Page 96 of 397 FirstFirst ... 46869495969798106146196 ... LastLast
Results 951 to 960 of 3964

Thread: மனதை கவரும் மதுர கானங்கள்: பாகம் -3

  1. #951
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    பொங்கும் பூம்புனல்

    ராமராஜன் இயக்கத்தில் கங்கை அமரன் இசையில் எஸ்.பி.ஷைலஜா குரலில் கே.எஸ்.செல்வராஜின் ஆர்வோ கலர் பரவசமூட்டும் ஒளிப்பதிவில் முதன்முறை பார்க்கும் போதே ஈர்த்த பாடல் அல்லிப்பூக்களே..

    மண்ணுக்கேத்த பொண்ணு ஒளிப்பதிவிற்காக மிகவும் பிரபலமானது..

    பாடல் கேட்க மட்டும் அல்ல பார்ப்பதற்கும் பரவசமாக இருக்கும்..

    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  2. Likes Russellmai liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  4. #952
    Senior Member Senior Hubber
    Join Date
    Jul 2010
    Location
    chennai
    Posts
    214
    Post Thanks / Like
    Vasu Sir,

    Your "Raja Yuva Raja" song analysis was terrific. For every die-hard fan of NT, Deepam is a very very special film (everyone knows about it!). Saw it in Chingleput - Tirumalai or Angamuthu (not sure which one).

    Great going indeed!

    Regards,

    R. Parthasarathy

  5. #953
    Senior Member Seasoned Hubber rajeshkrv's Avatar
    Join Date
    Nov 2004
    Posts
    1,028
    Post Thanks / Like
    Quote Originally Posted by vasudevan31355 View Post
    'தீபம்' பாடலை ரசித்து தத்தம் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்ட முரளி சார், (நடை ரசிப்பு அழகு) கிருஷ்ணா சார், (சுவையான திரையரங்கு அனுபவங்கள்) கோபால் சார், (குறு ஆய்வு, மீண்டும் வருவேன் அருமை கோ) சின்னக் கண்ணன் சார், (நடிகர் திலகம் ஸ்டைலைத் தொட்டிருக்கலாம்) லைக்குகளை கிளிக் செய்த அன்பு நண்பர்கள் கல்நாயக் சார், கோபு சார் மற்ற அனைவருக்கும் நன்றி! பாடல்களை இன்னும் எதிர்பார்த்த ராஜேஷ்ஜிக்கும் நன்றி!
    ஆம் எனக்கு இந்த பாடல்கள் சுமார் ரகம் தான். சிவாஜி படங்களில் இளையராஜாவின் இசை சுமார் தான். முதல் மரியாதை மட்டும் விதி விலக்கு

  6. #954
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    *оссия
    Posts
    0
    Post Thanks / Like
    DANCER E.V. SAROJA NINAIVU NAL INDRU


  7. Likes Russellmai liked this post
  8. #955
    Member Senior Hubber
    Join Date
    Jan 2008
    Location
    Saudi Arabia
    Posts
    32
    Post Thanks / Like
    Quote Originally Posted by parthasarathy View Post
    Vasu Sir,

    Your "Raja Yuva Raja" song analysis was terrific. For every die-hard fan of NT, Deepam is a very very special film (everyone knows about it!).
    What special film?.

    It came just 12 days after Avan oru Sarithiram and spoiled the run of AOS. Otherwise definitely AOS would run more than 100 days and would be 1st 100 day movie of that year.

    Fortunately Deepam got 135 days gap, till Ilaiya Thalaimurai come. Otherwise this would also been affected.

    Songs of AOS ae not less in level comparing to deepam.

    Surprise to see Ragavendar also changing his color.

  9. #956
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    'இளையராஜா என்றும் இனிய ராஜா' (தொடர் 13)



    'காயத்ரி'



    இளையராஜாவின் தொடரில் அடுத்து நாம் பார்க்கப் போவது 'காயத்ரி'. 1977-ல் வெளிவந்த கருப்பு வெள்ளைப் படம். S.பாஸ்கர் அளிக்கும் விஜயா மீனா கம்பைன்ஸ் தயாரிப்பு. 'மூன்று முடிச்சு' வில்லன் இமேஜ் ரஜனிக்குத் தொடர்ந்தது. ஜெய்சங்கர் பெயருக்குத்தான் ஹீரோ. ரஜினி,ஸ்ரீதேவியே படத்தை முழுக்க ஆக்கிரமிப்பு செய்தனர். எரிச்சலைக் கிளப்பும் கோணங்கி சேட்டைகளுடன் அசோகன் மற்றும் ராஜசுலோச்சனா. குமாரி ராஜியின் ('நான் வாழ வைப்பேன்' நடிகர் திலகத்தின் தங்கை) அளவு மீறிய கவர்ச்சி. இடைவேளைக்குப் பிறகு பொருந்தாத கணேஷ் பாத்திரத்தில் ஜெய் கதாநாயகன் என்ற பெயரில் சும்மா ஒப்புக்கு.

    கதை சுஜாதா. தினமணி கதிரில் வெளியானது. கல்யாணம் செய்து கொண்டு சொந்த மனைவியையே படுக்கை அறையில் அவளுக்குத் தெரியாமல் படம் பிடித்து அதை வியாபாரமாக்கும் அயோக்கியக் கணவனும் அது தெரியாமல் அப்பாவியாய் அவனிடம் மாட்டித் தவிக்கும் இளம் மனைவியும் என்று படு திகிலாக இந்தக் கதையை சுவாரஸ்யத்துடன் எழுதியிருந்தார் சுஜாதா. சுஜாதாவின் அருமையான தொடர் படமாக வந்து நம்மை கொஞ்சம் இல்லை நிறையவே ஏமாற்றியது. ஆனால் இளையராஜா என்ற அசுரன் அத்தனையையும் மறக்கச் செய்து மறக்க முடியாத இரு பாடல்களைத் தந்தார்.

    சுசீலாம்மா, ஜானகி, சசிரேகா, சுஜாதா, ராகவன் பின்னணிப் பாடல்கள் பாடியிருப்பார்கள். சண்டைப் பயிற்சி 'ருத்ரநாகம்' ஜூடோ கே.கே.ரத்தினம் என்று போடுவார்கள். திரைக்கதை வசனம் பாடல்களை பஞ்சு அருணாசலம் எழுத, ஒளிப்பதிவை விநாயகம் கவனிக்க ஆர். பட்டாபிராமன் இயக்கியிருந்தார்.


    தமிழகமெங்கும் அதிகாலையில் வானொலிகளில் ஒலித்த,

    காலைப் பனியில் ஆடும் மலர்கள்
    காதல் நினைவில் வாடும் இதழ்கள்
    காயம் பட்ட மாயம்
    கன்னி எந்தன் யோகம்

    சுஜாதாவின் குரலில் சூப்பர் ஹிட் பாடல். மூக்கு பெரிதான பழைய சிறிய ஸ்ரீதேவி. ராஜா தன் தனித்தன்மையுடன் இப்பாடலை அசத்தியிருந்தார்.


    தன்னைச் சுற்றி இருக்கும் நயவஞ்சகர்களைப் புரிந்துகொண்டு, தெரிந்து கொண்டு, நடுநடுங்கி, அவர்கள் பின்னிய சதிவலையில் இருந்து மீள முடியாமல் தவியாய்த் தவித்து, அதிர்ச்சியில் உறைந்த ஸ்ரீதேவி பி.எஸ். சசிரேகா குரலில் பாடிய பட்டி,தொட்டியெங்கும் கிலி ஏற்படுத்திய பாடல்.



    வாழ்வே மாயமா?
    பெருங்கதையா ?
    கடும் புயலா?
    வெறுங் கனவா நிஜமா?

    இந்தப் பாடலும் ஒலிக்காத இடங்களே இல்லை எனலாம். யாராவது சோகத்தில் ஆழ்ந்திருந்தால் அவர்களைக் கிண்டல் செய்ய இப்பாடல் மிகவும் இன்றளவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

    இந்த இரண்டு ஹிட் பாடல்களும் இரண்டு பின்னணிப் பாடகிகளின் தனித்தனி சோலோ பாடல்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    இவையிரண்டும் சூப்பர் ஹிட் ராகம் என்பதால் இவற்றை விட்டு விடுவோம்.


    இதுவல்லாமல் இன்னும் இரண்டு பாடல்கள்.

    ஒன்று.

    கணவன் ரஜினி, ராஜசுலோச்சனா, அசோகன், ராஜி ஆளாளுக்குப் போட்டி போட்டுக் குடிக்க, அதைப் பார்த்து அதிர்ச்சியடையும் ஸ்ரீதேவியைக் கிண்டல் பண்ணி ராஜி போடும் குத்துப் பாடல். சுசீலா அம்மா பாடியது.

    'பத்ரகாளி' யில் 'வாங்கோன்னா' பாடலுக்குப் பிறகு பாஸ்ட் பீட்டில் சுசீலாவை ராஜா பாட வைத்திருப்பார். ராஜியின் லோ-கிளாஸ் ஆட்டம். ஸ்ரீதேவியின் எரிச்சல்,மிரளல், ரஜினியின் கிண்டல், அசோகனின் அநியாயம் என்று பாடல் போகும். சுசீலா அம்மா நன்றாகப் பாடியிருந்தாலும், இப்பாடலைப் பாடியிருக்க வேண்டாமோ என்று தோன்றும்.

    'ஹேய் ஹேய்! ஆட்டம் கொண்டாட்டம்
    வாழ்வில் எந்நாளும் ஆனந்தம் சேரட்டுமே'

    சுமாரான ஒரு பாடலே.




    அடுத்து காபரே பாடல் ஒன்று. ஜானகி, A.L ராகவன் இருவர் குரல்களில். இப்போது தொலைக்காட்சி சீரியல்களில் அம்மாவாக அழுது வடியும் ராஜேஸ்வரி என்ற நீள்முகம் கொண்ட நடன நடிகை ரஜினியிடம் ஆடிப் பாடும் பாடல். ஜெய்சங்கர் நீக்ரோ வேடத்தில் கிடாருடன். செல்லப்பாவாக ஆக பெண்வேடத்தில் மூர்த்தி.

    உன்னைத்தான் அழைக்கிறேன்
    அருகில் வா
    ஆனந்த ரகசியம் சொல்லவோ
    காதல் கொண்டேன் i love you
    ok என்றால் you love me

    இடையிசை மிரட்டுமே தவிர பாடலில் ரசிக்க ஒன்றுமில்லை. ஆனால் டைட்டில் இசையில் ராஜா விளாசி விடுவார்.




    மொத்தத்தில் 'காயத்ரி' மந்திரத்தைவிட இளையராஜா பெயரை அதிகம் உச்சரிக்க வைத்த படம்.
    Last edited by vasudevan31355; 3rd November 2014 at 11:16 AM.
    நடிகர் திலகமே தெய்வம்

  10. Likes Russellmai liked this post
  11. #957
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like
    Quote Originally Posted by vasudevan31355 View Post
    'இளையராஜா என்றும் இனிய ராஜா' (தொடர் 13)

    'காயத்ரி'

    இடையிசை மிரட்டுமே தவிர பாடலில் ரசிக்க ஒன்றுமில்லை. ஆனால் டைட்டில் இசையில் ராஜா விளாசி விடுவார்.[/COLOR][/SIZE][/B]

    மொத்தத்தில் எல்லோரையும் விட இளையராஜா பெயரை அதிகம் உச்சரிக்க வைத்த படம்.
    வாசு

    காயத்ரி இதே மாதிரி 1977 கால கட்டத்தில் மழை நாட்களில் பார்த்த படம் .சுஜாதாவின் கணேஷ் ஜெய்சங்கர் வசந்த் மூர்த்தி . ஒரிஜினல் கதையில் காயத்ரி செத்து போற செண்டிமெண்ட் கிடையாது. திரை படத்தில் செத்து போற செண்டிமெண்ட். ராஜசுலோச்சனா முண்டு ஒன்று கட்டி கொண்டு குளிக்கற ஸ்டில் ஒன்று அந்நாளைய குமுதம் வார இதழில் famous .'மீண்டும் ராஜ சுலோச்சனா மார்கெட் பிடிக்க முயர்த்சிக்கிறாரா ?' என்ற கமெண்ட் உடன். நடிகர் திலகம் பாராட்டிய ஒரு பண் பட்ட நடிகை 70,80 களில் கவர்ச்சி கலந்த வில்லி கதாபாத்திரத்தில் ஏகப்பட்ட படங்கள் . 'வாழ்வே மாயமா' பாடல் கூட பழைய பாடல் ஒன்றை கூறி (யார் நீ என்று நினைவு) அந்த பாடலின் தழுவலா என்று நிருபர் ஒருவர் இளையராஜாவிடம் கேட்டதற்கு நீங்கள் சொன்ன அந்த பாடலை நான் கேட்டதே கிடையாது என்று இளையராஜா அவர்கள் பதில் அளித்த ஞாபகம் .இந்த படத்திற்கு பிறகு ரஜினி ஹீரோ ஆக ஹீரோ ஜெய் வில்லன் ஆக கோடம்பாக்க கால தேவனின் விளையாட்டு

    சுஜாதாவின் கதைகள் எத்தனை படங்களில் வீணடிக்க பட்டன
    அனிதா இளம் மனைவி (இது எப்படி இருக்கு),ப்ரியா (வணிக ரீதியில் வெற்றி மேலும் இளையராஜா ஆரம்பித்து வைத்த முதல் ஸ்டீரியோ போனிக் இசை கோர்வை ),கரை எல்லாம் செண்பக பூ(அருமையான நாட்டுபுற பாடல்கள் ),நினைத்தாலே இனிக்கும் (மெல்லிசை மன்னரால் தப்பித்த படம்), விக்ரம்,பிரிவோம் சிந்திப்போம் (ஆனந்த தாண்டவம்),நாடோடி தென்றல் (ரத்தம் ஒரே நிறம் தழுவல்) கனவு தொழிற் சாலை படமாக எடுத்த நினைவு இல்லை .

    பின்னாட்களில் மணிரத்னம் உடன் இணைந்து ரோஜா,திருடா திருடா,கன்னத்தில் முத்தமிட்டால் சங்கர் இந்தியன் முதல் இந்திரன் வரை பல படங்கள்.

    thanks vaasu
    Last edited by gkrishna; 3rd November 2014 at 11:23 AM.
    gkrishna

  12. Likes Russellmai liked this post
  13. #958
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    அவன் ஒரு சரித்திரம் 14.1.1977
    தீபம் 26.1.1977
    இளைய தலைமுறை 28.5.1977
    Last edited by vasudevan31355; 3rd November 2014 at 11:28 AM.
    நடிகர் திலகமே தெய்வம்

  14. #959
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    ஹாய் குட்மார்னிங்க் ஆல்ல்


    தீபம் பற்றி நிறையச் சொல்லலாம் வாசு சார்..அப்புறமா ச் சொல்றேன்..இப்போ காயு..

    காயு எனப் பிற்காலங்களில் அழைக்கப் பட்ட காயத்ரி படம்.. கொஞ்சம் வித்தியாசமான கதை.க்ருஷ்ணாஜி சொல்லியிருப்பது போல் க்ளைமாக்ஸில் காய்த்ரியைச் சாகடித்திருப்பார்கள் அனாவசியமாக..

    ரஜினி அந்த வில்லக் கணவன் பார்வை, அராஜகம் அனைத்தையும் கண்களிலேயே கொண்டு வந்திருப்பார்..அசோகன் ரா.சு, அம்முக்குட்டி எல்லாம் பொருத்தமாய்த் தானிருந்தது..பட் அந்தக் காலத்தில் கொஞ்சம் அதிர்ச்சி அலையை ஏற்படுத்திய படம்..

    அப்புறம் நீங்கள் இட்ட இருபாடல்கள் சுத்தமாய் நினைவிலில்லை.. கேட்டுப் பார்க்கிறேன்.. தாங்க்ஸ் டு தட்..

    பொன் மானே பாட்டும் தேடணும்.. நேற்று முடியவில்லை..இப்ப என்ன..யாரோ அடுத்த போஸ்ட்ல பாட வந்து பாடமுடியாம இருக்காங்க போலிருக்கே..!

  15. #960
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    பாரதி ராஜாவின் உதவியாளராய் இருந்து டைரக்டராய் மாறிய மணிவண்ணன் முதல் படம்..வித்யாசமாய் எடுக்கத் தெரிந்தவர் தான்..(அப்படி அவர் எடுத்த ஒரு படத்தைப் பற்றி க்ருஷ்ணாஜி எழுதுவார்..கடைசியில் கேட்பேன்!) கமர்ஷியல் சினிமாவில் காம்ப்ரமைஸ் செய்து பின் நடிக்க வந்து சம்பாதித்து 59ல் இறந்தவர்..

    இளமைக்காலங்களில் பாடல் எல்லாம் நல்லவை.. ராகவனே ரமணா ரகு நாதா, இசை மேடையில் இந்த வேளையில், ஈரமான ரோஜாவே (அழகான பாடல் வொர்ஸ்ட் விஷூவல்)..

    இருந்தாலும் எப்போது கேட்டாலும் மயக்கி விரைவாயும் முடியும் பாடல் இது

    கதானாயகிகள் டூபீஸில் வரவேண்டும் என்ற எழுதப் படாத சட்டத்தின் கீழ் புதுஹீரோயின் சசிகலா..

    பாட வந்ததோர் கானம் பாவை கண்ணிலோ நாணம்
    கள்ளூறும் பொன் வேளை தள்ளாடும் பெண் மாலை
    இளமை வயலில் அமுத மழை விழ

    ராஜமாலை தோள்சேரும் நாணமென்னும் தேனூறும்
    கண்ணில் குளிர்காலம் நெஞ்சில் வெயில்காலம்
    பூவே...பூவைக்கு ஏனிந்த வாசம்
    பண் பாடி கண் மூடி உனது மடியில் உறங்கும் ஓரு கிளி

    மூடிவைத்த பூந்தோப்பு காலம் யாவும் நீ காப்பு (வைரமுத்து?)
    இதயம் உறங்காது இமைகள் இறங்காது
    தேனே...கங்கைக்கு ஏனிந்த தாகம்
    உல்லாசம் உள்ளூறும் நதிகள் விரைந்தால் கடலும் வழிவிடும்

    **

    ஜேசுதாஸீம் பி.சுசிலாவும்வெகு அழகாக ப் பாடி யிருப்பார்கள்

    *


    *

    மணிவண்ணன் படங்களில் ஓசைப்படாமல் வந்து போன படம் மூன்றாவது கண்.. மோனிஷா ராஜா அண்ட் சரத் குமார் நல்ல த்ரில்லர் அண்ட் வித்யாசமான சரத் குமார்.. க்ருஷ்ணா ஜி இதைப் பற்றித் தெரியுமா..

  16. Likes kalnayak, Russellmai liked this post

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •