-
18th August 2014, 07:40 AM
#371
Senior Member
Seasoned Hubber
பொங்கும் பூம்புனல்
முல்லை வனம் திரைப்படத்தில் இன்னொரு சூப்பர் பாடல்..
தந்தானே என்ற தத்தகாரத்தில் தினத்தந்தி பேப்பர் விளம்பரம் போல வருவதைக் கேட்டு ஏமாற வேண்டாம்.. அது தத்தகாரம் தான்.. என்ன சிலேடையான பல்லவி..
http://www.inbaminge.com/t/m/Mullai%20Vanam/
முல்லைவனம் திரைப்படத்திற்கு இசை திரை இசைத் திலகம் என எண்ணுகிறேன்.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
18th August 2014 07:40 AM
# ADS
Circuit advertisement
-
18th August 2014, 08:11 AM
#372
Senior Member
Diamond Hubber

Originally Posted by
vasudevan31355
அதில் சந்தேகமென்ன? (நன்றி பாலையா அவர்களே) நிச்சயமாக பாரதிதான். அந்தப் பாட்டின் ஸ்டில் இதோ. மது அண்ணா! கோபால் சொன்னா மாதிரி உங்கள் ஜாலி லீலைகளுக்கு எல்லைகள் கிடையாதோ! ரொம்ப சுவாரசியம். அனுபவித்து ரசிக்கிறேன்.
வாசு ஜி..
சாம்ப்பிள் காட்டிட்டு போனா ஆச்சா ? நல்ல வேளை.. ஒரு வழியா தேடிக் கண்டு பிடிச்சுட்டேன்..
அமரகவி பாரதி ஒரு உலக மகா தீபமடி ! ( ஹி ஹி.. இந்த வரி மெய்யழுத்துக்களே இல்லாமல் வாக்கியம் அமைக்கும் போட்டியில் குமுதம் இதழில் முதல் பரிசு வாங்கியது ).
ஓகே.. ஓகே..இது வேற பாரதி.
ஆனாலும் ஒரு வருடம் பாரதியார் நினைவு நாளன்று "சந்திரோதயம்", "நாடோடி", அன்னமிட்ட கை" என்று எம்.ஜி.ஆர் படமாக டி.வி.யில் போட்டாங்க. ஏன் இப்படின்னு எல்லோரும் பேசிகிட்டு இருந்தப்போ ( அப்போ எல்லாம் யார் வீட்டுல டி.வி. இருக்கிறதோ அங்கேதான் திரைப்படம், ஒலியும் ஒளியும் பார்க்க கூட்டம் கூடும் ) ஒரு மாமி சொன்னார். "எல்லா படத்திலேயும் பாரதி நடிக்கிறாடா.. அதைக் கவனிக்க மாட்டேங்கிறீங்களே ?" என்று....
-
18th August 2014, 08:26 AM
#373
Junior Member
Newbie Hubber
இசை அல்லது கலை என்பது மரபு,பாரம்பரியம் மற்றும் பிரத்யேக இன ,குண ,மனம் கொண்ட முன்னோர்களின் பங்களிப்பின் சங்கிலி கண்ணி நீட்சி. பழையதை ஒப்பிடாமல் ,இன்றைய பங்களிப்பை மட்டும் கொண்டாட முடியாது.
நடுவில் மாட்டியவர்க்கோ பழையது,புதியது இரண்டும் அளவு கோலாய் நிற்பதை தவிர்க்க இயலாது.
ஒரு எழுத்தாளனையோ அல்லது இசை கலைஞனையோ ,அவன் படைப்புகளை அவன் தனிப்பட்ட வாழ்க்கையின் கூறுகளை கொண்டு(பிரத்யேக வெற்றி-தோல்விகள்,வியாபாரம் இவைகளும் சேர்ந்த.) அளப்பதை தவிர்ப்பவன் நான். ஆனால் தமிழனாக,தமிழ் சூழலில்,இந்த ஆளுமைகள் பொதுவில் உதிர்க்கும் தத்துவ முத்துக்களை பொருக்க ,ஒரு பெரும் கூட்டமே அலையும் போது ,இவற்றை விமரிசிப்பதும் நம் சமூக கடமையாகி விட்டது.திருக்குறளும் ,சங்கங்களும் தோன்றிய அறிவு பூமியில், திருடாதே,பொய் சொல்லாதே,தூங்காதே என்று சொல்வதற்கே ,ஒரு நாயகர் தேவை பட்ட புண்ணிய பூமியில் அவதரித்த அதிர்ஷ்டம் செய்தவர்கள் நாம்.
இந்த சூழலில் ,திடீர் நாயகர்களை உருவாக்கி,பழைய சாதனைகள் புறம் தள்ள படும் போது ,அதுவும் 80களின் ஒரே agenda கொண்ட கும்பல் ஒன்று, nostalgia ,பரிச்சயம், limited exposure கொண்டு ஆளுமைகளை ,வலை தளத்தில் உருவாக்குவது தவிர்க்க முடியாதது.
ஆனால் கலையின் தன்மையையே ஒரு ஆளுமைக்குள் அடக்கி சுரங்களை முதலில் கண்டவர்,மனங்களோடு இணைப்பை ஏற்படுத்தி கொண்ட முதல் படைப்பாளி என்று கலையையும் ,ஆளுமையையும் வைத்து அவியல் பண்ணும் போது ,என்னை மாதிரி கி.மு முதல் நேற்று வரை கலை,இலக்கிய தொடர்ச் சியோடு ஓரளவு பரிச்சயம் கொண்டவர்களின் ஒப்பீட்டால் நன்மை விளையுமே அன்றி,எக்காலமும் கலகம் உண்டாகாது.
புதிதாக வெட்ட பட்டதானாலும் கிணற்றிலேயே நீந்தி களிக்காமல் ,மிக பழமையான,புது புனல்களும் சங்கமமாகும் கடலில் நீந்துவதே எனக்கு உவப்பானது.
வலையை வைத்து கலையை கண்டறிய முடியாது. கலகத்தை வைத்து ஓரளவு கண்டறிய தலை படலாம்.
Last edited by Gopal.s; 18th August 2014 at 09:45 AM.
-
18th August 2014, 08:31 AM
#374
Junior Member
Newbie Hubber
நான் கடைசி பதிவை ,இங்கு பதிப்பித்ததன் நோக்கம் ,இங்கு வாருங்கள் வெங்கிராம்.அமெரிக்கர்கள்,பிரிட்டிஷ் காரர்கள் இல்லாமல் சுலபமாக உரையாடலாம்.
எதை வேண்டுமானாலும் ,வன்மம் கலக்காமல்,நட்போடு ,டீ குடிக்கும் சூடும் குறையாமல் விவாதிக்கலாம். நேர்கோடு என்றாலும் எனக்கு சம்மதமே.
-
18th August 2014, 08:40 AM
#375
Senior Member
Diamond Hubber
டியர் ராகவேந்திரன் சார்,
குணசுந்தரி, ஜெயகோபி, கல்யாணம் செய்துக்கோ, கதாநாயகி, மஹேஸ்வரி, மேனகா, முல்லைவனம் என்று மிக மிக அரிய படங்களில் இருந்து 'பொங்கும் பூம்புனலா' க இன்று தங்களால் அள்ளி வழங்கப் பட்டுள்ளது. அனைத்தும் பொக்கிஷங்கள். நன்றி!
ஓஹோ! பிரம்மதேவனே!,
'ஊஞ்சலில் ஒய்யார ராஜா',
'என் ஆசை மச்சான்', ('மானா மதுரையிலே குட்டி மரிக்கொழுந்து வித்தவளே' ஸ்டைல் 'காத்தவராயன்' தலைவர் அமர்க்களம் போல )
'வாழ்வின் ஒளியே வருவாய்,
'துரையே இளமை பாராய்.....கதைகள் கேளாய்', (இன்றைய டாப் இதுதான் மிரள வைக்கும் மெலடி. இந்த ஒரு பாடல் போதும் தங்கள் உயரிய ரசனையை நாங்கள் புரிந்து கொள்ள.)
'மனமே நிறைந்த தெய்வம்',
'எங்கிருந்தோ இங்கு வந்து',
'காயா பழமா சொல்லுங்க... காரியம் பலிக்கும்'
'தந்தானே 'தினத்தந்தி' னானே'[ (குறத்திப் பாடல்) (தங்கள் 'தினத்தந்தி'குறும்பு அட்டகாசம்)
'பானைய இறக்க நானும் பரணை மேலே ஏறும் போது ஆணி மாட்டிக் கிழிஞ்சி போச்சுடா... என் குருவிக்காரா... அவநம்பிக்கை கொள்ள வேணாண்டா.... (ஜரிகை சேலை ஓரம் கிழிஞ்சதற்கு சந்தேகம் கொண்டு கேட்கும் தன் குருவிக்காரனுக்கு அழகாக பதில் தரும் குறத்தி. இப்படி ஒவ்வொரு சந்தேகத்திற்கும் அற்புத விளக்கம்)
ராகவேந்திரன் சார்,
எங்கேயோ போயிட்டீங்க போங்க. சிலோன் ரேடியோ கெட்டது. அருமையான அந்தக் காலப் பாடலகளை அள்ளித் தரும் எங்கள் ராகவேந்திரா
'அய்யா (வுக்கு) சலாமுங்க',
திரியின் 'கை கொடுத்த தெய்வம்' நீங்க.
Last edited by vasudevan31355; 18th August 2014 at 08:48 AM.
நடிகர் திலகமே தெய்வம்
-
18th August 2014, 09:07 AM
#376
Senior Member
Diamond Hubber
-
18th August 2014, 09:16 AM
#377
Senior Member
Diamond Hubber
மது அண்ணா!
அழ வைக்கிறேள்! அதாவது நான் விரும்பிக் கேட்ட 'தாலாட்டு' படத்தின்
'விளக்கில்லாமல் கணக்கெழுதி' பாடலின் வீடியோவைப் போட்டு என்னை அழ வைத்து விட்டீர்கள் என்று சொன்னேன். அழ வைத்ததற்கு நன்றி!
'முடியும் மட்டும் பேசலாம்'.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
18th August 2014, 09:27 AM
#378
Junior Member
Newbie Hubber

Originally Posted by
vasudevan31355
கோ,
அருமை! தங்கள் பதிவின் அடிப்படைக் கருத்துக்களை நன்றாக உணர முடிகிறது. அற்புதமான கருத்துக் கோர்வை.
ஆனால் இன்னொன்று புரியாதது. வேறு இணைய தளங்களில் நடக்கும் நிகழ்வுகளுக்கு தாங்கள் இங்கு வந்தோ அல்லது நடிகர் திலகம் திரியிலேயோ பதில் சொல்லும் போது படிக்கும் நாங்கள் குழம்ப வேண்டியுள்ளது. எது சம்பந்தமாக தங்கள் எதிர் கருத்துக்களை அவர்களுக்கு முன் வைத்து வாதாடுகிறீர்கள் என்பது புரியவில்லை.
Vasu, This post can be understood and appreciated in isolation on its own merit. But interested and curious readers can click view Forum posts in my name and get the continuity.Actually ,it started here and shifted to other I.R thread and back here for some reasons. Don't worry,it will add new dimension here and will not be an interruption.
-
18th August 2014, 09:35 AM
#379
நான் யார் தெரியுமா ?
விக்கியில் உள்ள தகவல்
Naan Yaar Theriyuma
V.N. Ramanan
Navasakthi Films
Vedha
Ravichandran, Rajashree, நாகேஷ்
நமக்கு வரலாறு முக்கியம் இல்லையா ?
-
18th August 2014, 09:37 AM
#380
Senior Member
Diamond Hubber

Originally Posted by
Gopal,S.
Vasu, Don't worry,it will add new dimension here and will not be an interruption.
நன்றி கோ!
ஒரு சிறு திருத்தம். தடை என்று கண்டிப்பாக யாரும் நினைத்ததே இல்லை. புரிதல் சற்று சிரமம். ஆனால் எனக்கில்லை.
Bookmarks