-
18th February 2014, 03:01 AM
#11
Senior Member
Diamond Hubber
இந்த இசை ராட்சசனுக்கு ஒரு ராக அமைப்பிற்கு எழுதிய பாடல் வரிகளை வைத்து மேலும் பல இசை ஓவியங்களை வரைந்து பார்க்கும் சோதனை முயற்சிகளுக்கு கணக்கே இல்லை. பாலு குரலில் "தீர்த்தக்கரை ஓரத்திலே தென்பொதிகை சாரத்திலே" பாடலின் சோகத்தில் நாம் கரைந்து போனது கணக்கில் அடங்கா. ஆனால் அதே வரிகளுக்கு ராஜாவின் இன்னொரு ஆக்கம் அந்த சோக ரசத்தை அப்படியே நொடிப்பொழுதில் மாறுபடுத்திக் காட்டுகிறது. முதல் முறை கேட்கும்போதே சாஸ்டாங்கமாய் விழுந்துவிடலாம் எனத் தோன்றுகிறது. ராகதேவன் என சும்மாவா அழைத்தார்கள்?
தீர்த்தக்கரை ஓரத்திலே தென்பொதிகை சாரத்திலே - 1
தீர்த்தக்கரை ஓரத்திலே தென்பொதிகை சாரத்திலே - 2
https://soundcloud.com/murugesansara...anele-raja-sir
பாடல் வரிகளை ஒரு இம்மியளவும் மாற்றாமல் விட்டது ராஜாவுக்கே உரிய துணிச்சல்! ராஜாங்கம்.
சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...
-
Post Thanks / Like - 1 Thanks, 2 Likes
-
18th February 2014 03:01 AM
# ADS
Circuit advertisement
Bookmarks