-
16th October 2014, 08:05 AM
#11
Senior Member
Senior Hubber
தேனிசை தென்றலின் முத்துக்கள் - 3
மதுரை வானொலி இந்த பாடலை ஒலிபரப்பாத நாளில்லை. 90’களில் தேவா வளர்ந்து கொண்டிருந்த நிலையில் ஒரு படத்தின் எல்லா பாடல்களும் முனுமுனுக்கும் படி அமைந்தது இந்த படத்தில் எனலாம்
1991’ல் வெளி வந்த வாசலில் ஒரு வெண்ணிலா.
மலையாள/தமிழ் நடிகர் திரு வி.எம்.சி.ஹனீபா இயக்கிய இந்த படத்தில் நிழல்கள் ரவி, அமலா மற்றும் பேபி ஷாம்லி நடித்திருந்தனர்.
தேவாவின் இசையில் ஷாம்லிக்கு ஜானகி பாடிய ராஜா மகள் இந்த சின்ன ராணி பாடல் மிகவும் பிரபலம்
அதே போல் இருவருக்கும் ஜோடிப்பாடலாக மாலையிலே தெற்கு மூலையிலே பாடலும் இனிமை
ஆனால் என் மனதை கவர்ந்தது (மதுரை என்ற காரணத்தினாலே என்னவோ ) திரு யேசுதாஸ் அவர்கள் ஹனீபாவிற்காக பாடும்
என் ஊரு மதுர பக்கம் என் பாட்டு மனசில் நிக்கும் நான் பாடும் நேரம் ராப்போதுதான்
வாலி ஐயாவின் வரிகளில் இந்த பாடல் நம்மை என்னவோ செய்யும்... இந்த பாடல் இன்றும் என் நினைவில் உள்ளதற்கு காரணம் மதுரை வானொலி நிலையம் ..
என்னை போல் நீங்களும் கேட்டு ரசியுங்கள்
என் ஊரு மதுர பக்கம்
என் பாட்டு மனசில் நிக்கும்
நான் பாடும் நேரம் ராப்போது தான்
நீர் தூங்கும் நிலமும் தூங்கும்
ஆகாய நிலவும் தூங்கும்
நான் தூங்கமாட்டேன் ராக்கோழிதான்
என்னோடு நூலும் இல்ல
பின்னோடு வாலும் இல்ல
என்னோடு நூலும் இல்ல
பின்னோடு வாலும் இல்ல
காத்தோடு போகும் காத்தாடி நான்
என் ஊரு மதுர பக்கம்
என் பாட்டு மனசில் நிக்கும்
நான் பாடும் நேரம் ராப்போது தான்
யாராரோ ஆசைப்பட்டா
சேத்துவைக்கும் அன்னக்கிளியே
உன் வாழ்க்கை என்ன ஆச்சு நான் கேக்குறேன்
ஊரார ஏத்தி விட்டு ஏணி நிக்கும் தன்னந்தனியே
அதைப்போல உன்னத்தானே நான் பார்க்குறேன்
விதியோடு மோது அடி தங்கச்சி
குடிகாரன் அண்ணன் இவன் உன் கட்சி
பாட்டால சோகம் தீரும் அதனால பாடுறேன்
என் ஊரு மதுர பக்கம்
என் பாட்டு மனசில் நிக்கும்
நான் பாடும் நேரம் ராப்போது தான்
எல்லோர்க்கும் வாழ்க்கை இங்கே
எண்ணம் போல வாய்க்காதம்மா
வாய்க்காட்டி விட்டுத்தள்ளு
ஏன் ஏங்கணும்
வந்தாலே வரவில் வைப்போம்
விட்டுப்போனா செலவில் வைப்போம்
வேண்டாத பாரம் எல்லாம்
ஏன் தாங்கணும்
பூ பூத்ததெல்லாம் காயாகுதா
காயானதெல்லாம் கனியாகுதா
இதுக்காக வாடலாமா
அதனால பாடுறேன்
என் ஊரு மதுர பக்கம்
என் பாட்டு மனசில் நிக்கும்
நான் பாடும் நேரம் ராப்போது தான்
நீர் தூங்கும் நிலமும் தூங்கும்
ஆகாய நிலவும் தூங்கும்
நான் தூங்கமாட்டேன் ராக்கோழிதான்
என்னோடு நூலும் இல்ல
பின்னோடு வாலும் இல்ல
என்னோடு நூலும் இல்ல
பின்னோடு வாலும் இல்ல
காத்தோடு போகும் காத்தாடி நான்
என் ஊரு மதுர பக்கம்
என் பாட்டு மனசில் நிக்கும்
நான் பாடும் நேரம் ராப்போது தான்
நீர் தூங்கும் நிலமும் தூங்கும்
ஆகாய நிலவும் தூங்கும்
நான் தூங்கமாட்டேன் ராக்கோழிதான்
தொடரும்.
-
Post Thanks / Like - 0 Thanks, 5 Likes
-
16th October 2014 08:05 AM
# ADS
Circuit advertisement
Bookmarks