வாசு சார்
"கொஞ்சம் (கொஞ்சும்) உரிமையுடன்" நமது திரி தொயுவு அடையாமால் செல்வதற்கு (அப்பாப்பா ) அப்ப அப்ப நீங்கள் போடும் சில stills மற்றும் உங்கள் சிறப்பு ஆய்வு . உங்கள் பணி என்றும் தொடர
என்றும் அன்புடன் மற்றும் நட்புடன்
jai padmapriya still
அன்று சிந்திய ரத்தம் தானே
"இது நான் அறியாத மயக்கம்
முதல் நாள் ஆனந்த பழக்கம்
இனிமேல் எனக்கேது உறக்கம்
எண்ணம் பதினாயிரம் "
பாலா வித் சுசீலா
ஹய்யோ! அமர்க்களமான பாட்டு. பத்மா செம கிளாமர். அப்படியே பார்பி கேர்ள் மாதிரியே இருப்பார். தலையில் அந்த ரிப்பன் கட்டு அப்படியே நம்மைத் தூக்கிக் கொண்டு போய் விடும்.
வசந்தகாலம் தன்னில்
வைகை மீது வெள்ளம் ஓடும்
மதுரை தன்னில் உன்னை
கரையில் ஏறி எங்கும் தேடும்
வைகை காட்டிய வெள்ளம்
வைகை எனச் சொல்லும் உள்ளம்
கைவை வைகை காதல் பொய்கை
எண்ணம் பதினாயிரம்.
அழகான ரசமிகு கற்பனை. வைகை வெள்ளம் இந்த அம்மணியின் காதலனை கரை ஏறித் தேடுமாம். இதுவரை யாரும் செய்யத கற்பனை.
அப்புறம்
வை கை எனச் சொல்லும் உள்ளமாம்
என்ன துணிச்சல்?
'கைவை' 'வைகை' சொல் ஜாலம்
ம்.. இப்போதும் எழுதுறாங்களே பாட்டு. நாம் பாட்டு விட்டு என்ன ஆகப் போவுது.
பாடலைப் பார்த்தால் பத்தும் மறந்து போம்.
Last edited by vasudevan31355; 27th June 2014 at 07:38 PM.
காஷ்மீர் காதலி 1980
மதி ஒளி சண்முகம் டைரக்டர்
ராஜ்குமார் (லத்து பிரதர் ஸ்ரீப்ரிய கணவர்),ரஜினி ஷர்ம,புஷ்பலதா,வீ கே ராமசாமி போன்றோர் நடித்து வெளி வந்தது
இந்த ரஜினி ஷர்ம நடித்து psv pictures தயாரிப்பில் வெளி வந்த
மேகத்துக்கும் தாகமுண்டு படத்திலும் நடித்தார்கள் .இந்த படத்தில் இரண்டு நல்ல பாடல்கள் உண்டு அதையும் அலசனும்
மேலும் நம் NT இன் மாடி வீட்டு ஏழை படத்தில் முதல் பாடலுக்கும்
நடன நடிகையாக வருவார்கள்
gk வெங்கடேஷ் இசை
படம் பூராவும் காஷ்மீரில் பிடிகபட்டதாக எழுதி இருந்தார்கள்
கண்ணுக்கு குளிர்ச்சி
ஹீரோ மாவு லிங்கம் கதாநாயகி மக்கு சக்தி
படம் ரிலீஸ் ஆன உடனேயே பெட்டிக்குள் சுருண்டு கொண்டது என்று கேள்விப்பட்டு இருக்கிறேன்
ஆனால் பாடல்கள் மணி சார்
ஜெயச்சந்திரன் சுசீலா குரல்களில்
அருமையான சுசீலாவின் ஹம்மிங் உடன்
கிடார் வயலின் பங்கோ இசையுடன்
முதலாவது சரணத்தில் நாதஸ்வர இசை
"சங்கீதமே என் தெய்வீகமே நான் தேடும் என் காதல் ராஜாங்கமே என் ராஜாங்கமே வானோறும் காணாத பேரின்பமே "
"சங்கீதமே என் தெய்வீகமே நான் தேடும் என் காதல் ராஜாங்கமே என் ராஜாங்கமே வானோறும் காணாத பேரின்பமே "
நான் கொண்ட செந்தூரம் உந்தன் நெஞ்சினிலே
நாள் தோறும் சேரட்டும் உந்தன் அன்பினிலே
நாணத்தில் நானும் மோஹதில் நீயும்
போராடும் காட்சி தனை என் என்பதோ
(சங்கீதமே )
இது நான் ரொம்ப ரசிச்ச பாட்டு சார் 1976 அல்லது 77 பொங்கல் ரிலீஸ்
நெல்லை ரதனவில்
அசோகன் வில்லன் அவர் கதாபாத்திரத்தின் பெயர் உடையப்பன்
பேபி சுமதி அவர் அண்ணன் மாஸ்டர் பிரபாகர் அவர் தம்பி குமார் எல்லோரும் சேர்ந்து ஒரு பாட்டு பாடுவாங்க சுசீலா குரலில் lovely சாங்
"பிருந்தாவனம் யமுனா நதி விளையாடினாலே " குழந்தை அழற சத்தம் எல்லாம் கேட்கும் பாட்டு இறுதியில் உடயப்பனை பழி வாங்கணும்
எல்லாம் சபதம் எடுக்கும் . திரை அரங்கமே அவர்களின் வீராதி கண்டு அல்லோகலப்படும்
அபபறும் பாடகர் திலகம் குரலில் "எந்த காட்டிலும் பெரியது வேங்கை டிசும் டிசும் "
துப்பாக்கியே வைத்து கொண்டு சுட்டு கொண்டு வருவர் ஜெய்
direction மாடர்ன் தியேட்டர் சுந்தரம் நு நினவு
கீதா சித்ரா production
ஆனா ரொம்ப அபூர்வ பாடலைப் பிடிச்சிருக்கீங்க. கிருஷ்ணா சாரா கொக்கான்னானாம்.
