Page 125 of 400 FirstFirst ... 2575115123124125126127135175225 ... LastLast
Results 1,241 to 1,250 of 3997

Thread: மனதை மயக்கும் மதுர கானங்கள்

  1. #1241
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like
    சத்யம் இசையில்
    "முடி சூட மன்னன் " என்று ஒரு படம்
    இதை பற்றி கார்த்திக் சார் ஏற்கனவே ஜெய் திரியில் குறிப்பிட்ட நினைவு
    "தொடங்கும் தொடரும் புது உறவு மயங்கும் மலரும் பல நினவு "
    பாலா சுசீலா உடன் ஒரு அருமையான மெலடி

    ஜெய்,தேசிய நடிகை தீபா ,ஸ்ரீதேவி நடித்து வெளிவந்த திரைப்படம்
    (1978 )
    எடிட்டர் R .Vittal இயக்கம் னு நினைவு

    gkrishna

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #1242
    Senior Member Veteran Hubber mr_karthik's Avatar
    Join Date
    Sep 2005
    Location
    Irumbu kOttai
    Posts
    1,416
    Post Thanks / Like
    டியர் வாசு சார்,

    இணையத்தில் மட்டுமல்ல. டி.வி.சேனல்களிலும் தப்பும் தவறுமாக தகவல் தருகின்றனர்.

    முரசு தொலைக்காட்சியில் 'கடலோரம் வாங்கிய காற்று' பாடல் ஒளிபரப்பாகும்போது கீழே 'படம்: ரிக்ஷாக்காரன் இசை: ஜி. ராமநாதன்' என்று காண்பிக்கின்றனர்.

    பொதிகை சேனலில் ஒரு பெண் நடிகை லட்சுமியைப்பற்றி சொல்லும்போது "இவர் கே.பாலச்சந்தர் (??) இயக்கிய ஜீவனாம்சம் படம் மூலம் அறிமுகமானார்" என்று சொன்னார், ஜீவனாம்சம் இயக்குனர் மல்லியம் ராஜகோபால் என்பது every one knows, except the compier.

  4. #1243
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    Quote Originally Posted by mr_karthik View Post
    டியர் வாசு சார்,

    இணையத்தில் மட்டுமல்ல. டி.வி.சேனல்களிலும் தப்பும் தவறுமாக தகவல் தருகின்றனர்.

    முரசு தொலைக்காட்சியில் 'கடலோரம் வாங்கிய காற்று' பாடல் ஒளிபரப்பாகும்போது கீழே 'படம்: ரிக்ஷாக்காரன் இசை: ஜி. ராமநாதன்' என்று காண்பிக்கின்றனர்.

    பொதிகை சேனலில் ஒரு பெண் நடிகை லட்சுமியைப்பற்றி சொல்லும்போது "இவர் கே.பாலச்சந்தர் (??) இயக்கிய ஜீவனாம்சம் படம் மூலம் அறிமுகமானார்" என்று சொன்னார், ஜீவனாம்சம் இயக்குனர் மல்லியம் ராஜகோபால் என்பது every one knows, except the compier.
    உண்மை! உண்மை! உண்மை கார்த்திக் சார்.

    நான் காலை டிபனோ அல்லது மதியம் லஞ்ச்சோ எடுத்துக் கொள்ளும் போது மட்டும் முரசு வைப்பதுண்டு. அப்போது நீங்கள் சொன்ன கேலிக் கூத்துக்கள் எல்லாம் நடக்கும். நமக்கா பொறுக்க முடியாது. கோபம் வந்து ரத்தம் கொதிக்கும். நாம் எல்லாம் தெரிந்தவர்கள் இல்லைதான். ஆனால் அவர்களை விட நமக்குத் தெரியம் போல இருக்கிறது.

    ஒரு ஒப்பன் சேனல் நடத்துபவர்கள் இதிலெல்லாம் கவனம் செலுத்தாமல் இருப்பது வேதனைக்குரியது. உலகம் முழுதும் மக்கள் பழைய பாடல்களை விரும்பிப் பார்க்கிறார்கள்.

