-
26th June 2014, 09:28 AM
#3071
Junior Member
Platinum Hubber
THANKS TFM LOVER SIR
-
26th June 2014 09:28 AM
# ADS
Circuit advertisement
-
26th June 2014, 09:29 AM
#3072
Junior Member
Platinum Hubber
-
26th June 2014, 09:32 AM
#3073
Junior Member
Platinum Hubber
-
26th June 2014, 09:35 AM
#3074
Junior Member
Platinum Hubber
-
26th June 2014, 09:36 AM
#3075
Junior Member
Platinum Hubber
-
26th June 2014, 09:37 AM
#3076
Junior Member
Platinum Hubber
-
26th June 2014, 09:39 AM
#3077
Junior Member
Platinum Hubber
-
26th June 2014, 09:42 AM
#3078
Junior Member
Platinum Hubber
-
26th June 2014, 09:46 AM
#3079
Junior Member
Platinum Hubber
புதிய பூமியில் தோன்றிய புதுமை!
ஜேயார் மூவிஸ் தயாரிப்பில், ‘எங்க வீட்டுப் பிள்ளை’, ‘நான் ஆணையிட்டால்’, ‘ஒளிவிளக்கு’, ஆகிய அருமையான படங்களை இயக்கிய ‘சாணக்யா’ இயக்கத்தில், எம்.எஸ். விசுவநாதன் இசையமைப்பில், 27.6.1968 அன்று வெளிவந்த படமே ‘புதியபூமி’
இப்படம் தென்காசி சட்டமன்ற இடைத்தேர்தலை முன்னிட்டு விரைந்து வெளியிடப்பட்ட படமாகும்.
இப்படத்தில் எம்.ஜி.ஆர். மக்களுக்குச் சேவை செய்யும் மருத்துவராக நடித்தார். தென்காசித் தொகுதியில் போட்டியிட்ட தி.மு.கழக வேட்பாளர் பெயர் சம்சுதீன் என்ற கதிரவன். எனவே எம்.ஜி.ஆரும் கதிரவன் என்ற பெயரிலேயே படத்தில் கதாநாயகனாக நடித்தார்.
படத்தின் வசனத்தை தென்பாண்டிச் சிங்கம், அன்றைய இராமநாதபுரம் மாவட்டத் தி.மு.கழகச் செயலாளர் எஸ்.எஸ். தென்னரசு எழுதினார்.
படத்தின் பாடல்களை எழுதியவரோ கவியரசர் கண்ணதாசன். தேர்தலை மையமாக வைத்துப் பிரச்சாரப் பாடல் ஒன்று தேவை. அதனைக் கவியரசர் எழுதாமல், பூவை செங்குட்டுவனை எழுதுமாறு செய்தார்.
அப்பாடல்தான்,
“நான் உங்கள் வீட்டுப்பிள்ளை!
இது ஊரறிந்த உண்மை!
நான் செல்லுகின்ற பாதை!
பேரறிஞர் காட்டும் பாதை!”
என்ற பிரபலமான பாடலாகும்.
இக்கருத்தமைந்த பாடலை கவியரசர் எழுதாமைக்குக் காரணம்; அவர் பெருந்தலைவர் காமராஜரின் காங்கிரஸ் பேரியக்கத்தில் பெரும் பற்றுக் கொண்டிருந்தமேயே எனலாம்.
இங்கேதான் கவியரசருக்கும், புரட்சி நடிகருக்கும் இருந்த ஆழமான நட்பு; பரஸ்பரமாக விட்டுக்கொடுக்கும் பாங்கு; கவியரசரின் கவிதைகளுக்குப் புரட்சிநடிகர் தந்த மதிப்பு ஆகிய பெருந்தன்மைகள் வெளிப்படுகின்ற விதங்கள் தெளிவாகின்றன.
கவிசருக்கும், புரட்சிநடிகருக்கும் அவரவர் இயக்கங்கள் தேவை. கலையுலகப் பயணத்திலோ மாறுபடாத மனங்கள் தேவை. எனவே அறிந்து, தெரிந்து செயல்பட வேண்டிய விதங்களில் முடிந்தவரை இருவர் மனங்களும் செயலாற்றிய மேன்மை இங்கே புலப்பட்டன எனலாம்.
இதனைப் ‘புதியபூமி தோன்றுவித்த புதுமை’, என்றுகூடக் கூறலாம்.
படத்தில் கண்ணதாசன் எழுதிய பாடல்களைப் பார்ப்போமே!
“நெத்தியிலே பொட்டு வச்சேன்!
நெஞ்சை அதில் தொட்டு வச்சேன்!”
எனத் தொடங்கும் இனிமையான பாடலொன்று, கதாநாயகி கலைச்செல்வி நடித்த பாடல் காட்சிக்காக எழுதப்பெற்றதாகும்.
அடுத்து;
“விழியே! விழியே! உனக்கென்ன வேலை!
விருந்துக்கு வரவா நாளைக்கு மாலை!…”
எனத் தொடங்கி;
“விருந்து என்றாலும் வரலாம்! வரலாம்!
மருந்து தந்தாலும் தரலாம்! – அதில்
நாளையென்ன நல்ல வேளையென்ன! – இங்கு
நான்கு கண்களும் உறவாட!….”
என்றே, தொடரும் நாயகன் எம்.ஜி.ஆர்; நாயகி ஜெயலலிதா நடிக்கும் காதல் காட்சிக்காகக் கனிந்து வந்த பாடலொன்றாகும்.
இனிவரும் பாடலொன்றைப் பாருங்களேன்!
ஆண்: “சின்னவளை முகம் சிவந்தவளை – நான்
சேர்த்துக் கொள்வேன் கரம் தொட்டு!
என்னவளை காதல் சொன்னவளை – நான்
ஏற்றுக் கொள்வேன் வளையிட்டு!
பெண்: வந்தவளைக் கரம் தந்தவளை – நீ
வளைத்துக் கொள்வாய் வளையிட்டு!
பூங்குவளைக் கண்கள் கொண்டவளைப் – பது
பூப்போல் பூப்போல் தொட்டு!…..”
பாடலைப் பார்த்தீர்களா?
ஏற்கனவே,
“சேலத்துப் பட்டென்று வாங்கி வந்தார் – இந்தச்
சின்னவரைப் போய்க் கேளும்!”
என்று, ‘தனிப்பிறவி’ படத்தில், எம்.ஜி.ஆரைப் பார்த்து ஜெயலலிதா, ‘சின்னவர்’ என்று, கூறுமாறு பாட்டமைத்தார் கண்ணதாசன்.
அதேபோல் சின்னவருக்கு ஏற்ற சின்னவளாக ஜெயலலிதாவை, எம்.ஜி.ரே குறிப்பிட்டுப் பாடுமாறு செய்தவரும் கண்ணதாசனே!
இது எதற்காகக் கவிஞர் எண்ணத்தில் எழுந்ததோ? ஒருவேளை… அந்தச் சின்னவருக்குப்பின், இந்தச் சின்னவளே எம்.ஜி.ஆரின் வாரிசாய் வலம் வருவார் என்ற எண்ணமோ? இதைச் சொன்னால் கூட வலிந்து கூறுவதாக வாதம் செய்வார்கள்! சரி விட்டுவிடுவோம்!
பாடலின் நயத்தைப் பாருங்களேன்!
சின்னவளை – முகம்
சிவந்தவளை
என்னவளை – காதல்
சொன்னவளை!
வந்தவளை – கரம்
தந்தவளை
பூங்குவளை – கண்கள்
கொண்டவளை…..
எத்தனை ‘வளை’ என்னும் சொல்லாடல் மீண்டும் மீண்டும் புதிது புதிதாய்ப் பூத்து வரும் ‘வளை’ கொண்ட பாடல் நம் மனங்களை வசம் செய்து, வாசமும் செய்யுமல்லவா!
இன்னும் பாருங்களேன்!
தூயவளை – நெஞ்சைத்
தொடர்ந்தவளை!
- பால் மழலை மொழி
படித்தவளை!
- வான்மழைபோல்
ஆனவளை! -
நீயவளை -
எனத் தொடரும் ‘வளை’ எனும் சொல் கொண்டு, கவியரசர் நம்மையும் ஏன்? எம்.ஜி.ஆரையும் கவித்திறத்தால் வளைத்து வசியம் செய்திட்ட பாங்கை எப்படித்தான் புகழ்வது!
அதனால்தானோ, சினிமா உலகச் சின்னவர், இந்தச் சிறுகூடற்பட்டிக் கண்ணதாசன் கவிதைகளில் தன் எண்ணத்தைப் பறிகொடுத்து, தமிழக அரசவைக் கவிஞராக ஏற்றி வைத்தாரோ?
-
26th June 2014, 12:10 PM
#3080
Junior Member
Veteran Hubber

Originally Posted by
tacinema
dear mgrramamoorthi,
regards.
தொடர்ந்து வெளியிடப்பட்டும், மறு வெளியீட்டில் ஆயிரத்தில் ஒருவனின் வெற்றியை பொறுக்க முடியாமல் வயிற்றெரிச்சலால் புலம்பும் இந்த நல்ல மன நிலையில் உள்ளவருக்கு? பதில் சொல்லும் நேரத்தை நம் திரியில் நல்ல ஆக்க பூர்வமான பதிவுகளுக்கு பயன்படுத்த்தலாமே. நம் தலைவன் அடுத்தவர் விஷயத்தில் தலையிட்டு அவதூறாக பொய் பிரசாரம் செய்ய சொல்லித் தரவில்லை. இது போன்ற நாகரீகத்தை இவர் எவரிடமிருந்து கற்றார்? எம்ஜிஆர் ரசிகர்கள் nt திரியில் இது போன்ற செயல்களில் ஈடுபடுகிறார்களா? அதை ஒரு போதும் செய்ய மாட்டார்கள். அதுதான் எங்கள் தலைவர் எங்களுக்கு கற்று தந்த நாகரீகம். நாகரீகம் தெரிந்திருந்தால் இது போன்ற தரமற்ற செயல்களில் ஈடுபடமாட்டீர்கள் என்று நம்புகிறோம். இதுவெல்லாம் ஒரு பிழைப்பா? நேருக்கு நேராய் வரட்டும் நெஞ்சில் துணிவிருந்தால் என்ற எங்கள் தலைவரின் பாடல் வரிகளுக்கேற்ப முதலில் உங்கள் உண்மையான முகத்தைக் காட்டுங்கள்?
இனிமேல் இது போன்றவர்கள் பதிவிடும் பதிவுகளை மேற்கோள் காட்டவேண்டாம் என்று நம் திரியின் நண்பர்களைக் கேட்டுகொள்கிறேன். மேலும் இவர் போன்றவர்களுக்கு பதில் சொல்லி யாரும் நேரத்தை வீணடிக்கமாட்டோம் என்று உறுதிகொள்வோம்.
திரு. வினோத் சார். குழப்பத்தை ஏற்படுத்தும் இது போன்ற தேவையில்லாத பதிவுகளை நீக்க இத்திரியின் உரிமையாளர்களுக்கு தாங்கள் வலியுறுத்த வேண்டுகிறோம்.
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
Bookmarks