-
19th June 2015, 11:22 PM
#3221
Junior Member
Veteran Hubber
நடிப்பறிஞரின் அடிப்படைக் கேள்விகள் நடிப்பின் வேள்விகளே !! NT's FAQ Basics!!
மனிதன் பிறந்து வளர்ந்து வாழ்ந்து மறையும்வரை வாழ்க்கை என்பது என்னவென்று அறிந்திட வாழ்வின் அர்த்தம் புரிந்திட அவனுள் உறையும் அடிப்படைக் கேள்விகள் யார் ), என்ன? (What?), ஏன்?எதனால்? ( Why?), எங்கே (Where?), எப்படி ( How?), எது (which), எதற்காக (What for?), யாருக்காக (for whom?).........
இதற்கெல்லாம் நமது நடிப்பு ஞானகுரு கேட்கும் கேள்விகளுக்கு விடையளித்தாலே போதுமே !?
பகுதி 1 : யார்? (Who?)
யார் தருவார் இந்த அரியாசனம் ?
யார் அந்த நிலவு ? ஏன் இந்த கனவு ?
Last edited by sivajisenthil; 21st June 2015 at 09:50 AM.
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
19th June 2015 11:22 PM
# ADS
Circuit advertisement
-
20th June 2015, 01:09 AM
#3222
Senior Member
Seasoned Hubber
தமிழ் சினிமாவில் தனக்கெனத் தனியிடம் பிடித்த இயக்குநர் மகேந்திரன் நடிகர் திலகத்துடன் பணிபுரிந்த நினைவுகளை இக்காணொளியி்ல் பகிர்ந்து கொள்கிறார். எம்.ஜி.ஆர்., சோ, ரஜனிகாந்த் என அனைவருடனும் பழகிய, பணிபுரிந்த நினைவுகளும் இதில் இடம் பெற்றுள்ளன.
மிகையுணர்ச்சி மிக்க நடிப்பு என்பதைப் பற்றி. யதார்த்த இயக்குநர் என அறியப்படும் மகேந்திரன் அவர்களின் விளக்கத்திற்குப் பிறகும் இனி யாராவது மிகை நடிப்பு என, இல்லாத ஒரு அம்சத்தைப் பற்றிப் பேச முன்வருவரோ..
இக்காணொளியைச் சுட்டிக்காட்டிய திரு சைலேஷ்பாசு அவர்களுக்கு நன்றி.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
Post Thanks / Like - 1 Thanks, 2 Likes
-
20th June 2015, 06:38 AM
#3223
Junior Member
Newbie Hubber
என் உயிர் நண்பர் மகேந்திரனுடன் மணி கணக்காக உரையாடிய நாட்கள் நினைவில் நிழலாடுகிறது. பலமுறை காரசாரமாக விவாதிப்போம்.என்னை எழுத தூண்டியவர் இவர்தான். உங்களிடம் எவ்வளவு விஷயங்கள் கொட்டி கிடக்கின்றன கோபால் ,நீங்கள் எழுதணும் என்று கட்டளையிடுவார்.நடிகர்திலகம் பற்றி மணிக் கணக்காக பேசி மகிழ்ந்திருக்கிறோம்.கே. எஸ்.கோபாலகிருஷ்ணன் மீது மதிப்பு கொண்டவர்.
நடிகர்திலகம் மீது டாகுமெண்டரி எடுக்க விழைந்து , அதற்கு நடிகர்திலகம் ஒப்புதலும் கொடுத்த பிறகு, ஒருவர் குறுக்கே நுழைந்து கெடுத்த கதையை சொல்லி சொல்லி மாய்வார்.நண்பனுடன் பேசிய பல விஷயங்கள் பிரத்தியேகம் என்பதால் வெளியிட முடியாது. ஆனால் ஒரு முழு "குடும்பமும்" திரைத்துறையில் புகுந்து அடித்த கூத்துக்கள் சொல்லி மாளாது.
Last edited by Gopal.s; 20th June 2015 at 09:18 AM.
-
Post Thanks / Like - 1 Thanks, 3 Likes
-
20th June 2015, 09:03 AM
#3224
Junior Member
Newbie Hubber
மகேந்திரன் சிந்தனையுடன் ஒத்து போவது போல ,நான் எனது ஆய்வுக்கு எழுதிய கள முன்னுரை அமைந்தது . அதன் சாரம்.(அதாவது நடிகர்திலகம் என்ற மேதையின் திறமைக்கு ஒப்ப ,மற்ற திறமைகள் தமிழ் திரையுலகில் வளராத காலகட்டத்தில் அவர் சிக்கினார். )
என்னுரை.
"பொருளாதாரம் படித்தவர்களுக்கு புரியும். ஒரு உண்மையை நிரூபிக்க அனைத்து புற காரணிகளையும் constant என்ற நிலையில் வைத்து, அவற்றை பொருட்படுத்தாது, நாம் எடுத்து கொண்ட பொருளை மட்டும் ஆராயும் variable என்ற உயிர் பொருளாக்க வேண்டும்.
நான் உதாசீனம் செய்யும் புற காரணிகள்- star என்பவன் இந்தியாவில்(cine field) நிலைக்க செய்ய வேண்டிய நீர்மைகள்(Dilution )&compromises, நமது அழகுணர்ச்சி(அதுவும் தமிழக மக்களின் விபரீத அழகுணர்ச்சி),கூத்து மரபாகவே தொடர்ந்த நமது திரைப்பட கலையாக்கம்(பாடல்களுடன்), நமது talkie என்ற காரண பெயர் கொண்ட படங்கள், அவியல் ஆன அவற்றின் ஆக்க முறைகள்,உலகபார்வையில் tribalised ஆக தெரியும் நமது விரிந்த கலாச்சாரங்கள்,நமது மொழியின் seperation &peculiar nuiances (தமிழ் மொழியின் வினோதமான பேச்சு வழக்கு/எழுது முறை வேறுபாடுகள்மற்றும் அதன் நூற்று கணக்கான வட்டார வழக்கு,தூய தமிழ் பேச்சு ETC ), நமது பிரத்யேக வியாபார நிர்பந்தங்கள்(இதிலும் தமிழ் வினோதம்), ஒரே நேரத்தில் பல தர பட்ட படங்களில் shift முறையில் ஓயாது உழைத்த நடிகர்திலத்தின் பிரத்யேக சிரமங்கள் ,Focus இல்லாத நமது படங்களின் செக்கு மாட்டு கதை-காட்சியமைப்புகள், இவற்றை பற்றிய ,இவை சார்ந்தவற்றை முற்றாக ஒதுக்கி, நடிகர் திலகம் என்ற மேதை தான் அறியாமலேயே எப்படி அத்தனை பொருட்படுத்த தக்க உலக நடிப்பு பள்ளிகளின் அனைத்து பாணியையும் , தன்னிடையே கொண்டு விளங்கி தனக்கு பிறகு ஆயிரம் இடங்கள் காலியாகவே இருக்கும் படி செய்த விந்தையை எனக்கு தெரிந்த வரையில் சுலபமாக ,அனைத்து தரப்பு ரசிகர்களுக்கும் புரியும் வண்ணம் விளக்க முயல்கிறேன்.
முதலில், ஏன் உலக பள்ளிகளோடு ஒப்பீடு என்ற கேள்விக்கு பதில் திரை படம் என்பதே மேல் நாட்டார் நமக்கு அறிமுக படுத்தி,அவர்களாலேயே வளர்த்தெடுக்க பட்ட கலை. இன்றும் கூட தர நிர்ணயம்,பரிசுகள் எல்லாமே அவர்கள் போட்ட பாதையில்தான் பயணிக்கின்றன(விமரிசனங்கள் உட்பட). முதலில் அவர்களின் முக்கிய நடிப்பு பள்ளிகள்(Different schools of Acting) என்ன, அதன் சாரங்கள் என்ன, அதில் பயின்ற முக்கியமானவர்கள் யார் யார் என்று சுருக்கமாக பார்த்து விட்டு தொடருவோம் .மேலை நாடுகளில் நடிப்பு துறைக்கு வர விரும்பும் அனைத்து நடிகர்களுமே, ஏதோ ஒரு நடிப்பு பயிற்சி பள்ளியில் படித்து தேர்ந்து, ஒரு school of acting இல் முறையாக சிறப்பு பயிற்சி பெறுவது நடைமுறை. அதனால் சில வெளிநாட்டு நடிகர்களை அந்தந்த பள்ளிகளில் உதாரணம் காட்டி உள்ளேன்.
இதில் நான் இன்னொன்றையும் குறிப்பிட்டு சொல்ல விழைகிறேன். நான் தேர்ந்தெடுத்த படங்களில் பிரதானமான நடிப்பு முறையை பிரித்தெடுத்தாலும்,அந்த மேதையை கூண்டுக்குள் அடைப்பது சிரமம் என்பதால்,பிற பள்ளிகளின் தாக்கமும் சிறிதளவு இருக்கும்.
அதே போல ஒரே படத்திலேயே மூன்று விதமான நடிப்பு பள்ளிகளின் கூறுகள் உண்டு. தெய்வ மகன் அப்பா (method Acting ),கண்ணன் (Chechov பாணி),விஜய்(Oscar Wilde பாணி).நான் தவற வாய்ப்புள்ளதால் அங்கங்கே திருத்துமாறு வேண்டுகிறேன்.
சக்கரத்தை திரும்ப திரும்ப கண்டு பிடித்தல் என்ற சொற்றொடர் (reinventing the wheel ) ஆங்கிலத்தில் உண்டு. NT இடம் நமக்கு மிக பரிச்சயமான, முயற்சி,பயிற்சி,கடின உழைப்பு,கூரிய பார்வையுடன் கவனிப்பு திறன்,உடல்-மனம் சார்ந்த ஆளுமை,அங்க ஒத்திசைவு,கற்பனை திறன், கிரகிப்பு,ஒருங்கிணைப்புடன் கூடிய சிந்தனை திறன், concentration,aptitude,improvisation இவை எல்லா பள்ளிகளுக்கும் பொருந்தும், அவருக்கு பிறவியிலேயே கை வந்த விஷயங்கள். இதற்குள்ளும், மிக நுழையாமல், ஒவ்வொரு பள்ளிகளின் கோட்பாடு, வித்யாசங்கள்,நிறை-குறைகள், சில படங்கள் (NT ) உதாரணங்கள், அவற்றில் நடிகர்த்திலத்தின் நிறை பங்குகள். இவ்வளவுதான் ஆய்வின் scope ".
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
20th June 2015, 09:45 AM
#3225
Junior Member
Veteran Hubber

Originally Posted by
ravikiransurya
நான் வணங்கும் எங்கள் குல தெய்வம் மக்கள் திலகத்தின் இதய தெய்வமாகிய, தென்னாட்டு பெர்னார்ட் ஷா, இந்நாட்டு இங்கர்சால், காஞ்சி கரிபால்டி, எனது தெய்வத்தின் தெய்வம் பேரறிஞர் அண்ணா அவர்களுடன், நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் தோன்றும் அரிய புகைப்படத்தை பதிவிட்டமைக்கு, சகோதரர் திரு. ரவி கிரண் சூரியா அவர்களுக்கு நன்றி !
Last edited by makkal thilagam mgr; 20th June 2015 at 09:48 AM.
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
-
20th June 2015, 09:50 AM
#3226
Junior Member
Newbie Hubber
திட்டமிட்டு, இரண்டு மூன்று நாட்களாக பார்வையாளர்களை அதிக படுத்த முயல்வது போல தெரிகிறதே? வேடிக்கை தொடர்கிறது.
-
20th June 2015, 11:07 AM
#3227
Junior Member
Veteran Hubber

Originally Posted by
RAGHAVENDRA
தமிழ் சினிமாவில் தனக்கெனத் தனியிடம் பிடித்த இயக்குநர் மகேந்திரன் நடிகர் திலகத்துடன் பணிபுரிந்த நினைவுகளை இக்காணொளியி்ல் பகிர்ந்து கொள்கிறார். எம்.ஜி.ஆர்., சோ, ரஜனிகாந்த் என அனைவருடனும் பழகிய, பணிபுரிந்த நினைவுகளும் இதில் இடம் பெற்றுள்ளன.
மிகையுணர்ச்சி மிக்க நடிப்பு என்பதைப் பற்றி. யதார்த்த இயக்குநர் என அறியப்படும் மகேந்திரன் அவர்களின் விளக்கத்திற்குப் பிறகும் இனி யாராவது மிகை நடிப்பு என, இல்லாத ஒரு அம்சத்தைப் பற்றிப் பேச முன்வருவரோ..
இக்காணொளியைச் சுட்டிக்காட்டிய திரு சைலேஷ்பாசு அவர்களுக்கு நன்றி.
Nice understanding about Nadigar Thilgam.
The only aspect i beg to differ here is his definition about "yadhaarththam" in tamizh film making incomparison with hollywood film making.
There are many differences in culture, behaviour, approach to life, approach to materialistic things etc., between the people of India more specifically Tamizhnadu and the people of West !
For example : When a mother dies, the son / daughter / close relations certainly burst out in Tamizhnadu. Here too, the level of bursting out is different between communities or caste !
In West, it does not happen at all..! they cross their hand, they lower their head, their lips are tight.....there are no sentiments / emotion attached to this extent due to the cultural differences.
This being the case, the very comparison is highly idiotic and unacceptable...!
The Guy who interviews Mr. Mahendran, himself would react the same way every tamizhan reacts when he experiences Joy / Sorrow etc.,
Why should we get influenced by something that's not in our gene and debate on this in the form of interview...?
On that context it is totally unagreeable - Comparison of Tamil Film Making and Hollywood Film Making and branding that Tamizh films are not reality !
Regards
RKS
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
-
20th June 2015, 11:15 AM
#3228
Junior Member
Veteran Hubber

Originally Posted by
Yukesh Babu
NADIGAR THILAGAM சிவாஜி கணேசன் தன் பெற்றோர் மற்றும் சிறுபிள்ளைகளுடன்

-
Post Thanks / Like - 1 Thanks, 2 Likes
-
20th June 2015, 12:11 PM
#3229
Junior Member
Veteran Hubber
நடிப்பறிஞரின் அடிப்படைக் கேள்விகள் நடிப்பின் வேள்விகளே !! NT's FAQ Basics!!
மனிதன் பிறந்து வளர்ந்து வாழ்ந்து மறையும்வரை வாழ்க்கை என்பது என்னவென்று அறிந்திட வாழ்வின் அர்த்தம் புரிந்திட அவனுள் உறையும் அடிப்படைக் கேள்விகள் யார் ), என்ன? (What?), ஏன்?எதனால்? ( Why?), எங்கே (Where?), எப்படி ( How?), எது (which), எதற்காக (What for?), யாருக்காக (for whom?).........
இதற்கெல்லாம் நமது நடிப்பு ஞானகுரு கேட்கும் கேள்விகளுக்கு விடையளித்தாலே போதுமே !?
பகுதி 2 : எங்கே!
வாழ்க்கையில் ஆட்படும் ஒவ்வொருவரும் ஏதோ ஒரு கட்டத்தில் எங்கே எங்கே என்று தேடி அலைவது நிம்மதியைத்தான்
ஒரு சின்னத் தவறால் வாழ்வின் நிம்மதியை தொலைத்தவராக நடிகர்திலகம் !!
சோதனையான கட்டங்களில் இறைவனையே தேடுகிறோமே !!
நதி எங்கே போகிறது ...?
எங்கே கால் போகும் போகவிடு ...முடிவை பார்த்துவிடு
பட்டாக்க்கத்தி பைரவருக்கும் எங்கெங்கோ செல்லுமாம் எண்ணங்கள் !
தர்மம் எங்கே நியாயம் எங்கே
Last edited by sivajisenthil; 21st June 2015 at 08:01 PM.
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
20th June 2015, 02:06 PM
#3230
மெத்தை விளம்பரத்தில் கண்ணதாசன் பாடல் 'கட்'.. எதிர்ப்புக்கு பணிந்தது ஸ்லீப்வெல்!
கண்ணதாசன் ரசிகர்கள் அதிர்ச்சி மலர்ந்தும், மலராத பூ போல இருக்காதீங்க, தூங்குவதற்கும் விழிப்புணர்வு தேவை என்று கூறி அந்த விளம்பரம் முடிந்தது. ஆனால், இவ்விளம்பரம், பாசமலர் திரைப்பட ரசிகர்களை மட்டுமின்றி கவிஞர் கண்ணதாசன் ரசிகர்களையும் கொந்தளிக்க செய்தது.

பாசமலர் ரசிகர்களும் கோபம் அண்ணன்-தங்கை உறவை மிக அருமையாக சித்தரித்த பாசமலர் படத்தில் இடம்பெற்ற பாடலை, கணவன்-மனைவி படுக்கையில் புரளும் விளம்பரத்துக்கு பயன்படுத்தியது பாசமலர் ரசிகர்களை காயப்படுத்தியது என்றால், கண்ணதாசன் எழுதிய சூழ்நிலையிலிருந்து மாறுபட்டு மற்றொரு சூழ்நிலைக்காக இந்த பாடல் பயன்படுத்தப்பட்டது கவிஞர் ரசிகர்களை கொந்தளிக்க செய்தது.
ஸ்லீப்வெல் நிறுவனம் விளம்பர நோக்குடன் பாடலின் கருத்தை தங்கள் இஷ்டத்துக்கு பயன்படுத்தியது கண்டிக்கத்தக்கது" என்று இருமுறை சாகித்ய அகாடமி விருது பெற்ற கவிஞர் புவியரசு மற்றும் கவிஞர் மரபின் மைந்தன் முத்தையா போன்றோர் வெளிப்படையாக தெரிவித்தனர். தமிழ் கலைக் களஞ்சியத்தின் உதவி ஆசிரியர் பேராசிரியர் கே.சுப்ரமணியன் மற்றும் திரை விமர்சகரும், திரைச்சீலை புத்தகத்திற்கு தேசிய விருது வாங்கியுள்ள ஜீவானந்தம் ஆகியோரும் கடுமையாக கண்டனம் தெரிவித்துள்ளனர்.
கண்ணதாசனின் புத்தகங்களை வெளியிடும் அவரது மகன், ஸ்லீப்வெல் நிறுவனத்திற்கு கண்டனம் தெரிவித்ததுடன் அவர்கள் உடனடியாக இந்த விளம்பரம் ஒளிபரப்புவதை நிறுத்தாவிட்டால் சட்டப்படி அவர்கள் மீது வழக்கு தொடுக்கவிருப்பதாகக் கூறினார்.
இதுகுறித்து, ஸ்லீப்வெல் மெத்தை தயாரிப்பாளர்களான, ஷீலா ஃபோம் நிறுவன உயர் அதிகாரி பிரின்ஸ் குரேஜா கூறுகையில்,
இந்தப் பாடல் வரிகள் தமிழ்நாட்டில் மிகவும் பிரபலமானது என்பதைத் தெரிந்து அது வாடிக்கையாளர்களின் கவனத்தை கவரும்
என்று தான் நாங்கள் எங்கள் விளம்பரத்தில் பயன்படுத்தினோம், மற்றபடி வேறு எந்த நோக்கமும் இல்லை' என்றார். ஆனால் எதிர்ப்பை கருத்தில் கொண்டு, ஜூன் 19ம் தேதி முதல் ஸ்லீப்வெல் நிறுவனம், பாசமலர் திரைப்பட பாடலை தவிர்த்துவிடுவதாக கூறியுள்ளது.
http://tamil.oneindia.com/news/tamil...nt-229208.html
Last edited by sss; 20th June 2015 at 02:12 PM.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
Bookmarks