    நான் தப்பைக் கண்டு கொதித்து வீட்டம்மாவை அழைத்துக் காண்பித்தால் அங்கிருந்து ஒரு முனகல் வரும் பாருங்க.

    'ஆமா! இதான் ரொம்ப முக்கியம். இங்கேயே ஏகப்பட்ட பாத்திரம் கழுவாம கிடக்கு. இதுல தப்பு கண்டு புடிச்சி காண்பிக்கிறாராமாம்."

    'என்ன அங்க முனகல்'? நான்.

    'ஒன்னுமில்லீங்க. அது அப்படித்தான்'

    என்று பொத்தம்பொதுவான 'ஆமாம்' அவுங்க போடுவாங்க. சும்மா பேருக்கு. நாம தலையில் அடிச்சுக்க வேண்டியதுதான் ரெண்டையும் பார்த்து.

    எனக்கு வேற கார்த்திக் சார் என்ன பதில் பதிவு தரப் போறாரோன்னு 'திக் திக்'ன்னு இருக்கு.

    அய்யய்யோ! உணர்ச்சி வேகத்துல என்னென்னவோ சொல்லிபுட்டேனே! அப்படியே அழிச்சிடுங்கோ! மறந்திடுங்கோ!
    Last edited by vasudevan31355; 1st July 2014 at 05:37 PM.
    நடிகர் திலகமே தெய்வம்

  5. #1244
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like
    1975 இல் வெளி வந்த
    தெய்வநாயகி films கஸ்துரி விஜயம்
    மாதவன் இயக்கம்
    கே ஆர் விஜய படம் பூராவும் வியாபித்து இருப்பார்கள்
    இது T V .சேஷாத்ரி யின் சேவா stage troupe இல் போடப்பட்ட நாடகம்
    பிறகு திரைப்படம் ஆனது
    மெல்லிசை மாமணி குமார் இசை

    எல்லாமே சிலோன் ரேடியோ ஹிட் பாடல்கள்

    சுசிலாவின் குரலில் "பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரம் ஆண்டு தம்பதியிர் வாழியவே "
    இந்த பாட்டில் சுசில ஒரு சிறு பிழை செய்ததாக ஒரு sanskrit பண்டிட் ஒருவர் கல்கி பத்திர்கையில்
    "இந்த தம்பதி என்பது சமஸ்க்ர்த வார்த்தை சமஸ்கரததில் முதல் த வை உபயோகிப்பதற்கு பதிலாக 3 வது அல்லது 4வது த வை உபயோகித்து இருப்பார்கள் " எழுதி இருந்தது நினைவிற்கு வருகிறது

    வாணியின் குரலில்
    மழைகால மேகம் மகாராஜன் வாழ்க
    வற்றாத தீபம் சிந்தும் ஒளி போல வாழ்க
    னு ஒரு பாடல்
    Attached Images Attached Images
    gkrishna

  6. #1245
    Senior Member Veteran Hubber mr_karthik's Avatar
    Join Date
    Sep 2005
    Location
    Irumbu kOttai
    Posts
    1,416
    Post Thanks / Like
    அருமையான பல பாடல்களின் வீடியோ (காணொளி) தந்து அசத்திய வாசு சார், கிருஷ்ணா சார், வினோத் சார் அனைவருக்கும் (அந்த பாடல் காட்சிகளைப்பார்த்து ரசித்த) அனைவர் சார்பாகவும் நன்றி.

    தேன்கிண்ணம் பாடல்கள்
    தேன்கிண்ணம், அன்னை, நான் கதம்ப பாடல்கள்
    எகிப்து நாட்டின் இளவரசி (என்ன முதலாளி சௌக்கியமா)
    தொடங்கும் தொடரும் புது உறவு (முடிசூடா மன்னன்)

    அனைத்தும் கலக்கல்...

  7. #1246
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like
    வாசு சார் /கார்த்திக் சார்

    நீங்கள் சொனன மாதிரி முரசு தொலைகாட்சியில்
    நடிகர் திலகம் நடித்த பாடல்ஐ "ஒரே ஒரு ஊரிலே ஒரே ஒரு ராஜா "
    போட்டு விட்டு கீழே படம் "படித்த மனைவி " என்று போடுகிறார்கள்
    gkrishna

  8. #1247
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like


    கிருஷ்ணா சார்,

    'கஸ்தூரி விஜயம்' படத்தில் இன்னொரு விசேஷம்.

    இப்படத்தில் ஆண் குரலில் பாடல்களே இல்லை என்பதுதான்.

    குமாரின் இசையில் சுசீலாவின் 'பல்லாண்டு பல்லாண்டு' பாடல் சூப்பர்.
    இப்பாடலில் திருமணன் சடங்குகள் அனைத்தையும் ஓரளவிற்குக் காட்டி விடுவார்கள்.

    முத்துராமன், நாகேஷ், ஸ்ரீகாந்த் எல்லாம் நடித்திருப்பார்கள்.

    'மழைக்கால மேகம்' பாடல் காமராஜர் புகழ் பாடும் பாடல்

    சுப்பையாவை வாழ்த்தி கே..ஆர்.விஜயா பாடும் சாக்கில் பெருந்தலைவரை பெருமைப்படுத்தும் பாடல்.

    இந்த வரிகளைப் பாருங்கள்

    இப்போது எழுபத்தைந்து
    இன்னும் நூறாண்டு
    இளமை நீ என் வீட்டை ஆண்டு

    ராஜா உன் உள்ளம்தானே பொய்யைச் சொல்லாது

    தலைமை நீ ஏற்றுக் கொண்டால் பஞ்சம் வராது.
    நடிகர் திலகமே தெய்வம்

  9. #1248
    Senior Member Veteran Hubber mr_karthik's Avatar
    Join Date
    Sep 2005
    Location
    Irumbu kOttai
    Posts
    1,416
    Post Thanks / Like
    திருட்டுப்பதிவு போட்டுவிட்டுத்தான் இத்தனை ஆர்ப்பாட்டமா?. நான் கூட ஒரிஜினலோன்னு நினைச்சுட்டேன். சம்மந்தப்பட்டவர்கள் (அதாவது ஒரிஜினல் பதிவை சிரமம் எடுத்து பதித்தவர்கள்) சொன்ன பிறகுதான் விஷயம் தெரியுது. இதனிடையே 'பாராட்டுங்கள்', 'பாராட்டுங்கள்' என்ற கெஞ்சல் வேறு. இவர்கள் சொல்வதற்கெல்லாம் 'எஸ்' 'எஸ்' போட சிலர்.

    (குழம்ப வேண்டாம், இந்தப்பதிவு இந்த திரிக்கு சம்மந்தம் இல்லாதது)

  10. #1249
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    ஹம்சத்வனி.

    காதல் வயப்பட்டு விட்டீர்கள். காதலி ஒப்பு கொண்டு விட்டாள் .ஆனாலும் ஊருக்கு தெரியாமல்,உலகுக்கு தெரியாமல் ரகசியம் காத்து, உங்களுக்குள்ளேயே மருகி, சுகம் காக்கும் விகசிப்பை, உணர வேண்டுமா?ரகசியமாக அடையும் சுகத்தை ,திருட்டு சுகத்தை ஊரறியாமல் உணரும் சந்தோசம். இந்த பிரத்யேக உணர்வு தரும் ராகம் ஹம்சத்வனி.

    அந்த பாடலையும் ,ஜோடியையும் நிறைய பேர் குறை சொன்னார்கள்.அதனாலேயோ என்னவோ ,அந்த பொன்னூஞ்சல் ஆடிய ஜோடியின் இந்த வித்தியாச கானத்தில் எனக்கு ஒரு ஈர்ப்பு. சாதாரண கனவு பாடல் மார்கழி மாதத்து பனியும் அந்த மங்கையை கண்டதும் பணியும் என்ற அபூர்வ வரி கொண்டது.highlight ஆணின் விருப்பமும்,பெண்ணின் செல்லமான மறுப்பும் ஸ்வரத்தின் வழியாக சொல்ல பட்டது. டி.எம்.எஸ்.-சுசிலா பின்னியிருப்பார்கள்.சிவாஜி-உஷாநந்தினி ஜோடி எனக்கு பிடித்தம். குன்னக்குடி கொடி நாட்டிய வித்தியாச பாடல். "பால் பொங்கும் பருவம் "(படமும் பாடலும் நிறைய பேருக்கு பிடிக்காது)

    வாழ்வில் இணைந்த அந்த ஜோடியின் முதல் படம்.வழக்கம் போல தெரு ரௌடியிடம் காதலில் விழும் இன்ஸ்பெக்டர் மகள். ஆனால் பாடலும் ,படமாக்கமும் வித்யாசம்.(படமும்தான்-அமர்க்களம்)பரத்வாஜின் "உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு".

    எல்லாம் அம்சமாய் நிறைந்த 100% திருப்தி என்பார்களே, அதை அளித்த 2000களின் பாடல். அன்றலர்ந்த தாமரையாய்,அன்று பறித்த வெள்ளரியாய் ,சரியாய் பழுத்த ஸ்ட்ராபெரியாய் சிம்ரன். சந்திரபாபு-விஜய் சரிவிகித கலப்பாய் பிரபுதேவா. அற்புத நடன அமைப்பு.சரியான படமாக்கம். ரகுமானோ என்று திகைக்க வைத்த புதிய ஒருவரின் அற்புத composition -interludes -B G M .(ரஞ்சித் பாலொட் ) "மின்னல் ஒரு கோடி எந்தன் உயிர் தேடி வந்ததே "

    அந்த பிரபலத்தின் (மதுரைதான்)இரண்டாவது படைப்பு.நடிகர்திலகம் வெள்ளிவிழா கேடயம் வழங்கிய தமிழின் சிறந்த படைப்புகளில் ஒன்று. இளைய ராஜா கிராமத்து பின்னணியில் கலப்பிசையில் பெடலெடுத்த கிழக்கே போகும் ரயில்.ஆனாலும் இந்த பாடல் படத்திலில்லை."மலர்களே நாதஸ்வரங்கள்". அருமையான பாடல்.வெட்ட பட்டது நீளம் கருதி.ஆனால் அதே இயக்குனரின் இன்னொரு அரை வேக்காட்டு ரொமாண்டிக் த்ரில்லெர் .இசை புயலின் விஸ்வரூபம்.எடு படாத படத்தில் ஒரு composition marvel . "தீகுருவியாய் தீங்கனியென தீபொழுதினில் தீண்டுகிறாய்." கண்களால் கைது செய்யா விட்டாலும் ,காதுகளால் என்னை கைது செய்த இணைப்பு-படைப்பிசை அபூர்வம்.

    இந்த ராகத்தில் மற்ற பாடல்கள்.

    வனிதா மணியே - அடுத்த வீட்டு பெண்.
    ஸ்ரீ ரங்க ரங்க நாதனின் பாதம்-மகாநதி.
    Last edited by Gopal.s; 2nd July 2014 at 10:16 AM.
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  11. #1250
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    நண்பர்களே,
    தினமும் இந்திய நேரப்படி மாலை 3.30 முதல் 4.30 மணி வரை லாகின் பிரச்னை வருவது கிட்டத்தட்ட நம் அனைவருக்கும் ஏற்படுகிறது. இது கடந்த சில ஆண்டுகளாகவே நிகழ்ந்து வருகிறது. இதைப் பற்றி 2012லேயே நிரவாகத்திற்கு தெரியப் படுத்தி உள்ளேன்.

    தாங்கள் லாகின் செய்து மீண்டும் கடவுச்சொல் கேட்கும் போது திரும்பவும் டைப் அடிக்க வேண்டாம். தங்களுடைய லாகின் ஏற்கெனவே பயன்பாட்டில் இருக்கும். மீண்டும் லாகின் விவரம் கேட்கும் விண்டோ வரும் போது மய்யம் திரியின் முகவரியை மேலே டைப் அடித்தால் தங்களுடைய லாகின் அப்படியே இருப்பதைப் பார்க்கலாம். முயன்று பாருங்கள்.

    This login problem occurs between 3.30 and 4.30 pm IST daily. The first time you enter your login details it would have accepted but the login window appears again. At this stage you need not enter them again instead go to home page of mayyam, where you can find you are logged in.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •