Page 210 of 399 FirstFirst ... 110160200208209210211212220260310 ... LastLast
Results 2,091 to 2,100 of 3986

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan Part 11

  1. #2091
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    ராஜா - அடியேனின் பங்களிப்பாக மெல்லிசை மன்னரின் இசை பற்றிய அலசல் ... தொடரும்...
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #2092
    Senior Member Seasoned Hubber KCSHEKAR's Avatar
    Join Date
    May 2010
    Location
    CHENNAI
    Posts
    243
    Post Thanks / Like
    டியர் வாசுதேவன் சார்,

    ராஜா - விஸ்வத்தைப் (மனோகர்) பற்றிய உங்களுடைய விமர்சனம் பிரமாதம். விஸ்வத்தைப் போலவே வித்தியசமாக சிந்திக்கும் தங்களுக்கு வாழ்த்துக்கள்.
    அன்புடன்

    K.CHANDRASEKARAN
    President
    Nadigarthilagam Sivaji SamooganalaPeravai
    sivajiperavai@gmail.com
    https://www.facebook.com/sivaji.peravai

  4. #2093
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    Quote Originally Posted by RAGHAVENDRA View Post
    ராஜா - அடியேனின் பங்களிப்பாக மெல்லிசை மன்னரின் இசை பற்றிய அலசல் ... தொடரும்...
    ஆவலுடன் காத்திருக்கிறோம் சார்.
    நடிகர் திலகமே தெய்வம்

  5. #2094
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    ராஜா - திரைப்படத்தின் முகப்பிசை

    https://soundcloud.com/veeyaar/raja-title-music

    இந்த இசையைக் கேட்கும் மாத்திரத்திலேயே ஒரு த்ரில்லர் படத்திற்குண்டான தயாரிப்பினை இசை மூலம் நமக்களித்திருக்கிறார் மெல்லிசை மன்னர். இந்தப் படத்தில் ஆங்காங்கே ட்ரம்ஸ் ஒலியும் கோரஸ் குரல்களும் பரவசப் படுத்துவதோடு அந்தக் காட்சிக்குள் நம்மை அழைத்துச் செல்கின்றன. டைட்டில் இசையிலேயே அதற்கான முஸ்தீபைத் தந்து விடுகிறார். அதுவும் குறிப்பாக ராஜா ராஜா ராஜா என பல்வேறு மாடுலேஷன்களில் குரலிசைக்கும் போது திகிலை ஊட்டும் தோரணை தெரிகிறது. படத்துடன் கேட்கும் போது அதன் முக்கியத்துவம் அதிகரிக்கிறது.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  6. #2095
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    பொதுவாக ஹீரோ அறிமுகக் காட்சி, அதுவும் குறிப்பாக இந்த மாதிரி ஆக்ஷன் படங்கள் என்றால், இசை ஆரவாரமாக ஆர்ப்பாட்டமாக ஒலிப்பது வழக்கம். அதை இந்தப் படத்தில் முற்றிலும் உடைத்து விட்டார் மெல்லிசை மன்னர். நடிகர் திலகத்தைப் போன்று இவரும் அந்த கதாபாத்திரத்திற்குள்ளேயே நுழைந்து விடுகிறார். காட்சியமைப்பும் அதற்கேற்றார்போல் அமைந்து விட்டதால், மிகவும் மென்மையாக விசில் ஒலியுடன் கதாநாயகனை அறிமுகப் படுத்துகிறார் இயக்குநர். அதற்கேற்றார்போல் விசில் ஒலியை பிரதானமாக வைத்து அறிமுக பின்னணி இசையில் கலக்கியிருப்பார் எம்.எஸ்.வி. கேளுங்கள்.

    https://soundcloud.com/veeyaar/raja-hero-intro-bgm
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  7. #2096
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    ரயில்வே ஸ்டேஷனில் நாயகி இறங்குவது தொடங்கி நாயகனைக் காண்பதற்காக வெளியில் தேடி ஓடி வரும் அந்த விநாடி வரை நாயகிக்கும் வில்லனின் கையாளுக்கும் ஏற்படும் திகிலும் பரபரப்பும் இசையிலேயே மெல்லிசை மன்னர் வெளிப்படுத்தியிருப்பார். ரயில் நின்றவுடன் துவங்கும் ட்ரம்ஸ், ட்ரம்பெட் மற்றும் கிடார் கருவிகளின் இசை காட்சியை நமக்கு உணர்த்தி விடுகிறது. அதைத் தொடர்ந்து அந்த தேடுதலுக்காக புல்லாங்குழலைப் பயன் படுத்தியிருப்பார், காற்றில் புல்லாங்குழல் ஓசை உலவுவது போல் வெட்ட வெளியில் நாயகி அவனைத் தேடுவதை இசையின் மூலம் தெரியப் படுத்தும் யுக்தி மெல்லிசை மன்னருக்கே உரித்தானது. [தேடுதல், அச்சப் படுதல், பரபரப்படைதல் இந்த மாதிரி சூழலில் புல்லாங்குழல் இசை மிகப் பொருத்தமாக இருப்பதோடு உள்ளுக்குள் நமக்கு அந்த உணர்வை ஊட்டி விடும். இதை மிகச் சிறப்பாக பயன் படுத்தியவர் மெல்லிசை மன்னர். இதற்கு முன்னர் சுமதி என் சுந்தரி படத்தில் ஜெயலலிதா ரயிலில் இறந்து இறங்கி நள்ளிரவில் அடைக்கலம் தேடும் போதும் இதே உணர்வை புல்லாங்குழல் மூலம் வெளிப்படுத்தியிருப்பார் ]. வெளியே வந்து பார்க்கும் போது போலீஸ் இருப்பதைப் பார்த்து அந்தக் கூட்டத்திற்கே இயல்பான பரபரப்பை நாயகியும் கையாளும் மேலும் அடைய, அதனை அந்த கோரஸ் குரல்களில் வெளிப்படுத்தியிருப்பார். நாயகனைக் கண்டதும் அப்படியே நாயகியின் முகம் மெல்ல மெல்ல இயல்பு நிலைக்குத் திரும்பி மனதில் மகிழ்ச்சியுண்டாகும். அப்போது இசையும் சிறிது சிறிதாக இயல்பு நிலைக்குத் திரும்பும்.

    மறக்க முடியாத பின்னணி இசை

    https://soundcloud.com/veeyaar/nee-v...um-prelude-bgm
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  8. #2097
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    ஒரு பக்கம் பரபரப்பு, திகில் போன்ற காட்சிகள், இன்னொரு பக்கம் ரொமான்ஸ் காட்சிகள் என இருந்தாலும் நகைச்சுவைக் காட்சிகளிலும் மெல்லிசை மன்னரின் கொடி ரெக்கை கட்டி பறக்கிறது. குறிப்பாக ஹோட்டலில் பார் டெண்டராக வேலை செய்யும் சந்திரபாபுவின் அறிமுகக் காட்சியில் பின்னணியில் ஒலிக்கும் இசை அந்தக் காலத்தில் மிகவும் பிரபலம். அட்டகாசமான அந்தப் பின்னணி இசையைக் கேளுங்கள்.

    https://soundcloud.com/veeyaar/chand...bar-scene-raja
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  9. #2098
    Junior Member Devoted Hubber
    Join Date
    Apr 2021
    Location
    Virgin Islands
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by Gopal,S. View Post
    பெரியார்.(நான் புரிந்து கொண்ட வரை)

    பெரியார் கடவுள் மறுப்பு, உயர்சாதி எதிர்ப்பு இவற்றை கருவியாக்கி ,சமுதாய சாதி இறுக்கத்தை இளக செய்யவும் ,மூட நம்பிக்கை உடைப்பையும் ,அடிமை விலங்கருப்பதையும் மைய நோக்கமாக கொண்டவர்.

    தலித்தை விட தாழ்த்த படுவது தலித்தின் மனைவியே என்று புரிந்து ,பெண் விடுதலைக்கு தளம் அமைத்தவர்.

    மாற்று கருத்துகளை ஒடுக்க நினைக்காமல், கேட்டு பொறுமையாக விடையளித்தவர்.

    தன் கலகம் தனி மனித எதிர்ப்பாகவோ,இன துவேஷமாக மாறி சமூக கொந்தளிப்பு நேராமல் இயக்கத்தை நேரியக்கமாக நடத்திய தூய்மையாளர்.

    அவர் பேச்சை மூன்று முறை நேரில் கேட்டு ,நிறைய படித்து தெரிந்தது எனக்கு வாழ்வில் பாதை காட்டியது.

    இப்போது எனக்கு உள்ள வருத்தங்கள்-

    அவர் போட்ட பாதையில் நடப்பதாக கூறுபவர்களே,சாதி இன துவேஷத்தை முன்னிறுத்துவது.

    எல்லாமே விவாதத்துக்கு,கேள்விக்குரியது என்று சொன்ன அவரை பற்றியே விவாதிக்க விடாமல் அடக்க பார்ப்பது.

    தெய்வங்களின் சிலைகளை நீக்கி விட்டு அதற்கு பிரதியாக மனித சிலைகளை வணங்கும் மூட வழக்கங்களை வளர்ப்பது.(புத்தருக்கு நேர்ந்த அதே விபத்து)
    என்னதான் சொல்லுங்கள்..

    எனக்குள் இருக்கும் ஒரு ஞாயமான கேள்வி. அது பெரியார் ஆதரவாளர்க்கும் சரி அல்லாதவர்க்கும் சரி.

    ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரை (பிராமணர்கள்) மட்டுமே ஜாதி த்வேஷம் செய்கிறார்கள் என்று சாடியவர் பெரியார் அவர்கள். பாம்பை பாப்பானை பார்த்தால், பாம்பை விட்டுவிடு பாப்பானை அடி என்று அறைகூவல் விடுத்தவர்கள் என்றால் எந்தளவுக்கு ஜாதி த்வேஷம் இருந்தது என்பதை அறியலாம்.

    அந்த காலத்தில் வேறு பல சமூஹதினர்களும் ஜாதிவெறி கொண்டவர்களாக கண்டிப்பாக இருந்திருக்கிறார்கள். உதாரணம் தேவர் சமூஹம். தேவர் - தலித் த்வேஷம் எவரும் அறியாதது இல்லை...வெட்டு குத்து நிகழ்வு அவளவு சாதாரணம்.

    அப்படி இருக்கையில் ஏன் பிராமணர்களை மட்டுமே சாடினார்கள்? தேவர்களை சாடவில்லை? காரணம் பிராமணர்கள் வாய்மூடி இருப்பார்கள்...ஆனால் தேவர் சமூஹத்தினர் ? வாய் திறந்தாள் அரிவாள் தான் பேசும் ! அதனால் வாய் திறக்கவில்லை இவர்கள். அப்போ இளிச்சவாயர்கள் பிராமணர்கள் ! இவர்கள் முழுமையான சமூக சீர்திருத்தவாதிகள?

    சரி அதை விடுவோம் ! கூத்தாடி..கூத்தாடி என்று ஒரு புறம் கூறியவர்கள் ....அப்படி கூதாடியவர்களுடன் எதற்கு உறவு வைத்துகொண்டு கொஞ்சி குழைந்தார்கள் ஆதிகாலத்திலிருந்தே ?

    கேட்டால் நட்பு வேறு அரசியல் வேறு என்பார்கள்..! மக்கள் என்றுமே ஆட்டுமந்தைகள் தானே என்ற எண்ணம் தான் காரணம் ! சீர்திருத்தம் கொண்டுவருகிறேன் என்று கூறி இன்று தமிழகம் எவ்வளவு சீரழிந்து போயிருக்கிறது என்பதை சற்று ஆராயிந்தால் புரியும்.

  10. #2099
    Senior Member Diamond Hubber joe's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Singapore
    Posts
    9,462
    Post Thanks / Like
    Quote Originally Posted by NTthreesixty Degree View Post
    சீர்திருத்தம் கொண்டுவருகிறேன் என்று கூறி இன்று தமிழகம் எவ்வளவு சீரழிந்து போயிருக்கிறது என்பதை சற்று ஆராயிந்தால் புரியும்.

  11. #2100
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    சுப்பு,
    எதனோடும் ஒட்டாமல் சம்மந்தா சம்மந்தமில்லாமல் பதிவு போடுவதை நிறுத்துங்கள்.உங்கள் மூர்க்க பதிவுகளால் ராகவேந்தர் சாரின் அற்புதமான பதிவுகளுக்கு இடைஞ்சல் உண்டாகி விட்டது. ஏன் இப்படி ஊரோடு ஒட்டாமல் எரிச்சல் உண்டாக்குகிறீர்கள்?
    ஒருவர் நிழலை இன்னொரு சாதியினர் நிழல் கூட தீண்ட கூடாது என்று அழிச்சாட்டியம் செய்வது எவ்வளவு பெரிய அநீதி? ஏன் வெட்கமில்லாமல் வக்காலத்து வாங்குகிறீர்கள்?

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •