-
14th June 2015, 10:42 AM
#1031
Junior Member
Newbie Hubber
இசை அமைப்பாளர்கள் ஒருவருக்கொருவர் அனுசரணையாக இருப்பது ஒரு symbiotic உறவே. நௌஷட் ஒரு விஸ்வநாதன்-ராமமூர்த்தி பக்தர். விஸ்வநாதன்-ராமமூர்த்தியோ நௌஷத் அவர்களை குரு போல பாவிப்பவர்கள். Mutual Admiration Group .நௌஷட் சாத்தி படத்தில் பாலும் பழமும் போல தர முடியவில்லை என்று குறிப்பிட்டதாக ஞாபகம்.
விஸ்வநாதன்-ராமமூர்த்தி ,சுப பந்துவராளி ராகத்தில் அவர்கள் பாலும் பழமும்(1961) படத்தில் இந்த நாடகம் அந்த மேடையில் எத்தனை நாளம்மா என்று முயற்சி செய்தனர். பல அற்புத பாடல்கள் நிறைந்த அந்த படத்தில் ஏனோ இந்த பாடல் சுமாராகவே எடு பட்டது. பாடல் நல்ல பாடல் என்ற போதும் ,ஒரு முழுமை missing .பிறகு 1964 இல் leader என்ற படம் நௌஷட் இசையமைப்பில் பேச பட்ட படம்.இதில் லலித் என்று ஹிந்துஸ்தானி ராகத்தில் ஒரு பாடல்.(ஏக் ஷஹன் ஷா ,ரபி-லதா)
http://www.bing.com/videos/search?q=...995E7D3F662F76
ஆஹா ,இணை ,இந்த feel ,melody ,ராக கூறுகள் ,சுப பந்துவராளியின் சில சங்கதிகள்,காதலின் உருக்கம் ,காலத்தை வென்று நிற்கும் பாடல் தயார்.உன்னை நான் சந்தித்தேன்(1965) .சுசிலாவின் அற்புத மாய குரலின் உருக்கம் நிறைந்த பிரிவின் துயர்,காதலின் போக்கு,எதிர்பார்ப்பு .
பிறகு இதனை மிஞ்சும் ஆட்டுவித்தால் யாரொருவர்(1975) இதே சுபபந்துவராளியில்.சௌந்தரராஜன் ,சுயவிரக்கம்,சுய விளக்கம்,தத்துவம் சார்ந்த சுய ஆறுதல் கலந்து பாட ,மற்ற பாடல்களுக்கு அமையாத இன்னொன்று நடிகர்திலகம்.ஏதோ சிந்தனையில் மூழ்கியிருக்கும் அவர்,கிருஷ்ணர் வேடமிட்டு வரும் நண்பன் குழந்தையை சட்டென்று நிலைக்கு வராமல், சுதாரிக்கும் அழகு. புது பரிமாணம் கண்ட பாடல்.
Last edited by Gopal.s; 14th June 2015 at 11:17 AM.
-
Post Thanks / Like - 0 Thanks, 5 Likes
-
14th June 2015 10:42 AM
# ADS
Circuit advertisement
-
14th June 2015, 10:42 AM
#1032
Senior Member
Veteran Hubber
Originally Posted by
rajeshkrv
ஆரம்பத்தில் பாலு சில வார்த்தைகளையும் எழுத்துக்களையும் தவறாக உச்சரித்திருப்பார். போக போக சரியாக்கிகொண்டார் .
That is true of some carnatic vocalists born and brought up in Tamilnadu! Sad !
" I think there is a world market for may be five computers". IBM Chairman Thomas Watson in 1943.
-
14th June 2015, 10:47 AM
#1033
Senior Member
Seasoned Hubber
Originally Posted by
chinnakkannan
க் ச ட த ப ற வல்லினம்
ஞ ங நனமண மெல்லினம்
ய ர ல வ ழ ள இடையினம்..
ராகதேவன் சரியா.. சரி சரி குருதட்சனையா இன்னோர் பாட் போடுங்க
கண்ணா... I really don't know.. the only "இனம்"s that I know are:
இனங்களிலே என்ன இனம் பெண்ணினம்
மெய் எழுத்துக்களில் இருக்கும் அந்த மெல்லினம்
மனதுக்குள்ளே இருக்கும் ஆசை வல்லினம்
என் மன்னனுக்கு பிடித்ததெல்லாம் இடையினம்...
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
14th June 2015, 10:50 AM
#1034
Senior Member
Senior Hubber
ராப் இசை கொடி கட்டி பறந்த காலமது
கணவனுடன் ஒரு விருந்துக்கு செல்கிறாள் மனைவி
தலைவிரி கோலமாக எல்லோரும் ஆடிக்கொண்டிருக்க மனைவி பொருக்க முடியாமல் நிறுத்துங்கள் என்று கத்தி
நம் மண்ணின் பெருமையை பாட்டாக படிக்கிறாள்
-
14th June 2015, 10:58 AM
#1035
டியர் சின்னக்கண்ணன் சார்,
சைக்ளோன் பற்றி இவ்வளவு பில்டப் கொடுக்கும்போதே நினைத்தேன், அது உங்களை ஏமாற்றி விட்டு வேறு பக்கம் போய் விடுமென்று. ஆனால் சொல்லவில்லை. சொல்லப்போய் அது மாதிரி நடக்கப்போய், எதுக்கு வம்பு. ஏற்கெனவே திரியில் எனக்கு ரொம்ம்ம்ம்ம்ம்ப நல்லபேரு.
ஆனால் புயல் வரலைன்னு வருத்தப்படுற ஆள் நீங்க ஒருவராகத்தான் இருக்கும். அந்த அளவு வெயில் வாட்டிஎடுக்குதுன்னு நினைக்கிறேன். இங்கும் அப்படித்தான்.
தவிர நான் வெண்பா இலக்கணம் படித்தவன் அல்ல. உங்கள் வெண்பாக்களை படித்துப் பார்த்து 'ஓஹோ வெண்பா இப்படித்தான் எழுதணும் போலும்' என்று எழுதிப் பார்த்தேன். சரி, வெண்பாவில் சேர்க்கத் தகுதியில்லை என்றாலும் 'வெறும்பா' விலாவது சேர்த்துக் கொள்ளுங்கள்.
எனது தமிழில் ஏன் எல்லோருக்கும் சந்தேகம் என்று தெரியவில்லை. நான் தமிழ் மட்டுமே தெரிந்த தமிழன். தமிழ் எழுதத் தெரியாதவன் அல்ல. ஆனால் அதை எப்படி இணையத்தில் சேர்ப்பது என்று வழி தெரியாமல் விழித்தவன். அன்பு நண்பர் பிரபுராம் வழிகாட்டினார். அதனால் என இணையத்தமிழுக்கு அவர்தான் குரு. என முதல் தமிழ்ப் பதிவைக்கூட அவருக்கே சமர்ப்பித்தேன்.
'பாடல்கள் பற்றி அலசும் இடத்தில் இவன் என்ன சுயபுராணம் பாடிக் கொண்டிருக்கிறான்' என்று யாரோ அடிக்க வருகிறார்கள். ஆகவே விடு ஜூட்.
-
14th June 2015, 11:44 AM
#1036
Senior Member
Senior Hubber
//பாடல்கள் பற்றி அலசும் இடத்தில் இவன் என்ன சுயபுராணம் பாடிக் கொண்டிருக்கிறான்' என்று யாரோ அடிக்க வருகிறார்கள். ஆகவே விடு ஜூட்.// அன்பின் ஆதிராம்..உங்கள் தமிழில் சந்தேகம் இல்லை.. நன்றாகவே இருக்கிறது.. சரி அதைவிடுங்கள்
சுயபுராணம் எல்லாம் பாடலாம் தான்.. நான் பாடாததா.(எல்லாரும் எவ்ளோ பொறுமையா இருக்காங்க தெரியுமா ).என்ன அத்துடன் ஒரு பாட் போட்டு விடுங்கள் எழுத்தில்.. அல்லது காணொளியாய்.. அம்புட்டு தான் ..அதான் இங்கே கண்டிஷனே..
-
14th June 2015, 12:21 PM
#1037
Junior Member
Seasoned Hubber
அருமை கோபால் சார் - உங்கள் முதல் பதிவே கலக்குகிறது - ரசித்துப்படித்தேன் - நன்றி
-
14th June 2015, 12:24 PM
#1038
Junior Member
Seasoned Hubber
திரு ராகதேவன் - உங்களைப்பற்றி மிகவும் உயர்வாக வாசு சொல்ல கேள்விப்பட்டிருக்கிறேன் - உங்கள் வரவு இந்த திரியில் நல்வரவாகட்டும் .
அன்புடன்
ரவி
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
-
14th June 2015, 12:28 PM
#1039
Junior Member
Seasoned Hubber
Ck - "எங்கேயோ போயிட்டிங்க " என்று சில நாட்களுக்கு முன் உங்களை பற்றிக்குறிப்பிட்டிருந்தேன் - உண்மையில் இந்த ஒரு மாதத்தில் எங்கேயோ போகப்போகிறீர்கள் என்று தெரிகிறது ... ம்ம் எல்லாம் மாய மோதிரமும் , பாரதியும் செய்யும் வேளை .. உங்கள் விடுமுறை அருமையாக அமைய வாழ்த்துக்கள் .
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
-
14th June 2015, 12:30 PM
#1040
Junior Member
Seasoned Hubber
நன்றி ராகவேந்திரா சார் - பவழத்தை ரசித்தது மட்டும் அல்லாமல் விட்டுப்போன பாடலையும் அருமையாக பதிவிட்டதற்கு
Bookmarks