-
12th June 2014, 01:00 PM
#111
சின்ன கண்ணன் சார்
பாலாடை மேனி பனிவாடை காற்று நீராட வந்தோமடி
வாசு சார் சொல்லிய படி
கண்ணியமிக்க பாடகியின் குரலில் "ஓஹோ ராஜி"
குற்றால அருவி இரைச்சல் உடன்
ராட்சசியின் உரைச்சல்
"ஓஹோ நிம்மி " அந்த அருவி தண்ணீர் பட்டதால் நடுங்கும் குளிரில்
-
12th June 2014 01:00 PM
# ADS
Circuit advertisement
-
12th June 2014, 01:02 PM
#112
Senior Member
Senior Hubber
*
”சரி. அடிக்கறதுன்னு முடிவு பண்ணிட்டீங்க.கொஞ்சம் கலந்து ஒரு முடிவுக்கு வாங்க” என்பார் வடிவேலு ஒரு படத்தில். .
அது போல நானும் ஒரு முடிவெடுத்து முழுப் பாடல்களையும் - அ உ ஆ - வின் கொஞ்சம் பேசலாமா..
என் கல்யாண வைபோகமும் நல்ல பாட்டுத் தான்..எனில் கொஞ்சம் கீச் கீச்சென்று ஆகிவிடும் இல்லையா..
அ.உ.ஆவில் இன்னொரு பாடல்..ஹே மஸ்தானா தனனானா ஹரியானா ந்னு ஆரம்பிக்கும்..ஹாய் ஹாயாஹாய் ஹாயா ஹாயா ஹாயா..சிறுசு சின்னஞ்சிறுசு இள்சு அம்மாடி இளசு..காயிருக்குப் பறிக்கக் காத்திருக்கு என்று தத்துவமாக ஆரம்பிக்கும் நடனப் பாடல்..கேட்க நல்லா இருக்கும்..
ராரா ராரா ராராராராஅ..ஆங் ராராரரா...ஆஆங்
தனிமையில் யார் இவள் நீரோடு நிலவாட நிலவோடு வானுண்டு
என்னோடு உறவாட யாருண்டு ஏன்...என லத்து மயங்கி ம்யங்கி குழறி குழறி ஆடிய படி பாடும் பாடல்..
நல்ல பாட்டு...ithai detaildaa karthik sir alasuvaar..
அப்புறம் காதலன் காதலின்னா பாத்ரூம் விளையாட்டில்லைன்னா எப்படி..இள்மை ஸ்பெஷலிஸ்ட் ஸ்ரீதர் நல்லா யோசிச்சு இளைய ராஜா கிட்ட சொல்லியிருப்ப்பார் போல...”சாரே..அந்த இளைஞன் அந்த இளம்பெண்ண மோகிச்சு. ஒரு நாள் அந்த நங்கை குளிக்கறச்சே போய் குறும்புக் கலாட்டா பண்ணுவான்..அதுக்கேத்த மாதிரி ட்யூன் போடுமே” சரி என்று இளையராஜா ட்யூன் போட பாடலாசிரியர் எழுதிய பாட்டு..
அபிஷேக நேரத்தில் அம்பாளைத் தரிசிக்க் அடியேன் கொடுத்து வச்சேன்.
ஜென்ம்ம் அதற்கே எடுத்து வச்சேன் கண்ணே வா..க்ரையேறி வா” என் எழுத பிரகாஷீம் துண்டுடன் சுபாசினியும்
(கொடுத்து வச்ச டவல்) ஆடும் பாட்டு.பாடல் வரியிலும் படம் பிடித்த விதத்திலும் இள்மை கொப்பளிக்கும்.
அப்புறம் டைட்டில் ஸாங்க்... அழகே உன்னை ஆராதனை செய்கிறேன்...கெமிஸ்ட்ரி லேபில் விட்ட ஹிஸ்டரி ஸ்டூடண்ட் டெஸ்ட் ட்யூபைப் பார்ப்பது போல் லதாவைப் பார்த்த ப்டி பாடும் பாடல்.ஒரு வேளை மன்ம் பாடுமோ.
கதையின் ஒன்லைன்: அக்கா குடும்ப விளக்கு குத்து விளக்கு ல்தாவை டாவடித்து ஏமாற்றி எண்ணம் நிறைவேறிய்தும் விலகி அக்காவை விட வெகு சுமாராய் இருக்கும் சுபாஷிணியை க்ரெக்ட் செய்ய முயலுகையில் அக்கா பொங்கி எழுந்து தங்கையைக் காப்பாற்றுவதற்காக மனம் கவர்ந்த வில்லனை கத்தியால் சப்பக் என்று குத்திதியாகச் சுட்ராய் சிறைக்குச் செல்லும் கதை. விஜயகுமர்ர் பாவம் தூரத்தில் இருந்து ரசித்து அவ்வப்போது பேசிக்கொள்வதோடு சரி என் நினைக்கிறேன்.
-
12th June 2014, 01:04 PM
#113
Senior Member
Senior Hubber
krishna sir.. vegu nalla paattu..thaiyaagak kEttaalum inimai..thaniyaakap paarththaalum inimai.. (pinna veetila yaar adi vaangarathu
//

Originally Posted by
gkrishna
சின்ன கண்ணன் சார்
பாலாடை மேனி பனிவாடை காற்று நீராட வந்தோமடி
வாசு சார் சொல்லிய படி
கண்ணியமிக்க பாடகியின் குரலில் "ஓஹோ ராஜி"
குற்றால அருவி இரைச்சல் உடன்
ராட்சசியின் உரைச்சல்
"ஓஹோ நிம்மி " அந்த அருவி தண்ணீர் பட்டதால் நடுங்கும் குளிரில்
-
12th June 2014, 01:12 PM
#114
Senior Member
Senior Hubber
ithuvum oru meeL pathivu..
அவளோ சின்னஞ்சிறுமி..பருவத்தில் மலர்ந்து பூத்துக்குலுங்குபவள்
(ஹாஆஆவ்...”யார்ப்பா அதுகொட்டாவி விடறது)
சரி..அழகிய இளம் பெண்.. அந்த வனத்தில் டாக் டாக் என்று துள்ளித் திரிவதே அவள் வழக்கம்..அப்பாவி..கவடு,சூது எதுவும் தெரியாது..அவை தெரியாத கள்ளங்கபடற்ற முகம்..
அருவிக் கரையோரம் செல்லும் போது ஒரு நாளில் அவனைப் பார்க்கிறாள்..அவன்..யார் எனத் தெரியாது..ஊர் எது எனத் தெரியாது.. அவனுக்கு எதனாலோ அடிபட்டிருக்கிறது..பரிதாபம் தான் மேலோங்குகிறது அந்தப் பாவைக்கு..
டர்ரென தான் அணிந்திருக்கும் குட்டை உடையையே கிழித்துக் கட்டுப்போடும் நேரம் அந்தக் காளையின் கண்கள் கட்டு மீறி அவள் மேல் மேய..அவனும் உணர்ச்சி வசப்பட...’டேய்..தப்புடா..இது ரொம்பச்சின்னப் பொண்ணுடா’ என அருவி அதன் பாஷையில் அலறிய படி பார்த்துக் கொண்டிருந்தது..
பின்னர் திரும்பச் செல்லும் போதும் அந்தச் சிறுமிக்கு அவனிடம் கேள்விகள் கேட்கவும் தோன்றவில்லை..ஒரு வித மயக்கத்தில் வீடு போய்ச் சேர, யாருக்குமே கவலைப்படாத காலம் விரைய அவளது கோலம் கொஞ்சம் மாற...அன்னைக்கு அதிர்ச்சி..சின்னப் பொண்..தலை நிறைய மலர்களைச் சுமக்க வேண்டிய வேளையில் இப்படி சுமந்திருக்கிறாளே..பட்டிக்காட்டுத் தாய் ஒரு விபரீத முடிவுக்கு வந்து மலை நாட்டு மருத்துவச்சியிடம் சென்று அந்தச் சிறுபுஷ்பத்தில் பூத்திருந்த சிறுபுஷ்பத்தைக் குரூரமான முறையில் கிள்ளி எறிந்து விடுகிறாள்..அம்மா பெருமூச்சு விடுகிறாள்.. அப்பாடா தன் பெண் பிழைத்தாள் என நிம்மதி கொள்ள..இல்லை இல்லை..இனிமேல் தான்
அவளுக்கு நிம்மதி போகிறது..
காலப் போக்கில் ஒரு அழகிய இளைஞன் அந்தப் பெண்ணை அழகில் மயங்கி மணம் புரிய, கனவுகள் பலவற்றுடன்
கன்னியைத்தொட்டால், அந்தப் பெண் மிரள்கிறாள்..அலறுகிறாள்.. பின் பின்...ஒரு வழியாய் உண்மை கண்டுபிடிக்கப் பட கணவனே எல்லாம் மறந்து அந்தப் பெண்ணுக்கு புதிய வாழ்வு கொடுக்கிறான்...
பகலில் ஒரு இரவு படத்தின் மிகச் சுருக்கிய கதை இது..விஜயகுமார், கொள்ளை அழகு ஸ்ரீதேவி, பிற்காலத்தில் வைரமுத்து எழுதிய உதட்டின் மீது படுத்துக்கலாமா என்ற வரிக்கேற்ப உதடு கொண்ட சீமா,புஷ்பலதா.. ரவிக்குமார்.. எனப்பலர்.. எல்லாப்பாட்டும் அழகென்றாலும் கீழே காணும் பாடல் எனக்கு ரொம்ப்ப்ப்பப் பிடிக்கும்...காரணம்.. ஸ்ரீதேவி அண்ட் கண்ணதாசன்..ஒரு வேளை ஸ்ரீதேவி நடிக்கிறார் என்று தெரிந்தே இந்தப் பாட்டை எழுதியிருப்பார் போல..
போனி கபூருக்குக் காலமெல்லாம் தேனிலவு இருந்திருக்குமோ?! சந்தேகம் தான்...!
**
பொன்னாரம் பூவாரம் கண்ணோரம் சிருங்காரம்
பொழுதுகள் கோடி புதுமைகள் தேடி
வா வெண்ணிலா ஒரு தேர் கொண்டுவா
செந்தேன் நிலா புதுச் சீர் கொண்டுவா
மெதுவாகத் தாலாட்டு சொல் தென்றலே சொல் தென்றலே
மேலாடை சதிராட வா தென்றலே வா தென்றலே
சிறிய இடை கொடியளக்க அழகு மயில் நடையளக்க
வா...செந்தூரம் கலையாத தெய்வாம்ச ராணி
காலமெல்லாம் தேனிலவுதான்
சிந்தாத மணிமாலை உன் புன்னகை உன் புன்னகை
செவ்வான விண்மீன்கள் உன் கண்களே உன் கண்களே
அழகு ரதம் அசைகிறது ஊர்வலமாய் வருகிறது
ஆ...பண்பாடு மாறாத தென்பாண்டித் தேனே
காலமெல்லாம் தேனிலவுதான்
-
12th June 2014, 01:16 PM
#115
சின்ன கண்ணன் சார்
அழகே உன்னை ஆராதிகிறேன் அருமையான டைட்டில்
எல்லா பாடல்களுமே மொட்டையின் ராஜாங்கம்
வாணியின் "என் கல்யாண வைபோகம் உன்னோடு தான்"
பாலாவின் "அபிசேக நேரத்தில் அம்பாள தரிசக்க அடியேன் கொடுத்து வைச்சேன் ஜன்மம் அதற்கே எடுத்தே வைத்தேன் கண்ணே வா கலையே நீ வா அம்மா தாயே புண்ணியம்" பாடலில்
"காண கண் கோடி போதாதடி கன்னி நீராடினால்
ஆடை வேண்டாமோ மறைக்க அதை முழக்க
கேட்டால் தருவேன் நானே " lovely சோலோ டீசிங் பாடல்
ஜெயச்சந்திரனின் மெலடி "அழகே மலரே ஆராதனை செய்கிறேன்"
நீங்கள் கூறிய "குறிஞ்சி மலரில் வழிந்த ரசத்தை"
வாணியின் "தனிமையில் யார் இவள்" இந்த பாடலின் நடுவில் வரும் beautiful கிடார் மற்றும் டபுள் பங்கோ combination
எல்லாமே பரவசம்
-
12th June 2014, 01:24 PM
#116
Senior Member
Senior Hubber
krishna sir..ellaap paattumE eppak kEttaalum nallaa irukkum..(haai haiyaa.. thavira..aanaa athu avLo mOsamillai..appappa kEtkalaam).. en kalyaana vaibOgam - sadaarnu vaani high peakla eduppaangka.. and thanimaiyil yaar ivaL guitar and double bungo.. romba nalla irukkum..( infact intha p padaththula uLLa paattukku lathaavOda azhagu poruththama irukkum!) thanks.
-
12th June 2014, 01:37 PM
#117
Senior Member
Diamond Hubber
கிருஷ்ணா சாரும், சின்னக் கண்ணன் சாரும் இன்று மிக அழகாக திரியை மிக உயரிய கௌரவத்திற்கு அழைத்துக் கொண்டு செல்கிறீர்கள். அருமையிலும் அருமை. பாடல்களைப் பற்றிய அலசல்கள் அருவி போல் வந்து விழுகின்றன.
அனுபவித்து படித்துக் கொண்டிருக்கிறேன். எவ்வளவு தகவல்கள்!
நிஜமாகவே எப்படி பாராட்டுவது என்று குழம்பி
நானே நானா
யாரோதானா
என்று அசந்து போய் இருக்கிறேன்.
அமர்க்களப் படுத்திக் கொண்டிருக்கிறீர்கள்.
நன்றி!
சின்னக் கண்ணன் சார்
தமிழில் டைப் பண்ண
http://tamil.changathi.com/
முயற்சி செய்து பாருங்கள். நீங்கள் தமிழில் விளாசாமல் என்னவோ போல் உள்ளது.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
12th June 2014, 01:37 PM
#118
Junior Member
Newbie Hubber

Originally Posted by
vasudevan31355
உண்மை! மற்றவர்கள் எல்லாம் இடைவேளைக்குப் பின் வரும் ஆனந்த் ஆகி விட்டார்கள் ஒரு நபரால். ஒரே ஒரு நபரால். ஆனால் ஒரு உபாத்தியாரைத் தவிர. ஜம்பம் பலிக்கிலேயே ஆனந்து பலிக்கிலேயே!
நான் தலைவர் என்று குறிப்பிட்டது கார்த்திக்கை. த பார்ரா ஆசைய .....ஓசி காஜில் தலைவனாக பாக்கிறாங்க!!!!
-
12th June 2014, 01:47 PM
#119
Senior Member
Veteran Hubber
டியர் சின்னக்கண்ணன் சார்,
அழகே உன்னை ஆராதிக்கிறேன் பாடல்களின் சிலவரி அலசல்கள், மற்றும் நினைவுட்டல்கள் சூப்பர். 'நானே நானா' தினமும் விவித்பாரதியில் கலக்கியெடுத்த பாடல். வாணியின் புகழ்க்கிரீடத்தில் ஒரு வைரம். ஒருமுறை சென்னை லயன்ஸ் கிளப் விருதுகள் வழங்கும் விழாவில் ஜேசுதாஸ் குழுவினர் கச்சேரி நடந்தபோது, கவுன் அணிந்த சின்னஞ்சிறுமியாக இருந்த சுஜாதா இப்பாடலைப்பாடக்கேட்ட வாணிஜெயராம், மேடையேறி சுஜாதாவை வாழ்த்தி "என்னைவிட நன்றாகப் பாடினாள்" என்று பாராட்டினார்.
'தனிமையில் யாரிவள்' பாடலும் வாணிக்கு புகழ் தந்தபோதும், அப்பாடல் காட்சியில் ஸ்கோர் தட்டிச்செல்பவர் ஒளிப்பதிவாளர் திவாரி. ஒவ்வொரு ஆங்கிளுக்கும் கைதட்டலை அள்ளுவார். கோவாகடற்கரையின் அழகை மேலும் அழகாக்கி காட்டியவர். (இதைப்பற்றி நான் எழுதுவேன் என்றுவேறு கோடி காட்டிவிட்டீர்கள்).
இளையராஜா இப்படத்தில் கலக்கியிருப்பார். 'ஹே மஸ்தானா'வெல்லாம் அதுவரை கேட்டிராத மெட்டு. படத்தின் வெற்றியில் முக்கால் பங்கு இவருக்கே.
அருமை...., தொடருங்கள்.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
12th June 2014, 02:11 PM
#120
வாசு/ck /கார்த்திக் சார்
லதா உண்மையில் அஉஆ,வட்டத்திற்குள் சதுரம்,மனதார வாழ்த்துங்களேன்,ஆயிரம் ஜன்மங்கள்,நீயா,வயசு பொண்ணு
போன்ற படங்களில் அவர் அழகை ஆராதிக்க தான் வேண்டும்
சின்னி பிரகாஷ் நடித்த "அவள் தந்த உறவு " என்று நினவு
துரை direction
படத்தில்
ஒரு பாடல் சார் "நினைத்து பார்கிறேன் என் நெஞ்சம் இனிக்கின்றது
சிரித்து பார்கிறேன் என் தேகம் துடிகின்றது ஒ ஒ remember ஒ மை டார்லிங் remember " விச்சு இசை சாக்ஸ் பின்னும் அந்த பாடலிலி
"நடன சாலைகளில் நதியின் ஓரங்களில் அழகு கோலங்களில் .."
"கடந்த காலங்களில் நநடந்த உள்ளங்களில்" வரியை பாடும் போது
பாலாவின் கொப்பளிக்கும் இளமை விச்சுவின் குதகலிக்கும் சாக்ஸ் தபெல் combination ஒ remember
Bookmarks