-
15th December 2014, 09:28 AM
#3311
Senior Member
Devoted Hubber
ஏக காலத்தில் ஓடி சாதனை படைத்த வசூல் சக்கரவர்த்தியின்
சாதனை பட்டியல்
பாரீர் பாரீர் பாரீர்
5.03.1970..ஹரிச்சந்திரா...கொழும்பு...ஸெயின்ஸ்தான். .67..நாட்கள்
................ஹரிச்சந்திரா...யாழ்நகர்.......ராஜா .................67..நாட்கள்
.......
7..04 ..1970..திருடன்...கொழும்பு..சென்ட்ரல்...98..நாட்கள ்
...........................திருடன்...யாழ்நகர்..ராண ி..........45..நாட்கள்
.....
8.04..1970..தங்கச்சுரங்கம்...கொழும்பு...செல்லமஹால் ...51..நாட்கள்
.................தங்கச்சுரங்கம்..யாழ்நகர்......வின ்சர்..............51..நாட்கள்
..........................
ஹரிச்சந்திரா திரையிடப்பட்ட 34ம்நாள் திருடன் திரையிடப்படுகிறது
மறுநாள் தங்கச்சுரங்கம் திரையிடப்படுகிறது
எனினும் 3படங்களுமே 50 நாட்களை கடந்து சாதனையை நிலை நாட்டின
வேறு எந்த நடிகரது படங்களாலும் நினைத்துப்பார்க்க முடியாத சாதனைகளை ஏற்படுத்தியவர்
வசூல் சக்கரவர்த்தி சிவாஜி கணேசன் ஒருவர் மட்டுமே
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
15th December 2014 09:28 AM
# ADS
Circuit advertisement
-
15th December 2014, 02:24 PM
#3312
எல்லாம் உனக்காக
அன்புள்ள முரளி மற்றும் நண்பர்களே
நானும் நேற்று தான் முதன் முறையாக எல்லாம் உனக்காக திரைக்காவியத்தை கண்டு களித்தேன்.
நன்றி ராகவேந்தர் சார்...

வேறு ஒரு சந்தர்ப்பத்தில் வெளி வந்திருந்தால் நல்ல வெற்றியை பெற்றிருக்கும் படம் தான் ....
இந்த படத்தை பார்க்காமலே (!!!!) அல்லது மறதியில் ராண்டார் கை விமர்சித்து உள்ளார்... சிவாஜியும் பாலையாவும் இருவரும் நண்பர்களாம்.. ( படத்தில் இவர்கள் இருவரும் மகன் அப்பா மேலும் வெங்கடாசலம் கதாபாத்திரம் ரங்கா ராவ் செய்திருப்பார் அவரின் மகள் தான் சாவித்திரி..) இப்படி சொதப்பலான விமர்சனம்...
http://www.thehindu.com/features/cin...cle6203949.ece
இந்த படத்தின் சிறப்பு அம்சம்... என் பார்வையில் :
நடிகர் திலகம் அடக்கமாக underplay செய்து புதுமையான நடிப்பை வெளிகாட்டி உள்ளார்
கொஞ்சம் mature குணாதிசியம் கொண்டதாக காட்சிகள் அமைக்க பட்டு உள்ளன.
முதல் இரவில் சாவித்திரி திரையால் காட்டும் பட காட்சியில் முக பாவம்...அருமை..
தன் அப்பாவை நகரசபை காண்ட்ராக்ட் விசயத்தில் கடிந்து கொள்வது , அம்மாவின் பேராசையை அடக்குவது, ரங்கா ராவின் அதிகாரத்தை , சூழ்ச்சியை அறிந்த பின் ( தன்னுடைய மாமனாரை ) " என்னையா " என்று சொல்லும் பாங்கு, தன்னுடைய குழந்தை ஊனமானதா என சோதனை செய்த காட்சியில் உணர்ச்சி வெள்ளம் போல் நடிப்பை காட்டியது...
நடிகர் திலகம் கடை பிடித்த அரசியல் நேர்மை க்கு ஏற்ப , மக்கள் பணிக்கு முன்னால் குடும்பம் பெரிதல்ல என்பது போலே காட்சி அமைப்பு உண்மையில் நடிகர் திலகம் அரசியலில் இப்படி தான் இருந்திருப்பார் என நினைக்க தோன்றியது..
அரசியல் வசனங்கள் , ஊழல், நகராட்சி சேர்மன் , கவுன்சிலர் பிரச்னை, பதுக்கல் , என இன்றைய பிரச்சனைகள் அனைத்தும் உள் வாங்கிய சம்பவங்கள்... வசனம்.. அருமை.
இது போலே அரசியல் படங்கள் , கதைகளில் தொடர்ந்து நடித்திருந்தால் நடிகர் திலகம் வேறு ஒரு புதிய வடிவ அரசியல் சாத்தியபட்டிருக்கும் என நினைக்கிறேன்...
சாவித்திரியை அதிகம் தொட்டுப் பேசி நடிக்கவில்லை ஒரே ஒரு டூயட் ( மலரும் கொடியும் பெண் என்பார் - அருமையான் பாடல்),
இரண்டு வருட ஒப்பந்த திருமணம் பற்றி சரியாக சொல்லப்படவில்லை... நிறைய பேருக்கு புரிந்திருக்காது.
நடிகர் திலகத்தின் முறை பெண் ( கே.வீ. சாந்தி ???) ஒருமுறை சொல்லும் போது தனக்கும் அத்தானுக்கும் திருமணம் நடக்க இன்னும் சில தினம் தான் உள்ளது என ஒரு நோட்டை வைத்து சொல்லும் காட்சியில் தான், ஓஹோ ஒரு மறைமுக ஒப்பந்தம் உள்ளதோ என தெரிகிறது... ஆனால் அதுவும் பிடிபட வில்லை..
நிச்சயமாக பாசமலர் இந்த படத்துக்கு ஒரு தடை அல்ல...
முரளி சார் உங்கள் விரிவான விமர்சனத்தை எதிர் பார்க்கிறேன்..
நன்றி
Last edited by sss; 15th December 2014 at 02:26 PM.
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
15th December 2014, 03:00 PM
#3313
Junior Member
Veteran Hubber
நடிகர்திலகத்தின் நடன நகர்வாற்றல் நளினம் குறுந்தொடர்
Theme :
NT's Energy Emission in Song Sequences!
Sivaji Ganesan's Dynamics / Statics / Mechanics / Histrionics of 'dancing to the tune' , 'Lipping to the tone' and 'ribbing or tickling the funny bone'in song sequences :
ஆற்றல் (Energy) என்பது அளவிட முடியாமல் போவது அணுவைப் (atomic) பிளக்கும்போதோ (Fission) அல்லது அணுக்களைக் கோர்க்கும்போதோ (Fusion) ......மேகக்கூட்டங்கள் நகர்ந்து மோதும்போதும் (Thunderball), எரிமலை (volcanic eruption) வெடித்துச் சிதறும்போதும், தென்றல் புயலாக மாறும்போதும் (Twister / Cyclone), நிலத்தடி பாறைப் பரப்புகள் நகர்ந்து இடித்துக் கொள்ளும் போதும் (Continental/Tectonic Plate Collisions) ஆற்றல் இடியுடன் (Thunderbolt) கூடிய மின்னலாகவோ (lightning), தீப்பிழம்புக் குழம்பாகவோ (molten Magma), புயல் மழையாகவோ (incessant torrential rain), ஊழிப் பேரலைகளாகவோ (Tsunaami) உருமாற்றம் கண்டு உறுமுகிறது.... குமுறுகிறது! அவ்வண்ணமே தில்லையம்பல நடராஜரின் தாண்டவங்களும் ஆற்றலின் ஒருவகை வெளிப்பாடே! ஆட்டுக்குட்டி தாயின் வயிற்றிலிருந்து பிரிந்து விழுந்து புரண்டு எழுந்து போடும் ஆட்டமும் ஆற்றலே !
சாது மிரண்டால் ....காடு கொள்ளுமா!....எலி புலியானால் .....வீடு (வளையில்) தங்குமா!! பூனை யானை யானால் நாடு தாங்குமா!!! இதுவே நம்முள் பொதிந்திருக்கும் வாழ்வாதார ஆற்றல் வெளிப்பாட்டின் தத்துவம்!!!!
ஆடல்பாடல் காட்சிகளில் நடிகர்திலகம் வெளிப்படுத்தும் நடன நகர்வு / அமர்வு / உறைவு ஆற்றலே இத்தொடரின் மையக் கருத்து !
ஆற்றல் பகிர்வு தரவரிசை 1 : 0.5 HP ( ½ குதிரைச்சக்தி Horse Power)
பொதுவாகவே நாம் ஆற்றலை குதிரைச்சக்தி அளவீட்டிலேயே சொல்லப் பழகி விட்டோம்! மனித ஆற்றல் குதிரையின் ஆற்றல் வெளிப்பாட்டில் பத்தில் ஒரு பங்கே !
நடிகர்திலகத்தின் நடன நகர்வாற்றலோ சராசரி மனிதனைவிட மும்மடங்கு என்று தைரியமாக உரைக்கலாம்!
Concept 1 Dynamics / நகர்வாற்றல்
இளம்புயலின் ஆற்றலுடன் அவர் நுழைந்து நடிப்புத் தாண்டவமாடிய பராசக்தியில் தாண்டவக்கோனாக அவர் போட்ட ஆட்டங்களின் ஆற்றல் வெளிப்பாடு இன்று வரை தரவரிசையில் எண் ஒன்றே.....குதம்பாய்! ! காசை சுண்டிவிட்டு பேண்ட்டை மடித்துவிட்டு தொப்பியை மாட்டிக்கொண்டு கைகளை மேல்நோக்கி கோர்த்துக்கொண்டு கால்களை சேர்த்துக்கொண்டு பார்த்துக் கொண்டிருப்பவர் வேர்த்து விறுவிறுக்க என்னேவொரு அமர்க்களமாக ஆரம்பிக்கிறார் அதகள கிறுக்காட்டத்தை !
நீதியுரை : ஆரியக் கூத்தாடினாலும் தாண்டவக்கோனே....காசு காரியத்தில் கண் வையடா தாண்டவக்கோனே !! உள்ளே பகை வையடா தாண்டவக்கோனே அதற்கு உதட்டில் உறவாடடா தாண்டவக்கோனே ! ஆற்றல் மிக்க ஒளிரும் வைர வரிகள்!!(Udumalai Narayana Kavi?)
Concept 2 Statics / அமர்வாற்றல்
ஆடாமலே அமர்ந்து கொண்டு பாடலின் வாயசைப்பு நேர்த்தியிலும் முகத்தின் தசைகளின் நடன பாவனை சிற்றசைவுகளிலும் அவர் காட்டும் அமர்வு ஆற்றல் நளினம் நம்மை எழுந்து நடனமாட தூண்டுகிறதே! என்ன விந்தை மனிதரய்யா மந்தையான திரைச்சந்தையில் நம் சிந்தை நிறைந்திட்ட நடிப்புத்தந்தை !! 1/4HP
Concept 3 Mechanics / உறைவாற்றல்
நாம் ரசிக்கும் கோமான் நடிகர்திலகம் ஆற்றலிழந்து அவஸ்தையுடன் அமர்ந்திருக்கும் போது நடனத்தாரகை குமரி கமலாவின் அதீத நடன ஆற்றல் வெளிப்பாடு கண்களுக்கு கவர்ச்சி விருந்தே! 0.1 HP!
Concept 4 Histrionics உடல்மொழியாற்றல்
இளமனதை தூண்டிவிட்டுப் போறவரின் ஸ்டைலான காதல் கிறங்கல் !
பைஜாமா ஜிப்பாவில் காதல் மன்னராக புதுபெண்ணின் மனதை தொட்டு விடும் ஆற்றலோ !
The End of Part 1. But, NT rolls, jumps, somersaults and bounces back in Part 2 for his incomparable emission of radient energy in song sequences of THOOKKU THOOKKI! Get ready to give a standing and dancing ovation to the histrionics of one and only NT!
Last edited by sivajisenthil; 16th December 2014 at 06:01 PM.
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
15th December 2014, 10:16 PM
#3314
Junior Member
Diamond Hubber
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
-
15th December 2014, 10:18 PM
#3315
Junior Member
Diamond Hubber
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
-
15th December 2014, 11:12 PM
#3316
Junior Member
Diamond Hubber
Murali sir what's ur opinion about this posting?

Originally Posted by
gopal,s.
செந்தில்,
நானும் அதையே சொல்ல நினைத்தேன். சுவையான விருந்தை சாப்பிடும் போது ஒரு கல் அக படும் உணர்வு ஏற்பாடுகிறது. நீங்கள் நடிகர்திலகம் பதிவுடன் பிற நடிகர்களை இணைத்து பதிவிடும் போது .
சமீப காலத்தில், மனதுக்கு பிடித்ததை ,இசைந்ததை இந்த திரியில் பதிவிடுவதை விடுத்து,புகழ்ச்சிக்கு மயங்குதல், வேண்டாத விஷயங்களில் நட்பு என்ற பசப்புரையில் இணைதல் என்ற போக்கு தென் பட ஆரம்பித்துள்ளது.
Last edited by Murali Srinivas; 16th December 2014 at 12:09 AM.
-
16th December 2014, 12:13 AM
#3317
இளைய சகோதரர் யுகேஷ் அவர்களே,
நண்பர் சிவாஜி செந்தில் பதிவிடும் வீடியோக்களில் நடிகர் திலகம் படங்களை தவிர்த்து வேறு படங்களை பதிவிட வேண்டாம் என எழுதும் நேரத்தில் கோபால் யாரையும் பெயர் குறிப்பிடாமல் சொன்ன ஒரு உதாரணத்தை நீங்களாகவே ஏதோ கற்பனை செய்துக் கொண்டு குற்றம் சாட்டினால் என்ன சொல்வது?
நான் மேலே குறிப்பிட்டிருப்பது போல் கேட்பது உங்கள் நண்பர்களின் பாணி. ஆனால் நடிகர் திலகம் திரியில் நாங்கள் அப்படி சொல்ல மாட்டோம். நீங்கள் குறிப்பிட்டிருக்கும் வார்த்தை உங்கள் மனதை காயப்படுத்துகிறது என நீங்கள் சொல்வதனால் அந்த வார்த்தையை நீக்கி விட்டேன். கோபால் பதிவிலிருந்தும் சரி, உங்கள் பதிவிலிருந்தும் சரி.
உங்களிடம் ஒரே ஒரு கேள்வி. யாரையும் பெயர் குறிப்பிடாமல் சொன்ன ஒரு வார்த்தைக்கே நீங்கள் உங்கள் அபிமானத்துகுரியவரைத்தான் என நினைத்து மனம் புண்பட்டு என்னை கேள்வி கேட்கிறீர்களே? நேற்று மாலை எம்ஜிஆர் திரியில் நடிகர் திலகத்தை பற்றி மோசமான அடைமொழி கொடுத்து எழுதிவிட்டு சால்ஜாப்பாக இதை கருணாநிதி சொன்னார் என்று உங்கள் நண்பர் எழுதி அற்ப சந்தோஷம் அடைகிறாரே [இது அவர் எழுதுவது இரண்டாவது முறை] அதை கூடாது என்று அவரிடம் சொல்லும் நேர்மை உங்களிடம் இருக்கிறதா யுகேஷ்? இல்லை கோபால் என்ன எழுதினாலும் உடனே எதிர்வினையாக தானே கேள்வி தானே பதில் என்று செயல்படும் வினோத் அவர்களுக்கும் சேர்த்துத்தான் இந்த கேள்வி.
எங்களாலும் உங்கள் அபிமானத்துகுரியவரைப் பற்றி மோசமாக எழுதிவிட்டு கருணாநிதிதான் இப்படி சொன்னார் இல்லை x , y , z சொன்னார் என்று எழுத முடியும் சகோதரரே. ஆனால் நாங்கள் அப்படி செய்ய மாட்டோம்.
உங்கள் சுட்டிக் காட்டுதலுக்கு நன்றி. இதே நேர்மையை எம்ஜிஆர் திரியிலும் காட்டுவீர்கள் என்ற நம்பிக்கையில்
அன்புடன்
-
Post Thanks / Like - 1 Thanks, 3 Likes
-
16th December 2014, 12:18 AM
#3318
Junior Member
Diamond Hubber
Thanks murali sir for your quick response sir

Originally Posted by
murali srinivas
இளைய சகோதரர் யுகேஷ் அவர்களே,
நண்பர் சிவாஜி செந்தில் பதிவிடும் வீடியோக்களில் நடிகர் திலகம் படங்களை தவிர்த்து வேறு படங்களை பதிவிட வேண்டாம் என எழுதும் நேரத்தில் கோபால் யாரையும் பெயர் குறிப்பிடாமல் சொன்ன ஒரு உதாரணத்தை நீங்களாகவே ஏதோ கற்பனை செய்துக் கொண்டு குற்றம் சாட்டினால் என்ன சொல்வது?
நான் மேலே குறிப்பிட்டிருப்பது போல் கேட்பது உங்கள் நண்பர்களின் பாணி. ஆனால் நடிகர் திலகம் திரியில் நாங்கள் அப்படி சொல்ல மாட்டோம். நீங்கள் குறிப்பிட்டிருக்கும் வார்த்தை உங்கள் மனதை காயப்படுத்துகிறது என நீங்கள் சொல்வதனால் அந்த வார்த்தையை நீக்கி விட்டேன். கோபால் பதிவிலிருந்தும் சரி, உங்கள் பதிவிலிருந்தும் சரி.
உங்களிடம் ஒரே ஒரு கேள்வி. யாரையும் பெயர் குறிப்பிடாமல் சொன்ன ஒரு வார்த்தைக்கே நீங்கள் உங்கள் அபிமானத்துகுரியவரைத்தான் என நினைத்து மனம் புண்பட்டு என்னை கேள்வி கேட்கிறீர்களே? நேற்று மாலை எம்ஜிஆர் திரியில் நடிகர் திலகத்தை பற்றி மோசமான அடைமொழி கொடுத்து எழுதிவிட்டு சால்ஜாப்பாக இதை கருணாநிதி சொன்னார் என்று உங்கள் நண்பர் எழுதி அற்ப சந்தோஷம் அடைகிறாரே [இது அவர் எழுதுவது இரண்டாவது முறை] அதை கூடாது என்று அவரிடம் சொல்லும் நேர்மை உங்களிடம் இருக்கிறதா யுகேஷ்? இல்லை கோபால் என்ன எழுதினாலும் உடனே எதிர்வினையாக தானே கேள்வி தானே பதில் என்று செயல்படும் வினோத் அவர்களுக்கும் சேர்த்துத்தான் இந்த கேள்வி.
எங்களாலும் உங்கள் அபிமானத்துகுரியவரைப் பற்றி மோசமாக எழுதிவிட்டு கருணாநிதிதான் இப்படி சொன்னார் இல்லை x , y , z சொன்னார் என்று எழுத முடியும் சகோதரரே. ஆனால் நாங்கள் அப்படி செய்ய மாட்டோம்.
உங்கள் சுட்டிக் காட்டுதலுக்கு நன்றி. இதே நேர்மையை எம்ஜிஆர் திரியிலும் காட்டுவீர்கள் என்ற நம்பிக்கையில்
அன்புடன்
-
16th December 2014, 03:50 AM
#3319
Junior Member
Veteran Hubber
நடிகர்திலகத்தின் நடன நகர்வாற்றல் நளினம் குறுந்தொடர் PART 2
Theme :
NT's Energy Emission in Song Sequences!
Sivaji Ganesan's Dynamics / Statics / Mechanics / Histrionics of 'dancing to the tune' , 'Lipping to the tone' and 'ribbing or tickling the funny bone'in song sequences :
ஆடல்பாடல் காட்சிகளில் நடிகர்திலகம் வெளிப்படுத்தும் நடன நகர்வு / அமர்வு / உறைவு ஆற்றலே இத்தொடரின் மையக் கருத்து !
ஆற்றல் பகிர்வு தரவரிசை 2 :
3.5 HP ( குதிரைச்சக்தி Horse Power)
((ஒரு குதிரைச் சக்தி என்பது 75 கிலோ எடையை ஒரு குதிரை ஒரு வினாடியில் ஒரு மீட்டர் தூரம் இழுத்துச் சென்றிட தேவைப்படும் ஆற்றலின் அளவே!))
தூக்கு தூக்கி திரைப்படத்தில் சௌந்தரராஜன் குரல் அப்படியே சிவாஜி குரலாக மாறி அவரது நடன நகர்வுகளின் நளினத்தை தூக்கோதூக்கென்று தூக்கி வைத்தமைக்கு மனதை விட்டு இன்றளவும் அகலாத காட்சிகளே சாட்சி
Concept 1 Dynamics / நகர்வாற்றல் 1HP
படத்தின் உச்சகட்ட காட்சியில் ஆசிரியர் மகன் சட்டாம்பிள்ளை கதாநாயகியர் பத்மினி ராகினியை தனது வலையில் வீழ்த்திட எத்தனிப்பதை அந்த ஆசிரியருக்கு நாசூக்காக ஆடல்பாடல் வழி நடிகர்திலகம் இயம்பும் விதத்தில் அவரது நடன நகர்வாற்றல் எவ்வளவு அருமையாக பாடல்வரிகளுடன் இசையுடன் பொருந்தி நம்மையும் எழுந்து ஆடிடத் தூண்டுவதைக் காண்போமே !
Concept 2 Statics / அமர்வாற்றல் 0.5 HP
கண்வழி புகுந்து கருத்தினில் கலந்திட்ட மனைவியுடன் அவளது ரகசிய நம்பிக்கை துரோகம் புரியாது எதார்த்தமாக பாடி மகிழும் காட்சியில் நடிகர்திலகத்தின்அமைதியான அமர்வாற்றலைக் கண்ணுருவோமே 1/10 HP only!
Concept 3 Mechanics / உறைவாற்றல் 0.5 HP
மனைவியின் கொலையும் செய்வாள் பத்தினி என்னும் தத்துவ வாக்கினை உணர்ந்து மனம் மருகி தடுமாறி பேதலித்தாலும் அதைக் கட்டுக்குள் கொண்டுவந்து உறைய வைத்து உள்ளே நிதானத்துடனும் வெளியே புத்தி பேதலித்த நடிப்புடனும் சொன்னதை சொல்லும் கிளிப்பிள்ளை போல திரும்பத் திரும்பப் பேசறே வடிவேலு பாணியை அன்றே முன்னோடியாக மெய்சிலிர்க்கும் வண்ணம் நடித்து அசத்தினார் நடிகமேதை! இந்த உரைவாற்றல் 1/4 HP!
Concept 4 Histrionics உடல்மொழியாற்றல் 1.5 HP
மனைவியின் ரகசிய காதலனிடம் துணி விற்கும் வேலைக்குச் சேர்ந்து துணி ரகங்களை வகைப்படுத்தி விற்கும் பாடல் காட்சியில் நடிகர்திலகத்தின் சுறுசுறு உடல்மொழியுடன் கூடிய விறுவிறு ஆடல்பாடல் காட்சி நம்மைப் பரவசப்படுத்தவே !
End of Part 2. But NT returns to enthraal us with his dynamic song sequences to this theme from therukkooththu/drama based dance movements : Kalvanin Kaadhali Sadhaaram drama scene / Navaraththiri therukkooththu scene /.....
Last edited by sivajisenthil; 16th December 2014 at 06:05 PM.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
16th December 2014, 05:33 AM
#3320
Junior Member
Newbie Hubber
அன்பளிப்பு.- 1969.
வரும் புத்தாண்டில் 45 வருட முடிவை எய்த போகும் அன்பளிப்பு ,வந்த நாட்களில் ஒரு தீவிர சமுதாய பிரச்சினையை பொழுது போக்குடன் கலந்து பேசிய படம்.
முதல் பாராட்டு ஏ.சி.திருலோக சந்தர். இவர் ஒரு நவீன ராஜா கால பொழுது போக்கு (வீர திருமகன்), குடும்ப செண்டிமெண்ட் (நானும் ஒரு பெண்)Romantic musical (அன்பே வா),thriller (அதே கண்கள்) ,Anti -hero பொழுதுபோக்கு (தங்கை) என்று வித விதமாக variety கொடுத்து தன்னை சிறை படுத்தி கொள்ளாத executive வகை இயக்குனர்.(திரைக் கதை நுட்பங்களும் அறிந்த படிப்பாளி)இவர் கிராமிய மணத்துடன்,கிராமிய பிரச்சினை என்று சுருக்காமல் மனித இனத்துக்கே அச்சுறுத்தலாக சவால் விட்டு கொண்டிருக்கும் இன்றைய பிரச்சினையை அன்றே சொன்னார்.ஓரளவு nativity கொண்ட நல்ல பொழுது போக்கு படம்.
பசுமை விவசாயம், விவசாய விளை நிலங்கள் பிளாட்டுகளாக,தொழிற்சாலைகளாக(சில நேரம் ஆபத்தான ரசாயன-அணு நிலையங்களாகவும்) மாறி கிராமங்களையும் ,உணவு உற்பத்தியையும் சிதைக்கும் அபாய விளைவுகளை ,முக்கிய கருவாக கொண்ட படம்.
ஒரு பூர்ஷ்வா செல்வ நிலை கொண்ட ஒருவனும், அவன் குடும்பம் சார்ந்து நிற்கும் விவசாய சுயம் கொண்ட ஏழை தொழிலாளி ஒருவனும் சகோதரர் போல மன இணைப்பு கொண்டாலும், அந்த கிராமத்தை தொழில்-சார் நகர முகமாக மாற்ற நினைக்கும் படித்த பணக்காரனுக்கும்,விவசாயம் சார்ந்த மண் பற்று கொண்ட அடிப்படை ஏழை மனிதனுக்கும் நிகழும் போராட்ட நிலையில் தொடரும் பிரச்சினைகள்.இடை-நிலை சுயநலமிகளால் தீ மூட்ட பட்டு ,தீயுடனே முடியும் இறுதி காட்சி.
நடிகர்திலகம் இந்த படத்தில் அற்புதமான உடல் கட்டு (கிருஷ்ணாவின் சொற்களில் தேக்கு மர தேகம் ),திராவிட மன்மத எழில் தோற்றம்,இளமை சுடர் விடும் துறு துறுப்பு கொண்டு அவ்வளவு ,இவ்வளவு என்று சொல்ல முடியாத அளவு handsome உச்சத்தில் இருப்பார்.(அதுவும் தம்பியாக நடிக்கும் ,வயது மிக குறைந்த அன்றைய வளரும் இன்னொரு நடிகரின் அருகில் பாதி வயதாக தெரிவார்)
பிரச்சாரமாக தெரியாமல் தன் தொழில்-சார் மண் நேசத்தை இயல்பாக உணர்த்தும் ,பாத்திரத்தை ஒட்டிய நடிப்பு.ஒரு raw என்ற நிலையில் ஜாலி நடன காட்சிகள், எல்லை மீறா காதல் குறும்புகள்,மிதமான நட்பு-பாச வெளியீடுகள்,விறு விறுப்பான சிலம்ப சண்டை,என்று இயல்பான நகைசுவையும் தெளிப்பார். ரவி சந்திரனை இரண்டாவது நாயகனாக்கியிருக்கலாமோ என்ற ஏக்கம் எனக்கு இன்றும் உண்டு.
விஸ்வநாதன் இசையமைப்பில் தேரு வந்தது , வள்ளி மலை மான்குட்டி பாடல்கள் என்னை இன்று வரை மயக்கும் பாடல்கள்.அது தவிர வேஷ பொருத்தம்,கோபாலன் எங்கே உண்டோ,எனக்கு தெரியும் என்ற நல்ல பாடல்கள்.
படத்திற்கு திருஷ்டி சரோஜா தேவி. சோர்வு தெரியும்,தளர்ச்சி கொண்ட வயதான தோற்றத்தில் சிவாஜிக்கு அம்மா போல தோற்றமளிப்பார்.படத்தில் காதல் காட்சிகள் குட்டிசுவரானது இவரால்தான்.ஒட்டாமல் போகும். அதை விட கொடுமை விஜய நிர்மலா.கதாயகியர் இருவரும் கொடூரம்.(ஆனால் இதற்கு பின் வந்த அஞ்சல் பெட்டியில் சரோஜாதேவி ப்ரெஷ் ஆக இளமையாக இருந்தார்)
எல்லோருடைய நல்ல பங்களிப்பு ,அளவான நல்ல திரைகதை-வசனங்கள், உறுத்தாத இயக்கம், பொழுதுபோக்கு, தீவிர பிரச்சினையின் நுணுக்கமான கையாளல்,நடிகர்களின் நிறைவான பங்களிப்பு இருந்தும் ,எதிர்பார்த்த வெற்றி கோட்டை இந்த படம் தொடாதது இது வரை புதிராகவே உள்ளது.
நடிகர்திலகம் , ஒரு இயக்குனர் தயாரிப்பாளருக்கு பணிவது அவசியம் என்றாலும்,இந்தளவிர்க்கா ?என்று கேட்டிருந்தார். எம்.ஆர்.சந்தானம்-ஏ.சி.திருலோக் சந்தர் எங்கே குறி தவறினர்?
Last edited by Gopal.s; 16th December 2014 at 05:37 AM.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
Bookmarks