-
8th December 2014, 08:21 PM
#2001
Junior Member
Seasoned Hubber
வாசு - போலீஸ் இலாக்காவில் எப்பொழுது சேர்ந்தீர்கள் ?
-
8th December 2014 08:21 PM
# ADS
Circuit advertisement
-
8th December 2014, 08:41 PM
#2002
Junior Member
Seasoned Hubber
அன்பு நண்பர் ரவி அவர்களுக்கு,
நீங்கள் எப்பொழுது மேடை பாடகர் ஆனேர்களோ அப்போழுதே வாசு அவர்கள் போலீஸ் வேலையில் சேர்ந்து விட்டார்.
Regards
-
8th December 2014, 08:42 PM
#2003
Junior Member
Diamond Hubber
ilayaraja one of the melodious song movie karakattakaran
குடகு மலை காற்றில் வரும் பாட்டு கேக்குதா என் பைங்கிளி
எதோ நினவுதான் உன்னை சுத்தி பறக்குது
என்னோட மனது தான் கண்ட படி தவிக்க்து
ஒத்த வழி என் வழி தானே மானே
(குடகு மலை..)
மானே மயிலே மரகத குயிலே
தேனே நான் பாடும் தென்மாங்கே
பூவே பொழுதே பொங்கி வரும் அமுதே
காதில் கேட்டாயோ என் வாக்கே
உன்னை எண்ணி நான் தான் ஒரு ஊர்கோலம் போனேன்
தன்னந் தனியாக நிற்க்கும் தேர் போல ஆனேன்
பூ புத்த சோலையிலே பொன்னான மாலையிலே
நீ வந்த வேளையிலே மயிலே
நீர் பூத்த கண்ணு ரெண்டு
நீங்காத ராகம் கொண்டு பாட்டு பாடுது
(குடகு மலை..)
மறந்தால் தானே நினைக்கனும் மாமா
நின்னைவே நீ தானே நீ தானே
மனசும் மனசும் இணைந்தது மாமா
நினச்சு தவிச்சேனே நான் தானே
சொல்லி விட்ட பாட்டு தெற்கு காற்றோடு கேட்டேன்
தூது விட்ட ராசா மனம் தடுமாற மாட்டேன்
ஊரென்ன சொன்னால் என்ன
ஒன்னாக நின்னா என்ன
உம் பேரை பாடி நிப்பேன் மாமா
தூங்காம உன்னை ந்ண்ணி துடிச்சாலே இந்த கன்னி மாமா
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
8th December 2014, 08:50 PM
#2004
Senior Member
Diamond Hubber

Originally Posted by
g94127302
வாசு - போலீஸ் இலாக்காவில் எப்பொழுது சேர்ந்தீர்கள் ?
இதய தெய்வத்தை மட்டுமே போலீஸ் அதிகாரியாய் ஏற்றுக் கொள்ள முடியும் ரவி சார்.
-
8th December 2014, 08:56 PM
#2005
Junior Member
Seasoned Hubber
இந்த பாடலை கேட்டால் உறக்கம் தானாகவே
வரும் ஒரு இனிமையான பாடல். தனது குரலில் தேன்வளம் உள்ள யேசுதாஸ் பாடிய அற்புத பாடல். என்றும் எப்போதும் கேட்க தோன்றும் நல்ல பாடல்.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
8th December 2014, 09:20 PM
#2006
Senior Member
Diamond Hubber
பாடல் இரண்டு
பாணி ஒன்று
புதிய தொடர் 1
ஆமாம். ஒரே பாணியில் இரண்டு பாடல்களைத் தந்தால் என்ன என்று ஒரு எண்ண ஓட்டம் தோன்றி மறைந்ததன் விளைவே இந்தத் தொடர்.
முதலில் இரண்டு திலகங்களில் இருந்து ஆரம்பிப்போம்.
நடிப்பின் நாயகரும், புரட்சி நாயகரும் குழந்தைகளுடன் குதூகலித்து பல பாடல்கள் பாடியுள்ளார்கள். அவை மிக பிரபலமான பாடல்களாய் இன்றும் எங்கும் ஒலிக்கின்றன.
உலகே வியந்து பார்த்த இரு மாபெரும் நட்சத்திரங்கள் இமேஜ் பார்க்காமல் குழந்தைகளோடு இணைந்து தந்த காவியப் பாடல்கள்.
நடிப்பின் வேந்தர் குழந்தைகளின் செல்ல 'எங்க மாமா'வாக மழலைகளோடு மழலையாய் ஜீப்பில் உலா வரும் அழகு, பொருட்காட்சியில் குழந்தைகள் ரயிலில் அவர்களோடு பயணம் செய்து களிக்கும் அழகு. நல்ல புத்திமதிகளை நளினமாகத் தெரிவிக்கும் நயம். ரயிலுடனேயே ஆடியபடி ஓடி வரும் அற்புதமான ஸ்டைல். ராட்டினத்தில் அமர்ந்து சின்னப் பிள்ளையாய் சிங்கார சிரிப்பை கள்ளமில்லாமல் உதிர்த்து குதூகலிக்கும் உற்சாகம் பிள்ளைகள் யார் மாமா யார் என்று தெரியாத அளவுக்கு அழகு கொட்டிக் கிடக்கும் இளமை அழகன். என்றுமே நடிப்பில் 'தன்னந்தனிக் காட்டு ராஜா'. அவர் தோட்டத்தில் ரசிகர்களாகிய நாங்கள் ரோஜாதானே!
இதோ உலகம் சுற்றும் இந்த நாயகரை பாருங்கள். 'சிக்கு மங்கு சிக்கு மங்கு சச்ச பாப்பா' என வெளிநாட்டுக் குழந்தைகளுடன் கள்ளமில்லாமல் இவரும் சிரித்து மகிழ்ந்து ஆடிப் பாடி நல்லதைக் கற்றுக் கொடுக்கும் பாங்கு. அந்தக் குழந்தைகள்தான் எத்தனை அழகு! மல்லிகைப் பூவைச் சிதற விட்டது போல் முல்லைப் பறக்ளைக் காட்டி சிரிப்பைச் சிந்தும் முத்து முத்தான, சத்து சத்தான குழந்தைகள். 'சிரித்து வாழ வேண்டும்... பிறர் சிரிக்க வாழ்ந்திடாதே' என்ற தன்மான அறிவுரையை பிஞ்சு மனங்களில் விதைத்து இந்த நாயகரும் அவர் கடமையை செவ்வனே செய்து காலத்தால் அழியாத கருத்துள்ள இப்பாடலைத் தந்தாரே!
இந்த இரு திலகங்கள் இடத்தில் வைத்துப் பார்க்க வேறு நடிகப் பிறவிகள் என்று எவரும் அகிலத்தில் உண்டோ!
Last edited by vasudevan31355; 9th December 2014 at 07:57 AM.
நடிகர் திலகமே தெய்வம்
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
8th December 2014, 10:19 PM
#2007
Junior Member
Seasoned Hubber
வாசு - ஆரம்பம் அருமை . உண்மையில் இருதிலகங்களும் படங்கள் மூலமாகவும் , பாடல்கள் மூலமாகவும் , நடிப்பின் மூலமாகவும் வழங்கிய நல்ல கருத்துக்கள் ஏராளம் - இவைகளை மட்டுமே ஆராயிந்தால் இவர்கள் இருவரின் ஒருமை பண்பாடு , ஆரோக்கியமான நட்பு , மக்களை மதித்த விதம் , ரசிகர்களிடம் இவர்களுக்கு இருந்த ஈடுபாடு எல்லாமே தெளிவாக தெரிய வரும் - நாம் தான் இந்த ஒற்றுமையை புரிந்துக்கொள்ளாமல் மனஸ்தாபத்தை அதிகமாக வளர்த்துக்கொள்கின்றோமோ என்று சில சமயம் தோன்றுகின்றது
இதோ குழந்தைகளை அரவணைக்கும் பாடல் இரண்டு - பாணி ஒன்று
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
8th December 2014, 10:37 PM
#2008
Junior Member
Seasoned Hubber
ஒற்றுமையை இருவரும் எவ்வளவு அழகாக எடுத்து சொல்லியுள்ளார்கள் பாருங்கள் - சுதந்திர வேட்க்கை போல இப்பொழுது நமக்கு தேவை ஒற்றுமை வேட்க்கை - ஒருமித்த எண்ணங்கள் - எல்லோருமே சமம் என என்னும் பண்பு - பாடல் இரண்டு - பாணி ஒன்று
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
8th December 2014, 10:40 PM
#2009
Junior Member
Seasoned Hubber
தாயின் அன்பை இவர்கள் சொன்னது போல இதுவரை நெஞ்சை தொடும் படியாக எவருமே சொன்னதில்லை - பாடல் இரண்டு - பாணி ஒன்று
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
8th December 2014, 10:43 PM
#2010
Junior Member
Seasoned Hubber
வாசு
இன்னும் இருவரை பற்றியும் எவ்வளவோ சொல்லலாம் - உங்களுடைய சீறுகின்ற நடை என்னால் தடை பெறவேண்டாம் என்று எண்ணி , சற்றே தாமதமாக பதிவுகளை இடுகிறேன்
Bookmarks