-
31st December 2014, 01:11 PM
#2461
Junior Member
Seasoned Hubber
படித்தவைகளில் பிடித்தது
இரண்டு வகையான மனிதர்களை நாம் நம் வாழ்க்கையில் தினமும் சந்திக்கறோம் - சிலர் இப்படிப்பட்டவர்கள்
"Wherever they go they bring happiness"
இவர்களால் எல்லோருக்கும் மகிழ்ச்சி உண்டாகின்றது , இவர்களை சந்திப்பதினால் நமக்கு அமைதி கிடைக்கின்றது , வாழ்க்கையின் உண்மையான அர்த்தம் புரிகின்றது - கர்வம் , ஆணவம் நம்மைவிட்டு அகல்கின்றது - படித்தவன் , படிக்காதவன் என்ற வேறுபாடு நம்மிடையே ஏற்படுவதில்லை - நம்மை ஆட்டி வைக்கும் மிருகம் இவர்களை சந்திப்பதனால் அடங்கிவிடுகின்றது - அமைதி தெய்வம் நம் முழு மனதில் கோவில் கொள்கின்றது ; மனம் சாந்தி சாந்தி சாந்தி என்று ஓய்வு கொள்ளும் ; பிறக்கும் முன்னே இருந்த உள்ளம் இன்று வந்து விடும்
அடுத்த வகையான மனிதர்கள்
"Whenever they go, they bring happiness"
இவர்கள் இடத்தை காலி பண்ணியவுடன் , அந்த இடத்தில் சந்தோஷமும் , மகிழ்ச்சியும் தானாகவே தேடி ஓடி வந்து விடும் - வாழும் போதே இறந்து விடும் வகையை சேர்ந்தவர்கள் - இவர்கள் தனக்கே பாரமாக உள்ளவர்கள் - மற்றவர்களுக்கு எந்த நல்லதும் செய்யாதவர்கள் , செய்ய தெரியாதவர்கள் ....
ஆண்டு முடிவடையும் இந்த நாளில் நாம் போடும் பதிவுகளால் எல்லோருக்கும் மகிழ்ச்சியை உண்டாக்குவோம் - நாம் முதல் பிரிவை சார்ந்த மனிதர்களாக இருப்போம் !எல்லோரும் எல்லா வளமும் பெற நம் பதிவுகள் ஒரு உறுதுணையாக இருக்கட்டும் .
சமீபத்தில் நான் படித்த ஒரு புத்தகத்தில் இருந்து இந்த பதிவை உங்களுடன் பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்
LUNCH WITH GOD
A little boy wanted to meet God! He packed his suitcase with two sets of his dress and some packets of cakes! He started his journey, he walked a long distance and found a park! He was feeling tired, so, he decided to sit in the park and take some refreshment! He opened a packet of cake to eat!
He noticed an old woman sitting nearby, sad with hunger, so he offered her a piece of cake!
She gratefully accepted it with a wide look and smiled at him! Her smile was so pretty that the boy longed to see it again! After sometime he offered her another piece of cake! Again, she accepted it and smiled at him! The boy was delighted!
They sat there all afternoon eating and smiling, but never said a word! While it grew dark, the boy was frightened and he got up to leave but before he had gone more than a few steps, he ran back and gave the woman a hug and she kissed him with her prettiest smile!
Back home, when the boy knocked the door, his mother was surprised by the look of joy on his face!
She asked him, "What did you do today that makes you look so happy?" He replied, "I had lunch with God!" Before his mother could respond, he added, "You know what? She's got the most beautiful smile I've ever seen in my life!"
Meanwhile, the old woman, also radiant with joy, returned to her home! Her son was stunned by the look of peace on her face and asked, "Mom, what did you do today that made you so happy?" She replied, "I ate cakes in the park with God!"
Before her son responded, she added, "You know, he's much younger than I expected!"
Too often we underestimate the power of a touch, a smile, a kind word, a listening ear, an honest compliment, or the smallest act of caring, all of which have the potential to turn a life around! Remember, nobody knows how God will look like! People come into our lives for a reason, for a season or for a lifetime! Accept all of them equally.
LET THEM SEE GOD IN YOU..!!
Itni Shakti Hamein Dena Data
A heart touching sweet & inspiring ever green song .
Ae maalik tere bande hum
The transportation of both the lyrics and music composition to a different level is very evident with the soul rendition of Lathaji.
O Palan Haare -
ஹாப்பி இன்றுமுதல் ஹாப்பி யாக இருக்கட்டும் நம் வாழ்க்கை !
ஆடாத மனமும் உண்டோ ???
-
Post Thanks / Like - 2 Thanks, 4 Likes
-
31st December 2014 01:11 PM
# ADS
Circuit advertisement
-
31st December 2014, 02:11 PM
#2462
அன்பு ரவி சார்
நன்னா சொன்னேள் போங்கோ
பாலச்சந்தர் இன் மன்மத லீலை (1976) யில் இதை ஒட்டியே வசனமும் வரும். ஈஸ்வர ஐயர் (சுப்ரமணியம்) தனது கம்பெனி எஜமான் மதுவிடம் மாட்டி கொண்டு முழிக்கும் போது அவர் சொல்லும் வசனமே இது தான் .
'சில பேர் எங்கே எல்லாம் போறாளோ அங்கே எல்லாம் சந்தோசம் கொடுப்பா ..சில பேர் எப்ப போறாளோ அப்ப தான் சந்தோசம் '
எல்லோரும் இன்புற்று இருக்க நினைபதுவே அல்லாமல் யாமொன்று அறியோம் பராபரமே
Last edited by gkrishna; 31st December 2014 at 02:46 PM.
gkrishna
-
Post Thanks / Like - 0 Thanks, 3 Likes
-
31st December 2014, 03:59 PM
#2463
Senior Member
Senior Hubber
விஜயகுமார் அருண் பிரசாத் மூவீஸ் 'பொண்ணுக்குத் தங்க மனசு'படத்தில் பிரபலமானார். இந்தப் படத்தில் அவருக்கு சொந்தக் குரல் கிடையாது. பி.டி ரட்சகன் என்பவர்தான் விஜிக்குக் குரல் கொடுத்திருப்பார். // ஆமாம் வாசு சார்..அந்தக் குரல் இருக்கே ஹாரிபிள்..ம்ம் விதுபாலாவை நினச்சு அட்ஜஸ்ட் பண்ணிக்கிட்டு பார்த்தேன் தேன் சிந்துதே வானம் மறக்க முடியுமா..
எழுத முடியுமா இன்னிக்குன்னு தெரியலை.. எழுதப்பார்க்கிறேன்..
நண்பர்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்..
புதுக்கனவு லாகிரியில் பூப்போட்ட தாவணியில்
..பொங்கிவரும் இளநெஞ்சம் போட்டுவரும் துள்ளலென
பதுமையென இருந்துவிட்ட பழங்காலம் போய்விடவே
..பக்குவமும் புதுமைகளும் பலப்பலவாய்த் தருவதற்கு
குதித்தோடி வருகிறதே குதூகலமாய்ப் புதுவருடம்
..குளுமைகளும் ரசனைகளும் இன்பங்களும் பலவிதமாய்
மதுரமென உம்வாழ்வில் மகிழ்ச்சியுடன் பிரவகிக்க
..மனமார வாழ்த்துவெனே மகாஷக்தி அருளிடுவாள்..!
முதல் வரி மட்டும் வெகுகாலம் முன்னால் குமுதம் அட்டைப் படத்தில் ஒரு புலி படம் போட்டு சில வார்த்தைகள் கொடுத்து கவிதை எழுதச் சொல்லியிருந்தார்கள்- அதில் வந்த ஒரு கவிதையின் முதல் வரி புதுக்கனவு லாகிரியில்.. அதை மட்டும் எடுத்தாண்டேன்..
Last edited by chinnakkannan; 31st December 2014 at 04:06 PM.
-
Post Thanks / Like - 1 Thanks, 4 Likes
-
31st December 2014, 06:07 PM
#2464
Junior Member
Seasoned Hubber
எல்லாரும் கொண்டாடுவோம்
திரு.வாசு சார், தங்களின் விரிவான பதிலுக்கு நன்றி. ஒரு தகவல் கேட்டால் அதற்காக நீங்கள் மெனக்கெடுவதும் அது தொடர்பான விவரங்களை ஆதாரங்களோடு பதிவிடும் உங்கள் ஆர்வமும், உழைப்பும்.......... தகவல் சுரங்கம் நீங்கள். நன்றி சார்.
திரு.ரவி சார், தங்களின் படித்தவைகளில் பிடித்தது கட்டுரையும் பாடல்களும் அருமை.
நாளை ஆங்கிலப் புத்தாண்டு. வைகுண்ட ஏகாதசி வேறு (இன்று அதிகாலை சொர்க்க வாசல் திறப்பு) பெருமாளின் அருளை வேண்டி, புத்தாண்டை எல்லாரும் மகிழ்ச்சியுடன் கொண்டாடுவோம்.
அதைக் கொண்டாடும் வகையில் ராமாயணம், தமிழிசை கலந்து நெட்டில் நான் படித்து ரசித்த ஒரு பதிவு. அனைவருக்காகவும் இங்கே.
----------------------------------------
ராமாயணத்தில் ஒரு உணர்ச்சிகரமான தருணம்.
சீதையிடம் ராமன் விடைபெற்றுச் சொல்ல வருகிறான். “நான் கானகம் போகிறேன்; பதினான்கு வருடத்தில் திரும்பி வந்து விடுவேன், நீ வருத்தப் படாமல் இரு” என்கிறான். அப்போது சீதை கேட்கிறாள்:
எப்படி மனம் துணிந்ததோ சாமி வனம்போய் வருகிறேன்
என்றால் இதை ஏற்குமோ பூமி (எப்படி)
கரும்பு முறித்தாப் போலே சொல்லல் ஆச்சுதோ – ஒரு
காலும் பிரியேன் என்று சொன்ன சொல்லும் போச்சுதோ
வருந்தி வருந்தி தேவரீர் வெல்ல
வார்த்தையால் கொல்லாமல் கொல்ல
இரும்பு மனதுண்டாச்சு தல்லோ
என்னை விட்டுப் போகிறேன் என்று சொல்ல (எப்படி)
அருணாசலக் கவிராயரின் இராம நாடகத்தில் உள்ள ஒரு கீர்த்தனை இது. சஞ்சய் சுப்ரமணியம் பாடும் போது “வருந்தி வருந்தி”யில் வரும் குழைவும், “கொல்லாமல் கொல்ல”வில் வரும் அழுத்தமும் இந்தப் பாட்டின் *பா*வத்தை வெளிப்படுத்தும் விதமே அலாதியாக இருக்கும். நல்ல கற்பனையும் மனோதர்மமும் கொண்ட பாடகர்கள் சஞ்சரிக்க உகந்த இது போன்ற இடங்கள் இராம நாடகத்தின் பல கீர்த்தனைகளில் உண்டு.
பண்டிதர்கள் மட்டுமே பயின்று வந்த கம்பரின் ராமாயணத்தை, பாமரர்களும் புரிந்து கொண்டு ரசித்து அனுபவிக்கும் வண்ணம் கீர்த்தனைகளாகப் புனைய வேண்டும் என்பது தான் 18ம் நூற்றாண்டில் வாழ்ந்த அருணாசக் கவிராயர் (1711-1778) கொண்ட முக்கிய நோக்கமாக இருந்திருக்கிறது. வணிகர் குலத்துதித்த அருணாசலம் சிறுவயதிலேயே பல நூல்களைக் கற்றுப் புலமை பெற்றிருந்தார். தமது ஊரான தில்லையாடியில் காசுக்கடை நடத்தி வந்தார். வியாபார நிமித்தம் பயணம் செய்யும்போது எதேச்சையாக சீர்காழியில் உள்ள தருமபுரம் மடத்தில் தங்க நேர்ந்தபோது, அவரது தமிழ்ப் புலமையால் கவரப்பட்ட மடத்தின் அதிபர் அவரை சீர்காழிக்கே வரவழைத்து, தமிழ்த் தொண்டும் ஆசிரியப் பணியும் செய்யுமாறு பணித்தார். மடத்தில் பாடம் சொல்லியதுடன், அக்காலத்திய தமிழ்ப் புலவர்களது பாணியில் தலபுராணம், பிள்ளைத்தமிழ், அந்தாதி, கோவை, கலம்பகம், வண்ணம் என்று பல சிற்றிலக்கிய நூல்களையும் கவிராயர் எழுதியிருக்கிறார். அவரிடம் பாடம் கேட்ட வெங்கட்ராமய்யர், கோதண்ட ராமய்யர் என்ற இரு சங்கீத வித்வான்களின் வேண்டுகோளுக்கு இணங்கி இராமநாடகக் கீர்த்தனைகளைப் புனைந்தார். இரண்டு வித்வான்களும் பல ஊர்களிலும் சென்று அந்தக் கீர்த்தனைகளைப் பாடிப் பிரபலப் படுத்தினர். அந்தத் தனித்துவமிக்க இசைத்தமிழ் நூல் தான் இன்றளவும் அருணாசலக் கவிராயர் பெயரை அழியாமல் நிலைநிறுத்தியிருக்கிறது.
