-
11th June 2014, 06:57 PM
#81
Junior Member
Newbie Hubber

Originally Posted by
mr_karthik
ஐயா கோபாலரே,
.
கோபாலரே,
எங்கேயோ கேட்ட குரல்.....அதே குரல்.....
-
11th June 2014 06:57 PM
# ADS
Circuit advertisement
-
11th June 2014, 07:05 PM
#82
Senior Member
Veteran Hubber
Oh...., again misunderstanding.
What I mentioned as 'Madura Gaanam' is this thread.
NOT Jai, Ravi, Muthuraman threads.
-
11th June 2014, 07:09 PM
#83
Senior Member
Veteran Hubber

Originally Posted by
Gopal,S.
கோபாலரே,
எங்கேயோ கேட்ட குரல்.....அதே குரல்.....
யெஸ்,
அதை படித்து தொலைத்துவிட்டு உடனே வந்து இங்கு பதிவிட்டதால் வந்த பாதிப்பு.
நல்ல விஷயங்கள்தான் மனதில் தங்கும் என்பதில்லை. இதுபோன்ற வேண்டாதவைகளும்தான்.
Last edited by mr_karthik; 11th June 2014 at 07:16 PM.
-
11th June 2014, 07:17 PM
#84
Junior Member
Newbie Hubber
நான் அடுத்து எழுத போவது சற்றே சிக்கலானது.ஒரு ராகம் அடிப்படையில் அமைந்த பல பாடல்கள் நம்மை கவரும் .ஆனால் நம்மை கவர்ந்த அத்தனை பாடல்களும் ஒரு புள்ளியில் தொடங்கியவை என்று பலருக்கு தெரியாது.
உதாரணம் -சிறு வயதில் நான் கேட்ட மாத்திரம் உருகி சொக்கிய மதுர கானங்கள் , நித்தம் நித்தம் மாறுகின்றதெத்தனையோ,(பந்த பாசம்), பெண் பார்த்த மாப்பிள்ளைக்கு (காவியத்தலைவி), உன்மேல கொண்ட ஆசை (காதல் ஜோதி). அவ்வளவு பிடிக்கும். பின் கல்லூரி நாட்களில் சிறிதே தன் முயற்சியில் ,இசையறிவு பெற்றதும் ,மூன்றும் ஒரே ராக அடிப்படை என்று புரிந்தது.
இந்த விஷயத்தை கையிலெடுக்கிறேன்.
அதே போல ஒவ்வொரு பாடலிலும் முத்திரை வரிகள் ஒன்று இருக்கும்.
உதாரணம்- பெண் பார்த்த பாடலில் "கட்டிலுக்கு கடன் கொடுத்தாள் ,தொட்டிலுக்கு விலை கொடுத்தாள் ". நிலவு வந்து பாடுமோ பாடலில் "ஊமை கண்ட கனவையும்,உறவு தந்த நினைவையும்,கருவில் உள்ள மழலையும் உருவம் காட்ட முடியுமோ." ஆடுமடி தொட்டில் பாடலில் "சிந்தையிலே நான் வளர்த்த கன்று சேர்ந்ததடி உன் வயிற்றில் இன்று".
இதையும் கையிலெடுக்கிறேன்.
-
11th June 2014, 07:57 PM
#85
Junior Member
Newbie Hubber
தொடரும் மறக்க பட்ட பிடித்தவை.(அவ்வளவாக கண்டு கொள்ள படாத நல்ல பாடல்கள்)
என்னென்னவோ நான் நினைத்தேன்-அதே கண்கள்.
உன் மேல கொண்ட ஆசை- காதல் ஜோதி.
சாட்டை கையில் கொண்டு வாங்க கண்டு-காதல் ஜோதி.
பட்டம் விட்டது போலே பறக்குதம்மா-பணக்கார பிள்ளை
சிங்கபூரு மச்சான் -நாம் மூவர்.
பவுர்ணமி நிலவில்- கன்னி பெண்.
அடி ஏண்டி அசட்டு பெண்ணே-கன்னி பெண்.
சித்திர பூவிழி வாசலிலே-இதயத்தில் நீ.
என்னை முதல் முதலாக-பூம்புகார்.
பொன்னாள் இது போலே -பூம்புகார்.
ஓடையிலே ஒரு தாமரை பூ-தலைவன்.
நாலு பக்கம் சுவரு- தேடி வந்த மாப்பிள்ளை.
ஒரு நாள் கூத்துக்கு-எங்கள் தங்கம்.
தேன் சிந்துதே வானம்-பொண்ணுக்கு தங்க மனசு.
நேரம் இரவு நேரம்- பொண்ணுக்கு தங்க மனசு.
கங்கை நதியோரம்- வர பிரசாதம்.
பட்டு பொண்ணு இவ தொட்டு புட்டா -கரை கடந்த ஒருத்தி.
ஆனந்த தாகம் உன் கூந்தல் பூக்கள் தீர்க்குமே-வா இந்த பக்கம் .
ஒரு வீடு இரு உள்ளம்- அவர் எனக்கே சொந்தம்.
அங்கும் இங்கும் பாதை உண்டு- அவர்கள்.
சுகந்தானா சொல்லு கண்ணே- மன்மத லீலை.
தித்திக்கும் பாலெடுத்து-தாமரை நெஞ்சம்.
காதலின் பொன் வீதியில்-பூக்காரி.
என்னதான் ரகசியமோ -இதய கமலம்.
ஒருவன் காதலன் ஒருத்தி காதலி-வெண்ணிற ஆடை.
ஒரு நாளிலே உறவானதே-சிவந்த மண்.
ஒரு தரம் ஒரே தரம்-சுமதி என் சுந்தரி.
அங்க முத்து தங்க முத்து-தங்கைக்காக.
நினைத்தேன் உன்னை - தங்கை.
காற்றினிலே பெரும் காற்றினிலே-துலாபாரம்.
தாழம் பூவே தங்க நிலாவே -ரத்த திலகம்.
வாடை காற்றம்மா- ரத்த திலகம்.
நினைத்தால் போதும் ஆடுவேன் -நெஞ்சிருக்கும் வரை.
செவ்வானத்தில் ஒரு நட்சத்திரம்-நான்கு கில்லாடிகள்.
பூவிலும் மெல்லிய- கண்ணன் வருவான்.
நிலவுக்கு போவோம்- கண்ணன் வருவான்.
அத்தான் நிறம் சிகப்பு- நிறை குடம்.
கேட்டாயே ஒரு கேள்வி -இளைய தலைமுறை.
அருவி மகள் அலையோசை-ஜீவ நாடி.
கல்லுக்கு நீதி சொல்ல-எதிர்காலம்.
வாழ்ந்து பாப்போம் வா நைனா-எதிர்காலம்.
மௌனம்தான் பேசியதோ- எதிர்காலம்.
மலரும் மங்கையும் ஒரு ஜாதி-அன்னையும் பிதாவும்.
மோதிரம் போட்டது போன்றொரு -அன்னையும் பிதாவும்.
சூரியம் போயி சந்திரன் வந்தா-முகூர்த்த நாள்.
அவன் நினைத்தானா இது நடக்குமென்று-செல்வ மகள்.
வெண்ணிலா முகம்-செல்வ மகள்.
பறந்து செல்லும் சிட்டு குருவி-செல்வ மகள்.
பொன்னா இல்லை பூவா -வாயாடி.
எஜிப்டு நாட்டின் இளவரசி -என்ன முதலாளி சௌக்கியமா.
கனவில் நின்ற திருமுகம்-டீச்சரம்மா
இறைவனுக்கும் பாட்டெ ழுதும் .ஆசை வந்தது-
எனக்குள்ளே நீ இருக்க - ஜீவனாம்சம்.
(தொடரும்)
Last edited by Gopal.s; 14th June 2014 at 06:18 PM.
-
12th June 2014, 08:16 AM
#86
Senior Member
Diamond Hubber
ராகவேந்திரன் சார்,
அற்புத பாடல்களான 'ஆனந்த மயக்கம்', 'முல்லைப் பூப்போலே' பாடல்கள் வழங்கிச் சிறப்பித்துள்ளீர்கள். இரண்டுமே அபூர்வமானவைதான்.
'நல்ல முடிவு' திரைப்படத்தில் 'நீயின்றி நான் இல்லை வாடா ரங்கையா' பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும். சுசீலாவின் இனிமையான குரல் அமைதியாய் ஒலிப்பது தனி சுகம்.
-
12th June 2014, 08:18 AM
#87
Senior Member
Diamond Hubber
கார்த்திக் சார்,
தங்கள் பதிவு என்னை மிகவும் பாதிப்படைய வைத்தது. கவலை வேண்டாம். மதுர கானங்களில் மூழ்கி மனக்கவலைகளை மறப்போம். தாங்கள் மிக அழகாக இங்கு பங்களித்து இத்திரிக்கே பெருமை சேர்த்துக் கொண்டிருக்கிறீர்கள்.
கதாநாயகியரின் போதைப் பாடல்கள் (2) வரிசை சக்கை ரகளை. அருமையான தொடர். அதுவும் என்னை மிகவும் பாதிப்படையச் செய்த நம் 'ராட்சஸி' பாடும் 'எல்லோரும் பார்க்க' பாடலை பற்றி அருமையாக எழுதி எஎல்லோரையும் பார்க்க படிக்க வைத்து விட்டீர்கள்.
பாரதி அருமையாக பரிதாபம் வரும்படி அருமையாகப் பண்ணியிருப்பார்.
இன்னும் என்ன என்ன புதுமைகள் செய்யப் போகிறீர்களோ!
அடுத்த கதாநாயகியரின் போதைப் பாடல்கள் (2) தொடரில் போதைப் பாடல் என்னவாக இருக்கும்? ம்...
என் ஆசையும் நேசமும்?...
எந்தன் உள்ளம் துள்ளி விளையாடுவதும் ஏனோ?...
ஐயோ! மண்டை வெடித்து விடும் போல் இருக்கிறதே!
உடனே போடுங்கள் கார்த்திக். இடைவெளி வேண்டாம். பொறுப்பதற்கில்லை.
கார்த்திக் சார்,
முத்துராமன் நீங்கள் சொன்ன காலகட்டங்களில் அனாதை அனந்தன், பதிலுக்கு பதில் படங்களிலும் வில்லனாகத் தோன்றியுள்ளார். 'என்ன நான் சொல்றது'? (நன்றி சாமிக்கண்ணு)
-
12th June 2014, 08:21 AM
#88
Senior Member
Diamond Hubber
கோ,
உங்கள் லிஸ்ட் அப்படியே என்னுடைய லிஸ்ட். எப்போது காப்பி அடித்தாய் நண்பா! ஒ...நான் போனில் சொல்லும்போது எழுதி வைத்துக் கொண்டாயோ. ரசிகன் மட்டுமல்ல.... திருடன்யா நீ.
பிடித்தாய் பார் பெண் பார்த்த மாப்பிள்ளையை!
இந்தப் பாடலைநிறையப் பேருக்கு தெரியாது கோ.
இந்தப் பாடலை இரவில் கேட்டு பலமுறை கண்ணீர் சிந்தியிருக்கிறேன் ஜோ. இப்பாடலை பாலு படமாக்கியிருக்கும் விதம் மிக மிக அருமை.
தான் வாசுவிடம் மாட்டிக் கொண்ட கஷ்டங்களை பாடலின் வாயிலாக சௌகார் வெளிப்படுத்த, சௌகார் ஒரு விலைமகள் என்று ஜெமினி மகாலிங்கம் ஜெமினியிடம் பற்ற வைத்துவிட, அதை நம்பிய ஜெமினி படுகோபத்துடன் சௌகாரை வசைபாட, இரவு விடுதியில் அந்த பரிதாபமான சௌகார்
கட்டளையில் பிறந்த பிள்ளை
காவல் காண வாழுகிறாள்
என்று தன் மகளின் நிலைமையை தன் நிலைமையோடு சேர்த்து ஜெமினிக்கு உணர்த்துமிடம், இந்தப் பாடலின் அந்த சில நிமிடங்கள்
வார்த்தைகள் இல்லை கோ.
ஜெமினி கண் மண் தெரியாத கோபத்தில் சௌகாரை மாடியிலிருந்து முறைப்பாரே. இதையெல்லாம் ஜெமினி அருமையாகச் செய்வார்.
Last edited by vasudevan31355; 12th June 2014 at 08:24 AM.
நடிகர் திலகமே தெய்வம்
-
12th June 2014, 08:23 AM
#89
Senior Member
Seasoned Hubber
கார்த்திக் சார்
வாசு சார் சொன்னது போல் வித்தியாசமான தலைப்பில் பாடல்களைத் தொகுத்து வழங்க உள்ளது பல புதிய கோணத்தில் பாடல்களைப் பற்றித் தெரிந்து கொள்ள மிகவும் உதவியாயிருக்கும். கதாநாயகியரின் போதைப் பாடல்கள் தலைப்பே வித்தியாசமாக உள்ளது. நம் நாடு படத்தில் குடிகாரன் பேச்சு விடிஞ்சாலே போச்சு பாடலும் இந்த தலைப்பில் வருமா...
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
12th June 2014, 08:24 AM
#90
Senior Member
Seasoned Hubber
வாசு சார்
தலைவரின் ராஜா சிகரெட் ஸ்டைலுடனான தங்கள் அவதார் ... சிம்ப்ளி சூபர்ப்....
கலக்குங்கள்...
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
Bookmarks