-
15th September 2013, 07:34 PM
#2031
Senior Member
Veteran Hubber
பழைய பாகங்களில் ராஜாவைத்தேடிய போது சாரதாவின் பதிவு ஒன்று கண்ணில் பட்டது. வழக்கம்போல லபக்கிட்டேன். (இதே போல முரளி சார் எழுதிய அற்புத பதிவொன்று உள்ளது. தேடிக்கொண்டிருக்கிறேன்).
இப்போதைக்கு ஓவர் டு சாரதா மேடம்.......
"எப்போது யார் 'ராஜா'வைப்பற்றிப் பேசினாலும் அதில் உடனே நானும் கலந்துகொள்ள வேண்டும் என்ற வேட்கை எழும். அந்த அளவுக்கு என் மனதுக்கு மிக நெருங்கிய படங்களில் ஒன்று. (பார்த்தசாரதி சார், நான் சொன்னேனே 'கேட்டகரி நம்பர்: 3' படங்கள் எனக்கு நெருக்கமானவை என்று. அவற்றில் ராஜா, தங்கச்சுரங்கம், என்னைப்போல் ஒருவன், சுமதி என் சுந்தரி... இப்படி நிறைய).
முரளி, சுமார் ஆறு மாதங்களுக்கு முன் உங்களைப்போலவே ரிமோட்டால் சேனல்களை கிண்டிக்கொண்டிருந்தபோது ஒரு இந்தி சேனலில், பள்ளியில் சிறுவர்களின் பாக்ஸிங் போட்டி நடந்துகொண்டிருந்தது. அடடே இது ஜானி மேராநாம் படத்துவக்கம்போலிருக்கிறதே என்று கூர்ந்து பார்க்க, அடுத்த காட்சியிலேயே அது உறுதியானது. தாய் பூஜை செய்துகொண்டிருக்க, பையன்கள் பள்ளியில் வாங்கிய 'கப்'புக்காக சண்டையிட்டுக்கொள்ள, காட்சி மாறி இரண்டு போலீஸ் அதிகாரிகளும் பேசிக்கொண்டே மாடிப்படியில் இறங்கி வரும் காட்சி. ரிமோட்டை எடுத்து சோபாவின் கீழே வைத்துவிட்டேன். (எதிர்பார்த்தபடியே சிறிது நேரத்தில் என் பையன் வந்து, 'ரிமோட்டைக் கொடும்மா, இன்னைக்கு முக்கியமான கிரிக்கெட் மேட்ச் பார்க்கனும்' என்று கேட்க, 'போய் அப்பா ரூம்ல சின்ன டிவில பாரு' என்று அனுப்பிவிட்டேன்).
படம் ஓட ஓடத்தான், தமிழில் 'ராஜா'வை சி.வி.ஆர். எவ்வளவு சுவாரஸ்யப் படுத்தியிருந்தார் என்பது தெரிந்தது. தேவ் ஆனந்தின் அறிமுகக்காட்சி, ஆரஞ்சுகலர் முடி வைத்த கடத்தல் கையாளுடன் அவர் போனில் பேசும் காட்சி எல்லாம் சப்பென்றிருந்தது. டென்னிஸ் ராக்கெட் டீப்பாயின் மீது கிடக்க ஜஸ்ட் ஒரு சோபாவில் உட்கார்ந்துகொண்டு, டீப்பாயின் மேல் கால்களைநீட்டி வைத்துக்கொண்டு 'மேராநாம் ஜானி' என்று பேசும்போது நம் நினைவுக்கு வருவது, கையில் டென்னிஸ் ராக்கெட்டுட்ன் சுழல்நாற்காலியில் அமர்ந்து 'என் பெயர ராஜா' என்று ஆரம்பித்து, ஒவ்வொரு பதிலுக்கும் ஒவ்வொரு மாதிரி சுழன்று சுழன்று ஸ்டைல் காட்டும் நடிகர்திலகமும், அவ்வாறு செய்ய வைத்த சி.வி.ஆரும்.
அதே போலத்தான் 'ஓ..மேரி ராஜா' பாடல் காட்சியும். மலைப்பிரதேசத்தில் படமாக்கப்பட்டதால் நீங்கள் சொன்னதுபோல தேவ்ஜியும் Hema-வும் ரோப்காரில் போக, போலீஸ் ஆபீஸர் இன்னொரு ரோப்காரில் துரத்தும் காட்சி. 'ராஜா'வில் இப்பாடல் கேரளாவில் எடுக்கப்பட்டதால், கடலோர பாறைப்பகுதிகளில் போலீஸாரால் பின்தொடரப்பட, நடிகர்திலகத்தின் சேட்டைகளால் எரிச்சலுறும் ஜெயலலிதா, அவர் கையைத்தட்டிவிட, 'சுற்றிலும் போலீஸ் பார்த்துக்கொண்டிருக்கிறது' என்று இவர் ஜாடை காட்ட, உடனே அவர் தட்டிவிட்ட கையைக் கன்னத்தில் தேய்த்துக்கொள்ள, இவர் அந்தக்கைக்கு முத்தம் கொடுக்க, அதைப்பார்த்துக்கொண்டிருக்கும் இன்ஸ்பெக்டர் 'சாந்திகுமார்' பொறாமையில் உதட்டைக்கடிக்க.... எவ்வளவு ரம்மியமான காட்சி. அத்ற்கேற்றாற்போல காஸ்ட்யூம். மெரூன்கலர் சாரி, மெரூன்கலர் புல்ஸ்லீவ் ஜாக்கெட்டில் கலைச்செல்வி கொள்ளை அழகென்றால், அத்ற்கு ஈடு கொடுத்து, வெள்ளை பேண்ட், கிரீம்கலர் ஷர்ட், ஒருமாதியான மஞ்சளும் பிரௌனும் கலந்த கோட், வெளிர் நீல நிற ஸ்கார்ப் என்று நடிகர்திலகமும் அசத்துவார். கொச்சின் ஏர்போர்ட்டில், 'வைரங்கள் எங்கே' என்று கேட்கும் செல்வியிடம் 'கோட்டில் இருக்கு' என்று கோட்டைக்கழற்றி அவருக்குப் போர்த்திவிடும் இடத்தில் பேண்ட், 'டக்-இன்' செய்யப்பட்ட ஷட்டில் படு ஸ்மார்ட் எங்க அண்ணன்.
அதுபோலவே, தன்னை ஏமாற்றி விட்டு பணத்துடன் தப்பியோடப்பார்க்கும் ரந்தாவாவைப்பிடிக்க காரில் தேவ்ஜியும், பிரானும் போகும் கட்டமும் ரொம்பவே படுசுமார். அதையே தமிழில் கற்பனை செய்து பாருங்கள்.
'பாபு, நான் கொண்டுவந்த பெட்டியை இன்னைக்கு ஒருத்தர் கையில பார்த்தேன்'
'யெஸ், குமார் எடுத்திட்டுப்போயிருக்கான். உரிய இடத்துல சேர்த்துடுவான்'
'உங்களுக்கு நம்பிக்கை அதிகம்'
'அவன்கிட்டே நாணயம் அதிகம்'
'அந்த நாணயத்துக்கு குறுக்கே ஒரு பொண்ணு வந்தா...?'
'ராஜா, என்ன சொல்றே? குமாருக்கு...'
'காதலிக்க வேண்டிய வயசுதானே..?'
'யெஸ், அவன் அடிக்கடி ஒரு டான்ஸ் பொண்ணைப்பார்க்கப்போவான்'.
'மை டியர் சார், எனக்குத்தெரிஞ்சவரைக்கும் அள்ளிக்கொடுக்கும் முதலாளியைவிட அள்ளி அணைக்கும் காதலியின் பேச்சுக்குத்தான் மதிப்பு அதிகம்'
'ராஜா, உனக்கு கார் ஓட்டத்தெரியுமா?'
'எக்ஸ்பர்ட்'
பாலாஜி கார் சாவியைத்தூக்கிப்போட (அதுக்கும் ஒரு சவுண்ட் கொடுப்பார் MSV), சாவி நடிகர்திலகம் கையில் கிடைத்த அடுத்த வினாடி, நீலநிறக்கார் போய்க்கொண்டிருக்கும் (அதுதான் சி.வி.ஆர்). மஸ்தானின் அற்புத ஒளிப்பதிவில், கார் குறுகலான சந்தில் போகும் காட்சி டாப் ஆங்கிளில் காட்டப்பட, மெல்லிசை மன்னர் சும்மாயிருப்பாரா?. தனது அதிரடி சவுண்டோடு Vocal Humming ஐயும் கலந்து அசத்துவார்.............
(சுஜாதா சினி ஆர்ட்ஸ் எம்ப்ளத்தில் துவங்கி, கிருஷ்ணன் தலையில் கிரீடம் சூட்டப்படும் கடைசிக்காட்சி வரை, அணு அணுவாக இப்படத்தை பிரிச்சு மேயணும்போல இருக்கு. என்ன செய்வது? பத்து பக்கம் ஆகுமே).
Thank you Saradha mam.....
-
15th September 2013 07:34 PM
# ADS
Circuit advertisement
-
15th September 2013, 07:59 PM
#2032
Senior Member
Veteran Hubber

Originally Posted by
vasudevan31355
கிட்டத்தட்ட இருபது நிமிடங்கள் நீடிக்கும் படு சுவாரஸ்யமான திருப்பங்கள் நிறைந்த கிளைமாக்ஸ். எல்லை மீறிய புத்திசாலித்தன வெளிப்பாடுகள். நாயகர் கோஷ்டியும் சரி... வில்லன் கோஷ்டியும் சரி... நீயா நானா போட்டி. மாறி மாறி வெற்றி தோல்வி. நம்பகமற்ற நம்பகத்தன்மை. தான் யாரன்று நிரூபிக்கப் பாடுபடும் விஸ்வம். விஸ்வம் வெற்றி பெறும் போதெல்லாம் தாழியை உடைக்கும் நடிகர் திலகமும், பாலாஜியும், மேஜரும். ஒரு வினாடி அப்படி இப்படி கவனம் சிதறினால் கிளைமாக்ஸ் பார்த்ததே வேஸ்ட் என்றாகி விடும். ஆனால் கவனம் சிதறாது. நகத்தைக் கடித்தபடியேதான் பார்க்க வேண்டும்.
கிளைமாக்ஸ் சண்டையில்கூட ஒரே ஒரு கதாநாயகன் ஐம்பது பேரை அடித்து வீழ்த்துவதாக காட்டாமல் இரு பக்கமும் சமமான 'மேன்பவர்' கொடுத்து சண்டையை சுவாரஸ்யமாக்கி இருப்பார் சி.வி.ராஜேந்திரன்.
வில்லன் கோஷ்டியில் ரங்காராவ், மனோகர், கே.கண்ணன், மற்றும் சில அடியாட்கள், நாயகன் கோஷ்டியில் நடிகர்திலகம், பாலாஜி, மேஜர், ஒன்றுக்கு மூன்றாக சந்திரபாபு இப்படி கிளைமாக்ஸ் சண்டை களை கட்டும்...
-
15th September 2013, 08:01 PM
#2033
Senior Member
Seasoned Hubber
Hey friends,
It has been a very long time since I wrote in this thread. I must accept that I have missed really a lot in those days. What a wonderful analysis Gopal brings in his writings. What Pammalr does with Statistics, Ragavendra sir does with his passion and Vasu´s viedeos gopal brings with analysis. Wonderful. Nice to see, nice to read. All in all Murali has got his friends to share the burden which to carried along with saradha, btw, where is she? Nice to see Karthik back in full form. I enjoy reading ganpat´s beautiful narrations.
It is really a wonderful feeling being a NT fan
niraive kaanum manam vendum
iraivaa nee adhai thara vendum
-
15th September 2013, 08:02 PM
#2034
Senior Member
Seasoned Hubber
Here I found something in Luckylookonline.com
நடிகர் திலகம் சிவாஜிகணேசன் நடிப்பில் 1983ல் வெளிவந்த திரைப்படம் மிருதங்க சக்கரவர்த்தி. தில்லானா மோகனாம்பாளில் நாதஸ்வர வித்வானாக அசத்தியவர் இப்படத்தில் மிருதங்க வித்வானாக பரிணாமம் பெற்றிருந்தார். கிரிட்டிக்கலி அக்ளெய்ம்ட் ஆன இப்படம், ஏனோ பாக்ஸ் ஆபிஸில் சோடை போனது.
இப்படம் வந்திருந்தபோது விகடனில் எழுதப்பட்ட விமர்சனத்தில் சிவாஜியின் மிருதங்க நடிப்பு தாறுமாறாய் கிழிக்கப்பட்டிருந்தது. சிவாஜி மிருதங்கம் வாசிப்பதை பார்க்கும்போது, வலிப்பு நோய் வந்தவரை பார்ப்பது போல இருக்கிறது என்று விகடன் காரசாரமாக எழுதிவிட்டது. இந்த விமர்சனத்துக்கு சிவாஜி ரசிகர்கள் கடுமையான எதிர்ப்பை கிளப்பினார்கள். இதையடுத்து விகடன், புகழ்பெற்ற மிருதங்க வித்வான்களிடம் சிவாஜியின் நடிப்பு குறித்து கருத்து கேட்டிருக்கிறது. நிஜ மிருதங்க வித்வான்களை மிஞ்சும் வகையில் சிவாஜியின் நடிப்பு மிகவும் தத்ரூபமாக அமைந்திருக்கிறது என்று அவர்கள் சான்றிதழ் தர, விகடன் மனப்பூர்வமாக தன் வாசகர்களிடம் மன்னிப்பு கோரியது.
செய்த பாவத்துக்கு பரிகாரமாக அடுத்த ஓராண்டுக்கு விகடனில் விமர்சனமே வராது என்றும் அதன் ஆசிரியர் எஸ்.பாலசுப்பிரமணியன் அறிவித்தார். அதன்படியே விகடனும் ஓராண்டுக்கு சினிமா விமர்சனம் எழுதவேயில்லை.
niraive kaanum manam vendum
iraivaa nee adhai thara vendum
-
15th September 2013, 08:09 PM
#2035
Senior Member
Veteran Hubber
பாலாஜி: "ராதா, ராத்திரியோடு ராத்தியா கோயில் நகைகளை காளிதாஸ் (நாகையா) துந்தனாவுக்கு மாத்திடுவான். சரியா நாலு மணிக்கு கோயில் கதவு திறக்கும். கிருஷ்ணன் சிலைக்கு முன்னால் நகைகள் அடங்கிய துந்தனா இருக்கும். மீரா வேஷத்தில இருக்கிற நீ கடவுளை கும்பிட்டு விட்டு துந்தனாவை எடுத்தால் யாரும் சந்தேகப் பட மாட்டாங்க".
ஜெயலலிதா: "பாபு, இதுவரைக்கும் மனிதர்களை மட்டும்தான் ஏமாத்தினே. இப்ப கடவுளையும் ஏமாத்தனுமா"
பாலாஜி: "என்ன ராதா இப்படி சொல்லிட்டே. நம்ம எல்லார் மனசிலேயும் அவன் தானே இருக்கான். இப்ப என்னமோ என் மனசுக்குள்ள இருந்துகிட்டு 'எடுடா நகையை'ங்கிறான். நான் எடுக்கிறேன் .thats all".
(there will be a big laugh and applause from audience).
-
15th September 2013, 08:21 PM
#2036
Junior Member
Newbie Hubber

Originally Posted by
sivank
Here I found something in Luckylookonline.com
நடிகர் திலகம் சிவாஜிகணேசன் நடிப்பில் 1983ல் வெளிவந்த திரைப்படம் மிருதங்க சக்கரவர்த்தி. தில்லானா மோகனாம்பாளில் நாதஸ்வர வித்வானாக அசத்தியவர் இப்படத்தில் மிருதங்க வித்வானாக பரிணாமம் பெற்றிருந்தார். கிரிட்டிக்கலி அக்ளெய்ம்ட் ஆன இப்படம், ஏனோ பாக்ஸ் ஆபிஸில் சோடை போனது.
இப்படம் வந்திருந்தபோது விகடனில் எழுதப்பட்ட விமர்சனத்தில் சிவாஜியின் மிருதங்க நடிப்பு தாறுமாறாய் கிழிக்கப்பட்டிருந்தது. சிவாஜி மிருதங்கம் வாசிப்பதை பார்க்கும்போது, வலிப்பு நோய் வந்தவரை பார்ப்பது போல இருக்கிறது என்று விகடன் காரசாரமாக எழுதிவிட்டது. இந்த விமர்சனத்துக்கு சிவாஜி ரசிகர்கள் கடுமையான எதிர்ப்பை கிளப்பினார்கள். இதையடுத்து விகடன், புகழ்பெற்ற மிருதங்க வித்வான்களிடம் சிவாஜியின் நடிப்பு குறித்து கருத்து கேட்டிருக்கிறது. நிஜ மிருதங்க வித்வான்களை மிஞ்சும் வகையில் சிவாஜியின் நடிப்பு மிகவும் தத்ரூபமாக அமைந்திருக்கிறது என்று அவர்கள் சான்றிதழ் தர, விகடன் மனப்பூர்வமாக தன் வாசகர்களிடம் மன்னிப்பு கோரியது.
செய்த பாவத்துக்கு பரிகாரமாக அடுத்த ஓராண்டுக்கு விகடனில் விமர்சனமே வராது என்றும் அதன் ஆசிரியர் எஸ்.பாலசுப்பிரமணியன் அறிவித்தார். அதன்படியே விகடனும் ஓராண்டுக்கு சினிமா விமர்சனம் எழுதவேயில்லை.
மிருதங்க சக்கரவர்த்தி மிக பெரிய வெற்றி படம். உமையாள்புரம் சிவராமன் சிவாஜியின் performance பற்றி மிக மிக சிலாகித்திருந்தார். அந்த இறுதி காட்சி ஒரு அபூர்வம். பல நாட்களாக மிருதங்கத்தை தொடாமல் விட்டவர் (சபதம் காரணமாய்) ,திடீரென்று போட்டியில் குதிக்க வேண்டிய நிர்பந்தம் அதுவும் முதிர்ந்த வயதில். மகனுடன் தோற்க கூடாது என்ற நிர்பந்தம். தொடர்ந்த பயிற்சியின்மை ,வயது முதிர்ச்சி, anxiety எல்லாம் சேர்ந்து அவரை மெனகெட வைப்பதாய் காட்சி. அவர் தாளத்தை வாயால் சொல்லி வாசிப்பார். சிவாஜியின் நடிப்பு மிக அர்த்தமுள்ளது.
ஆனந்த விகடன் ஒரு வருடன் விமர்சனத்தை நிறுத்தியது வேறொரு காரணம்.அதற்கும் ,மிருதங்க சக்ரவர்த்திக்கும் சம்பந்தமில்லை.
-
15th September 2013, 08:28 PM
#2037
Junior Member
Newbie Hubber
கார்த்திக் சார்,
நீங்கள் சொன்ன படி ராஜாவில் நான் தொட்டது நம் பாட்டுடை தலைவனை மட்டுமே.
re-recording marvel இந்த படம். பாடல்கள் ஓகே ரகம்.என்னுடைய விருப்பம் உயிருக்கு தருவது விலை,இரண்டில் ஒன்று. ஆனால் படமாக்க பட்ட விதம்,outdoor locations ,மஸ்தான்(தாரா) படபிடிப்பு ,நடிகர்திலகத்தின் நடிப்பு எல்லாம் சேர்ந்து பாடல்களின் தரத்தை உயர்த்தின. ரீ ரெக்கார்டிங் ,டைட்டில் தொடங்கி இறுதி காட்சி வரை இளமை விறுவிறுப்பு கொண்டு படத்தின் தரத்துடன் சேர்ந்து பயணிக்கும்.
இந்த படத்தில் பாலாஜி,மனோகர், ரந்தா,பத்மா கன்னா,மற்றும் அந்த சிவப்பு தலையர் உட்பட அனைவரும் படு ஸ்டைலிஷ்.ரங்காராவ் ரசித்து பண்ணியிருப்பார். (சிரிப்புத்தான் சகிக்காது)
நாராயணன் வசனங்கள் இளமை துள்ளும்.
நல்ல டீம் வொர்க்.
Last edited by Gopal.s; 15th September 2013 at 09:12 PM.
-
15th September 2013, 08:30 PM
#2038
Senior Member
Seasoned Hubber
You should know it best Gopal. I just posted what I read at his blog.
niraive kaanum manam vendum
iraivaa nee adhai thara vendum
-
15th September 2013, 09:18 PM
#2039
Senior Member
Senior Hubber

Originally Posted by
vasudevan31355
'பட்டிக்காடா பட்டணமா'வில் நம் 'ராஜா' கட்-அவுட்டின் தோற்றம்.

Dear Vasudevan Sir (of course all our fellow hubbers too),
I was having this particular still (cream colour shirt with a scarf), which appeared in Pesum Padam), for years in my diary. I used to replace this still to the new diary year on year.
Dear Gopal Sir,
Great review on my favourite "Raja".
Regards,
R. Parthasarathy
-
15th September 2013, 09:22 PM
#2040
Senior Member
Senior Hubber

Originally Posted by
vasudevan31355
லேசாக ராதாவைப் பார்த்து துப்பாக்கியை தன் கன்னத்தின் பக்கமாக வைத்து மிக லேசான தலையசைவில் தான் ஒரு போலீஸ் அதிகாரிதான் என்று ராதாவிற்கு மட்டுமே உணர்த்துவார். அற்புதமாய் இருக்கும்.
Not only this. Closely observe his voice change over from a normal tone to a barritone voice and that too only for this scene.
Regards,
R. Parthasarathy
Bookmarks