சைவ சமயத்தவராக இருந்தாலும், அருணாசலக் கவிராயரின் கீர்த்தனைகள் அனைத்திலும் ராமபக்தி ததும்புவதைக் காணலாம்.
“ராமனைக் கண்ணாரக் கண்டானே – விபீஷணன் கை
மாமுடி மேல் வைத்துக் கொண்டானே”
என்ற கீர்த்தனையில் ஸ்ரீராமனின் திருமேனியழகை வர்ணிக்கிறார்.
அறிவார் யார் உன்னை அறிவார் யார்..
அறியார் யார் மானிடம் போலே குறியா வேஷம் கொண்டதாலே
சிறியேன் செய்த பிழை தன்னைக் குறியாதே ராகவா, உன்னை (அறிவார்)
என்று விராதன் துதியாக வரும் கீர்த்தனையில் ஸ்ரீராமனைப் பரம்பொருளாகவே எண்ணித் துதிக்கிறார்.
இராம நாடகமும் கம்ப ராமாயணத்தைப் போலவே ஆறு காண்டங்களைக் கொண்டது. பல்லவி, அனுபல்லவி, சரணம் என்ற வடிவ இலக்கணம் கொண்ட கீர்த்தனங்கள் (தருக்கள்), கண்ணிகள் (திபதைகள்) ஆகியவை இதில் காணும் மையமான இசைப் பாடல் வகைகள். இவற்றோடு கூட, விருத்தம், கலித்துறை, கொச்சகம் போன்ற செய்யுள்களும் இசைப்பாடல்களுக்கு முன்பின்னாக அமைந்துள்ளன. என்னிடம் உள்ள பதிப்பில், 450 பக்கங்களில் விரியும் நூல். கீர்த்தனங்கள் மட்டும் 250க்கு மேல் இருக்கும்.
இராம நாடகத்தில் சில கீர்த்தனைகள் மற்றவற்றை விடப் பரவலாக உள்ளதற்குக் காரணம் இருக்கிறது.
“ராமசாமி தூதன் நானடா – அடடா ராவணா
நானடா என் பேர் அனுமானடா… “
“அடித்தானே அசோகவனம் தன்னை முடித்தானே அனுமன்..”
இவை போல ஜனரஞ்சக மெட்டுகளில் அமைந்த பாட்டுக்கள் அக்காலத்தில் நாடக மேடைகளில் பாடி ரசிக்கப் பட்டிருக்கக் கூடும். இசை நாடகங்கள் வழக்கொழிந்த பின், அந்தப் பாடல்களைப் பாடுவார் யாரும் இல்லை. ஆனால் செவ்வியல் தன்மை கொண்ட கணிசமான கீர்த்தனைகள் இன்னமும் பிரபலமாக நீடித்து வருவதன் காரணம் அவற்றின் இசை ஒழுங்கும், உணர்ச்சி பூர்வமான தருணங்களும், அர்த்த கம்பீரமும், ஆரம்ப கால வித்வான்கள் அவற்றைத் தொடர்ந்து தங்கள் கச்சேரிகளில் பாடி வந்ததும் என்று சொல்லலாம்.
யாரோ இவர் யாரோ – என்ன பேரோ அறியேனே (யாரோ)
கார் உலாவும் சீர் உலாவும் மிதிலையில்
கன்னி மாடந்தனில் முன்னே நின்றவர் (யாரோ)
சந்த்ரபிம்ப முக மலராலே என்னைத்
தானே பார்க்கிறார் ஒருக்காலே
அந்த நாளில் தொந்தம் போலே உருகிறார்
இந்த நாளில் வந்து சேவை தருகிறார் (யாரோ)
இந்த அழகிய பைரவி ராகக் கீர்த்தனையைக் கேட்டிருக்காத சங்கீத ரசிகரைக் காண்பது அபூர்வம். “இவர் யாரோ” என்று வருவதால், ராமனைக் கண்ட சீதை பாடும் பாட்டு இது என்று பலர் எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், உண்மையில் சீதையை கன்னிமாடத்தில் கண்டு, வீதியில் நடந்து வரும் ராமன் பாடுவது இது. இளம்பெண்ணைக் கூட “இவர்” என்று மரியாதையுடன் அழைக்கும் வழக்கு இரு நூற்றாண்டு முன்பு வரை கூட தமிழ் நாட்டில் இருந்திருக்கிறது என்று தெரிகிறது.
ஸ்ரீரங்கத்தில் கம்பர் அரங்கேற்றிய அதே மண்டபத்தில் தனது இராம நாடகத்தையும் அரங்கேற்ற வேண்டும் என்று விரும்பி, அவ்வாறே நிகழ்த்தியும் காட்டினார் அருணாசலக் கவிராயர்.
“ஏன் பள்ளி கொண்டீரையா – ஸ்ரீரங்கநாதரே நீர்
ஏன் பள்ளி கொண்டீரைய
என்ற கீர்த்தனை இந்தத் தருணத்தில் அவர் பாடியதாக சொல்லப் படுகிறது.
மாசிலாத மிதிலேசன் பெண்ணுடன் வழிநடந்த இளைப்போ
தூசிலாத குகன் ஓடத்திலே கங்கைத் துறைகடந்த இளைப்போ
மீசுரமாம் சித்ரகூடச் சிகரக் கல்மிசை கிடந்த இளைப்போ
காசினிமேல் மாரீசனோடிய கதி தொடர்ந்த இளைப்ப
என்று இந்தப் பாடலின் சரணங்களில் வரும் துரித கதியிலான சொற்கட்டுக்கள் அற்புதமானவை.
கவிராயர் கம்பராமாயணத்தை மிகவும் ஆழ்ந்து கற்று அதில் தோய்ந்தவர் என்பது அவர் கம்பனின் சொல்லாட்சிகளை அப்படியே பயன்படுத்துவதில் இருந்து தெரிகிறது. ஆனால், நாடகம் என்பது முற்றிலும் வேறு வடிவம் என்ற பிரக்ஞையுடன், பல இடங்களில் உரையாடல் தன்மை கொண்ட பாட்டுக்களையும், மக்களின் அன்றாட சொல்வழக்குகளையும் மிகவும் சுவாரஸ்யமான வகையில் சேர்த்திருக்கிறார்.
ராமன் அணைகட்ட வழிவேண்டும் போது, சமுத்திர ராஜன் வந்து அடிபணியும் பாடல்.
சரணம் சரணம் ரகு ராமா – நீ என்னைத்
தற்காத்தருள் பரந்தாமா… (சரணம்)
மட்டி மீன் ஒன்றோடொன்று மல்லாடி, அவர்பூணும்
வழக்குத் தீர்க்கப் போனேன்; இதுக்கோ உன் மனம் கோணும்
எட்டும் ரெண்டும் தெரியா எனக்கித்தனையோ காணும்
என்ன பிழை செய்தாலும் நீயே பொறுக்க வேணும்…. (சரணம்)
தியாகராஜரின் கீர்த்தனங்களைப் போல, இராம நாடகக் கீர்த்தனைகளின் ராகங்கள் வாக்கேயக் காரரால் தெளிவாக வரையறை செய்யப் படவில்லை என்றே கருத வேண்டியுள்ளது. ஒரு சிலவற்றைத் தவிர பெரும்பாலான கீர்த்தனைகளை புத்தகத்தில் கொடுத்திருக்கும் ராகத்தில் யாருமே பாடிக் கேட்டதில்லை. “யாரோ இவர் யாரோ” – சாவேரி என்கிறது புத்தகம், பைரவி தவிர வேறு ஒரு ராகத்தில் அந்தப் பாடலைக் கற்பனை செய்யவே முடியவில்லை. “சரணம் சரணம் ரகுராமா” – எல்லாருமே புத்தகம் கூறும் அசாவேரி ராகத்தில் தான் பாடுகிறார்கள். அது நன்றாகப் பொருந்தவும் செய்கிறது.