ஜெயச்சந்திரன் நல்ல பாடகர்தான். ஆனால் ஏற்ற இறக்கங்கள், பாவங்கள் அவ்வளவா இருக்காது அப்படிங்கிறது எனது தாழ்மையான கருத்து. ஒரே மாதிரி இருக்கும். யாரும் கோவிச்சிக்க வேண்டாம். என்னுடைய சொந்தக் கருத்து மட்டுமே!
இந்த ராஜ்குமார் குழந்தை அம்பிகாவுடன் 'அன்புள்ள ரஜினிகாந்த்' படத்துல 'தேன் பூவே பூவே வா' (மொட்டை ராஜாவின் கலக்கல்) பாட்டுக்கும், அப்புறம் கமல், அம்பிகா கூட 'காதல் பரிசு' படத்தில் கூ கூ என்று குயில் கூவாதோ பாட்டுக்கு ஆடுமே!
'மெல்லிசை மாமணி' குமார் எப்போதுமே தனித்து தெரிவார். சின்ன வயசில் குமார் என்றால் எனக்கு அவ்வளவாக தெரியாது.
எல்லா பாட்டுக்கும் எம்.எஸ்.வி.இசை.... பாடுபவர்கள் எல்லாம் சௌந்தரராஜன், சுசீலா என்றே நினைத்துக் கொண்டிருந்த காலம் இது. இன்னும் கேட்டா ரேடியோவில் பாடியவர்கள் டி .எம்.சௌந்தரராஜன், பி.சுசீலா என்று சொன்னாலே இருவரும் கணவன் மனைவி போல் இருக்கிறது என்று வெள்ளேந்தியாக நினைத்துக் கொள்வேன். எல்லோரும் அப்படித்தானா அல்லது நான் மட்டுமா என்று தெரியவில்லை.
அப்போது தெரியுமா இப்ப கார்த்திக் சார் , கிருஷ்ணா சார், பாலா சார், மற்ற நண்பர்களுடன் இசை அரட்டை அடிப்போம் என்று?
Last edited by vasudevan31355; 27th June 2014 at 08:38 PM.
கர கர பிரியாவின் ஜன்ய ராகம். எக்கச் சக்க வக்கிர பிரயோகங்களுடன் பாடகரின் கற்பனையை தூண்டி சுடர் விட செய்து ,கேட்போரை சொக்க செய்யும்.
தாளத்தையும், நீளத்தையும் (metre ) பொறுத்து புது அவதாரம் எடுக்கும் சாத்தியமுள்ள ராகம் ,இது உங்கள் ஆசையை தூண்டி மானசீக காதலில் திளைக்க செய்யும். உங்கள் வயதை குறைக்கவல்ல மார்கண்டேய மாத்திரை போன்ற ராகம்.
கர்நாடக ராகங்களிலேயே மிக பெருமை மிக்கதான இந்த ராகத்தில் எந்த பாடலும் ரொம்ப பிரபலாகவில்லை 70 வரை. (ராகவேந்தர் சொன்ன தெனாலிராமன் பாடல் நான் கேட்டதில்லை).
எனக்கு தெரிந்து இந்த ராகத்தில் வந்த முதல் பாடல் சுபதினம்(1969) படத்தில் கே.வீ.மகாதேவன் பெயரில் வெளி வந்த "புத்தம் புது மேனி இசை தேனி தூங்கும் மலர் வண்ணமோ " என்ற பாலமுரளியின் பாடல்.(அசலாக டி.ஜி.லிங்கப்பா போட்ட பாடல். டி.ஜி.லிங்கப்பாவின் மற்றொரு பாடலான குங்கும பூவே சந்திர பாபுவால் கடத்த பட்டு மரகதத்தில் எஸ்.எம்.எஸ் பெயரில் வந்தது.)அற்புதமான பாடல்.
இதையடுத்து சின்ன கண்ணன் அழைக்கிறான் ,கவி குயிலில். அடுத்து தலையை குனியும் தாமரையே ஒரு ஓடை நதியாகிறது படத்தில்.
வசீகரமான பாடல் அழகான ராட்சசியே ,முதல்வனில். சமீபத்தில் james vasanthan போட்ட கண்கள் இரண்டால் படு பிரபலமாகி படத்தையே தூக்கி நிறுத்தியது.
Last edited by Gopal.s; 28th June 2014 at 09:41 AM.
தெனாலி ராமன் படத்தில் தென்னவன் தாய் நாட்டு சிங்காரமே என்கிற இப்பாடல் இடம் பெற்றிருந்தால் படத்தின் சிறப்பு இன்னும் அதிகமாகி யிருக்கும். பின்னர் பி.எஸ். ரங்கா இப்பாடலை குடும்ப கௌரவம் படத்திற்காக பயன் படுத்திக் கொண்டார் என்று கேள்விப் பட்டிருக்கிறேன்.
இப்பாடலை ரியல் மீடியா ப்ளேயரில் மட்டுமே கேட்க முடியும்.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
Thanks Ragavendhar Sir. First time ,I am listening to this song. Nice number by Viswanathan-ramamoorthy in Reethigowlai. Probably first attempt in this raga most probably by T.K.Ramamoorthy.
Bookmarks