-
27th December 2014, 10:13 PM
#31
Senior Member
Diamond Hubber

Originally Posted by
pavalamani pragasam
பாவம் சுடலை, இல்லையா?
அப்படியும் சொல்லலாம். ஆடுகள் போல சினைப்பிடிப்பு இயற்கையான முறையில் மாடுகளுக்கு நடக்கவே வழிவகை செய்யணும். வாடகைக்கு ஒரு வாரமோ, ரெண்டு வாரமோ அதற்கான தகுந்த இடங்களில் கொண்டு விடலாம். இயல்பாகவே நடந்தேற வேண்டிய ஒன்றாக இருக்கணும்.
Last edited by venkkiram; 28th December 2014 at 08:07 AM.
சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...
-
27th December 2014 10:13 PM
# ADS
Circuit advertisement
-
17th January 2015, 07:58 AM
#32
Senior Member
Diamond Hubber
கொலை கொலையாய்..
ஒரு கொலைக்கு தீர்வு
இன்னொரு கொலையாம்.
தன்மேல் கொலைப்பழி சுமத்திய
மனிதனையும் கொலை செய்தார் பிரபலம்
சட்டம் குற்றவாளி என சொல்வதற்குள்
பிரபலம் ஒரு பிரபலமாகவே
வாழ்ந்து முடித்திருந்தார்.
Last edited by venkkiram; 17th January 2015 at 08:12 AM.
சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...
-
18th January 2015, 01:02 PM
#33
Senior Member
Platinum Hubber
Eager to watch the trends of the world & to nurture in the youth who carry the future world on their shoulders a right sense of values.
-
1st April 2015, 12:42 PM
#34
Junior Member
Newbie Hubber
When we celebrated our Mothers' 80th BirthDay Grandly,I read the following Poem among the invitees.
இவள் அன்னையல்ல.
இவள் அன்னையல்ல. இந்தியாவின் அன்னைகளின் சித்தரிப்பு
நகல்களின் விஸ்தரிப்பு , அத்தனை கோடியிலும் தனி இவள்.
இவள் தெய்வமுமல்ல.
இவளை மக்களிடம் இருந்து பிரித்து பீடத்தில் ஏற்றி ,சூடம் கொளுத்தி
சிலுவையில் ஏற்றி தொழுது அண்ணாந்து பார்க்கும் மக்களை பெற்றவளில்லை
இவள் ஈன்று புறம் தந்தவள் இல்லை.
இவள் ஈன்று அகம் கொண்டவள். பசியாற மீனளிக்கும் அன்னை,தூண்டில் தர தந்தை
குளத்தில் மீன் பிடிக்கும் வித்தை கற்க குரு என மூன்றுமாய் இவளே
செல்ல துரையின் பட்டு பெண்ணிவள்.
பாதம் பட்டால் நோகாது தேவலோக பஞ்சை தரை விரித்த தந்தை
பாரதி சொன்னால் போதுமா, பாருங்கள் வித்தை கற்ற விந்தை பெண்ணை
கல்லாத வித்தையாய் எதிர்நீச்சல் வித்தகியாம்
அன்பின்மையால் சந்திக்கவொண்ணா சோதனைகள் சுமந்து தெப்பமென
சுற்றம் கரையேற்றிய சீலத்தை செப்ப சீரிளமை தமிழால் இயலுமோ.
அந்தரங்கம் தொந்தரவின் புனித பீடமல்ல என புனைநதவள்
வாழ்வின் இருள் மறைவிடத்தில் பதுங்காமல் ,சூரிய ஒளியில் ,சுற்றியிருப்போர்
சூழ வெளிப் படையான வெற்றி வாழ்வுக்கு விதையிட்டவள் இவளே
ஆக்கி மட்டும் பார்த்தவள் அழித்தலை முற்றும் அறியாதவள்
எங்கள் வாழ்வின் பொக்கிஷ அறைகளில் ,மனித எலும்பு கூடு , விடுங்கள்
மிருகங்களின் எலும்பு கூட்டை கூட சேர விடாத அறச் சுற்றத்தின் ஆக்கமிகு தலைவி.
தன்னை பிரதியெடுத்து மறு வெற்றி கண்டவள்
நல்லதோர் வீணையாய் நலன்கெட்டும், மெல்லதோர் மாற்று வீணைகளாய் மக்களை
சொல்லதோர் பிரதிகளாய் ,நாதம் கூட்டி நாலு பேர் இசைக்க,விசையுறு பந்தாகியவள்
ஒப்பாரும் மிக்காரும் இல்லா திறனாளியிவள்
ஒப்பிடுங்கால் மக்களாகிய நாங்களுமே மட்டு திறனாளிகளே ,இவள் கூட்டு
திறன்களை கொள்ள கௌரவர் அனைய கூட்டம் வேண்டும் ,நாங்களோ நால்வரே
தமிழையொத்த இளமை புதுமை இனிமை
அகவை எண்பதாம் , எட்டிலிருந்து எண்பது வரை யார் வரினும் இவள் அகவை அவரினும்
மிக்காது ஒன்றிரண்டை கழித்து தான் கொள்பவள் ,தமிழின் உண்மை தகைமகள்
எனக்கு சுயமில்லாது மாற்று பெயர் மட்டும் இட்டவள்
அன்னையின் நடமாடும் நிழலே நான் சுயத்தை தொலைக்காத இரவல் சுயமாய்
தும்மலிலும் மூச்சிலும் பேச்சிலும் கலையிலும் வாழ்வின் அலையிலும் இவளின் குறை பிரதியாய்
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
16th April 2015, 06:49 AM
#35
Senior Member
Diamond Hubber

தமிழ்ப் புத்தாண்டுதின
சிறப்பு அர்ச்சனைகளில் ஒலிக்கும்
சமஸ்கிருத மந்திரங்களுக்கு மத்தியில்
தமிழன் தனது தாய்மொழியை
ஒருகணம் நினைத்துப்பார்க்கிறான்
சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...
-
26th April 2015, 10:32 PM
#36
Senior Member
Diamond Hubber
கனவிலும்கூட ஒருதவறையும்
சரியா செய்யமுடியலையே
யாரிடமாவது வசமாக
அகப்பட்டுக் கொள்கிறேன்
நொந்துகொண்டான் சாமானியன்
நிஜத்தில்கூட அவற்றை
செய்ய நினைக்காதேயென
உன்னை எச்சரிக்கத்தான்
அசரீரியாய் ஒலித்தது ஓர் குரல்.
Last edited by venkkiram; 26th April 2015 at 10:41 PM.
சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
1st June 2015, 09:21 AM
#37
Senior Member
Diamond Hubber
உருவகம்
இளங்காற்று
இளம்பனி
இளவேனில்
இளங்கீற்று
இளநீர்
இளஞ்சூடு
இளம்பிறை
இளமை
இளம்பெண்
இளங்காதல்
இளையராஜா
Last edited by venkkiram; 2nd June 2015 at 12:21 AM.
சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
1st June 2015, 09:11 PM
#38
Senior Member
Platinum Hubber
Eager to watch the trends of the world & to nurture in the youth who carry the future world on their shoulders a right sense of values.
Bookmarks