கண்டேன் கண்டேன் கண்டேன் சீதையைக்
கண்டேன் ராகவா…
பனிக்கால வாரிஜம் போல நிறம் கூசி
பகல் ஒரு யுகம் ஆகக் கழித்தாளே பிரயாசி
நினைத்தங்கே ராவணன் அந்நாள் வர, சீசீ
நில்லடா என்றேசி
தனித்துத் தன் உயிர்தன்னைத் தான்விட மகராசி
சாரும்பொழுது காணும் சமயமிதுவே வாசி
இனித்தாமதம் செய்யல் ஆகாதென்றிடர் வீசி
ராம ராம ராம என்றெதிர்ப் பேசி (கண்டேன்)
கண்களில் கண்ணீர் வராமல், தழுதழுக்காமல் நெஞ்சு விம்மாமல், உள்ளமுருக்கும் இந்தக் கீர்த்தனையைக் கேட்க முடியாது.
ஒரே கீர்த்தனை தான். ஆனால் அதில் பல வண்ணங்களைக் காட்டி விட முடியும். நெய்வேலி சந்தான கோபாலனின் வசந்தாவில், ஓடோடி வந்து படபடவென்று துடிப்பாக “கண்டேன் கண்டேன்” என்று ராமனுக்கு செய்தி சொல்கிறான் அனுமன். பாம்பே ஜெயஸ்ரீயின் பாகேஸ்ரீயில், இலங்கையில் தான் கண்ட தெய்வத்தை எண்ணி உருகி நெகிழ்ந்து தழுதழுத்துப் போகிறான்.இரண்டு விதமான *பா*வங்களுக்குமான சாத்தியங்கள் இந்தக் கீர்த்தனையில் அழகாகப் பொருந்தி வருகின்றன.
ராக பாவத்தில் லயிப்பது, திளைப்பது என்று வந்து விட்டால், ரசனையுள்ள இசைக்கலைஞனுக்கு தோதான “வெளி” இராமநாடகக் கீர்த்தனையில் நிரம்பவே உண்டு.
சஞ்சய் சுப்ரமணியத்தின் இசைப் பயணம் குறித்த “ஆரார் ஆசைப்படார்” என்ற ஆவணப் படத்தில், அவர் முதிய நாதஸ்வர வித்வான் எஸ் ஆர் டி வைத்யநாதனை சந்தித்து உரையாடும் காட்சி மிகவும் ரசிக்கும் படியாக இருக்கும்.
நவரத்னத் தங்கத் தோடு நடையிலே அன்னப் பேடு
அவனிமேல் இல்லை ஈடு அவளுக்கவளே சோடு….
என்று சரணத்தை ஆற அமரப் பாடி,
காணவேணும் லட்சம் கண்கள் சீதாதேவி தன்
காலுக்கு நிகரோ பெண்கள்…
என்று பல்லவியில் வந்து முடிக்கும் போது, அந்தச் சுருட்டி அப்படியே நம்மை வாரிச் சுருட்டிக் கொள்கிறது. சீதையின் அழகை இராவணனுக்கு எடுத்துச் சொல்லி சூர்ப்பணகை பாடுவதாக வரும் பாட்டு இது.
அரியக்குடி ராமானுஜ ஐயங்கார் ஆரம்ப காலத்திலிருந்தே தமிழ்க் கீர்த்தனங்களை நிரம்ப தனது கச்சேரிகளில் பாடி வந்தவர். ஒருமுறை ஒரு கச்சேரியில் அவர் தன்னை மறந்து லயித்துப் பாடிக்கொண்டிருக்க, கூட்டத்தில் ஒரு ஆள் தமிழ்ப் பாட்டு தமிழ்ப் பாட்டு என்று நச்சரித்துக் கொண்டே இருந்தாராம். சிங்கத்தை சீண்டினால் அது சும்மா இருக்குமா? அரியக்குடி அடுத்ததாக ஒரு பாட்டை கம்பீரமாக ஆரம்பித்தாராம் -
ஆரடா குரங்கே – இங்கே வந்த நீ
ஆரடா குரங்கே!
இராம நாடகக் கீர்த்தனைகள் நவரசமும் பொருந்திய இசைப் படைப்புக்கள் என்பதற்கு வேறென்ன சான்று வேண்டும் !
courtesy - net
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
Last edited by KALAIVENTHAN; 31st December 2014 at 06:49 PM.
-
Post Thanks / Like - 1 Thanks, 3 Likes
-
31st December 2014, 07:30 PM
#2465
Senior Member
Seasoned Hubber
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
Post Thanks / Like - 1 Thanks, 3 Likes
-
31st December 2014, 10:00 PM
#2466
இசையால் வசமான எல்லா நல்ல இதயங்களுக்கு புத்தாண்டு வாழ்த்துகள்..
-
Post Thanks / Like - 1 Thanks, 2 Likes
-
31st December 2014, 10:01 PM
#2467
Senior Member
Senior Hubber
//ராமசாமி தூதன் நானடா – அடடா ராவணா
நானடா என் பேர் அனுமானடா… “// சிலோன் வானொலியில் சம்பூர்ண ராமாயணம் – டி.கே.பகவதி ட்ரூப்பின் வானொலி வடிவத்தில் இந்தப் பாடல் கேட்டிருக்கிறேன்.. அடடா.. அடடா..என அனுமான் இழுக்கும் அழகே அழகு..
//யாரோ இவர் யாரோ – என்ன பேரோ அறியேனே (யாரோ)
கார் உலாவும் சீர் உலாவும் மிதிலையில்// ரொம்பப் பிடிச்ச பாட்டுங்க கலைவேந்தன்..
முன்னாலே முன்னாளில் (ஹை!) எழுதிப்பார்த்த க் குட்டிப் பாட்டு..
ஆண்மக னென்று உன்னை
..அணங்குநான் எங்கு சொல்வேன்
ஊண்தனை மட்டு மல்ல
…உணர்வுகள் கொண்ட என்னை
தீண்டினாய் ராவ ணாவுன்
..திமிரினை என்ன சொல்வேன்
வீண்மக னென்று நீயும்
…விந்தையாய் ஆன தென்ன
கால்களை இறுக்க வைத்துக்
..கவலையில் உடலும் வாட
நீள்விழி உயர்த்தி சீதை
..நின்றவந் தரக்கன் மீது
வேல்களாய்க் கூர்மை யான
..வென்றிடும் சொற்கள் எய்ய
ஊழ்வினை பற்ற பின்னாள்
…உயிரினை விட்டா னன்றோ..
(ஏதோ எனக்குத் தெரிந்த சுருக்க்கமான ராமாயணம்!)
ராம நாடகக் கீர்த்தனைகளைப் பற்றி வெகு அழகாக எழுதியிருக்கிறீர்கள் கலைவேந்தன்…ம்ம் புதுவருடம் பிறக்க சிலமணித் துளிகள் தான் உள்ளன ..அண்ட் அண்டை நாட்டிலிருந்து உற்வுகள் வந்து கொண்டும் இருக்கிறார்கள்..வீரிவாக எழுத இயலவில்லை.. இன்னும் இன்னும் எழுதுங்கள் கலைவேந்தன் சார்..உங்கள் எழுத்துக்கலை மேல்மேலும் வரும் ஆண்டிலும், வரும் ஆண்டுகளிலும் ப்ரகாஸிக்கட்டும்!
உங்களுக்காக..ராமன் கதை கேளுங்கள் பாடல்
http://www.youtube.com/watch?feature...&v=ra6qETtPYz0
Last edited by chinnakkannan; 31st December 2014 at 10:10 PM.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
1st January 2015, 07:35 AM
#2468
Junior Member
Newbie Hubber
Originally Posted by
g94127302
படித்தவைகளில் பிடித்தது
இரண்டு வகையான மனிதர்களை நாம் நம் வாழ்க்கையில் தினமும் சந்திக்கறோம் - சிலர் இப்படிப்பட்டவர்கள்
"Wherever they go they bring happiness"
இவர்களால் எல்லோருக்கும் மகிழ்ச்சி உண்டாகின்றது , இவர்களை சந்திப்பதினால் நமக்கு அமைதி கிடைக்கின்றது , வாழ்க்கையின் உண்மையான அர்த்தம் புரிகின்றது - கர்வம் , ஆணவம் நம்மைவிட்டு அகல்கின்றது - படித்தவன் , படிக்காதவன் என்ற வேறுபாடு நம்மிடையே ஏற்படுவதில்லை - நம்மை ஆட்டி வைக்கும் மிருகம் இவர்களை சந்திப்பதனால் அடங்கிவிடுகின்றது - அமைதி தெய்வம் நம் முழு மனதில் கோவில் கொள்கின்றது ; மனம் சாந்தி சாந்தி சாந்தி என்று ஓய்வு கொள்ளும் ; பிறக்கும் முன்னே இருந்த உள்ளம் இன்று வந்து விடும்
அடுத்த வகையான மனிதர்கள்
"Whenever they go, they bring happiness"
இவர்கள் இடத்தை காலி பண்ணியவுடன் , அந்த இடத்தில் சந்தோஷமும் , மகிழ்ச்சியும் தானாகவே தேடி ஓடி வந்து விடும் - வாழும் போதே இறந்து விடும் வகையை சேர்ந்தவர்கள் - இவர்கள் தனக்கே பாரமாக உள்ளவர்கள் - மற்றவர்களுக்கு எந்த நல்லதும் செய்யாதவர்கள் , செய்ய தெரியாதவர்கள் ....
ஆண்டு முடிவடையும் இந்த நாளில் நாம் போடும் பதிவுகளால் எல்லோருக்கும் மகிழ்ச்சியை உண்டாக்குவோம் - நாம் முதல் பிரிவை சார்ந்த மனிதர்களாக இருப்போம் !எல்லோரும் எல்லா வளமும் பெற நம் பதிவுகள் ஒரு உறுதுணையாக இருக்கட்டும் .
சமீபத்தில் நான் படித்த ஒரு புத்தகத்தில் இருந்து இந்த பதிவை உங்களுடன் பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்
ரவி,
விடை பெற்று விட்ட பிறகு கோழை போல பதிவுகள் போட்டு தாக்குவதை நிறுத்து. உன்னுடைய பதிவுகள் படிக்க பட வேண்டும் என்பதற்காக எத்தனை பேரை காக்காய் பிடித்தாய் ,எவ்வளவு முறை நீயே வந்து வந்து போனாய் என்பதை ஊரே பார்த்து சிரித்தது. நீ எந்த வகை மனிதன் என்று ஊருக்கே தெரியும்.
உன் பெண்மை ததும்பும் குரலில் நீ சொன்னது. நாமெல்லாம் படிச்சவா........நான் சொன்னது ,'நாமெல்லாம் படிச்சதை யார் வேணுமானாலும் படிக்கலாம்".
பிறகும் உன் திரிசம வேலை தொடர்கிறது.நீ அகந்தை குறைந்த எல்லோரையும் சரி சமமாக எண்னும் உண்மை மனிதனா?
ரவி ஒன்று புரிந்து கொள். என்னால் வாழ்ந்தவர்கள் மட்டுமே உண்டு. நாக்கில் தேனை சுமந்து ,நரி வேலை பார்க்கும் உன்னால் என்னை உணர முடியாது. இனியாவது குரலை போல ,மனதிலும் பெண்மை சுமக்காமல் ,நேரடியாக வா. நான் அதனால் மகிழ்ச்சியே அடைவேன். எனக்கு கோழைகள்,துதி பாடிகள்,சந்தர்ப்பவாதிகள்,சமய அடிப்படைவாதிகள் ,திறமை அற்றவர்கள் இவர்களை அறவே பிடிக்காது.
தைரியமாக என்னை தாக்கிய வாசு,ராகவேந்தர், ரவிகிரன் சூர்யா,கலை இவர்களை நான் மதித்தே வந்துள்ளேன்.நான் போய் விட்டேன் என்றதும் தைரியம் பெறாதே. உன்னை மாதிரி பயந்து ஓடி ,புற கடை வழியாக வந்து ஹிட்டுக்கு அலைய மாட்டேன்.
எல்லோருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்து நைச்சியமாக போகலாம் என்று பார்த்தால் விட மாட்டாய் போலுள்ளது.
நன்கு சுவையாக புன்முறுவலுடன் தாக்க ,உன்னை கொம்பு சீவி கொண்டிருக்கும் கலையிடம் கலை பயிலு.உன் எழுத்துக்கள் வள வள வென்று nuance அற்று தட்டையாக உள்ளது. கொஞ்சம் படித்தவன் என்ற அகந்தையை எழுத்தில் மறைமுகமாக காட்டு.
நான் வாசு,முரளி,கார்த்திக் ,சின்ன கண்ணன்,சாரதி,ராகவேந்தர்,கலை வேந்தன் போன்றவர்களையே கற்றவர் வரிசையில் வைப்பேன்.இவர்கள் அகந்தை கொண்டாலும் மகிழ்ச்சியே.
Last edited by Gopal.s; 1st January 2015 at 08:26 AM.
-
1st January 2015, 09:12 AM
#2469
Senior Member
Diamond Hubber
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
1st January 2015, 09:19 AM
#2470
Senior Member
Diamond Hubber
அனைவருக்கும் என் இதய தெய்வத்தின் சார்பில் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
Bookmarks