-
10th October 2014, 07:01 AM
#71
Junior Member
Newbie Hubber

Originally Posted by
rajeshkrv
அட ராமா டம்மி முதல்வர் இல்லையே .. .... என்ன வெச்சு காமிடி கீமிடி பன்னலையே ????

அமைச்சரவை அமைத்தது யார் என்று தெரிந்துமா உங்களுக்கு இந்த சந்தேகம்? செயின்ட் ஜார்ஜ் கோட்டை ஈகா தியேட்டர் அருகே வினோத் மேற்பார்வையில் கட்ட பட்டு வருகிறது.
-
10th October 2014 07:01 AM
# ADS
Circuit advertisement
-
10th October 2014, 07:06 AM
#72
Junior Member
Newbie Hubber

Originally Posted by
esvee
வாசு சார்
கோபால் இந்தியாவிற்கு வாதாட நுழைந்தால் அவரை சுற்றி வளைத்து ''ஹப் -- சட்டத்தின் கீழ் கைது செய்து
ஏற்கனவே அவர் புரிந்த பல கவிதை , கிண்டல் ,,நய்யாண்டி , அசுத்தமான வார்த்தைகள் , தன்னை தானே உயர்த்தி
கொள்தல் , கால்கள் - விரல்களால் எழுதியது போன்ற குற்றங்கள் புரிந்தமைக்காக ''ஹைதராபாத் '' சிறையில்
அடைக்கப்ட்டு விசாரிக்கப்டுவார் .
அரசு தரப்பு வாதம்
தினமும் கோபால் 5 ஜானகி பாடலை முழுமையாக பாட வேண்டும்
தினமும் மெல்லிசை மன்னரின் பெருமைகளை புகழ வேண்டும்
ஜெய்சங்கரின் படங்கள் எல்லாவற்றையும் பார்த்தே தீர வேண்டும்
நீதிபதி தன்னுடைய தீர்ப்பை எம்ஜிஆர் தரப்பு வக்கீல்களுடன் கலந்து பேசி தன்னுடைய தீர்ப்பை வழங்குவார் ..








வாழ்க உங்கள் ஜனநாயக பண்பு. மாற்றாரையும் போற்றும் பெருந்தன்மை.எனக்காக வாதாட கிருஷ்ணாவை நியமிக்கிறேன். பழைய தீர்ப்புகளை cut paste பண்ணி ஜட்ஜை அசர வைத்து விடுவார்.
-
10th October 2014, 07:22 AM
#73
Senior Member
Diamond Hubber

Originally Posted by
Gopal,S.
வாழ்க உங்கள் ஜனநாயக பண்பு. மாற்றாரையும் போற்றும் பெருந்தன்மை.எனக்காக வாதாட கிருஷ்ணாவை நியமிக்கிறேன். பழைய தீர்ப்புகளை cut paste பண்ணி ஜட்ஜை அசர வைத்து விடுவார்.
நீங்க கட் பேஸ்ட் எழுதி எழுதி டூத் பேஸ்ட் மேலேயே வெறுப்பு வர ஆரம்பிச்சுடுத்து கோ.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
10th October 2014, 07:24 AM
#74
Senior Member
Diamond Hubber
வினோத் சார்,
தண்டனை மிக அதிகம். என் நண்பனுக்காக கொஞ்சம் குறைத்துக் கொள்ளக் (கொல்லக்) கூடாதா? 
ஜெய்சங்கர் படம் மட்டும் பார்க்க அனுமதி தரும்படி கேட்டுக் கொள்கிறேன்.
-
10th October 2014, 07:31 AM
#75
Junior Member
Newbie Hubber

Originally Posted by
vasudevan31355
வினோத் சார்,
தண்டனை மிக அதிகம். என் நண்பனுக்காக கொஞ்சம் குறைத்துக் கொள்ளக் (கொல்லக்) கூடாதா?

ஜெய்சங்கர் படம் மட்டும் பார்க்க அனுமதி தரும்படி கேட்டுக் கொள்கிறேன்.

இதுவாவது பரவாயில்லேப்பா. பட்டணத்தில் பூதம்,காலம் வெல்லும்,கங்கா,எங்க பாட்டன் சொத்து,ஜம்பு ,நூற்றுக்கு நூறுன்னு சமாளிச்சிடுவேன். தேவர் படங்களை வரிசையாக பார்க்க சொன்னால்?????!!!!!!
-
10th October 2014, 07:32 AM
#76
Senior Member
Seasoned Hubber
ankil .. Dr chakravarthy .. my fav movie .
PS had fantastic songs for Savitiri.. Neevu leka veena , padamani nannadaga .... Awesome songs . will share it here
-
10th October 2014, 07:35 AM
#77
Junior Member
Newbie Hubber

Originally Posted by
vasudevan31355
நீங்க கட் பேஸ்ட் எழுதி எழுதி டூத் பேஸ்ட் மேலேயே வெறுப்பு வர ஆரம்பிச்சுடுத்து கோ.

வேப்பங்குச்சி காரா? உன்னை தெரியாதா? நீ டூத் பேஸ்ட் விளம்பரங்களில்தான் பார்த்திருப்பாய்.உனக்கென்ன போச்சு?
-
10th October 2014, 08:37 AM
#78
Senior Member
Diamond Hubber
இன்றைய ஸ்பெஷல் (89)
இந்த மாதிரி இனிமையான பாடல்கள் கிடைக்க, பாடகர் , பாடகியர் கிடைக்க தமிழன் தவம்தான் செய்திருக்க வேண்டும்.
என்ன மாதிரி ஒரு பாடல்!
ஆயுசு முழுக்க கேட்டுக் கொண்டே இருக்கலாம்.
ஆண்களை மடக்கி அவர்களை அடக்கி, வஞ்சக வலையில் சிக்க வைக்கும் பகாவலி ராணி. ஏமாந்து விட்டில் பூச்சிகளாய் விளக்கில் விழுந்து கருகும் வீரர்கள்.
'கவறாடும் புவனம். பந்தயம் 10000 பொன். வெற்றிக்கு மணமாலை. வீழ்ச்சிக்கு சிறைச்சாலை'
பகடை ஆட்டம் ஆட சதி பின்னிய வலை அழைப்பு.
ஏமாந்து வருகிறான் போரோப்பு ராஜா. பகடையில் மன்னன் பன்னிரெண்டு கேட்க ராணி பகடை உருட்டுகிறாள். உடன் உள்ள சதிகாரன் முன்னேற்பாட்டின்படி விளக்கை அணைத்து வேறொரு பகடை பன்னிரண்டை தயார் செய்து மாற்றி வைத்து விடுகிறான். விளக்கின் ஒளி மறுபடி திட்டமிட்டபடி வந்தபின் பார்த்தால் மன்னன் கேட்ட பன்னிரண்டு. அதிர்ச்சி அவனுக்கு. வெற்றி. ராணிக்கு வஞ்சகத்தின் மூலம் வெற்றி. தோல்வி. போட்டியிட வந்த மன்னனுக்கு சதி அறியாத தோல்வி. மண்ணைக் கவ்வி விட்டான். விடுவாளா ராணி? அடிமைப்படுத்துகிறாள். கேவலப்படுத்துகிறாள். ஆண் இனத்தின் நிலைமையை அவமானப்படுத்துகிறாள்.
மேற்கண்ட சூழல் முழுதும் இந்த அற்புதமான பாட்டிலே.
போரோப்பு மன்னன் ஈ.ஆர்.சகாதேவன் (என்ன ஒரு தேஜஸ் மற்றும் அழகு) டி.ஆர் ராஜகுமாரி அழகுராணியிடம், "திமிர்த்தனம் கொள்ளாதே ....ஆடவரை ஏளனமாய் எண்ணாதே" என்று சொல்லி ஆட்டத்தைத் தொடங்குவதும், 'என்ன வேண்டும் கேள்' என்று ராஜகுமாரி கேட்க, 12 போட சகாதேவன் கேட்க, சூட்சுமக்கார தங்கவேலு தந்திரமாக விளக்கை அணைத்து வேறு 12 எண்ணிக்கையுள்ள பகடையை அங்கு மாற்றி வைத்துவிட, அதிர்ச்சித் தோல்வியில் சகாதேவன் உறைய, ஆண்களின் பரிதாப நிலையை கேலி செய்து ராஜகுமாரி பாட அற்புதமாகப் படமாக்கப்பட்ட பாடல்.
ராஜகுமாரி கொள்ளை அழகு. முகம் அருகே காட்டப்படும் போது பால் நிலவு காய்கிறது முகத்தில். பல்வரிசைகளும், கண்கள் புரியும் ஜாலமும் எந்த ஆடவரையும் பைத்தியம் பிடிக்க வைக்கத்தான் செய்யும். இந்த அழகு கொண்ட நடிகை இன்னும் இங்கு பிறக்கவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.
'வீராப்பு பேசி வந்த போரோப்பு ராஜாவை வெட்டிட சொல்லு'
என்று நிறுத்தி, ஒரு போடு போட்டு, சகாதேவனுக்கு உயிர் பீதியைக் கிளப்பி, ஒரு நொடி சகா படும் வேதனையை இன்பமாக அனுபவித்து,
'மண் வெட்டிட சொல்லு'
என்று மண்ணை வெட்டச் சொல்லி ஆணை இடுவது அமர்க்களம். (பாடலாசிரியருக்கு மனம் நிறைந்த பாராட்டுக்கள்)
பாடலைப் பாடியவர் தன் குரலால் லீலா வினோதங்கள் புரிந்த பி.லீலா. (உடன் திருச்சி லோகநாதன் என்று நினைவு) சும்மா அதம் பறக்கிறது. அதுவும் பகடை ஆட்டம் பாதிப் பாடல் முடிந்தது பாட்டின் இசையே முற்றிலும் மாறி 'மதியை இழக்கிறார்' என்று இவர் பாடும்போது அப்படியே நாம் ஜென்மம் சாபல்யம் பெற்றுவிட்டது போலத் தோன்றும். 'தலைவிதியால் காலகதியால் வந்து தனியே வாடுறார்' என்று பாடும் போது உச்சங்கள் தொடுவார். நம் உடம்பெல்லாம் புல்லரிப்பது போன்ற இனம் புரியா உணர்வு ஏற்படுவதை சொல்லி முடியாது.


ஆர்.ஆர். பிக்சர்ஸ் தயாரித்த 'குலேபகாவலி' (1955) படத்தின் இசையமைப்பாளர் விஸ்வநாதன் ராமமூர்த்தி. இயக்கம் ராமண்ணா. எம்ஜிஆர், டி.ஆர்.ராஜகுமாரி, ஜி.வரலஷ்மி, சந்திரபாபு, ராஜசுலோச்சனா, தங்கவேலு, சாய்ராம் ஆகியோர் நடித்த படம் இது.
இனி பாடலின் வரிகள்.

வில்லேந்தும் வீரரெல்லாம் வீழ்ச்சி பெற்றார் பகடையிலே
வில்லேந்தும் வீரரெல்லாம் வீழ்ச்சி பெற்றார் பகடையிலே
என்னை வெற்றி பெற முடியாது
நீர் கற்ற வித்தையும் செல்லாது
என்னை வெற்றி பெற முடியாது
நீர் கற்ற வித்தையும் செல்லாது
வில்லேந்தும் வீரரெல்லாம் வீழ்ச்சி பெற்றார் பகடையிலே
அகம்பாவத்தினாலே என்னை அலட்சியம் செய்யாதே
வீண் அகம்பாவத்தினாலே என்னை அலட்சியம் செய்யாதே
இந்த ஜகமே புகழ் யுவராஜனை மதியாமல் உளறாதே
இந்த ஜகமே புகழ் யுவராஜனை மதியாமல் உளறாதே
எந்நாளும் ஆடவரை ஏளனமாய் எண்ணாதே
எந்நாளும் ஆடவரை ஏளனமாய் எண்ணாதே
என்ன வேணும் துரையே
இஷ்டம் போலே கேள் இனியே
என்ன வேணும் துரையே
இஷ்டம் போலே கேள் இனியே
பன்னிரண்டு போட வேணும்
பலித்தாலே ஜெயம் காணும்
பன்னிரண்டு போட வேணும்
பலித்தாலே ஜெயம் காணும்
ஈராறு பன்னிரண்டு
ஏங்குதே உன் கண்ணிரண்டு
ஈராறு பன்னிரண்டு
ஏங்குதே உன் கண்ணிரண்டு
வீராப்பு பேசி வந்த போரோப்பு ராஜாவை
வெட்டிட சொல்லு
மண் வெட்டிட சொல்லு
சூராதி சூரன் என்று சோம்பேறியாய்த் திரிந்தார்
கட்டிடச் சொல்லு
மரத்தில் கட்டிடச் சொல்லு
வீராப்பு பேசி வந்த போரோப்பு ராஜாவை
வெட்டிட சொல்லு
மண் வெட்டிட சொல்லு
மதியை இழக்கிறார்
மனப்பால் குடிக்கிறார்
தலைவிதியால் காலகதியால்
வந்து தனியே வாடுறார்
மதியை இழக்கிறார்
மனப்பால் குடிக்கிறார்
தலைவிதியால் காலகதியால்
வந்து தனியே வாடுறார்
நிதியோடு வாழும் செல்வந்தர் யாரும்
சதியால் பாவம் ஆகிறார்
நினைவே வாழ்வில் கனவானதாலே
நிலையே மாறி ஏங்குறார்
மதியை இழக்கிறார்
மனப்பால் குடிக்கிறார்
தலைவிதியால் காலகதியால்
வந்து தனியே வாடுறார்
நிதியோடு வாழும் செல்வந்தர் யாரும்
சதியால் பாவம் ஆகிறார்
நினைவே வாழ்வில் கனவானதாலே
நிலையே மாறி ஏங்குறார்
விதியால் காலகதியால்
வந்து தனியே வாடுறார்
Last edited by vasudevan31355; 10th October 2014 at 07:10 PM.
நடிகர் திலகமே தெய்வம்
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
10th October 2014, 08:41 AM
#79
Senior Member
Seasoned Hubber
குலேபகாவலி ஆஹா இன்று பார்த்தாலும் சலிக்காமல் விறுவிறுப்பாக போகும் படம்
பாடல் அற்புதம்..
-
10th October 2014, 08:50 AM
#80
Junior Member
Platinum Hubber
வாசு சார்
59 ஆண்டுகள் நிறைவு பெற்ற மக்கள் திலகத்தின் ''குலேபகாவலி '' படத்தில் இடம் பெற்ற பாடல்
காட்சியை விவரித்து விதம் மிகவும் அருமை .படத்தை பார்த்த உணர்வு ஏற்பட்டது .நன்றி .
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
Bookmarks