- 
	
			
				
					10th December 2014, 09:41 AM
				
			
			
				
					#3231
				
				
				
			
	 
		
			
			
				Junior Member
			
			
				Newbie Hubber
			
			
			
			 
			
				
 
 
			
				
				
						
							
							
						
						
				
					
						
							நீல வானம்(10/12/1965)
 
  
 
 
 
 இன்று 49 வருடங்களை கடந்து 50 வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் நீலவானம் படம், தனிப்பட்ட முறையில் பல சிவாஜி ரசிகர்களின் பிடித்த வரிசையில் இருந்தாலும் சுமாரான வெற்றியையே  ஈட்டிய படம். (இந்த மாதிரி வரிசையில் ராஜாராணி,புதையல்,அன்னையின் ஆணை ,செல்வம்,பேசும் தெய்வம்,தேனும் பாலும்,துணை போன்ற படங்களை சேர்க்கலாம்).
 
 
 
 இந்த படத்தின் சிறப்புக்கள், கே.பாலசந்தர் -சிவாஜி இணைவு.எம்.எஸ்.வீ இசையமைப்பில் தனி பெயரில் வந்த முதல் சிவாஜி படம்,ராஜஸ்ரீ ஜோடியாக நடித்த முதல் படம்,தேவிகா சிவாஜி இணையாக நடித்த 60களின் கடைசி படம் (70களில் சத்யம்)சாந்தி theatre முக்கிய இடம் பெறும் காட்சிகள் என்று பல.
 
 
 
 எனக்கு மிக பிடித்த படங்களின் வரிசையில் ஒன்று. தேவிகா ,கிட்டத்தட்ட கை கொடுத்த தெய்வம் சாவித்திரிக்கு இணையான பாத்திரம். சிவாஜி ,இந்த கதாநாயகி முக்கியத்துவம் கொண்ட கதையில் நடித்தும் ,தனித்து நிற்பார்.தேவிகா ,ராஜஸ்ரீ,சகஸ்ரநாமம் என்று அனைவருமே நன்கு பரிமளிப்பார்கள்.
 
 
 
 கிட்டத்தட்ட இரண்டு இணை கோடுகள் கொண்டு நகரும் கதை. சிவாஜியின் வறுமை ,ராஜஸ்ரீ காதல்,காதல் தியாகம்,அது சார்ந்த வெறுப்பு,பழியுணர்வு எதிர்பாரா முடிவு ஒரு track . அப்பாவி தேவிகாவின் கான்சர் , சிவாஜியின் தியாக திருமணம், தேவிகாவிடம் வியாதி சார்ந்த ,தன வாழ்க்கை சார்ந்த விவரணை மறைப்பு, அது வெளியாக நேரும் தருணங்கள், எதிர்பார்த்த முடிவு என்று இன்னொரு track .இரண்டும் இணையும் சமாதானிக்கும்.
 
 முதலில் காதல், நகைச் சுவை என்று பயணிக்கும் கதை, பிறகு தியாகம்,அன்னியோன்யம்,சோகம்,பழி சார்ந்த பரபரப்பு,தேவிகாவிடம் உண்மை வெளியாகாமல் தொடர்ந்த பொய்கள் என்று அல்லல்.
 
 ஒரு நகைச் சுவை (வீ.கே.ஆர்-நாகேஷ்-ISR )track உடன் செல்லும்.
 
 பாலசந்தர் திரைகதை-வசனம் படு இயல்பான புத்திசாலித்தனம் கொண்டது. மாதவன் கூட பாலசந்தர் முகம் வழியாகவே இயக்குனராக அவ்வப்போது வெளிப் படுவார்.
 
 
 
 எனக்கு மிக பிடித்த இடங்கள்-  தேவிகா வீட்டிற்கு வரும் இடம்,விசேஷம் சென்று சிவாஜி படும் அல்லல், லிட்டில் பிளோவேர்  பாடல் காட்சி, சிவாஜி -தேவிகா முதலிரவு காட்சி மற்றும் அன்னியோன்ய காட்சிகள், ஓஹோஹோ ஓடும் எண்ணங்களே, சிவாஜி-தேவிகா குழந்தைக்கு பேர் வைக்கும் காட்சி,உண்மை வெளியாகும் காட்சி,போட்டோ எடுக்க முனையும் காட்சி(சிவாஜி natural -overplay -underplay மூன்றையும் இரண்டே நிமிடத்தில் கலந்து நம்மை அதிசயத்தில் ஆழ்த்துவார்), இறுதி காட்சி என்று அவ்வளவும் பிடிக்கும்.
 
 
 
 பாடல்கள் படு பிரமாதம்.
 
 நடிகர்திலகம் ,ஆரம்ப நகைசுவை,காதல்,தேவிகாவிடம் படி படியாக அனுதாபம் பாசமாக  மாறும் பரிமாணம்,இறுதி விரக்தி என்று அவ்வளவு பிரமாதமாக நடிப்பார். (ஒரு காட்சியின் குச்சி ஐஸ் சாப்பிட்டு குழந்தை ஒன்றிடம் வழிவது-ஆஹா)
 
 தேவிகாவின் மிக சிறந்த performance என்பதில் சந்தேகமே இல்லை. சிவாஜியிடம் உண்மை மனைவி கூட காட்ட முடியாத அளவு அன்னியோன்யம் காட்டி சிறந்த அண்ணிகளில் ஒருவர் என்று நிரூபித்து விடுவார்.
 
 
 
 பார்க்காத ரசிகர்களே ,இந்த மாதிரி under -rate பண்ண பட்ட படங்களையும் முனைந்து பார்த்தால்தான் சிவாஜியின் முழு பரிமாணம் புரியும்.
 
 
 
 
				
				
				
					
						Last edited by Gopal.s; 11th December 2014 at 06:06 AM.
					
					
				 
 
 
 
 
- 
	
	
		Post Thanks / Like - 1 Thanks, 7 Likes
	 
- 
		
			
						
						
							10th December 2014 09:41 AM
						
					
					
						
							 # ADS
						
					
			 
				
					
					
						Circuit advertisement
					
					
					  
 
 
 
 
- 
	
			
				
					10th December 2014, 03:03 PM
				
			
			
				
					#3232
				
				
				
			
	 
		
			
			
				Junior Member
			
			
				Veteran Hubber
			
			
			
			 
			
				
 
 
			
				
				
						
						
				
					
						
							
	
		
			
			
				
	
		
			
			
				NT rises back to view his flamboyant flora !
 
நடிப்புச் சூரியனின் ஒளியால் வளம்  கண்டு  பூத்துக் குலுங்கி நடிப்பு நறுமணம் பரப்பிய பசுமைப்  பூந்தோட்டங்கள் ! நடிப்புத் தெய்வத்தின் வழிபாட்டுக்கு உகந்த நடிப்பு மலர்கள் !! மலர் மாலைகள்!!!
			
		 
 
 
 
 
 
 
 
 கதாநாயகரின் கதாநாயகியர்
 
 அல்லி மலர்மாலை 14   M.N. ராஜம்
 
 நிலவொளியில் மலரும் அல்லிமலரே ராஜம் என்றாலும் அந்த நிலவும் கதிரோளியைத்தானே கடன்வாங்கி பிரதிபலிக்கிறது ராஜத்தின் முகவெட்டு ஹிட்ச்காக் படங்களில் அழகிய ஒப்பனையில் காட்டப் படும் கதாநாயகியர் போன்று தனித்துவமும் கவர்ச்சியும்  நிறைந்த பாவைவிளக்கு. கதாபாத்திரத்தின் குணாதிசயங்களை உள்வாங்கி இயக்குனரின் எதிர்பார்ப்பை நிறைவு செய்யும் அமைதியான நட்சத்திரம் நடிகர்திலகத்துடன் பெருமை அடைந்த படங்கள் பாசமலர் பதிபக்தி மற்றும் பாவைவிளக்கு. தனிப்பட்ட முறையில் புகழ்   வெளிச்சம் விழுந்த படங்கள் மக்களைப் பெற்ற  மகராசி, மணாளனே மங்கையின் பாக்கியம் .....ரத்தக்கண்ணீர்....the initials made me to think whether M.N. Rajam was a sister to M.N.Nambiar!
 
 The Signature song sequence for MNRajam in Pasamalar!
 
 பாவையின்  முகத்தைப் பார்த்துப் பரவசமான நடிகர்திலகத்தின் முகத்தை ராஜம் பார்க்கவில்லையாமே
 
 
 
 The significant song sequences of MN Rajam!
 
 With NT in Pathibakthi
 
 
 
 With NT in Paavai Vilakku giving life to Shahjahan and Mumtaj!
 
 
 
 In Raththakkanneer with Chandrababu
 
 
 
 With Guruswamy Nambiar in Makkalai Petra Maharasi! only in our NT movie Nambiar was given a song sequence!! Another chance was in Mirudhanga Chakkaravarthi!
 
 
 
 
 
 
				
				
				
					
						Last edited by sivajisenthil; 10th December 2014 at 08:25 PM.
					
					
				 
 
 
 
 
- 
	
	
		Post Thanks / Like - 0 Thanks, 3 Likes
	 
- 
	
			
				
					10th December 2014, 03:16 PM
				
			
			
				
					#3233
				
				
				
			
	 
		
			
			
				Junior Member
			
			
				Diamond Hubber
			
			
			
			 
			
				
 
					    
				 
 
			
				
				
						
						
				
					
						
							இந்த காலகட்டத்தில், படித்த பெண்கள் சினிமாவுக்கு வர ஆரம்பித்திருந்தார்கள். இந்தப் படத்தில் எனக்கு ஜோடியாக அமைந்த சுகன்யாவும் படித்தவர். வெளிநாடுகளிலும் பரத நாட்டியத்தின் சிறப்பை வெளிப்படுத்தியவர். அதோடு எனக்கு கிடைத்த இன்னொரு உயரமான இந்தப் படத்தின் ஒரு காட்சி ரொம்பவே உருக்கமானது. பார்வையற்ற என் மனைவி, எதிரிகள் சதியால் குழந்தைக்கு விஷம் கலந்த புட்டிப்பாலை கொடுத்து விடுவார். இதனால் குழந்தை இறந்து போகும். 
 
 இந்தக் காட்சியில் நான் மனம் உடைந்து கதறி அழ வேண்டும். டைரக்டர் 'ஸ்டார்ட்' சொன்னதும், கேமரா ஓடத் தொடங்கியது. குழந்தை இறந்தது தெரிந்ததும் சுகன்யா கதற, நான் அழ, கேமரா ஓடிக் கொண்டிருந்தது.
 
 காட்சி முடிந்தும் டைரக்டர் பி.வாசு 'கட்' சொல்லவில்லை. அந்தக் கேரக்டருக்குள் கரைந்து போயிருந்ததால், எனக்கும் தொடர்ந்து கேமரா ஓடிக் கொண்டிருப்பது தெரியவில்லை. திடீரென பி.வாசு என்னைக் கட்டிப் பிடித்துக் கொண்டபோதுதான், காட்சி படமாகி முடிந்து விட்டதை தெரிந்து கொண்டேன். வாசு கண்களிலும் கண்ணீர். இதன் பிறகே அவர் 'கட்' சொல்ல, கேமராமேன் கேமராவின் இயக்கத்தை நிறுத்தினார். கேமராமேன் முகத்தைப் பார்த்தேன். அவர் கண்களிலும் கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது.
 
 சிவாஜி நடிப்பில் இன்றைக்கும் மறக்க முடியாத படம் "பாசமலர்". அந்தப் படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் தங்கை சாவித்திரியை தனது பார்வையற்ற நிலையில் சந்திப்பார். அப்போது சிறுவயதில் தங்கையின் பாசத்துக்குரிய அண்ணனாக பல விஷயங்களை நினைவுபடுத்துபவர், கடைசியில் உள்ளம் உடைந்து "கைவீசம்மா கைவீசு, கடைக்குப் போகலாம் கைவீசு" என்று பாடும்போது டைரக்டர் பீம்சிங் 'கட்' சொல்லவும் மறந்து, அவரும் பிழியப் பிழிய அழுதிருக்கிறார்.
 
 நடிகர் திலகம், நடிகையர் திலகம் இருவரின் ஒப்பற்ற நடிப்புக்கு சான்றான இந்த சம்பவம் பற்றி நானும் கேள்விப்பட்டிருந்தேன். இப்போது இந்த மாதிரி ஒரு சம்பவம், நான் நடித்த படத்திலும் நேர்ந்தபோது, எனக்கு 'பாசமலர்' சம்பவம் தான் நினைவுக்கு வந்தது.
 
 
 இவ்வாறு சத்யராஜ் கூறினார்.
 
 
 
 
 
 
 
- 
	
	
		Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
	 
- 
	
			
				
					10th December 2014, 03:44 PM
				
			
			
				
					#3234
				
				
				
			
	 
		
			
			
				Junior Member
			
			
				Veteran Hubber
			
			
			
			 
			
				
 
 
			
				
				
						
						
				
					
						
							
	
		
			
			
				
	
		
			
			
				nt rises back to view his flamboyant flora !
 
நடிப்புச் சூரியனின் ஒளியால் வளம்  கண்டு  பூத்துக் குலுங்கி நடிப்பு நறுமணம் பரப்பிய பசுமைப்  பூந்தோட்டங்கள் ! நடிப்புத் தெய்வத்தின் வழிபாட்டுக்கு உகந்த நடிப்பு மலர்கள் !! மலர் மாலைகள்!!!
			
		 
 
 
 
 
 
 
 
 கதாநாயகரின் கதாநாயகியர்
 
 நந்தியாவட்டைமலர்மாலை 15   ராஜசுலோச்சனா
 
 நந்தியாவட்டைமலர் இறைவழிபாட்டில் முக்கியத்துவம் வாய்ந்த மருத்துவ குணங்கள் நிறைந்த மலர். அவ்வண்ணமே ராஜசுலோச்சனாவும்  படித்தால் மட்டும் போதுமா திரைப்படத்தில் நந்தியாவட்டை மலராக பளீரென்று ஒளிர்ந்த நடிப்பை வழங்கி  சிறப்பித்தமைக்குஇதயபூர்வ நன்றிகள்
 
 Significant songs of Rajasulochchana with NT
 
 தாழ்வு மனப்பான்மையால் ஆட்கொள்ளப்பட்டு கட்டிய மனைவியின் முன் மனம் சுருங்கிடும் கதாநாயகனின் விரக்தி வேதனை இழையோடும் மனக்குமுறல் !
 
 
 
 கோமாளி கோமாளி பாடல் காட்சியமைப்பு நடிகர்திலகத்தின் பெருந்தன்மைக்கு மற்றுமோர் உரைகல் அதிகம் பிரபலமாகாத முன்னேறி வரும் நகைச்சுவை
 துணை நடிகரகளுக்கு முழு கருத்தாழமிக்க பாடலுடன் கூடிய நடனக்காட்சியை ஒதுக்கி மனைவி முன் கூனிக்குறுகி மனவேதனையை விரக்தியான
 முகபாவங்கள் மூலம் அவர் வெளிப்படுத்தியிருக்கும் பாங்கு எந்தவொரு மேலைநாட்டு ஆஸ்கார் வென்ற நடிகரும் கூட காண்பித்து இருக்க முடியாத ஓர்               அற்புத நிகழ்வு அந்த வேதனை வெளிப்பாட்டை நாமே உணர்வதுதான் நடிகமேதையின் வெற்றி! ராஜசுலோச்சனாவின் வாழ்நாள் நடிப்பு முத்திரை இக்காணொ  ளிக் காட்சி சாட்சியாகவே!
 
 
 Signature songs of Rajasulochana :
 
 With NT in Saarangathaara
 
 சாரங்கதாரா எதிர்பார்த்த   பிரகாசத்தைத் தராது போய்விட்டாலும் இந்தப் பாடல் காட்சி (இந்தப் புறா ஆட வேண்டுமென்றால் இளவரசர்  பாடவேண்டும்...!) அமரத்துவம் பெற்றுவிட்டதே! நடிகமேதையின் இணையில்லாதபாடல் உதட்டசைவுக்கும் முகபாவங்களுக்கும் உடல்மொழிக்கும்  முன்னால்  அசைந்தாடும் பெண்புறா ராஜசுலோச்சனாவின்   நடனமொழி வசந்தமுல்லையே!
 
 
 
 In Kaithi Kannaayiram
 
 
 
 
 
 
				
				
				
					
						Last edited by sivajisenthil; 11th December 2014 at 12:09 AM.
					
					
				 
 
 
 
 
- 
	
	
		Post Thanks / Like - 0 Thanks, 3 Likes
	 
- 
	
			
				
					10th December 2014, 03:57 PM
				
			
			
				
					#3235
				
				
				
			
	 
		
			
			
				Senior Member
			
			
				Senior Hubber
			
			
			
			
			
				  
 
					    
				 
 
			
				
				
						
						
				
					
						
							அன்பு சிவாஜிசெந்தில், 
 
 கதாநாயகரின் கதாநாயகியர் m.n.ராஜம் பாடல்கள் வரிசையில் 'தெய்வப்பிறவி' - 'காளை வயசு கட்டான சைசு'-வையும் சேர்க்கலாம்.
 
 
 
 
 
 
				
				
				
				
					.........-`҉҉´-
 -`҉҉´..)/.-`҉҉´-
 ....¨´“˜~.)/¸.~“˜¨
 ........¨´“˜~.“˜
 
 
 
 
 
 
- 
	
	
		Post Thanks / Like - 1 Thanks, 2 Likes
	 
- 
	
			
				
					10th December 2014, 05:43 PM
				
			
			
				
					#3236
				
				
				
			
	 
		
		
			
				
				
				
					பாட்டும் பதமும்
				
					
						
							இலங்கை வானொலில் மிகவும் புகழ் பெற்ற பாட்டும் பதமும் வரிசையில் நடிகர் திலகம் புகழ் பாடும் ஒரு பதம்.
 வழங்குபவர் : டாக்டர் சாந்தாராம் அவர்கள்...(கூடிய விரைவில் நம் மையம் இணையத்துக்கு வர வேண்டுகோள் விடுத்துள்ளேன்)
 
 பாட்டும் பதமும் - புதிய வடிவில் !
 
 நடிகர் திலகம் சிவாஜி கணேசன்  படங்களில் வந்த பாடல்களைக்கொண்டு !
 
 
 முழுக்க முழுக்க சிவாஜி கணேசன் பாடல்களில் !
 
 
 நான் எடுத்த்க்கொண்ட வாக்கியம் :
 
 " செந்தமிழ் வெள்ளி திரை உலகின் ஈடற்ற ஒளி விளக்கே ,திலகமே, நீயே எங்கள் உள்ளத்தில் என்றும் வாழ வேண்டும் ! "
 
 
 மேற்கண்ட நீண்ட வாக்கியத்திற்கு ஒவ்வொரு சொல்லுக்கும் நான் கொடுக்கும் நடிகர் திலகத்தின் பாடல்கள் :
 
 
 பாடல் : " செந்தமிழ் பாடும் சந்தனக் காற்று தேரினில் வந்தது கண்ணே ! "
 
 படம் : " வைர நெஞ்சம் " ( 1975 ) )
 
 பாடியவர்கள் : டி எம் எஸ் - பி.சுசீலா
 
 இசை : மெல்லிசை மன்னர்[/b]
 
 
 
 
 
 வெள்ளி:
 
 
 பாடல் : "வெள்ளி மணி ஓசையிலே உள்ளமென்னும் கோயிலிலே "
 
 படம் : " இரு மலர்கள் " ( 1967) )
 
 பாடியவர் : சுசிலா
 
 இசை : மெல்லிசை மன்னர்
 
 
 
 
 
 திரை :
 
 
 பாட்டு : திரை போட்டு நாமே மறைத்தாலும் காதலே தெரியாமல் போகுமா "
 
 படம் : " ராஜா ராணி " ( 1956 )
 
 பாடியவர்கள் : ஏ.எம்.ராஜா - ஜிக்கி
 
 இசை : டி. ஆர். பாப்பா
 
 
 
 
 
 உலகின் :
 
 பாடல் : " உலகின் முதல் இசை தமிழிசையே"
 
 படம் : " தவப் புதல்வன் " ( 1972 )
 
 பாடியவர்கள் : டி எம் எஸ் - பி.பி. எஸ்
 
 இசை : மெல்லிசை மன்னர்
 
 
 
 
 ஈடற்ற :
 
 பாடல் : " ஈடற்ற பத்தினியின் இன்பத்தை கொன்றவன் நான்"
 
 ( " ஆரம்பமாவது பெண்ணுக்குள்ளே " )
 
 தொகயறாவிலுருந்தும் சொல்லை எடுக்கலாம் !
 
 படம் : " தங்கப் பதுமை "( 1959 )
 
 பாடியவர் : சி.எஸ்.ஜயராமந் ( பத்மினியில் குரலோடு )
 
 இசை : மெல்லிசை மன்னர்கள்
 
 
 
 
 ஒளி :
 
 பாடல் : " ஒளி மயமான எதிர்காலம் என் உள்ளத்தில் தெரிகிறது "
 
 படம் : " பச்சை விளக்கு " ( 1964 )
 
 பாடியவர் : டி எம் எஸ்
 
 இசை : மெல்லிசை மன்னர்கள்
 
 
 
 
 விளக்கே :
 
 பாடல் : " விளக்கே நீ தந்த ஒளியாலே "
 
 படம் : " நிறை குடம் " ( 1969 )
 
 பாடியவர் : டி எம் எஸ்
 
 இசை : வி.குமார்
 
 
 
 
 திலகமே ! :
 
 பாடல் ள் : " திலகமே, உலகின் திலகமே தமிழ் நாட்டு கலை உலகின் திலகமே "
 
 படம் : " வடிவுக்கு வளை காப்பு " ( 1962 )
 
 பாடியவர் : டி எம் எஸ்
 
 இசை : கே.வி. மகாதேவன்
 
 
 
 
 நீயே
 
 பாடல் : " நீயே உனக்கு என்றும் நிகரானவன்"
 
 படம் : " பலே பாண்டியா " ( 1962 )
 
 பாடியவர் : டி எம் எஸ் & மற்றொருவர்
 
 இசை : மெல்லிசை மன்னர்கள்
 
 
 
 
 எங்கள் :
 
 பாடல் : " எங்கள் கல்யாணம் கலாட்டா கல்யாணம் "
 
 படம் : " கலாட்டா கல்யாணம் " ( 1968 )
 
 
 
 
 உள்ளத்தில் :
 
 பாடல் : " உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது வல்லவன் வகுத்தடா "
 
 படம் : " கர்ணன் " ( 1964 )
 
 பாடியவர் : சீர்காழி
 
 இசை : மெல்லிசை மன்னர்கள்
 
 
 
 
 என்றும்
 
 பாடல் : " என்றும் புதிதாக இளமை குறையாத"
 
 ( " உலகத்திலே உருவம் என உயர்ந்து நிற்கும் திலகமே ! "
 
 படம் : " வியட்னாம் வீடு "( 1970 )
 
 பாடியவர்கள் : சுசீலா, ஏ.எல் .ராகவன், சூலமங்கல்
 
 இசை : கே.வி. மகாதேவன்
 
 
 
 
 
 வாழ:
 
 பாடல் : " வாழ நினைத்தால் வாழலாம் "
 
 படம் : " பலே பாண்டியா " ( 1963 )
 
 பாடியவர்கள் : டி எம் எஸ் - பி.சுசீலா
 
 இசை : மெல்லிசை மன்னர்கள்
 
 
 
 
 வேண்டும் :
 
 பாடல் : " வேண்டும் வேண்டும் உங்கள் உறவு"
 
 படம் : " வசந்ததில் ஒரு நாள் " ( 1982 )
 
 பாடியவர்கள் : டி எம் எஸ் - வாணி ஜெயராம்
 
 இசை : மெல்லிசை மன்னர்.
 
 எப்படி இருந்தது நண்பர்களே...
 
 
 
 
				
				
				
					
						Last edited by sss; 10th December 2014 at 05:50 PM.
					
					
				 
 
 
 
 
- 
	
	
		Post Thanks / Like - 0 Thanks, 4 Likes
	 
- 
	
			
				
					10th December 2014, 07:19 PM
				
			
			
				
					#3237
				
				
				
			
	 
		
			
			
				Junior Member
			
			
				Veteran Hubber
			
			
			
			 
			
				
 
 
			
				
				
						
						
				
					
						
							[QUOTE]
	
		
			
			
				
	
		
			
			
				
					  Originally Posted by  kalnayak  
 அன்பு சிவாஜிசெந்தில், 
 
 கதாநாயகரின் கதாநாயகியர் m.n.ராஜம் பாடல்கள் வரிசையில் 'தெய்வப்பிறவி' - 'காளை வயசு கட்டான சைசு'-வையும் சேர்க்கலாம்.
 
 
 
 
 
 
 Dear Kalnayak sir,
 
 I thought of adding, but the song lines were "too suggestive" (Kattaana sizu) that may sometimes irk the viewers taste among other better songs.Also, I try to add songs mostly with the screen sharing by NT, of course with some exceptions like the Nambiar song 'ondru serndha anbu...' that was inevitable in projecting the traits of these heroines towards glorifying our main deity NT!
 
 thanks for such a positive suggestion
 
 regards, senthil
 
 One more impressive dance performance by MNR is from MGR-Banumathi starrer Alibaabaavum 40 thirudargalum!! enjoy this scintillating music beat of old times!!
 
 
 
 But this song adapts its musical rhythm from the incomparable Venus of Indian Screen Madhubala starrer Hindi film Phagan (1958). Enjoy this too!! Amazing dance steps by Madhubala!!(with an enchanting snake-charmer's magudi music!)
 
 
 
 
 
 
				
				
				
					
						Last edited by sivajisenthil; 10th December 2014 at 07:51 PM.
					
					
				 
 
 
 
 
- 
	
	
		Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
	 
- 
	
			
				
					10th December 2014, 07:26 PM
				
			
			
				
					#3238
				
				
				
			
	 
		
			
			
				Junior Member
			
			
				Senior Hubber
			
			
			
			 
			
				
 
					    
				 
 
			
				
				
						
						
				
					
						
							 
 
 எவரும் எட்டாத அதிசியம் சிவாஜி புகழ் காப்போம்.
 
 
 
 
 
 
 
- 
	
	
		Post Thanks / Like - 0 Thanks, 4 Likes
	 
- 
	
			
				
					10th December 2014, 08:21 PM
				
			
			
				
					#3239
				
				
				
			
	 
		
			
			
				Junior Member
			
			
				Diamond Hubber
			
			
			
			 
			
				
 
					    
				 
 
 
 
- 
	
	
		Post Thanks / Like - 0 Thanks, 5 Likes
	 
- 
	
			
				
					10th December 2014, 08:45 PM
				
			
			
				
					#3240
				
				
				
			
	 
		
			
			
				Junior Member
			
			
				Veteran Hubber
			
			
			
			 
			
				
 
 
			
				
				
						
						
							
						
				
					
						
							Thanks for uploading this rare photograph of NT, Mr. Yukesh.
 Any supporting lines or background information on this occasion....my curiosity rises ..for the benefit of all NT fans.
 
 regards, senthil
 
 
 
 
				
				
				
					
						Last edited by sivajisenthil; 10th December 2014 at 09:35 PM.
					
					
				 
 
 
 
 
Bookmarks