-
31st May 2015, 08:52 AM
#451
Senior Member
Seasoned Hubber

Originally Posted by
vasudevan31355
விஜயா, சோவின் 'ஒரு அசடாட்டம்', சொர்ணாவின் 'நன்றி சொல்ல வார்த்தை இல்லை கண்ணனே', சௌகார் சுஜாதாவின் 'மஞ்சள் முகத்திலே குங்குமப் பொட்டு, 'என் செல்லக்கிளி' என்று விஸ்வரூபம் எடுத்து விட்டீர்களே ஜி! அனைத்தும் அரிதானவைதான்.
கொண்டாங்க உங்க முதுகை. சொறிந்து விடுகிறேன்.

புரியுதா?

இந்தாங்க முதுகு. கை எட்டுதா பாருங்க ஹி ஹி...
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
31st May 2015 08:52 AM
# ADS
Circuit advertisement
-
31st May 2015, 10:43 AM
#452
Senior Member
Senior Hubber
ஹாய் ஆல்.. குட்மார்னிங்க்..
ஹாய் வாசு, ராஜேஷ்.
வாசு, புலி பாஞ்சுடுச்சா..
*
தமிழ் சீரியல்கள், ஹிந்தி சீரியல்கள் எதுவும் நான் பார்ப்பதில்லை.. சின்னதாய் உடலில் எனக்கு க் கொப்பளம் புறப்படும் பார்த்தால்..
முன்பு பார்த்த போது-
தமிழ் சீரியல் பெண்கள் புடவை அணிந்திருந்தால் முழுதும் மூடிய ரவிக்கை தான் அணிந்திருப்பார்கள்..இந்தக் கால சீரியல்களில் புடவை வயதானவர்கள் தான் அணிகிறார்கள்..இளவயது நங்கையருக்கெல்லாம் சுடிதார் தான்.
ஹிந்தி சீரியல்கள் தான் என் வீட்டில் ஓடும்.. நான் பாட்டுக்கு அடுத்த அறையில் அல்லது டிவி அறையிலும் கூட கம்ப்யூட்டர்/லேப்டாப்புடன் தான் இருப்பேன்..அப்படியும் சில பல கண்களில் படும் ..மனதில்பதியாது..
வெள்ளை வெளேர் ப் பன்னீர் மீது கொஞ்சம் கடலைமாவைக் கலந்தாற்போல பொன்னிறமஞ்சளில் ஹிந்தி சீரியலின் நங்கையரின் முதுகு தென்படும்.. காட்சியின் தேவைக்கேற்பவோ அலலது டைரக்டர் சொல்லியதாலோ என்னவோ ரவிக்கையின் பின்புறம் ஒரே ஒரு முடிச்சு மட்டும் போட்டுக் கொண்டு இருப்பார்கள்.. அல்லது ஜன்னல் அல்லது கண்ணாடி அணிந்திருக்கும் ரவிக்கைகளும் உண்டு ..அதைத்தாண்டியும் முதுகு தென்படும்..இதைப் பார்த்தாலும் பார்க்காதது போல் நான் கடமையே கண்ணாயிரமாக -பரப்பிரம்மமாக -எழுதிக் கொண்டிருப்பேன். அன்றி அந்த முதுகுகள் பற்றி எனக்கு எதுவும் தோன்றியது கிடையாது (உண்மைங்க.. நம்புங்க)
அதுவும் சொறிவது என்பது நினைத்துக் கூட ப் பார்க்காத விஷயம் ( நினைத்தால் அடி விழும் என்பது வேறு விஷயம்)
இது தான் எனது நிலைப்பாடு..
தாலாட்டுப் பாடிடும் தாயின் மொழிபோலே
பாராட்டு மாறிவிடும் பார்..
என்று முன்பு எழுதியிருந்தேன்
இங்கு எழுதுபவர்கள் ஏதாவது பைசா வருகிறது என்றா எழுதுகிறார்கள்.. முகம்,வயது, பதவி - எதையும் அறியாத அன்பு நெஞ்சங்கள், தெரிந்ததெல்லாம் அன்பு மட்டுமே.. ஒரு ஹாய் நன்னாருக்கு எழுதினது என்று சொல்வது எநத விதத்தில் தவறாகும் எனத் தான் எனக்குத் தெரியவில்லை..
*
கோ, கட்டழகுப் பதிவு உங்களைக் கவர்ந்ததில் எனக்கு மிகவும் சந்தோஷம்.. நன்றி..
Last edited by chinnakkannan; 31st May 2015 at 10:48 AM.
-
31st May 2015, 11:06 AM
#453
Senior Member
Diamond Hubber

Originally Posted by
chinnakkannan
ஹாய் ஆல்.. குட்மார்னிங்க்..
ஹாய் வாசு, ராஜேஷ்.
வாசு, புலி பாஞ்சுடுச்சா..

புலி பாய்ஞ்சா யானை அதை தும்பிக்கையால் சுழற்றி அடித்து நீங்கள் பார்த்ததில்லையா? இப்போது பார்த்திருப்பீர்களே!
-
31st May 2015, 11:08 AM
#454
Senior Member
Diamond Hubber
//இங்கு எழுதுபவர்கள் ஏதாவது பைசா வருகிறது என்றா எழுதுகிறார்கள்.. முகம்,வயது, பதவி - எதையும் அறியாத அன்பு நெஞ்சங்கள், தெரிந்ததெல்லாம் அன்பு மட்டுமே.. ஒரு ஹாய் நன்னாருக்கு எழுதினது என்று சொல்வது எநத விதத்தில் தவறாகும் எனத் தான் எனக்குத் தெரியவில்லை..//
மர மண்டைகளுக்கு புரிஞ்சா சரி!
-
31st May 2015, 02:01 PM
#455
Senior Member
Senior Hubber
காதலி காதலர்களுக்குள் ஏற்படும் பொய்க்கோபத்திற்குப் பெயர் தான் ஊடல் (ஹை என்ன கண்டு பிடிப்பு)
முன்பு எழுதிய கவிதை..
நாமென்றால் நானென்றாய் நங்கை உந்தன்
.. நாயகந்தான் என்றுசொல மறுத்தே நீயும்
போமென்றாய் எங்கென்றால் விழித்துப் பார்த்து
..பொழுதிலையோ உமக்கென்றாய் மேலும் நானும்
பூமென்மை புலர்காலை போல இங்கே
...புள்ளினமாய்க் கற்பனைகள் கலந்து கட்டி
பூமியிலே உன்னோடு வாழப் பாடல்
..புனைந்தாலோ சிரிக்கின்றாய் ஏனோ மானே..
அந்தக் காலத்தில் தேவி தியேட்டரில் எஸ்வி.சேகர் நாயகனாகப் பார்த்தபடம்ஸ்பரிசம்..கல்லூரிக் காதல் கதை..அந்தக்கால சூழ் நிலைகளுக்கேற்ப கதானாய்கன் கதா நாயகி லவ் செய்ய கடைசியில் மரபுப்படி மங்களகரமாகச் சாகடித்திருப்பார்கள்..
அதில் ஒரு பாட் ..ஊடல்சிறு மின்னல்..குளிர் நிலவே வாடலாமா.( முன்பு கேட்டது தான்..காணொளியை இங்கு தருகின்றேன்..போய் த் தான் கேட்கவேண்டும்) பட் அதுவே வெவ்வேறு விதமான ராகங்க்ளில் பாடப்பட்டிருக்கும் என நினைக்கிறேன்..
-
31st May 2015, 02:46 PM
#456
Senior Member
Diamond Hubber
ஆமாம்! ஹீரோயின் யார் சி.க?
