Page 279 of 400 FirstFirst ... 179229269277278279280281289329379 ... LastLast
Results 2,781 to 2,790 of 3997

Thread: மனதை மயக்கும் மதுர கானங்கள்

  1. #2781
    Junior Member Senior Hubber
    Join Date
    Jul 2011
    Location
    chennai
    Posts
    22
    Post Thanks / Like
    RAGHAVENDRAN MURALI SIRS AND PARTICIPANTS.
    my heartiest congradulations for the proramme schduled about NADIGARTHILAGAM. My request is try to bring out unknown sadhanaigal and matters not widely discussed about NT by the general public and fans to some extent so that MORE ABOUT NT can be understood by the people. hope all of you will focus on these points. ALL THE VERY BEST.
    VALGA VALARGA NT FAME AND GLORY.
    Last edited by Subramaniam Ramajayam; 2nd August 2014 at 10:04 AM.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #2782
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    இன்றைய ஸ்பெஷல் (44)

    இன்று ஒரு அருமையான காமெடிப் பாடலை இன்றைய ஸ்பெஷலாகத் தருகிறேன். அப்போதைய ஹிட். இப்போது மீண்டும் ஞாபகப்படுத்திக் கொள்வோம்.



    'மனம் ஒரு குரங்கு' படத்தில் ராட்சஸி, சீர்காழி கலக்கி எடுக்கும் பாடல்.



    சோவுக்கு ஒரு காமெடி டூயட். அப்போதைய சினிமாப் படங்களின் பெயர்களை பயன்படுத்தி காமெடிக் காதலர்கள் பாடும் பாடல். சுத்த தமிழிலும், கர்னாடக சங்கீதத்திலும், பக்திப் பாடல்களிலும் பட்டை கிளப்பும் சீர்காழி ஆங்கிலத்தில் பாடும் போதே தானாக வந்து விடுகிறது சிரிப்பு நமக்கு. ஈஸ்வரியின் ஆங்கில உச்சரிப்பு தமிழையும் விஞ்சுகிறது. டிபி.ராமச்சந்திரன் அவர்கள் இசை (இவர்தானே இசை?) மேலை நாட்டு இசையைத் தழுவி இருந்தாலும் பியூடிபுல். சோ திரைக்கதை வசனம் எழுதிய படம் இது. வி.டி.அரசு தயாரித்து ஏ.டி.கிருஷ்ணமூர்த்தி இயக்கி வெளிவந்த படம்.


    Beautiful
    marvelous
    Excellent

    Beautiful marvelous Excellent
    very very Excellent
    நீ பிறந்திருக்க வேண்டியது england

    Beautiful marvelous Excellent
    very very Excellent
    நாம் பிறந்திருக்க வேண்டியது england

    இளமைப் பூங்கா அள்ளித் தந்த
    நானும் ஒரு பெண்
    நீ தட்டிக் கழித்த பேர்களிலே நான்
    ஆயிரத்தில் ஒருவன்.

    இளமைப் பூங்கா அள்ளித்
    தந்த நானும் ஒரு பெண்
    நீ தட்டிக் கழித்த பேர்களிலே
    நான் ஆயிரத்தில் ஒருவன்.

    இன்பக் கடலில் நீந்திட வந்த
    படகோட்டி
    இன்பக் கடலில் நீந்திட வந்த
    படகோட்டி

    இனி என்றும் வாழ்வில் நீயே எனக்கு
    வழிகாட்டி

    Beautiful

    Excellent

    கல்யாணம் என்ற ceremony
    அது காதலர்க்கு தரும் company
    கல்யாணம் என்ற ceremony
    அது காதலர்க்கு தரும் company

    குழந்தை குட்டிகள் too many
    பெறக் கூடாது அம்மணி
    குழந்தை குட்டிகள் too many
    பெறக் கூடாது அம்மணி
    அம்மணி அம்மணி

    ஓஹ்ஹஹோஹ்ஹோ (ஈஸ்வரியின் ஒரு வினாடி ஓஹோ)

    Beautiful
    Beautiful
    marvelous
    marvelous
    Excellent
    very very Excellent

    நாம் பிறந்திருக்க வேண்டியது england

    taxi meter ஐப் போல ஓடுது இருவர் உள்ளம்
    அதைத் தடுத்து நிறுத்த கட்டிடுவோம் நம்
    நெஞ்சில் ஓர் ஆலயம்
    நெஞ்சில் ஓர் ஆலயம்
    நெஞ்சில் ஓர் ஆலயம்

    வடிகட்டி உன்னை தேர்ந்தெடுத்து
    நான் போட்டேன் பூமாலை
    வடிகட்டி உன்னை தேர்ந்தெடுத்து
    நான் போட்டேன் பூமாலை

    இளமங்கை உனக்கு என்னை இதுவரை
    காதலிக்க நேரமில்லை
    காதலிக்க நேரமில்லை

    நீ கைகொடுத்த தெய்வம்
    என்னைத் தேடி வந்த செல்வம்
    நீ கைகொடுத்த தெய்வம்
    என்னைத் தேடி வந்த செல்வம்

    லாலலா லலலலாலாலா
    லாலலா லலலலாலாலா
    ஹோஹஹோ ஹோஹஹோஹோ ஹோ

    Beautiful marvelous Excellent
    very very Excellent
    நாம் பிறந்திருக்க வேண்டியது england


    Last edited by vasudevan31355; 2nd August 2014 at 11:00 AM.
    நடிகர் திலகமே தெய்வம்

  4. Thanks Russellmai thanked for this post
    Likes Gopal.s liked this post
  5. #2783
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by vasudevan31355 View Post
    இன்றைய ஸ்பெஷல் (44)

    இன்று ஒரு அருமையான காமெடிப் பாடலை இன்றைய ஸ்பெஷலாகத் தருகிறேன். அப்போதைய ஹிட். இப்போது மீண்டும் ஞாபகப்படுத்திக் கொள்வோம்.



    'மனம் ஒரு குரங்கு' படத்தில் ராட்சஸி, சீர்காழி கலக்கி எடுக்கும் பாடல்.


    சோவுக்கு ஒரு காமெடி டூயட். அப்போதைய சினிமாப் படங்களின் பெயர்களை பயன்படுத்தி காமெடிக் காதலர்கள் பாடும் பாடல். சுத்த தமிழிலும், கர்னாடக சங்கீதத்திலும், பக்திப் பாடல்களிலும் பட்டை கிளப்பும் சீர்காழி ஆங்கிலத்தில் பாடும் போதே தானாக வந்து விடுகிறது சிரிப்பு நமக்கு. ஈஸ்வரியின் ஆங்கில உச்சரிப்பு தமிழையும் விஞ்சுகிறது. டிபி.ராமச்சந்திரன் அவர்கள் இசை (இவர்தானே இசை?) மேலை நாட்டு இசையைத் தழுவி இருந்தாலும் பியூடிபுல். சோ திரைக்கதை வசனம் எழுதிய படம் இது. வி.டி.அரசு தயாரித்து ஏ.டி.கிருஷ்ணமூர்த்தி இயக்கி வெளிவந்த படம்.

    மனம் ஒரு குரங்கு வித்யாசமான,துணிச்சலான முயற்சி. (ஹாலிவூட் தழுவல்). சி.ராமசந்திரா அத்தனை பாடல்களும் அருமை.

    மனம் ஒரு குரங்கு மனித மனம் ஒரு குரங்கு -டி.எம்.எஸ்.

    போகிறேன் புதிய உலகம் போகிறேன்- டி.எம்.எஸ்-பீ.எஸ்.

    தாங்கள் கொடுத்துள்ள beautiful marvellous -சீர்காழி-ராக்ஷஷி .

    நன்றி வாசு.
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  6. #2784
    Senior Member Veteran Hubber mr_karthik's Avatar
    Join Date
    Sep 2005
    Location
    Irumbu kOttai
    Posts
    1,416
    Post Thanks / Like
    டியர் வாசு சார்,

    இன்றைய ஸ்பெஷல் சீரீஸில் முந்தாநாள் நீங்கள் தந்த மோகம் முப்பது வருஷம் படத்திலிருந்து 'சங்கீதம் ராகங்கள் இல்லாமலா' பாடலின் விளக்கமும் ஆய்வும் மிகச்சிறப்பு.

    ஆனந்த விகடனில் மணியன் இக்கதையை தொடராக எழுதியபோதே படித்திருக்கிறேன். கொஞ்சம் விவகாரமான கதைதான். முள்ளில் விழுந்த சேலைபோல கையாள வேண்டிய கதை. எழுதும்போது எப்படி வேண்டுமானாலும் எழுதிவிட முடியும். ஆனால் படமாக எடுக்கும்போது எப்படி வரப்போகிறது என்பதைக்காண ஆவலுடன் படத்துக்குச் சென்றேன். கொஞ்சம் அங்கே இங்கே மாற்றியிருந்தாலும் கதையை மிகவும் கவனமாகவே கையாண்டிருந்தனர். அதிலும் கமல் அப்போது பிளேபாய் ரோல்களாக பின்னிக்கொண்டிருந்த நேரம் (உணர்ச்சிகள், சொல்லத்தான் நினைக்கிறேன், மேலும் இதே சாயலில் சில மலையாளப்படங்கள்).

    மணியன் 70-களில் அணிமாறிச்சென்று நடிகர்திலகத்தின் ரசிகர்களின் அதிருப்தியைச் சம்பாதிக்கும் முன், 60-களின் இறுதியில் அவருடைய கதைகள் என்றால் எனக்கு மிகவும் பிடிக்கும். முதன்முதலாக கண்ணதாசன் எழுதிய இதயவீணை தூங்கும்போது என்ற பாடல் வரியிலிருந்துதான் தன் இதயவீணை கதையின் தலைப்பை தேர்ந்தெடுத்தார். ஒவ்வொரு வாரமும் அக்கதையின் அத்தியாய எண் போடும் இடத்தில் சரோஜாதேவி மடியில் வீணையுடன் அமர்ந்திருக்கும் ஸ்டில் இடம்பெற்றிருக்கும். (ஆனந்த விகடனில் வந்த தொடர்கதையின் பைண்ட் செய்யப்பட வடிவம் இருந்தால் இன்றும் பார்க்கலாம்). ஒவ்வொரு அத்தியாயத்துக்கும் தலைப்பாக கண்ணதாசனின் பாடல் வரிகளைக் கொடுத்திருப்பார். இவையெல்லாம் மணியனின் கதைகளை விரும்பி படிக்கவைத்த கூடுதல் காரணங்கள்.

    நடிகர்திலகத்தின் புதிய பறவையில் இடம்பெற்ற பாடல் வரிகளை தலைப்பாக வைத்தே நான்கு தொடர்நாவல்கள் எழுதினர். அவை...

    'உன்னை ஒன்று கேட்பேன்'
    'உண்மை சொல்ல வேண்டும்'
    'என்னைப்பாடச் சொன்னால்'
    'என்ன பாடத்தோன்றும்'

    இதில் 'உண்மை சொல்ல வேண்டும்' என்ற தொடர்கதை துவங்கிய அதே விகடன் இதழில்தான் நடிகர்திலகம் எழுதிய 'அந்நிய மண்ணில் சிவந்தமண்' என்ற பயணக்கட்டுரைத் தொடரும் துவங்கியது.

    இவர் எழுதிய கதைகளில் இதயவீணை (அதே பெயரில்), இலவுகாத்த கிளியே (சொல்லத்தான் நினைக்கிறேன்), லவ் பேர்ட்ஸ் (வயசுப்பொண்ணு) மோகம் முப்பது வருஷம் (அதே பெயரில்) திரைப்படங்களாக வந்தன. 'காதல் காதல் காதல்' படமும் மணியன் எழுதிய கதைதான்.

    எந்த மணியனின் எழுத்துக்களை விரும்பிப் படித்தோமோ, அதே மணியனின் இதயம் பேசுகிறது பத்திரிகை இதழ்களை நாங்களே சென்னையின் பிரதான சாலையில் போட்டுக்கொளுத்தி போராட்டம் நடத்தும் அளவுக்கு மணியனின் பிற்கால நடவடிக்கைகள் நடிகர்திலகத்துக்கு எதிராக மாறிப்போயின.

    ஸாரி..., உங்கள் பாடல் பதிவுக்கு பதிலளிக்கத்துவங்கி விஷயம் வேறெங்கோ திரும்பிவிட்டது...

  7. Likes Gopal.s liked this post
  8. #2785
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    நன்றி கார்த்திக் சார்.

