் என் பணியை செவ்வனே செய்து விட்டேன்,அவரை உலகுக்கு எப்படி உணர்த்த வேண்டுமோ அப்படி உணர்த்தி விட்டேன் எனது எழுத்துக்களின் மூலம். எனக்கு அங்கீகாரம் வேண்டவில்லை .ஏனென்றால் எனது தொழிலும் வாழ்க்கை வெற்றியுமே அதை எனக்கு வழங்கி விட்டதால் அது எனக்கு தேவையுமல்ல. இது எனக்கு ஒரு ஆத்ம திருப்தியே. ஆனால் எல்லோரும் அப்படி எண்ண வேண்டிய தேவையில்லையே?
தயவு செய்து கவனிக்க வேண்டியவர்கள் கவனிப்பார்களா?
Last edited by Gopal.s; 5th September 2013 at 07:37 AM.
-
5th September 2013, 08:27 AM
#1746
Senior Member
Diamond Hubber
என்னைக் கேட்டால் இந்த மணிமண்டப விடயத்தில் அரசுகளையோ , நன்றி கெட்டவர்களால் நிரம்பியுள்ள நடிகர் சங்கத்தையோ எதிர்பார்த்திருப்பதில் பயனில்லை . சிவாஜியின் குடும்பத்தினர் நினைத்தால் அவர்களே இதை செய்ய முடியும் .அவர்களோடு ரசிகர்களும் தங்கள் பங்கை கொடுக்கலாம் . உலகெங்கும் வாழும் நடிகர் திலகம் ரசிகர்கள் கிள்ளிக் கொடுத்தாலே மணிமண்படம் கட்ட முடியும் . யார் அதை சரியாக ஒருங்கிணைப்பார்கள் என்பது மட்டுமே கேள்வி .
பாசமலருக்கு அழாதவன் மனுஷனாடே ! - சுயம்புலிங்கம்

-
5th September 2013, 08:36 AM
#1747
Senior Member
Diamond Hubber

Originally Posted by
joe
என்னைக் கேட்டால் இந்த மணிமண்டப விடயத்தில் அரசுகளையோ , நன்றி கெட்டவர்களால் நிரம்பியுள்ள நடிகர் சங்கத்தையோ எதிர்பார்த்திருப்பதில் பயனில்லை . சிவாஜியின் குடும்பத்தினர் நினைத்தால் அவர்களே இதை செய்ய முடியும் .அவர்களோடு ரசிகர்களும் தங்கள் பங்கை கொடுக்கலாம் . உலகெங்கும் வாழும் நடிகர் திலகம் ரசிகர்கள் கிள்ளிக் கொடுத்தாலே மணிமண்படம் கட்ட முடியும் . யார் அதை சரியாக ஒருங்கிணைப்பார்கள் என்பது மட்டுமே கேள்வி .
இதே பதிலைத்தான் ஒரு வரி கூட மாறாமல் நேற்று 'கோல்ட் ஸ்டார்' சதீஷ் அவர்கள் என்னிடம் தொலைபேசியில் கேட்கும் போது கூறினேன்.
-
5th September 2013, 08:42 AM
#1748
Senior Member
Seasoned Hubber
Contents removed.
Dear Gopal,
I hope you understand the context and my stance regarding your subject of posting. I do not want my post and never had intention to hurt any body any time any how which includes you too.
Pls continue your in-valuable postings here.
Don't bother about other threads.
Raghavendran.
P.S. தங்கள் ஆய்வுக்கேற்ற தீனி வர உள்ளது. தயாராகுங்கள்.
Last edited by RAGHAVENDRA; 7th September 2013 at 12:27 AM.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
5th September 2013, 10:32 AM
#1749
Senior Member
Seasoned Hubber
ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்!. எதிர்காலத் தூண்களை, வருங்கால சிற்பிகளை உருவாக்கும் பணியிலிருக்கும் ஆசிரியப் பெருமக்களை நினைவுகூர்வோம்.
இதோ நமது புரொபசர் கிருஷ்ணன்.
-
5th September 2013, 01:23 PM
#1750
Junior Member
Newbie Hubber
Last edited by Gopal.s; 6th September 2013 at 12:01 PM.
Bookmarks