Page 224 of 399 FirstFirst ... 124174214222223224225226234274324 ... LastLast
Results 2,231 to 2,240 of 3986

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan Part 11

  1. #2231
    Junior Member Devoted Hubber
    Join Date
    Apr 2021
    Location
    Virgin Islands
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by KCSHEKAR View Post


    [
    Dear Chandrasekhar Sir,

    Congratulations and Wishing you all the very best for the Mupperum Vizha !

    Your love and affection towards Nadigar Thilagam is something that needs a warm appreciation and applause..

    All the best for all your endeavors !

    Regards
    Subbu

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #2232
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    டியர் சந்திரசேகரன் சார்,

    எனது கிராமமான ராமாபுரத்தில் இருக்கும் என் இனிய நண்பரும், நடிகர் திலகத்தையே தெய்வமாக தன் வீட்டு பூஜை அறையிலும், தன் மனதிலும் வைத்து பூஜித்து வணங்கும் திரு தனசேகரன் அவர்களின் இல்லத் திருமண விழா அழைப்பிதழ் சிறப்பாக அச்சிடப் பட்டுள்ளது. இப்போது அது தங்கள் பார்வைக்கு.



    நடிகர் திலகமே தெய்வம்

  4. #2233
    Junior Member Devoted Hubber
    Join Date
    Apr 2021
    Location
    Virgin Islands
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by Gopal,S. View Post
    நாளை எல்லோருக்கும் நீதி கூற போகிறேன். அனைவரும் வருக.


    Whoever it is.....! I live for Justice !!!




    I am in the hands of law.....am not responsible if there is Flaw !!
    Last edited by NTthreesixty Degree; 20th September 2013 at 01:31 PM.

  5. #2234
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    சந்திர சேகர் சார்,
    உங்கள் நற்பணிகளுக்கு எங்கள் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள். நீங்கள் உண்மையில் செயல் வீரர்.

  6. #2235
    Senior Member Seasoned Hubber KCSHEKAR's Avatar
    Join Date
    May 2010
    Location
    CHENNAI
    Posts
    243
    Post Thanks / Like
    டியர் வாசுதேவன் சார்,

    திருச்சி விழாவிற்கு தங்களுடைய வாழ்த்துக்களுக்கு நன்றி.

    கடலூர் ஒன்றிய சிவாஜி சமூகநலப்பேரவை தலைவராக இருக்கும் திரு.தனசேகரன் அவர்கள் தங்களுடைய நண்பர் என்பதும் திருமண விழா நடைபெறும் ராமாபுரம் தங்களுடைய ஊர் என்பதும் அறிந்து மிக்க மகிழ்ச்சி. பதிவிற்கு நன்றி
    Last edited by KCSHEKAR; 20th September 2013 at 02:12 PM.
    அன்புடன்

    K.CHANDRASEKARAN
    President
    Nadigarthilagam Sivaji SamooganalaPeravai
    sivajiperavai@gmail.com
    https://www.facebook.com/sivaji.peravai

  7. #2236
    Senior Member Seasoned Hubber KCSHEKAR's Avatar
    Join Date
    May 2010
    Location
    CHENNAI
    Posts
    243
    Post Thanks / Like
    Quote Originally Posted by NTthreesixty Degree View Post
    Dear Chandrasekhar Sir,

    Congratulations and Wishing you all the very best for the Mupperum Vizha !

    Your love and affection towards Nadigar Thilagam is something that needs a warm appreciation and applause..

    All the best for all your endeavors !

    Regards
    Subbu
    Dear Subbu Sir,

    Thanks for your wishes & appreciation.
    அன்புடன்

    K.CHANDRASEKARAN
    President
    Nadigarthilagam Sivaji SamooganalaPeravai
    sivajiperavai@gmail.com
    https://www.facebook.com/sivaji.peravai

  8. #2237
    Senior Member Seasoned Hubber KCSHEKAR's Avatar
    Join Date
    May 2010
    Location
    CHENNAI
    Posts
    243
    Post Thanks / Like
    Quote Originally Posted by Gopal,S. View Post
    சந்திர சேகர் சார்,
    உங்கள் நற்பணிகளுக்கு எங்கள் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள். நீங்கள் உண்மையில் செயல் வீரர்.
    டியர் கோபால் சார்,

    திருச்சி விழாவிற்கு தங்களுடைய வாழ்த்துக்கும், பாராட்டுக்கும் நன்றி.
    அன்புடன்

    K.CHANDRASEKARAN
    President
    Nadigarthilagam Sivaji SamooganalaPeravai
    sivajiperavai@gmail.com
    https://www.facebook.com/sivaji.peravai

  9. #2238
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    கண்ணதாசன் 1964 முதல் 1977 வரைதான் உண்மை பேசியதாக தன்னுடைய சுயசரிதை ஒன்றில் எழுதிய ஞாபகம்.

  10. #2239
    Junior Member Devoted Hubber
    Join Date
    Apr 2021
    Location
    Virgin Islands
    Posts
    0
    Post Thanks / Like
    A SCENE FROM THE FILM SORGAM - THE SAME SCENE WAS TAKEN LATER IN RAJNIKANTH's PRIYA TOO....




  11. #2240
    Senior Member Veteran Hubber mr_karthik's Avatar
    Join Date
    Sep 2005
    Location
    Irumbu kOttai
    Posts
    1,416
    Post Thanks / Like
    நடிகர்திலகத்தின் படங்களில் ‘ஐட்டம் நடிகையர்’ (2)

    இதயத்தில் நிறைந்த "ஜெய்குமாரி”

    நடிகர்திலகத்தின் திரியில் இப்படி ஒரு தொடர் தேவையா என்று தோன்றக் கூடும். நண்பர் வாசுதேவன் அவர்கள் ‘ஆடைகளுக்கென்றே பிறந்த ஆணழகன்’ தொடரையும், ‘நடிகர்திலகத்தின் திரை நாயகியர்’ தொடரையும், நடிகர்திலகத்தின் படங்களில் இடம்பெற்ற ‘சிறந்த சண்டைக்காட்சிகள்’ தொடரையும் சிறப்பாக தொடர்ந்து பதிப்பித்து வரும் வேளையில், நாமும் நம் பங்குக்கு இப்படி ஒரு தொடரை துவங்குவோமே என்ற ஆர்வத்தினாலும், நண்பர் கோபால், வாசுதேவன் போன்றவர்களின் உந்துதலினாலும் ஏற்பட்ட தாக்கம்தான் இந்த தொடர். ஏற்கெனவே ராஜா படத்தில் 'தாரா' வேடத்தில் நடித்த பத்மா கன்னா வைப்பற்றிய பதிவை முதல் பதிவாக்கி ஜெய்குமாரி பற்றிய இப்பதிவை இரண்டாவதாகப் பதிக்கிறேன்.

    “பாசத்துக்குரிய கவிதா” (எங்கிருந்தோ வந்தாள்)

    இப்படத்தில் இவரை ஐட்டம் கேர்ள் என்று கூற முடியாது. உண்மையில் ‘ஐட்டம் கேர்ள்’ கதாநாயகி ஜெயலலிதாதான் (சான்று 'வந்தவர்கள் வாழ்க' பாடலும் அதற்கான நடனக்காட்சியும்).. இப்படத்தில் ஜெய்குமாரி நடிகர்திலகத்தின் ஜோடியாக சேலை ஜாக்கெட்டுடன், சோகமே உருவாக நடித்திருந்தார். ஒரே பாடல் காட்சியிலேயே நம் மனதில் தங்கி விட்டார் (பாடலும் கூட 'ஒரே பாடல் உன்னை அழைக்கும்' என்றே துவங்கும்). தன காதலன் கண்ணெதிரிலேயே வேறொருவன் மனைவியாகப் போகும் அவலத்தை எண்ணி கண்ணீர் வடித்தவராக காட்சியளிப்பார். காதலனின் சோக கீதத்தை மனதுக்குள் வாங்கி அதை அப்படியே முகத்தில் பிரதிபலிப்பார். இதற்கு முன் படங்களிலெல்லாம் கர்சிப்பையே உடையாக அணிந்து கவர்ச்சி நடனம் ஆடிய ஜெய்குமாரியா இவர் என்று திரையுலகத்தினரும், ரசிகர்களும் அதிசயித்தனர். இந்த ரோலை ஏற்று நடிக்க கோலிவுட்டில் லட்சுமி போன்ற எத்தனையோ நடிகையர் இருக்க, இந்த ரோலுக்கு துணிந்து ஜெய்குமாரியை தேர்ந்தெடுத்த தயாரிப்பாளர் பாலாஜி, இயக்குனர் திருலோக்சந்தர், இந்த செலக்ஷனை ஏற்றுக்கொண்ட நடிகர்திலகம் ஆகியோரை பாராட்டியே ஆக வேண்டும்.

    பெயர்தான் ஐட்டம் நடிகையே தவிர இப்படத்தில் அவர் செய்தது ஐட்டம் ரோல் அல்ல, கேரக்டர் ரோல். கேமரா அவர் முகத்தை குளோசப்பில் காண்பிக்கும் போதெல்லாம் முகத்தில் சோகம் பொங்கி வழியும். காதலனை பிரிந்து இன்னொருவனை மணக்க நேரிடும் சூழலில், அங்கு பழைய காதலனே வந்து பாடும் நிலையில் ஒரு பெண்ணின் மனம் எவ்வளவு பாடுபடும் என்பதை மிக அருமையாக முகபாவத்தில் காட்டியிருப்பார் ஜெய்குமாரி. "உன்னை நினைத்தே உலகில் இருந்தேன், உன்னைப் பிரிந்தேன் என்னை மறந்தேன்" என்ற வரிகளின்போது, இவ்வளவு அன்பான, அருமையான காதலனை கைவிட்டு ஒரு கயவனை மணப்பதை விட, மரணத்தை மணப்பதே மேல் என்று முடிவெடுக்கிறாள்.

    கையில் மத்தாப்புடன் மெல்ல மெல்ல, ஆனால் உறுதியுடன் ஒவ்வொரு அடியாக எடுத்து வைத்து நடக்கையில் முகத்தில் அதுவரை இருந்த சோகம் கொஞ்சம் கொஞ்சமாக வைராக்கியமாக மாற (ஐயோ, எக்ஸ்பிரஷனில் அசத்திட்டாள் குழந்தை) தரையில் கிடக்கும் பட்டாசுக்குவியலில் கையிலிருந்த மத்தாபைப் போட, அது வெடித்துச்சிதறும் நெருப்புக்குளியளோடு மாடியிலிருந்து கீழே குதித்து......... இறந்து விட்டாளா?. இல்லையில்லை நம் நெஞ்சங்களில் உறைந்து விட்டாள், நிறைந்து விட்டாள் கவிதா.

    (பதறிப்போய் ஓடிவந்து எட்டிப்பார்க்கும் பழைய காதலனின் முகத்தில் பல்வேறுபட்ட எக்ஸ்பிரஷன்கள். எட்டிப்பார்த்தவர் என்ன சாதாரண மனுஷனா என்ன, எக்ஸ்பிரஷன்ல கொன்னுடுவாரே....... கொன்னுட்டார்).

    “பரிதாபத்துக்குரிய கல்பனா” (கௌரவம்)

    தவப்புதல்வன், வசந்தமாளிகை, நீதி, ராஜராஜசோழன், பாரதவிலாஸ், பொன்னூஞ்சல், எங்கள்தங்கராஜா என தொடர்ந்து ஏழு படங்களிலும் ஒரே ஐட்டம் நடிகையைப் பார்த்து (இத்தனைக்கும் ஏழு படங்களிலும் ஆறு வெவ்வேறு கதாநாயகிகள், ஐட்டம் நடிகை மட்டும் ஒருவர்) ரசிகர்கள் மனம் சோர்ந்து, மாற்றத்தை எதிர்பார்த்த வேளையில் ‘கௌரவம்’ படத்தில் தென்றலாய் வந்து வருடினார் ஜெய்குமாரி. இவர் ஏற்றிருந்த கல்பனா என்ற கதாபாத்திரம் வெறும் ஐட்டம் டான்ஸ் ஆடுபவராக மட்டும் இல்லாமல் கதையின் முக்கிய திருப்பத்துக்கும் காரணமாக அமைந்திருக்கும்.

    தன்னுடைய கேஸை ஜெயித்துக் கொடுத்ததற்காக பாரிஸ்டருக்கு மோகன்தாஸ் கொடுக்கும் பார்ட்டியில், பாரிஸ்டர் உள்ளே நுழைய்ம்போதே மெல்லிசை மன்னரும் அதைவிட அதிரடியாக பாடலுக்குள் நுழைந்து விடுவார். அட்டகாசமான முன்னிசையுடன் துவங்கும் பாடலில் வெளிர்நீலநிற உடையணிந்த நடனமங்கையர் நால்வர் முதலில் அறிமுகமாக, அழகான அக்கார்டியன் இசையுடன், சிவப்பும் ஆரஞ்சும் இணைந்த நிறத்தில் தகதகவென்று ஜொலிக்கும் உடையில் அதிரடியாக அறிமுகமாவாள் கல்பனா (ஜெய்குமாரி). 'அதிசய உலகம் ரகசிய இதயம்' என்ற முதல் வரிக்கு குளோசப்பில் எழிலான புன்னகையுடன் மார்பை சற்று ஏற்றி இறக்கும் காட்சியிலேயே ஆடியன்ஸ் எல்லாம் பிளாட்.

    பாரிஸ்டருக்கு ட்ரிங்க்ஸ் கொண்டுவந்து கொடுக்கும்போதும் காட்டும் நளின நடன அசைவுகள் என்ன, 'பெண்ணுலகு நான் உன்னை அழைப்பேன்' என்ற வரிகளுக்கு தவில் இசையுடன் இரண்டு கால்களையும் ஸ்டேஜில் படபடவென்று அடிக்கும் வேகம் என்ன, உடலை ரப்பராக வளைத்து செய்யும் சாகசம் என்ன, பாரிஸ்டர் அருகில் வந்து 'பழக்கம் இல்லைஎன்று விளக்கம் சொல்லச்சொன்னால்' என்ற வரிக்கு ஏற்ப இரண்டு புறங்கைகளையும் மணிக்கட்டில் தட்டி, சட்டென்று உதட்டில் விரலை வைத்து காட்டும் அபிநயம் என்ன, இவையனைத்திலும் கொஞ்சம் கூட மாறாத மயக்கும் மந்தகாசப்புன்னகை என்ன (வாவ், கொன்னுட்டேடி). பாரிஸ்டரே இவர் நடனத்தில் மயங்கி, சேரில் இருந்தவாரே ஸ்டைலாக அபிநயம் பிடிப்பாரே. (பாவம், தான் அகால மரணமடையப் போகிறோம் என்பதோ, தன் மரணம்தான் பாரிஸ்டர் உயிருக்கும் உலைவைக்கப் போகிறது என்பதோ இந்தக்குழந்தைக்கு தெரியுமா?. அல்லது முதல் முறை பார்க்கும்போது நமக்குத்தான் தெரியுமா?) .

    இவர் தோன்றும் இரண்டாவது காட்சி. தன் வீட்டில் கருநீல நிற சுடிதாருடன் சாய்வு நாற்காலியில் அமர்ந்திருக்கும் கல்பனாவிடம், தலைப்பக்கம் வந்து சில்மிஷம் செய்யும் மோகன்தாஸிடம், "இதெல்லாம் கல்யாணத்துக்கு அப்புறம்" என்று கொஞ்சு மொழியில் சொல்லிக் கொண்டிருக்கும்போது, எல்.ஐ.சி.ஏஜென்ட் கல்யாணமே வந்து விடுகிறான் (பாரிஸ்டரின் எமன்). கல்பனாவைப் பார்த்து, 'இவங்களை கிளப்பில் பார்த்திருக்கிறேனே' என்று சொல்லும் எமனைப்பார்த்து கல்பனாவின் ஒரு முறைப்பு. அந்த முறைப்பில் கூட வெறுப்பு தெரியாது. அழகும் அப்பாவித்தனமும்தான் தெரியும். மோகன் தாஸை தனியே அழைத்துச்சென்று பாலிசி எடுத்துக்கொள்ளும்படி கெஞ்சும் கல்யாணத்திடம் தன் பெயரில் வேண்டாமென்றும், கல்பனா பெயரில் பாலிசி எடுக்கும்படியும் சொல்ல, மீன்தொட்டியில் விளையாடிக்கொண்டிருக்கும் கல்பனாவிடம் கையெழுத்து வாங்கிப் போக.....

    மூன்றாவது மற்றும் இறுதிக்காட்சியில் கல்பனா...... இந்தக்காட்சியை முதல்முறை பார்க்கும்போது சாதாரணமாக பார்த்தோம், ஆனால் அடுத்தடுத்த தடவைகளில் பார்க்கும்போது கல்பனாவின் முடிவுக்காட்சி என்பது மனதில் சோக அலைகளைத் தோற்றுவிக்கும். அன்று அவளுக்கும் மோகன்தாசுக்கும் ரிஜிஸ்தர் ஆபிசில் திருமணம். அவன் தயாராகி வர அவள் இன்னும் ரெடியாகவில்லை.

    கிரீம் கலர் புடவை ஜாக்கெட்டுடன் படுக்கையில் ஒருகையில் டீயும் மறுகையில் மெகஸினுமாக கல்பனா படுத்திருக்க, (இந்தக்காட்சி சற்று செக்ஸியான ஆங்கிளில் எடுக்கப்பட்டிருந்தாலும் யதார்த்தமாகத் தோன்றுமே தவிர வலிந்து திணிக்கப்பட்ட காட்சியாக தோன்றாது). 'இன்னுமா ரெடியாகலை?' என்று அன்போடு அதட்டும் மோகனிடம், இதோ இப்போ வந்துடுறேன் என்று குளியலறை சென்று கதவை சாத்தும்போது மோகனைப்பார்த்து, அதாவது கேமராவைப்பார்த்து, அதாவது நம்மைப்பார்த்து ஒரு கண்ணடிப்புடன் கூடிய அவரது ட்ரேட்மார்க் கள்ளமில்லா சிரிப்பு. உள்ளே ஆடைமாற்றும் காட்சி முழங்காலுக்கும் கீழே மட்டும் காட்டப்பட்டு மற்றவை ரசிகர்களின் கற்பனைக்கு விடப்படும். இறுதியாக தான் கட்டியிருந்த டவலை எடுத்து தன்னைப்படம் பிடிக்கும் கேமரா மீது போர்த்திவிட்டு, பாத்டப்பில் இறங்கி, ஒரு பாடலை லேசாக ஹம செய்தபடி ஹேன்ட் ஷவரைக்கொண்டு முகத்தில் தண்ணீர் தெரிக்கவைத்துக் குளிக்கத்துவங்க............ ஐயோ, அந்த பாழாய்ப்போன வலிப்பு வந்துவிட, பற்களைக்கிட்டியபடி துடிக்கும் கல்பனாவைப் பார்க்கும்போது நம் இதயமே வெடித்து விடும். நாம் பதறிக்கொண்டிருக்கும்போதே கொஞ்சம் கொஞ்சமாக நீரில் மூழ்கி........... இறந்து விட்டாளா?. இல்லையில்லை நாம் நெஞ்சங்களில் உறைந்து விட்டாள், நிறைந்து விட்டாள் கல்பனா.

    அதென்னவோ தெரியவில்லை. நடிகர்திலகத்துடன் எத்தனையோ படங்களில் இணைந்து நடித்த சில ஐட்டம் நடிகைகளுக்கு கிடைக்காத உயிர்த்தியாகம் செய்யும் 'நடிகர்திலக செண்டிமெண்ட்' ஜெய்குமாரிக்கு மட்டும் சாத்தியமாயிருக்கிறது, இல்லை சத்தியமாயிருக்கிறது.

    நெருப்பில் மூழ்கி கரைந்தாள் கவிதா....... நீரில் மூழ்கி மறைந்தாள் கல்பனா......

    அழியாத பாத்திரங்களாக திரையில் வாழ்ந்து, இன்றும் நம்மிடையே வாழ்ந்துகொண்டிருக்கும் (நான்கு பெண்குழந்தைகளுக்குத் தாயான) இந்தக் "குழந்தை" பல்லாண்டு வாழ்க.....

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •