-
7th October 2013, 10:10 AM
#2951
Junior Member
Regular Hubber

Originally Posted by
murali srinivas
சவாலே சமாளி - சினிமா நூற்றாண்டு விழா சிறப்பு காட்சி
நடிகர் திலகம் இன்றில்லை.12 வருடங்கள் ஓடி விட்டன அவர் இப்பூவுலகை விட்டு நீங்கி.அவருக்கென்று ஒரு அரசியல் கட்சியோ, அமைப்போ,ஆட்சியில் அதிகாரத்தில் பங்கோ இல்லை. சிவாஜி மீது "மாறா அன்பு" கொண்டவர்கள் அவர் எந்த சாதனையையும் செய்யவில்லை என்றும் சொல்கிறார்கள்.அவர்கள் கூற்றுப்படியே எந்த சாதனையையும் புரியாத ஒருவரை எந்த அரசியல் அதிகார பின்புலமும் இல்லாத அவர்தம் ரசிகர்களை பார்த்து இத்துணை கோவமும் ஆத்திரமும் ஏன் ஏற்படுகிறது என்பதுதான் புரியாத புதிர். எதிர்ப்பிலே வளர்ந்த நடிகர் திலகம் இன்றும் அதே எதிர்ப்பையே சந்தித்துக் கொண்டிருக்கிறார். அன்றைய நாட்களில் அதிகமாக அவர் முகம் தாங்கிய போஸ்டர்கள்தானே உரம் போட்டு வளர்க்கப்பட்டது. இன்றும் அது வேறு வடிவத்தில் தொடர்கிறது எனபதுதான் வேதனை.
(தொடரும்)
அன்புடன்
dedicated to those who still abuse & try to establish false claims on nadigar thilagam:
இங்கு எரிந்து கொண்டிருக்கும் மின்சார பல்புகளை எல்லாம் அணைத்து விட்டாலும்கூட, இந்த இடத்தில் ஒரே ஒரு சின்னஞ்சிறு அகல் விளக்கு எரிந்து கொண்டிருக்கும். அந்தச் சொற்ப வெளிச்சத்தின் அடியில் அற்பர்கள் துணையின்றி ஒரே ஒரு உருவம் மட்டும் ஓடி வேலை செய்து கொண்டிருக்கும். அதுதான் இந்த ராஜு!
போ – மூலைக்கு மூலை நின்று முரசு கொட்டு........ திட்டு........கெட்... அவுட்’.
-
7th October 2013 10:10 AM
# ADS
Circuit advertisement
-
7th October 2013, 11:23 AM
#2952
Senior Member
Seasoned Hubber

Originally Posted by
Murali Srinivas
சவாலே சமாளி - சினிமா நூற்றாண்டு விழா சிறப்பு காட்சி
எதிர்ப்பிலே வளர்ந்த நடிகர் திலகம் இன்றும் அதே எதிர்ப்பையே சந்தித்துக் கொண்டிருக்கிறார். அன்றைய நாட்களில் அதிகமாக அவர் முகம் தாங்கிய போஸ்டர்கள்தானே உரம் போட்டு வளர்க்கப்பட்டது. இன்றும் அது வேறு வடிவத்தில் தொடர்கிறது எனபதுதான் வேதனை.
அன்புடன்
டியர் முரளி சார்,
சவாலே சமாளி சிறப்புக் காட்சி குறித்த தங்களின் கருத்துக்கள் ரசிகர்கள் அனைவரின் என்ன ஓட்டத்தை அப்படியே பிரதிபலிப்பாக உள்ளது.
-
7th October 2013, 11:25 AM
#2953
Senior Member
Veteran Hubber
டியர் முரளி சார்,
சத்யம் அரங்கில் சவாலே சமாளி திரைப்படம் காணச்சென்ற தங்களது அனுபவம் மனதை வலிக்கச்செய்தது (அதாவது அரங்கில் நுழைவதற்கு முன் ஏற்பட்ட அனுபவம்). திரைப்பட நூற்றாண்டு கொண்டாட்டத்துக்கு நடிகர்திலகத்தின் பல சிறந்த திரைப்படங்கள் தேர்வு செய்யப்படவில்லை என்று ஏற்கெனவே பெரிய குற்றச்சாட்டும் மனவலியும் இருக்கும்போது, அப்படி தேர்ந்தெடுத்த படங்களைத் திரையிடுவதிலும் இத்தனை சங்கடங்களா?. இப்படத்தின் கதைப்போக்கு என்னவென்பது அவர்களுக்குத் தெரியாதா?. படங்களைத் தேர்வு செய்ததே "அவர்கள்தானே" . அப்படியிருக்க திரையிடப்படும்போது குளறுபடிகள் ஏன்?. ஒரு மாபெரும் கலைஞனை எந்த அளவுக்குத்தான் அவமானப்படுத்துவார்கள்?.
ஒன்று மட்டும் உண்மை. யாரும் கண்டுக்காத வரையில் எந்த இயக்கமும் வளராது. எதிர்க்க எதிர்க்கத்தான் வளர்ச்சியை நோக்கி முன்னேறும். நம்முடைய படையைக்கண்டு, அதிகாரத்தில் இருக்கும் பெரிய இயக்கங்களே பயப்படுவது நமக்குப்பெருமை.
அன்று தலைவரின் சுவரொட்டிகளில் சாணியடித்துக் கொண்டிருந்த படிக்காத பாமரனை விட, மெத்தப்படித்து விட்டு இன்று இணையத்தின் வழியாக சாணியடித்துக் கொண்டிருக்கும் 'மே(ல்) தாவிகள்' கேவலமாகிப்போன அவலத்தை என்ன சொல்வது?.
படத்தைப் பொறுத்தவரை, முதலிரவில் நடிகர்திலகம் பேசும் காட்சியும், அதைத்தொடர்ந்து வரும் 'நிலவைப்பார்த்து வானம் சொன்னது' பாடலும், அதேபோல அந்தக் கிணற்றடிக் காட்சியும் எப்போதுமே படத்தின் ஹைலைட். அதுபோல படத்தின் துவக்கத்தில், கணவனைப் பார்க்கப்போய் திரும்பி வரும் தங்கையிடம் பேசும் காட்சியும், கோயிலில் தேர்தல் ஒப்பந்தம் எழுதும் காட்சியும் ஹைலைட்தான். மொத்தத்தில் படம் துவக்கம் முதல் இறுதிவரை செம டெம்போதான், தொய்வே கிடையாது.
கடைசியில் ஒரு சவால் விட்டீர்களே அதுதான் உச்சமான ஹைலைட். படத்தின் பவர்புல் கிளைமாக்ஸ் சண்டையை சக நடிகனுக்கு விட்டுக் கொடுத்துவிட்டு சும்மா அமைதியாக நின்று ஸ்கோர் பண்ண வேறு யாருக்கும் தைரியம் இருந்ததா?. இருக்கிறதா?. இந்த சவாலை சமாளிக்க யாராலும் முடியாது.
நம்மைப் பார்த்து பயப்படுகிறார்கள் அல்லவா, அங்கேயே நாம் வென்று விட்டோம். "தம்பி நாமம் வாழ்க".......
Last edited by mr_karthik; 7th October 2013 at 12:38 PM.
-
7th October 2013, 11:29 AM
#2954
Senior Member
Seasoned Hubber
Last edited by KCSHEKAR; 7th October 2013 at 01:00 PM.
-
7th October 2013, 11:30 AM
#2955
Senior Member
Seasoned Hubber
-
7th October 2013, 11:33 AM
#2956
Senior Member
Seasoned Hubber
-
7th October 2013, 12:48 PM
#2957
Junior Member
Newbie Hubber
கார்த்திக் சாரின் வேண்டுகோளை ஏற்று கஜுரஹோ factor குறைத்து என் காதல் தொடர் தொடரும்.
கீழ்கண்ட படங்கள் முக்கியமாக பரிசீலனையில்....
1)பராசக்தி
2)புதையல்
3)ராஜா ராணி
4)தெய்வ பிறவி
5)இரும்பு திரை
6)பாவை விளக்கு
7)கல்யாணியின் கணவன்
8)ஆண்டவன் கட்டளை
9)புதிய பறவை
10)சாந்தி
11)நீலவானம்.
12)கலாட்டா கல்யாணம்.
13)தங்க சுரங்கம்.
14)தெய்வ மகன்.
15)நிறை குடம்.
16)சிவந்த மண்.
17)சுமதி என் சுந்தரி.
18)வசந்த மாளிகை.
19)உத்தமன்
20)ரோஜாவின் ராஜா
21)திரிசூலம்.
22)முதல் மரியாதை
ஏதாவது ஆலோசனை இருந்தாலோ ,விட்டு போயிருந்தாலோ இணைக்கலாம்.
Last edited by Gopal.s; 7th October 2013 at 01:10 PM.
-
7th October 2013, 12:58 PM
#2958
Junior Member
Newbie Hubber
-
7th October 2013, 01:10 PM
#2959
Senior Member
Diamond Hubber
'சவாலே சமாளி' (கிணற்று சீன்)
'சவாலே சமாளி' யின் அந்த பாப்புலரான கிணற்று சீன் பலநாள் என் தூக்கத்தைக் கெடுத்த பெருமை உடையது. ஜெயலலிதா உயிரை மாய்த்துக் கொள்ளப் போகும் அந்த இடம்தான் படத்தின் உயிர்நாடியே! நடிப்பின் உயிர்நாடியும் கூட. ஜீவனுள்ள இக்காட்சி ஜீவன் உள்ளவரை மறக்காது.
தேர்தல் பந்தயத்தில் பண்ணையாரிடம் ஜெயிக்கும் மாணிக்கம் பந்தய பொருளாக அவர் மகள் சகுந்தலாவை பெற்று ஊரார் முன்னிலையில் தாலி கட்டி விடுகிறான் அவள் விருப்பமில்லாமலேயே. பணக்கார சகுந்தலாவுக்கும், ஏழை விவசாயி மாணிக்கத்திற்கும் பொருத்தமே இல்லாத திருமணம். பணக்காரத் திமிர் கொண்ட மனைவியை ஏழை மாணிக்கம் அடக்கி ஒடுக்க நினைக்கிறான் அவள் தனக்கேற்றவாறு இருக்க வேண்டும் என்று எண்ணி. தன் நிலத்து வேலைகளையும், வீட்டு வேலைகளையும் அவளைச் செய்யச் சொல்லி ஆணையிடுகிறான். முதலிரவில் கூட தொட அனுமதிக்காத சகுந்தலா கணவன் (இல்லை அவளைப் பொருத்தவரை அவன் கயவன்) இடும் பழக்கமில்லாத வேலைகளில் மனம் நொந்து போகிறாள். ஆனால் மாணிக்கத்திற்கோ உள்ளுக்குள் அவள் மீது உயிர். அவன் வெளிக்காட்ட மாட்டான். அவளுக்கோ அவன் ஒரு வஞ்சகன், பழி உணர்ச்சி கொண்டவன். அவனைப் பழிவாங்கவோ அல்லது தன மனதிற்குப் பிடிக்காதவனோடு வாழப் பிடிக்காமலோ அவள் தன் உயிரை தோட்டத்துப் பக்கம் உள்ள கிணற்றில் குதித்து மாய்த்துக் கொள்ள முற்படுகிறாள். மனைவியைப் பற்றி நன்கறிந்த மாணிக்கம் கண்கொத்திப் பாம்பாக அவளைக் கவனித்து அவளை காப்பாற்றுகிறான். தன்னவள் தன்னைப் பற்றி தெரிந்து புரிந்து கொள்ளாமலேயே உயிரை விட எத்தனித்து விட்டாளே... நமக்கு பழிபாவத்தைச் சேர்க்க இருந்தாளே என்று மனம் வெதும்பி அவளுக்குத் தன் நிலையை விளக்குகிறான். மனம் விட்டு தன் உள்ளத்தில் பொங்கும் உணர்ச்சிகளை அருவியாய் வார்த்தைகளில் அவளிடம் கொட்டித் தீர்க்கிறான். தான் குற்றமற்றவன்...அவள் மேல் தீராத அன்பு கொண்டவன் என்பதை அவளுக்குத் தன்னாலான மட்டில் புரிய வைக்க முயல்கிறான்.
இதுதான் சிச்சுவேஷன். மாணிக்கமாக மாசில்லாத நம் நடிப்புலக மாணிக்கம். மனைவி சகுந்தலாவாக ஜெயா மேடம்.
ஆஹா! எப்பேர்பட்ட பங்களிப்பு நடிகர் திலகத்துடையது.! கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொள்ளப் போகும் நேரத்தில் கயிற்றால் ஜெயலலிதாவை பிடித்து இழுத்துக் காப்பாற்றப் போகும் போது நடத்த ஆரம்பிக்கும் நடிப்பு சாம்ராஜ்யம் கொஞ்சம் கொஞ்சமாக விரிவடைந்து எல்லைகளின்றிப் பரவி ஆக்கிரமிக்கும் அதிசயத்தை என்னவென்று சொல்ல!
கயிற்றால் ஜெயலலிதாவை கட்டி இழுத்துக் காப்பாற்றும் போது அவரது கண்களில் தெரியும் ஆழம் அளவுகோல் இல்லாதது. (எனக்குத் தெரியாம நீ எதுவும் செஞ்சுடுவியா...செய்யத்தான் விட்டுடுவேனா? உன் இஷ்டத்திற்கு நீ ஆட்டம் போடுவே! நான் பார்த்துகிட்டு சும்மா இருக்கணும்! ம்.... )
கயிற்றால் ஜெயா இவரை அடிக்க அடிக்க கயிற்றின் ஒவ்வொரு பகுதியாக பிடித்தபடி சிரிக்கும் சிரிப்பு. (பார்த்தியா! இங்கேயும் ஜெயிச்சது நான்தான்)
ஜெயலலிதா இவரை திட்டித் தீர்த்தவுடன் (ஒரு பெண்ணுங்கிற இரக்கம் கூட இல்லாம இப்படி அரக்கத்தனமா நடந்துக்குற நீங்க மனுஷனே இல்ல!) என்று குமுறி அழும் போது
"அழு... நல்லா அழு... வாய்விட்டுக் கதறு.... அப்பத்தான் உன் வெறி அடங்கும்...உன் சந்தோஷத்தையெல்லாம் குழி தோண்டிப் பொதச்சவன் நான். நான் உயிரோட இருக்கிற வரைக்கும் அது உனக்குக் கிடைக்காது... அதுதானே உன் குற்றச்சாட்டு.... சரி! உன் சந்தோஷத்தை யெல்லாம் அழிச்ச நானே அழிஞ்சி போயிட்டா....உனக்கு அது திரும்ப கிடைச்சுடுமில்லையா?" என்றபடி வயிற்றுப் பகுதியில் கைகளைக் கட்டியபடியே சாவின் வாயிலிலும் நிற்கும்போது கூட நிற்கும் அந்த ஆண்மை நிறைந்த கம்பீர போஸ்.
ஒன்று இரண்டு மூன்று எண்ணி பத்தைத் தொடும் போது கைகள் இவரைத் கிணற்றில் தள்ளத் தயார் நிலையில் இருந்தும் மனம் மறுத்த காரணத்தால் ஜெயலலிதா தோற்றுவிட நடிகர் திலகம் கீழே இறங்கி
"உனக்கு அந்த துணிச்சல் இல்ல. உன் மனசுல பலவீனம்தான் மண்டிக் கிடக்குது அதனாலதான் சாகத் துணிஞ்ச"..... என்று பேசிக் கொண்டே வருவார்.
"நீ என்கூட வாழ்ந்துதான் தீரணும்னு உன்னை நிர்ப்பந்தப்படுத்துறது உன் கழுத்துல கிடக்கிற இந்த மஞ்சக் கயிறுதானே! நான்தானே அதை உன் கழுத்தில கட்டினேன். இப்ப ஒரு நிமிஷம்... ஒரு நிமிஷம் உன்னைத் தொடரத்துக்கு அனுமதி கொடுத்தீனா நானே அந்தக் கயித்த அறுத்து எறிஞ்சிட்டுப் போறேன். அதுக்கப்புறம் உன் இஷ்டப்படி எப்பிடி வேணும்னாலும் வாழலாம்...என்று சொல்லி திரும்பவும்
'எப்பிடி வேணும்னாலும்'
என்று இரண்டாம் முறை அழுத்தம் கொடுப்பார். தான் அப்படி வழங்க இருக்கும் அனுமதியை ஆணித்தரமாக கூறுவதாக அர்த்தம் தொனிக்கும்படி வசங்களை டெலிவிரி செய்வார்.
"நீ எனக்கேத்த மனைவியாய் வாழணும்ங்கிற ஆசையினால உனக்குப் பழக்கமிலாத வேலைகளை செய்யச் சொல்லி உன்னைக் கட்டாயாப் படுத்தினேன். அது உனக்குக் கொடுமையாப் பட்டுது. நீ நெஞ்சு வெடிச்சு கதறி அழுகிறத பார்க்கும் போது உன்னைப் போலவே எனக்கும் கதறி அழுகணும் போல தோணுது... என்ன செய்யிறது? நான் ஆம்பிளயாச்சே! அதனாலதான் மனசுல இருக்கிற வேதனைகளையெல்லாம் வெளியே சொல்ல முடியாமே அப்படியே வாய்க்குள்ளேயே போட்டு மென்னு முழுங்கிக்கிறேன்.... முழுங்கிக்கிறேன்" என்று மனக்குமுறல்களைக் கொட்டித் தீர்ப்பார்.
இந்தக் காட்சியில் வசனங்கள் மிகப் பெரிய பலம். வசனங்களைச் சொல்லாமல் இந்தக் காட்சியை விவரிக்க இயலாது.
"உன்னதான் தொட முடியல்ல...உன் மனசையாவது தொடலாம்னு பாக்குறேன்". சொல்லி நிறுத்துவார். முடியல்ல என்பதை கைகளைக் கொட்டி உணர வைப்பார். ஒரு விசும்பு விசும்புவார்.
"நீ உன் மனசுல இருந்ததையெல்லாம் ஒளிவு மறைவு இல்லாம கொட்டித் தீர்த்த மாதிரி நானும் என் மனசுல இருந்ததையெல்லாம் ஒளிவு மறைவு இல்லாம கொட்டித் தீர்த்துட்டேன். ஒருவேளை உன்னை என்னால காப்பாத்த முடியாம போய் இருந்தா நான் உன்னப் பத்தி என் மனசுல நினச்சுக்கிறதெல்லாம் உன்கிட்ட விளங்க வைக்க முடியாமலேயே போயிருக்கும்". (உதடுகளை அவ்வளவு அழகாகக் குவித்து சோகத்தையும், துயரத்தையும் கண்களில் தேக்கிக் காண்பிப்பார்)
ஜெயலலிதாவிடம் முழுவதுமாகத் தன் நிலையை விளக்கிவிட்டு புயல் அடித்து ஓய்ந்து போன சூழ்நிலையைக் காண்பிப்பார். பேசி முடித்த பின் கிணற்றின் மேல் கால்களுக்கிடையில் கைகளை கொடுத்து அப்படியே ஒடுங்கிப் போய் உட்கார்ந்திருப்பார். ("இதுக்கு மேலே உனக்கு விளக்க என்னாலாகாது தாயே! புரிஞ்சா புரிஞ்சுக்கோ! இல்லைன்னா உன் இஷ்டம்" என்பது போல.)
போகும் போது,
" நீ செஞ்ச இந்த பைத்தியக்கரத்தனமான காரியத்தை நான் யாருகிட்டேயும் சொல்லல.... நான் வீட்டுக்குப் போறேன்...நீ வரற்தா இருந்தா வரலாம்" (இடது கை காது மடல்களை பிடித்து திருவியபடி ஒரு அற்புதமான மானரிசத்தைக் காட்டுவார்)
என்று சொல்லி விட்டு விரக்தியுடன் செல்லுவார்.
வாவ். என்ன ஒரு காட்சி. ஜெயலலிதாவிடம் கோபமாக வாதம் தொடக்கி, பின் ஜெயாவை பேச முடியாதபடி வாயடைக்கச் செய்து, கோப வார்த்தைகள் கொஞ்சம் கொஞ்சமாக மாறி. மனைவி மேல் கொண்ட உண்மையான அன்பை கனிவான வார்த்தைகளில் கொட்டி. அவள் புரிந்து கொள்ளாத நிலையை குரல்கள் உடைந்து நா தழுதழுக்க விளக்கி, அதுவரை அழாதவர் அதிகமாக அழுது புரளாமல் தேவையான அழுகையை மட்டுமே சிந்தி, அவ்வளவுதான் நம் விதி என்ற விரக்தியோடு இறுதியான ஒட்டிக் கொண்டிருக்கும் சிறு நம்பிக்கையில் 'அவள் திருந்தி வந்தால் வரட்டும்... இல்லையென்றால் அவள் இஷ்டம்' என்ற வெறுப்பு கலந்த விரக்தி சூழ்நிலையைக் காட்ட நம் நடிக தெய்வத்தைத் தவிர எவரால் முடியும்?
ஒரு நடிகன் என்பவன் நடித்து விட்டு சென்று விடுவான்.. அந்த நேரம் நாம் அவனைப் பார்ப்போம். அத்தோடு மறந்து விடுவோம். ஆனால் இந்த நடிகன் அப்படியா?
பாத்திரத்தை உணர்ந்து நடிப்பவனே மகாநடிகன்.
அந்த பாத்திரத்தின் தன்மையை பார்க்கிறவர்களுக்குப் புரிய வைக்கும் காரியத்தையும் வெற்றிகரமாகச் செய்து முடிக்கிறானே... அவன் உலக மகா நடிகன்.
அது மட்டுமல்ல. அந்த உணர்வை உயிருள்ள வரையில் நம் தசை நாளங்களில் பரவச் செய்து நம்மை உணர்வுகளின் சங்கமம் என்ற கயிற்றில் பின்னிப் பினைக்கிறானே... அவன்... அவனை என்னவென்று சொல்வது?!
அவரைத்தான்
நடிகர் திலகம் என்ற நடிப்பு மகான் என்கிறோம்.
Last edited by vasudevan31355; 7th October 2013 at 01:20 PM.
நடிகர் திலகமே தெய்வம்
-
7th October 2013, 01:48 PM
#2960
Senior Member
Veteran Hubber
டியர் கோபால் சார்,
பட்டியல் ஓ.கே.தான். ஆனால் எங்களை மறந்துவிட்டீர்களே என்று கர்ணனும் சுபாங்கியும் வருத்தப்படுவது கேட்கலையா? ('இரவும் நிலவும் வளரட்டுமே'). - இது எனக்காக.
அவன்தான் மனிதன் மஞ்சு எங்கே?. - இது வாசுவுக்காக.
உயர்ந்த மனிதனின் 'வெள்ளிக்கின்னம்தான்' எங்கே? - இது கோபால் உங்களுக்காக. ..
Bookmarks