-
31st May 2015, 02:51 PM
#457
Senior Member
Senior Hubber
ஸ்ரீ லஷ்மின்னு போட்டிருந்த நினைவுங்க வாசு. இந்தப் படத்துக்கு அப்புறம் வரவில்லை என நினைக்கிறேன்..( திருவிளையாடல் டி.ஆர்.எம் மனைவி பாணியில்.. “எல்லாம் தெரிந்த தாங்களா இப்படிப் பேசுவது!”
ம்ம் இன்னொரு பழைய கவிதை..?!
*
தாபம் கொண்டு
பாராமல் பார்க்கும் பார்வை
எனக்குப் புரியாதா என்ன..
விமான நிலையம் போகிறேன்
என்றவுடன்
உன் அம்மா அப்பா
தங்கை தம்பி
குதிகுதித்து வந்து விட்டார்கள்..
ரெண்டு கார் எடுத்துக்கலாம்
என்று
பெருந்தன்மை வேறு..
இரண்டரை வருடம் பிரிந்திருந்து
நீ வருகிறாய் என
எப்படிச் சொல்வது..
கேட்டால் அவர்களும் தான்
அப்படி இருந்தார்கள் எனச் சொல்வார்கள்..
ஆனாலும் நீ மோசம்
ஏன்முகம் சுருங்கினாய்..
ஆசையாய்த் தானே
உன் தங்கை தம்பி
காரினுள் அருகில்...
அவ்வப்போது முறைப்பது
புரிகிறதெனக்கு..
தோ..இன்னும் ஒரு மணி நேரம் தான்..
வந்துவிடும் அண்ணா நகர்..
பொறுத்துக்கொள்..
ம்ம்..
இது நான் உனக்குச் சொல்லவில்லை
எனக்குச் சொன்னேன்..!
*
-
31st May 2015, 07:18 PM
#458
Junior Member
Seasoned Hubber
வாசு சார்,
தங்கள் புரிதலுக்கு நன்றி. மன்னிக்க வேண்டும். தயவு செய்து ஒரு வேண்டுகோள். நடிகர் திலகம் திரியில் இன்று நீங்கள் இட்ட பதிவில் (பதிவு 2606) 17 -வது வரியில் நாகேஷைவிட நடிகர் திலகம்தான் டாப் என்று அள்ளிவிடும் அறிவிலிகளுக்கு.... என்று உள்ளது.
அது.. நடிகர் திலகத்தை விட நாகேஷ்தான் டாப் என்று அள்ளிவிடும் அறிவிலிகளுக்கு.... என்று இருந்திருக்க வேண்டும். தயவு செய்து அதை சரியாக மாற்றி விடுங்கள். இல்லாவிட்டால் முதுகு சொறிவதற்காக வேண்டுமென்றே நீங்கள் நாகேஷை தூக்கி வைத்தும் நடிகர் திலகத்தை தாழ்த்தியும் எழுதியிருக்கிறீர்கள் என்று கலைப்பற்று கொண்ட யாராவது சொல்வார்கள். எதற்கு வம்பு?
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
-
31st May 2015, 07:20 PM
#459
Junior Member
Seasoned Hubber

Originally Posted by
kalnayak
வாசு,
கலைவேந்தன் என்கிட்டே ஏற்கனவே ஒத்துக்கொண்டுவிட்டார், நான் அவரை விட வயதில் மிக மிக சிறியவன் என்று (அந்த பூக்கள் விடும் தூது பற்றி நீங்க சொன்னீங்க இல்லையா. அப்பவே.) அதுவும் சரிதான் நீங்கள் சொல்வது போல ராஜா ஹரிச்சந்திரா பற்றி விவரம் என்னிடம் கேட்பார்தான். ஏனென்றால் நான் நெட்டில் நன்றாக தேடி, கிடைக்கும் விவரத்தை கொடுத்து விடுவேன் என்று அவரும் புரிந்து கொண்டுள்ளார். மற்றபடி ஒரு முறை சொல்லியிருந்தேன் இன்னும் அவர் பிறக்கவே இல்லையென்று. அதற்குதான் பதில் இல்லை. வாஸ்தவம் தானே. பிறந்திருந்தால் பதில் கொடுத்திருப்பார் அல்லவா?
கல்நாயக்,
இன்றுதான் உங்கள் பதிவை பார்த்தேன். தாமதத்துக்கு மன்னிக்க வேண்டும்.
இதோ பதில் சொல்லி நான் பிறந்ததை நிரூபித்து விட்டேன். நான் பிறந்து 18 ஆண்டுகள் ஆகிவிட்டது என்று ஏற்கனவே சொல்லியிருக்கிறேனே. இதோ, இப்போதும் சொல்கிறேன். ஆனால், நான் பிறந்த நாள் கொண்டாடுவதில்லை. ஒரு வயது ஏறுவதையே என்னால் தாங்க முடியவில்லை. 18-ல் இருந்து 19 ஆவதைத்தான் சொல்கிறேன்.
அதையே என்னால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. நீங்கள் எல்லாம்.... ஹூம்...உங்களையெல்லாம் பாத்தா எனக்கு பாவமாயிருக்கு .. ராஜா ஹரிச்சந்திரா பற்றி உங்களுக்கே நன்கு தெரிந்த விவரங்களை நெட்டில் பார்த்து கூறியதாக நீங்கள் கூறினாலும் நாங்கள் நம்பத் தயாரில்லை.
சின்னக்கண்ணன்,
//வெள்ளை வெளேர் ப் பன்னீர் மீது கொஞ்சம் கடலைமாவைக் கலந்தாற்போல பொன்னிறமஞ்சளில் ஹிந்தி சீரியலின் நங்கையரின் முதுகு தென்படும்.. காட்சியின் தேவைக்கேற்பவோ அலலது டைரக்டர் சொல்லியதாலோ என்னவோ ரவிக்கையின் பின்புறம் ஒரே ஒரு முடிச்சு மட்டும் போட்டுக் கொண்டு இருப்பார்கள்.. அல்லது ஜன்னல் அல்லது கண்ணாடி அணிந்திருக்கும் ரவிக்கைகளும் உண்டு ..அதைத்தாண்டியும் முதுகு தென்படும்..இதைப் பார்த்தாலும் பார்க்காதது போல் நான் கடமையே கண்ணாயிரமாக -பரப்பிரம்மமாக -எழுதிக் கொண்டிருப்பேன். அன்றி அந்த முதுகுகள் பற்றி எனக்கு எதுவும் தோன்றியது கிடையாது (உண்மைங்க.. நம்புங்க)//
நம்பிட்டோங்க. ஆஹா...கடமையிலேயே என்ன ஒரு கண்.
வேலை கழுத்தை நெரிக்கிறது. விரைவில் பாட்டோடு வரேன்.
கிருஷ்ணா சார்,
உங்களின் கவிஞனும் கண்ணனும் பதிவு அருமை. ரசித்து படித்தேன். கோபாலா சீரியலை ஆவலோடு எதிர்பார்க்கிறோம்.
ரவி சார் எங்கே காணோம்?
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
-
31st May 2015, 07:55 PM
#460
Senior Member
Diamond Hubber
மாற்றி விட்டேன் கலை சார், நன்றி! மிகுந்த மனவருத்தத்தில் இருந்த போது எழுதிய பதிவு அது.
இன்னொன்று பார்த்தீர்களா கலை! என்னையுமறியாமல் அப்போதும் நடிகர் திலகம்தான் டாப் என்று எழுதியிருக்கிறேன் கவனித்தீர்களா? அதுதான் அவர் மீது உள்ள பக்தி. அதுதான் அவர் தந்த ஆசிகள். மறந்தும் கூட இன்னொருவர் டாப் என்று எழுத வரவில்லை. இயற்கையும் அனுமதிக்கவில்லை.
தங்கள் பாராட்டுகளுக்கும் நன்றி!
மற்றபடி டைமிங் 'சொறி' நையாண்டியை மிகவும் ரசித்தேன்.
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
Bookmarks