-
21st July 2014, 03:01 PM
#11
Senior Member
Diamond Hubber
டியர் கார்த்திக் சார்,
நன்றி!
புஷ்பலதா 'அடாவடி' பற்றி நீங்கள் எழுதியதை ஷிப்ட்டில் இருந்தபடியே படித்தேன். அப்படியே 'பகீர்' என்றது.
ஒரு சம்பவம் வேறு ஞாபகத்திற்கு வந்தது.
ஒரு பதினைந்து அல்லது பதினெட்டு வருடங்கள் இருக்கும் என்று நினைக்கிறேன். நாங்கள் குடும்பத்துடன் ஊட்டி சுற்றுலா சென்றோம். அங்கே பொடானிகல் கார்டனில் சுற்றும் போது அருகே கடந்து சென்றவரைப் பார்த்தால் ரொம்ப பரிச்சயமாய்த் தோன்றியது. பின் உற்று நோக்கியதில் அது புஷ்பலதா. 'திரிசூலம்' படத்தில் தோன்றியது போலவே அப்படியே இருந்தார். கையில் ஒரு சிறுமியையும், ஒரு சிறுவனையும் பிடித்திருந்தார்.(பேரக் குழந்தைகள் என்று நினைக்கிறேன்)
நான் அருகில் சென்று என்னை அறிமுகப்படுத்திக் கொண்டு 'நீங்கள் புஷ்பலதாதானே?' என்றேன். 'ஆமாம்' என்று சிரித்தார்கள். பின் ஒரு சில நிமிடங்கள் அவருடன் உரையாடினேன். கிடைத்த நிமிடங்களுக்குள் தலைவருடன் அவர் நடித்த படங்களைக் குறிப்பிட்டு அவருடைய நடிப்பையும் பாராட்டினேன். புன்னகைத்தபடியே பதில் அளித்துவிட்டு சிறுவர்களை விளையாட அழைத்துக் கொண்டு போய் விட்டார்கள்.
தூரத்தில் ஒருவர் பார்க்கில் உள்ள பெஞ்ச்சில் குத்துக் காலிட்டு அமர்ந்து கொண்டிருந்தார். புஷ்பலதா நேராக அந்த நபரிடம் போய் ஏதோ சொல்லிவிட்டு மீண்டும் சிறார்களை விளையாட அழைத்துச் சென்று விட்டார்.

'சரி! யார்தான் அது போய்ப் பார்ப்போமே' என்று அருகில் சென்று பார்த்தால் ஏ.விம்.ராஜன் பரிதாபமாய் எங்கோ வெறித்துப் பார்த்தபடி அமர்ந்திருந்தார். அவரிடமும் போய் பேச்சுக் கொடுத்தேன். கற்பூரம், தரிசனம் பற்றி பேச ஆரம்பித்தேன். ஆனால் அந்தக் கல்லுளிமங்கன் நான் சொன்னதையும் காது கொடுத்துக் கேட்கவில்லை. எந்த பதிலும் சொல்லவில்லை. எனக்கு ஒருமாதிரி அசிங்கமாய் போய் விட்டது.
'அடப் போய்யா! எங்கள் நடிகர் திலகத்தையே தன்னந்தனியே எத்தனை முறை பார்த்து அவருடன் பேசி இருக்கிறேன்....அவர் எவ்வளவு ஜாலியாக எங்களிடமெல்லாம் உரையாடி இருக்கிறார்.... நீ என்ன பிசாத்து' என்று நினைத்தபடி திரும்பி வந்து விட்டேன். அதிலிருந்து சுத்தமாக அந்த ஆளை எனக்குப் பிடிக்காது.
கொஞ்சமான திமிர் இல்லை. இத்தனைக்கும் மார்க்கெட் இல்லாமல் சும்மா கிடந்த நேரம் வேறு அது. இதுக்கே இப்படி.
இப்போது உங்கள் பதிவைப் படித்ததும் மேற்சொன்ன சம்பவம் ஞாபகத்திற்கு வந்துவிட்டது.
இப்போதுதான் புரிகிறது.
மனுஷன் புஷ்பலாதாவிடம் நீங்கள் சொன்னபடி 'வாங்கி' வந்திருப்பாரோ!?
அப்படி என்றால் அவர் மீது தவறில்லை. மன்னித்து விடுவோம்.
Last edited by vasudevan31355; 21st July 2014 at 03:12 PM.
நடிகர் திலகமே தெய்வம்
-
21st July 2014 03:01 PM
# ADS
Circuit advertisement
Bookmarks