-
12th June 2014, 08:27 AM
#91
Senior Member
Seasoned Hubber
வாசு சார்
காவியத் தலைவி பாடலைப் பற்றிச் சொல்லி விட்டீர்கள்.. அதை மக்கள் பார்த்து தெரிந்து கொள்ள வேண்டாமா...
பாடலில் ஷெனாய், சந்தூர், சாரங்கி, என பாடற் குழுவின் கருவிகளையே பயன் படுத்தியிருக்கும் மெல்லிசை மன்னரின் உத்தியை என்னென்று சொல்வது. இடையில் வரும் இடையிசைக்கு வயலின் பயன்படுத்தி அந்தக் காட்சியின் சிறப்பை மேலும் அதிகப் படுத்தியிருப்பார் மெல்லிசை மன்னர்.
Last edited by RAGHAVENDRA; 12th June 2014 at 08:30 AM.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
12th June 2014 08:27 AM
# ADS
Circuit advertisement
-
12th June 2014, 08:32 AM
#92
Senior Member
Diamond Hubber
வினோத் சார்,
'பிறந்த நாள்... இன்று பிறந்த நாள்' பாடல் 'நாம் மூவரி' ல் இருந்து தந்தமைக்கு நன்றி! 'மைனா'வுக்கும் சேர்த்துதான். நாம் நிறைய இப்பாடல் பற்றி அலைபேசியில் பேசியிருக்கிறோம்.
இலங்கை வானொலியில் அப்போதெல்லாம் நேயர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் அளிக்கும் போது இந்தப் பாடலின் முதல் நான்கு வரிகள் மட்டுமே ஒலிபரப்பி பின் நேயர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் சொல்வார்கள்.
இப்பாடலை நான்கு வரிகளுக்கு மேல் அப்போதெல்லாம் எனக்குத் தெரியாது. அப்புறமாகத்தான் முழுப் பாடலையும் கேட்டு பல்லவி பாழ்படாத சரணங்களை ரசிக்க முடிந்தது.
இன்னொன்று தெரியுமா? நான் டேப்ரிகார்டர் (1986) வாங்கினவுடன் tdk கேசட்டில் பதிவு செய்த முதல் பாடல் என்ன தெரியுமா?
'உயர்ந்த மனிதன்' படத்தில் நம் உயர்ந்த மனிதர் பாடும் 'வெள்ளிக் கிண்ணந்தான்' பாடல்தான்
அடுத்த பாடலாக
'வெண்ணிற ஆடை'யில் நம் மனதை வாட்டி வதைக்கும் 'நீராடும் கண்கள்' இங்கே பாடலை கடைக்காரரிடம் பதிவு செய்யச் சொன்னேன்.
அடுத்து மூன்றாவதாக பதிவு செய்தது நீங்கள் தந்துள்ள நாம் மூவரின் 'பிறந்தாள் பாடல்' தான். அவ்வளவு பிடிக்கும் இப்பாடல். இப்பாடலுக்கு நாகேஷ், ஜெய், ரவி ஆடிப் பிரமாதப்படுத்துவார்கள். நாகேஷும், ரவியும் சிரமமில்லாமல் உடம்பை வளைத்து (அதுவும் முக்கியமாக கால் ஸ்டெப்புகள் முட்டியை சற்றே மடக்கி வைத்து) அற்புதமாக ஆடுவார்கள். ஆனால் ஜெய்சங்கர் இவர்களுக்கு ஈடுகொடுக்க முடியாமல் சிரமப்படுவார். ஒருவழியாக ஒப்பேற்றி விடுவார்.
இன்றைய ஸ்பெஷல் (1)
அதுமட்டுமல்லாமல் இப்படத்தில் 'சிங்கப்பூரு மச்சான்' என்றொரு அட்டகாசமான குதூகலிக்க வைக்கும் ஒரு பாடலை எஸ்.எம்.எஸ்ஸின் தூள்பறத்தும் இசைக்கருவிகளின் சங்கமத்தில் டி.எம்.எஸ்ஸும், என் ராட்சஸியும் பாடுவார்கள் பாருங்கள்.
ராட்சஸி
ரோஜாச் செண்டு...
நானாகக் கண்டு...
ராஜா வண்டு...
தானாக நின்று...
என்று பாடுகையில் அதுவும் ஒவ்வொரு 'டு' வையும் படு அலட்சியமாக உச்சரிக்கும் போது என்ன மாதிரி ஒரு பாடகியை நாம் பெற்று இருக்கிறோம் என்று நாம் மார் தட்டாமல் இருக்க முடியாது.
ரவியின் நடனம் சாப்ளின் பாணியில் அதுவும் தாடியுடன், கையில் தடியுடன் கலக்கலாக இருக்கும். ரத்னாவும் மிக அருமையாக ஈடு கொடுப்பார் ரவிக்கு. ரவிக்கு ஒரு மிகப் பெரிய பிளஸ் பாய்ண்ட் உண்டு. எந்த ஜோடியைப் போட்டாலும் அது அவருக்கு அவ்வளவு அழகாக பொருந்தும்.
அல்வாத் துண்டு...
ஆடுவதைக் கண்டு...
அன்பே என்று...
பாடுவதைக் கண்டு...
வரிகளின் போது ரவி கால்களை மாற்றி மாற்றி வைத்தவாறு கையில் ஸ்டிக்கை வைத்து ஆடும் அழகு வாவ்... (ரவி போட்டிருக்கும் அந்த ஓவர் கோட்டும் அவருக்கு கனப் பொருத்தம்)
திரும்ப மறுபடி இந்த வரிகள் ஒலிக்கும் போது பின் பக்கமாக நமக்கு முதுகைக் காட்டி, முகத்தை பக்கவாட்டுகளில் திருப்பியபடியே, அவர் முன்னோக்கியபடி வைத்து செல்லும் ஸ்டெப்பும் அவ்வளவு ரம்மியம்.
அதுவும் டி.எம்.எஸ் கொடுக்கும் அந்த 'சொய்ங்ங்ங்ங்ங்......ங் ஆர்ப்பாட்டம் இருக்கிறதே. சோம்பேறியைக் கூட எழுந்து தாளம் போட வைக்கும் சுறுசுறு பாடல். எக்காலமும் என்னால் மறக்க முடியாத பாடல்.
வியட்நாம் அண்ணாச்சி சிங்கப்பூரு மச்சானை சிலிர்த்து ரசிப்பார் என்று இப்போதே கட்டியங் கூறுகிறேன்.
பாடலைக் கேட்டு எழுந்து ஆடத் தயாராகுங்கள்.
Last edited by vasudevan31355; 16th June 2014 at 08:34 AM.
நடிகர் திலகமே தெய்வம்
-
12th June 2014, 09:06 AM
#93
Senior Member
Seasoned Hubber
வாசு சார்
நாம் மூவர் பாடல் அந்த காலத்தில் பட்டி தொட்டியெங்கும் பிரபலம், குறிப்பாக சிங்கப்பூரு மச்சான் பாடல் தான் தமிழகத்தில் பிரபலமாயிற்று. பிறந்த நாள் பாடல் பிரபலமானதற்கு இலங்கை வானொலி புண்ணியம் கட்டிக் கொண்டது. கல்யாணம் விழாக்களில் சிங்கப்பூரு மச்சான் பாடல் ஒலிக்காத இடமேயில்லை என்ற அளவிற்கு ஹிட்டானது.
நினைவு கூர வாய்ப்பளித்ததற்கு நன்றி
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
12th June 2014, 09:07 AM
#94
Senior Member
Seasoned Hubber
எந்தக் காலத்திலும் நடிகர் திலகத்தின் பாதிப்பில்லாத நடிகர்கள் இருக்க மாட்டார்கள் என்பதற்கு மிகச் சிறந்த உதாரணம் கமல் நடித்த இந்தப் பாடல் காட்சி. அந்தரங்கம் திரைப்படத்தில் இடம் பெற்ற குதிரைக் குட்டி ஒரு கோழியைத் தின்றதாம் நம்புங்கள் என்ற இந்த பாடலில் கமலுடைய ஒவ்வொரு அசைவும் நம் கண்முன் நடிகர் திலகத்தைக் கொண்டு வந்து விடும். அருமையான பாடல் வரிகள், பதினாறு வயதினிலே ஆட்டுக்குட்டி பாடலை நினைவூட்டும்.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
12th June 2014, 10:14 AM
#95
Senior Member
Diamond Hubber
நன்றி ராகவேந்திரன் சர்,
எங்கிருந்து பிடிக்கிறீர்கள் இப்படியெல்லாம்? கிரேட் சார்.
எனக்கே இப்பாடல் முற்றிலும் மறந்து போய் விட்டது. உங்கள் வரிகளைப் படிப்பதற்கு முன்னாள் கண்ணை மூடி என்ன பாட்டு என்று யோசித்தேன். பெயில் ஆனேன். பின் குதிரைக் குட்டி என்ற ஆரம்ப வார்த்தையைப் படித்ததும் சட்டென்று ஞாபகம் வந்து விட்டது.

கமல் நடிகர் திலகத்திடம் அன்னை இல்லத்தில் 'நடிகர் திலகம் ஒரு பல்கலைக் கழகம்' என்று சென்னை தூர்தர்ஷன் தயாரித்த ஒரு தொலைக்காட்சிப் பேட்டியின் போது சொல்லுவார்.
"அண்ணே! நாங்கல்லாம் வளர்ந்துகிட்டு வர்றோம்.
நாங்க எது புதுசா செஞ்சாலும்
'சிவாஜி இதை அப்பவே பண்ணிட்டார்'
'சிவாஜி ஏற்கனவே இதை செஞ்சாச்சு'
என்று
தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், டான்ஸ் மாஸ்டர்கள் மற்ற எல்லோரும் சொல்லுகிறார்கள்.

நாங்க வேற மாதிரி நடந்து காண்பிச்சா 'சிவாஜி ஏற்கனவே இந்த மாதிரி நடந்துட்டாரே' என்கிறார்கள்.
நாங்க கஷ்டப்பட்டு டான்ஸ் செஞ்சா 'இந்த மூவ்ஸ் எல்லாம் சிவாஜி அந்தக் காலத்திலேயே பண்ணிட்டாரேப்பா' என்கிறார்கள்
நாங்க என்னதான் செய்யிறது தெரியல. எதை புதுசா பண்ணனும்னு நெனச்சாலும் முடியல. எங்கள அறியாம நீங்க எங்களுக்குள்ள நுழைந்சுடுறீங்க. வயெத்தெரிச்சலா இருக்குண்ணே"
என்று செல்லமாக தேவரிடம் சலித்தபடி தேவர் மகன் சிணுங்குவார்
நீங்கள் அளித்துள்ள பாடலை பார்த்ததும், அதில் கமல் நடிப்பைப் பார்த்ததும், கமல் கூறிய அவ்வளவும் அப்பட்டமான உண்மை என்று புரிந்தது மீண்டும்.
நன்றி சார்!
ஆஹா! வாட்டமாக ராகவேந்திரன் சார் ஒரு பதிவு போட்டார். ஆசையைத் தீர்த்துக் கொண்டேன். என் தெய்வத்தின் நிழற்படங்களை இந்தத் திரியில் நீண்ட நாட்களுக்குப் பிறகு அதுவும் காரணத்தோடு போட்டதில் மகிழ்ச்சியில் தலைகால் புரியவில்லை.
Last edited by vasudevan31355; 12th June 2014 at 10:38 AM.
நடிகர் திலகமே தெய்வம்
-
12th June 2014, 10:42 AM
#96
nam moover

Originally Posted by
RAGHAVENDRA
வாசு சார்
நாம் மூவர் பாடல் அந்த காலத்தில் பட்டி தொட்டியெங்கும் பிரபலம், குறிப்பாக சிங்கப்பூரு மச்சான் பாடல் தான் தமிழகத்தில் பிரபலமாயிற்று. பிறந்த நாள் பாடல் பிரபலமானதற்கு இலங்கை வானொலி புண்ணியம் கட்டிக் கொண்டது. கல்யாணம் விழாக்களில் சிங்கப்பூரு மச்சான் பாடல் ஒலிக்காத இடமேயில்லை என்ற அளவிற்கு ஹிட்டானது.
நினைவு கூர வாய்ப்பளித்ததற்கு நன்றி
எல்லா ஜாம்பவான்களும் வந்து திரியை கலக்கு கலக்கு என்று கலக்க ஆரம்பித்து விட்டார்கள் .
ஒரு நாள் இந்த சைட் பார்கவில்லை (சைட் விஷயமாக வெளி ஊர் சென்றதால் ) கார்த்திக் சார் சொன்னது போல் ஜெட் வேகத்தில் பரகிறடு
நாம் மூவர் திரை படம் திருநெல்வேலி palace de wallace என்று ஒரு திரை அரங்கம் அரத பழய எப்போதும் தீபாவளி பொங்கல் போன்ற நேரங்களில் கேப் (இரண்டு நாட்கள் மட்டும் மொத்தம் 4 காட்சிகள் தான் )
picture ஆக பயன்படுத்துவார்கள் . நாலு காட்சிகுளும் ஹவுஸ் புல் ஆக ஓடும் .
"சிங்கப்பூர் மாட்சன்" பாடலில்
"தாடி காரன் மச்சன் இவர் நாடி பித்து பாரு " என்று லீலா (தொழிலாளி)
ஒரு ஸ்டெப் போட்டவுடன் ரவி "எட்டடி நீளம் 5 அடி அகலம் ஒட்டகம் என்பது இது தானா " என்றவுடன் விசில் பறக்கும் கொட்டகையில்
வாழ்க ரவியின் நாமம்
-
12th June 2014, 10:54 AM
#97
கார்த்திக் சார்
போதை பாடலில்
அழகே உன்னை ஆரதிகேறேன் படத்தில் வரும்
லதாவின் இளமையுடன் வாணியின் ஏக்க குரலில் வரும்
"தனிமையில் யார் இவள் "
மற்றும் "நானே நானா யாரோ தானா" பற்றியும் கொஞ்சம் எழுதுங்கள்
அதே போல் காந்த கணஅழகி விஜயலலித டான்ஸ் உடன் வரும்
"பெண் ஒரு கண்ணாடி பார் துள்ளுது முன்னாடி " (காலம் வெல்லும் or கங்கா ) பற்றியும் கொஞ்சம் எழுதுங்கள்
மடை திறந்த உங்கள் எழுத்திற்கு காத்து இருக்கும்
-
12th June 2014, 11:10 AM
#98
Senior Member
Diamond Hubber
கிருஷ்ணா சார்
என்ன ஆச்சு?
அழகே உன்னை ஆராதிக்கிறேன்
வாணியின் ஏக்கக் குரல்
சைட்(டு) விஷயமாக வெளியூர்
லதாவின் இளமை
காந்தக் கண்ணழகி விஜயலலிதா
பெண் ஒரு கண்ணாடி
திரும்பக் கேட்கிறேன்.
எங்கள் ராட்சஸி பாடுவது போல்
வாலிபம் திருபி வந்து விட்டதோ
ஒரே இளமை மயமாக இருக்கிறதே!
(சின்னக் கண்ணன் சார்! ஜாக்கிரதை! உங்களுக்கு சரிநிகர் சமானமாய் போட்டிக்கு ஒரு ஆள் வந்து விட்டார். சமாளிப்பீர்களா?)
-
12th June 2014, 11:15 AM
#99
Junior Member
Newbie Hubber
வர வர எங்கள் தலைவர் ஐடம் மற்றும் போதை,ரெகார்ட் டான்ஸ் specialist ஆக மாறி விட்டார். நான் தலைவர் மாதிரி சுத்த பத்தமெல்லாம் இல்லேங்கோ. இடைவேளைக்கு முந்திய வசந்த மாளிகை ஆனந்த் ஆன நான் ,வரவேற்க காத்திருக்கிறேன்.
தலைவா,தூள் கிளப்புங்க.தாரை தம்பட்டை அதிரட்டும்.
-
12th June 2014, 11:44 AM
#100
வாசு சார்
இழந்த வாலிபத்தை திரும்ப பெற சிட்டு குருவி லேகியம் எல்லாம் வேண்டாம் நமக்கு
ராட்சசி ஈஸ்வரியின் சில பாடல்கள் கேட்டால் போறும்
பிச்சுக்கிட்டு வரும் (சொன்னது வேலை பார்க்க ஆபீஸ்ல வேகத்தை )
"ஆனந்த தானடவமோ வாசு சார் ஆடுகிறார் இப்போது எல்லாம்"
Bookmarks