Quote Originally Posted by Gopal,S. View Post
வெங்கி ராம்,

இளைய ராஜா நல்ல பாடல்கள் தரவில்லைஎன்றோ அல்லது மெலடி ,கொண்டாட்ட பாடல்கள் தரவில்லைஎன்றோ நாங்கள் சொல்லவில்லையே? நீங்கள்தான் இளையராஜா என்ற ஒன்றை தவிர எல்லாவற்றையும் மறுக்கிறீர்கள் ,ரொம்பவும் பார்வையில் குறை பாட்டோடு. interlude ,preludes ,mood music என்பவை அவருக்கு முன்னால் வந்தவை. என்றும் ஜீவித்திருப்பவை. இளைய ராஜா செய்ததெல்லாம் ,technological embellishment (இதில் ரகுமான் அவரை தாண்டி எங்கோ சென்றார் புதிய trend உருவாக்கி). அதே போல ஒன்று ஹிட் அடித்து விட்டால் ,அதே மெலடி முப்பது முறையாவது வரும்.நீங்களும் சலிக்காமல் பாராட்டி கொண்டே இருப்பீர்கள். அவரின் பட எண்ணிக்கை கருதி ,இதை குறையாக நான் சொல்லவில்லை.

நீங்கள் புகழ்வது குறையில்லை. புகழும் விதம் sycophant அளவில் சென்று விடுகிறது. இதை "intellectual tunnel vision" என்று குறிப்போம். தங்கள் கருத்துக்களை என்றுமே பொருட்படுத்துபவன் நான். நான் சொல்பவற்றையும் கேளுங்கள்.ரசிகரான நீங்கள் ,மேலும் உங்களை வளர்த்து கொண்டு பார்வை விசாலம் பெறலாம். அதே சமயம் இளைய ராஜா contemporary ஆன நான் அவர் காட்டிய வளர்ச்சியில் ஆனந்தம் அடைந்தே வந்துள்ளேன்.
அப்படி நீங்கள் உள்வாங்கிக் கொண்டால் அது பிழையே. அதற்கு எதிரான நிலைதான் சரி. அதாவது ராஜா மற்ற இசையமைப்பாளர்களோடு ஒப்பிடுகையில் எந்தெந்த தளங்களில் வேறுபட்டு விஸ்வரூபமாக நிற்கிறார் என்பதை பகுத்துப் பார்க்கும் ஞானம் பலருக்கு இங்கு இல்லை என்றே நினைக்கிறென். நீண்டதொரு பாரம்பர்ய இசைச்சங்கிலித் தொடரில் கடைசி முடிச்சாகவும் ஆனாலும் முற்றிலும் மாறுபட்டும் நிற்கும் புதுமை ராஜா. ஒரு பாஹ்-மொசார்ட்-பீதோவன்-தியாகரஜய்யர்-நாட்டாரிசை இசைவகைகளின் கலவை. அவருடன் இந்த நூற்றாண்டு மற்ற இசையமைப்பாளர்களை ஒப்பீடு செய்வதே ராஜாவின் வெறும் இருபத்து ஐந்து சதவீத இசைப்பங்களிப்பை ( பாடல்கள் ஆக்கம்) மட்டுமே கணக்கில் கொண்டு நடத்தப்படும் சிறு விளையாட்டுத் தனம்.