    நடிகரில் அசோகன்

    பத்திரிக்கையாளர்களில் மணியன் (நல்ல எழுத்தாளராய் இருந்தும் கூட)

    நடிகையரில் விஜயகுமாரி

    குமட்டும்.
    நடிகர் திலகமே தெய்வம்

  9. #2786
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    //(ஆனந்த விகடனில் வந்த தொடர்கதையின் பைண்ட் செய்யப்பட வடிவம் இருந்தால் இன்றும் பார்க்கலாம்).//

    அம்மா வைத்திருந்தார்கள். நானே பல தடவை பார்த்திருக்கிறேன். ஆனால் இப்போது எங்கே?!!!!!!
    நடிகர் திலகமே தெய்வம்

  10. #2787
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    குப்பத்து கே.ஆர்.விஜயா நடிகையானவுடன் ஒரு பாடலை ஷூட்டிங் எடுப்பது போன்ற காட்சி.

    அருப்புக் கோட்டை மச்சான்
    ஆசை என் மேல் வச்சான்

    என்ற ஒரு பாடலும் ராட்சசி குரலில் 'மனம் ஒரு குரங்கி'ல் உண்டு.

    எந்தப் பாட்டிலும் இல்லாத விசேஷம் இதில் உண்டு.

    புன்னகை அரசி கவர்ச்சி விருந்து படைப்பார் லோ-ஹிப்பில்.
    நடிகர் திலகமே தெய்வம்

  11. #2788
    Senior Member Veteran Hubber mr_karthik's Avatar
    Join Date
    Sep 2005
    Location
    Irumbu kOttai
    Posts
    1,416
    Post Thanks / Like
    டியர் வாசு சார்,

    இன்றைய ஸ்பெஷல் சீரீஸில் இன்று நீங்கள் வழங்கியிருக்கும் பாடல் உண்மையிலேயே 'பியூட்டிபுல் மார்வெலஸ்'. எதிர்பாராத நேரங்களில் இப்படி திடீர் திடீரென இன்ப அதிர்ச்சித் தாக்குதல்கள் நடத்துகிறீர்கள். ஏற்கனவே பலமுறை கேட்ட பாடலென்றாலும், ஒரு ஸ்பெஷல் தருணம் நினைவுக்கு வருகிறது.

    பத்ரகாளி படம் பார்ப்பதற்காக வண்ணாரப்பேட்டை பாண்டியன் தியேட்டரின் எதிரே ஒரு டீக்கடை அருகில் நின்றுகொண்டிருந்தோம். வானொலியில் ஞாயிற்றுக்கிழமை மாலை உங்கள் விருப்பம் நிகழ்ச்சி, சீர்காழியாரின் சிறப்பு தேன்கிண்ணமாக ஒலிபரப்பாகிக்கொண்டிருந்தது. அவர், தான் பாடிய சிறந்த பாடல்களாக, விளக்கங்களுடன் கொடுத்துக்கொண்டிருந்தார். 'உள்ளத்தில் நல்ல உள்ளம்', 'உழைப்பதிலா', 'எங்கிருந்தோ வந்தான்' போன்ற பாடல்களை தந்தவர், 'இதுவரை ரொம்ப சோகமான, அல்லது சீரியஸான பாட்டுக்களாக தந்துவிட்டேன். அதிலிருந்து உங்களை மாற்ற நானும் எல்.ஆர்.ஈஸ்வரியும் பாடிய ஒரு இங்கிலீஷ் பாட்டைக் கேப்போமா?' என்று சொல்லிவிட்டு இந்த 'பியூட்டிபுல் மார்வெலஸ்' பாடலை ஒலிபரப்பினார். இப்போது (மனம் ஒரு குரங்கு படத்தில் இடம்பெற்ற) இந்தப்பாடலை எங்கே கேட்டாலும் அன்று கேட்ட அந்த அனுபவம் நினைவுக்கு வரும்.

    'மனம் ஒரு குரங்கு' சோ எழுதிய நாவல். ஒருமுறை ரயிலில் மதுரை செல்ல எழும்பூர் ரயில்நிலையம் வந்த சோ அவர்கள், பயணத்தின்போது படிக்க எதுவும் எடுத்துவரவில்லையே என்ற நினைப்புடன் அங்கிருந்த புத்தகக் கடைக்கு சென்று சில புத்தகங்களை பார்வையிட்டபோது, கடைக்காரர் ஒரு புத்தகத்தை எடுத்துக்காட்டியிருக்கிறார். அதைப்பார்த்ததும் 'இது நல்லாயிருக்காது' என்று ரிஜெக்ட் செய்திருக்கிறார். சோ அவர்களால் ரிஜெக்ட் செய்யப்பட கதை வேறெதுவுமில்லை. அவரே எழுதிய 'மனம் ஒரு குரங்கு'தான்...

  12. #2789
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like



    தூள் கார்த்திக் சார்.

    எனக்கு beautiful சாங் அவ்ளோவ் பிடிக்கும்.

    சோவின் ரயில்வே ஸ்டேஷன் குரங்குத்தனத்தை நானும் படித்த ஞாபகம் உங்கள் பதிவைக் கண்டதும் வருகிறது.

    இதை மாதிரி விஷயங்களை நினைவு படுத்த எங்கள் கார்த்திக் சாரால் மட்டுமே முடியும். ஒரு விஷயத்தை தொடக்கி வைத்தால் அதை பூரணமாக முடித்து வைக்க (அதுவும் சுவையோடு) உங்களால்தான் முடியும்.
    நடிகர் திலகமே தெய்வம்

  13. Likes Russellmai liked this post
  14. #2790
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like

    மனம் ஒரு குரங்கு

    மனம் ஒரு குரங்கு ! எத்தனை பொருத்தமான, சத்தியமான வார்த்தை. குரங்கு என்பது ஏளனத்துக்காக சொல்லப்பட்டதல்ல. அதன் செயலுக்காகவே சொல்லப்பட்டது. இன்றைக்கு ஒன்றை நினைக்கும் மனது அதனையே நாளை மறுக்கிறது. மீண்டும் பிறகு ஏற்கிறது. எனவே மனத்தை வைத்து நான் செயல்களை ஏற்பதில்லை. இன்றைக்கு ஒருவர் பிடிக்காமல் போகலாம். ஆனால் மீண்டும் மனம் எப்போதாவது அவரை நாடி விழையும். இப்போது நாம் அவரை பகைத்து கொண்டால், அப்போது அவருடன் நாம் பேச மனம் இடம் கொடாது. நம்முடைய ( ego) "தான்" என்ற உணர்வு தடுக்கின்றது. ஆனால் அவருடன் பேசி உறவாடுவதன் மூலம் கிடைக்கக் கூடிய நற்பலன்கள் பயனற்று விடுகின்றன. மனம் கிடந்து அடித்துக் கொள்கிறது. தான் முன்பு செய்த அவசர செயலை எண்ணி தன்னை வருத்தி நொந்து கொள்கிறது. இப்போது நாமாக போனால் அவமானப் படுத்தப் படுவோம் என்று அஞ்சுகின்றது. அமைதியில்லாமல் போகின்றது. எல்லாவற்றுக்கும் காரணம் மனம் அலை பாய்வது தான். மனம் எப்போதும் ஒருவருடன் பகைமை உறவாடுவதில்லை. சில சமயம் நண்பரும் எரிச்சலூட்டுவதுண்டு. என்னை எரிச்சளூட்டுவதர்க்குரிய உரிமையையும் நானே அவர்களுக்கு அளித்தேன் என்ற உண்மையையும் அதனால் அவர்களுக்கு கிடைக்கும் சிறிய சந்தோஷத்தையும் உணரக் கூடிய மனப் பக்குவம் எனக்கு இன்னும் வளர வேண்டும்.

    அமைதியில் / தனிமையில் மனம் சிந்திக்கின்றது. தனது பழைய செயலை நினைத்து அலசியிருக்கிறது. இது அனைவருக்கும் தேவையான ஒன்று. கடந்ததை எண்ணி வருத்தப் படாதே என்பர். ஆனால் கடந்த பாதையே வாழ்வில் நமக்கு படிப்பினை கற்று தர போகிறது. இனி கடக்கப் போவதற்கு அதுவே வழி காட்டி.

    அழகு முகத்தில் நிச்சயமாக இல்லை. மனத்தில் தான் இருக்கிறது. இதனை சிறிய வயதிலேயே அறிந்து கொண்டதினால் தானோ என்னவோ, என்னால் காதல் போன்றவற்றை முகத்தையும் உடலையும் வைத்து தீர்மானிக்க முடியவில்லை. இன்று என்னுடன் பேசும் அழகான பெண் என்னை அவமதித்து வார்த்தைகளால் நோகடிக்கும் போது அவளது அழகான முகம் மறைந்து மனத்தின் குரூரம் வெளிப்படுகிறது. இதனை நான் நன்கு உணர்ந்திருக்கிறேன்.

    ஆணோ பெண்ணோ அவர்களது அழகு நம்முடைய மனதில் தான் இருக்கிறது. நமது மனதுக்கு அவர்களை பிடித்துப் போனால் அவர்கள் தான் அழகின் இலக்கணம் என்கிறோம். பிடிக்காவிடில் தூக்கி எறிகிறோம். கொஞ்சம் யோசித்துப் பார்க்கும் போது எல்லோருமே அழகாயிருப்பதாகப் படுகிறது. ஆனால் எல்லாருமே எல்லா சமயங்களிலும் அழகாயிருப்பதில்லை. மனமே முன்னின்று ஒரு செயலை செய்யும் போது மனிதர்கள் அழகனவர்களாகத் தெரிகின்றனர். நமது மனதுக்கு இதமளிப்பவர்கள் , நம்முடைய குறைகளை காது குடுத்துக் கேட்பவர்கள், நமக்கு ஆறுதல் கூறுபவர்கள் எல்லோரும் அந்தந்த சமயங்களில் அழகாக தெரிகிறார்கள். இது சுயநலமாகப் படலாம். ஆனால் சற்று யோசித்து பாருங்கள். பெற்ற தாய்க்கு தனக்குப் பிறந்ததெல்லாம் அழகு தான். அவளால் அவைல்களை வேறு படுத்த முடியாது. எல்லாவற்றிலும் தன்னழகு சேர்ந்திருப்பதாக அவள் நினைக்கிறாள். அவள் மனம் அப்படி. பிள்ளைகள் வயதான காலத்திலும் தங்களது தாயின் அழகை கண்டு சந்தோஷமடைகின்றன. அழகுக்கு வயதில்லை. அதற்கு வரம்பில்லை. ஆனால் ஆசைக்கு தான் வரம்பு உண்டு. ஆசையும் மனதில் தான் உண்டாகிறது.

    குழந்தை ஒன்று பொம்மை வேண்டும் என்று ஆசைப்பட்டால் அது நியாயப்படுத்தப்படுகிறது. இளமையில் பெண்ணையும் திருமணத்தையும் நாடினால் அதுவும் நியாயப் படுத்தப் படுகிறது. ஆனால் 20 வயது இளைஞன் விளையாட பொம்மை கேட்டால் உலகம் அவனை கேலி செய்யும். வயதான மனிதன் பெண்களை நாடி சுற்றினால் உலகம் அவனை பழிக்கும். ஆசையின் வரம்பு வயதுக்கேட்ட்றபடி மாறுபடுகிறது. ஆனால் அழகுக்கு வரம்பில்லை. அது எங்கும் இருக்கிறது. ஆசை, அழகு இரண்டுமே உண்டாவது மனதில் தான் என்றாலும் அவை வேறுபடுகின்றன.

    இருந்தாலும், அழகான பொருளை அடைய ஆசையும், ஆசை காரணமாக அது மேலும் அழகாகவும் தெரிகிறது.

    உற்றுப் பாருங்கள். சிறு எறும்பு நகர்வது கூட அழகாகத் தான் தெரியும். எல்லாமே அழகாக தெரிபவனுக்கு கவலைகள் குறைகின்றன. மனம் அமைதி அதிகப் படுகின்றது. தனிமை குறைகின்றது. நட்பு வலுக்கின்றது. பிறர் செய்யும் தவறில் அவர்களுக்கு பாடம் உண்டாகட்டும், நாம் உணர்ந்தது போல அவர்களும் அழகை அனுபவித்து அறியட்டும் என்ற எண்ணம் வளர்கிறது.

    (நண்பர் ஒருவரின் வலை பூவில் படித்தது .பகிர்ந்து கொள்ள ஆசை )
    gkrishna

  15. Likes Russellmai liked this post

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •