Page 140 of 400 FirstFirst ... 4090130138139140141142150190240 ... LastLast
Results 1,391 to 1,400 of 3992

Thread: மனதைக் கவரும் மதுர கானங்கள் - பாகம் 4

  1. #1391
    Senior Member Senior Hubber kalnayak's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Chennai
    Posts
    136
    Post Thanks / Like
    கோபால்,

    ஜப்பானிய இயக்குனர் அகிரா குரோசவா பற்றிக் கேள்விப் பட்டிருக்கிறேன். படம் பார்க்கும் வாய்ப்பு கிடைத்ததில்லை. ரோஷோமோன் பற்றிய திறனாய்வு (அப்படிச் சொல்லலாமா? ஒரு முறை நடிகர் திலகம் திரியில் அங்கே பதிகின்ற பதிவுகளுக்கான அகராதி ஒன்றை நீங்கள் வெளியிட்டீர்கள். அது உடனடியாக கிடைக்காததால் சரி பார்க்க முடியவில்லை. நீங்கள் இருக்கும்போது அது எதற்கு?) அதற்கான உத்வேகத்தை தூண்டி விட்டது. வழக்கம் போல் வாசுவின் பக்கெட்-உம், ராகவேந்திராவின் கூடுதல் விவரணங்களும் ஆர்வத்தை அதிகரிக்கின்றன. படம் பார்ப்பதற்கு முயற்சிக்கிறேன். சிறுவர்கள் இருக்கும் வீட்டு சூழ்நிலை அனுமதிக்குமா தெரியவில்லை.

    வழக்கம்போல் அருமையாக எழுதி இருக்கிறீர்கள். தொடருங்கள். நன்றி.
    Last edited by kalnayak; 25th June 2015 at 03:55 PM.
    .........-`҉҉-
    -`҉҉..)/.-`҉҉-
    ....~.)/.~
    ........~.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #1392
    Senior Member Senior Hubber kalnayak's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Chennai
    Posts
    136
    Post Thanks / Like
    Quote Originally Posted by Gopal,S. View Post
    அதையேன் கேட்கிறீர்கள் கல்நாயக் ,நீங்கள் இல்லாத போதும் உங்களை சுற்றியே,பற்றியே பேச்சு. என்ன பேச்சு என்பதை படித்து புரிந்து கொள்ளுங்கள்.:-d
    என்ன அது? முழுவதும் பார்த்து விட்டு வருகிறேன். கோபால்.
    .........-`҉҉-
    -`҉҉..)/.-`҉҉-
    ....~.)/.~
    ........~.

  4. #1393
    Member Senior Hubber
    Join Date
    Jan 2008
    Location
    Saudi Arabia
    Posts
    32
    Post Thanks / Like
    Quote Originally Posted by Gopal,S. View Post
    ஆதிராம்,



    அப்படியே தந்தை உயிரோடு இருந்தாலும் லட்ச லட்சமாக மகன்கள் தந்தைக்கு கனகாபிஷேகம் செய்து விட போகிறார்களாக்கும். எழுத்தாளர் சுஜாதா ஒரு முறை குறை பட்டு கொண்டது. அமெரிக்கா போனப்புறம் இவங்களுக்கு பிசுனாரிதனம் அதிகமாயிடுச்சு. 50 டாலர் அனிப்பிச்சுட்டு ,ஏதோ பெரிய தொகை போல ஆறுமாசம் அனத்துறாங்க. இந்த பாவனை உருகல்களில் 1% உண்மையிருந்தால் கூட கண்ணீர் கதைகள் எவ்வளவு குறைந்திருக்கும். என்னவோ எழுதி பார்க்க நல்லாயிருக்கு.
    டியர் கோபால் சார்,

    அது சுஜாதா அவர்களின் பார்வை, அல்லது அவர் சந்தித்த நபர்கள் மூலம் அறிந்த அனுபவங்கள். அதற்காக எல்லோரும் அப்படியிருக்க வேண்டும் என்ற அவசியமில்லையே.

    என் தந்தை இருந்திருந்தால் நிச்சயம் தங்கத்தட்டில் வைத்து தாங்கியிருப்பேன். அதன் அடையாளம், என் ஜனனத்தின் மறுபாதியான என் தாய் இன்று என் வீட்டில் ஏர்கண்டிஷன் அறையில் தன் மிச்ச நாட்களைக் கழித்துக்கொண்டிருக்கிறார். என் அறையிலும் அண்ணனின் அறையிலும் கூட ஏ.சி. கிடையாது. மின்விசிறி மட்டும்தான். என் அண்ணியும், என் மனைவியும் அவர் பெறாத இரண்டு மகள்களாக சிறப்பாக கவனித்து வருகின்றனர். நான் அருகில் இல்லாவிட்டாலும் தினம்தினம் ஸ்கைப் மூலம் பேசி வருகிறேன்.

    நீங்கள் சொல்வதிலும் உண்மையில்லாமல் இல்லை. பெற்றோரை முதியோர் இல்லத்தில் எறிந்துவிட்டு, மாதாமாதம் சிறிது பணத்தை மட்டும் விட்டெறியும் சிலரும் இருக்கத்தான் செய்கின்றனர்.

    என்னைப்பொருத்தவரை முதியோர் இல்லங்கள் என்பது பிள்ளைகள் இல்லாத அனாதை முதியோர்கள் மட்டும் வசிக்கும் இடமாக இருக்க வேண்டும்

  5. #1394
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by kalnayak View Post
    கோபால்,

    ஜப்பானிய இயக்குனர் அகிரா குரோசவா பற்றிக் கேள்விப் பட்டிருக்கிறேன். படம் பார்க்கும் வாய்ப்பு கிடைத்ததில்லை. ரோஷோமோன் பற்றிய திறனாய்வு (அப்படிச் சொல்லலாமா? ஒரு முறை நடிகர் திலகம் திரியில் அங்கே பதிகின்ற பதிவுகளுக்கான அகராதி ஒன்றை நீங்கள் வெளியிட்டீர்கள். அது உடனடியாக கிடைக்காததால் சரி பார்க்க முடியவில்லை. நீங்கள் இருக்கும்போது அது எதற்கு?) அதற்கான உத்வேகத்தை தூண்டி விட்டது. வழக்கம் போல் வாசுவின் பக்கெட்-உம், ராகவேந்திராவின் கூடுதல் விவரணங்களும் ஆர்வத்தை அதிகரிக்கின்றன. படம் பார்ப்பதற்கு முயற்சிக்கிறேன். சிறுவர்கள் இருக்கும் வீட்டு சூழ்நிலை அனுமதிக்குமா தெரியவில்லை.

    வழக்கம்போல் அருமையாக எழுதி இருக்கிறீர்கள். தொடருங்கள். நன்றி.
    திறனாய்வு என்பது சரியல்ல. திறன் கொண்ட இயக்குனர்களை,படங்களை தேர்வு செய்து ,அவற்றை அணுக வேண்டிய முறைமை பற்றி கற்றதை,உணர்ந்ததை,கேட்டதை சொல்லும் Film Appreciation articles என்பதே சரியானது. நடிகர்திலகம் பற்றி நான் எழுதிய சில திறனாய்வு வகையில் வரும்.
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  6. #1395
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    கோபால்
    தங்கள் கூற்றில் யதார்த்தம் இருக்கிறது. இல்லையென்று சொல்லவில்லை. ஆனால் பாசம் என்பது எந்தக் காலத்தையும் கடந்தது. வெளிப்படுத்த சந்தர்ப்பமில்லாமல் இருக்கலாம், அல்லது தாங்கள் கூறுவது போல் மனமில்லாமலும் இருக்கலாம், ஆனால் பாசம் என்பதே இல்லாமல் போகாது. பெரும்பான்மையானவர்கள் தாங்கள் கூறிய வகையறாக்களில் அடங்குவார்கள் என்று ஒரு வாதத்திற்கு வைத்துக் கொண்டாலும், அதற்கு இக்காலத் தாய்மார்கள், குடும்ப சூழ்நிலைகள் இவையும் காரணமாகின்றன. மகனுடைய முன்னிலையிலேயே தந்தையும் தாயும் புரியும் வாக்குவாதங்கள், சச்சரவுகள், சிலசமயம் கைகலப்புகளும் கூட, இவையெல்லாம் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. சில சமயங்களில் எல்லை மீறும் போது தந்தை என்ற உறவு முற்றிலும் அதன் புனிதத் தன்மையை இழந்து விடுகிறது. தந்தை என்கிற இடம் எப்படிப்பட்டது என்பதை குழந்தைகளுக்கு உணர்த்த தந்தையே சந்தர்ப்பம் தருவதில்லை, தாயாரும் அதைப் பற்றிக் கவலைப்படுவதில்லை.

    ஆனால் இந்த சந்தர்ப்பங்களும் இரு தரப்பட்ட குடும்பங்களில் தான் அதிகம் நிகழ்கின்றன. முற்றிலும் பொருளாதாரம் அடிமட்ட நிலையில் உள்ள குடும்பங்கள்.. இவற்றில் தன் பொருளாதார நிலையையோ குடும்பத்தையோ சிறிதும் சிந்தியாமல் குடித்து அழிக்கும் தகப்பன்மார்கள். இரண்டாவது பொருளாதாரத்தில் மேல்நிலையில் உள்ள குடும்பங்கள். இவற்றில் பெற்றோர் இருவருமே பிள்ளைகளுக்கு நேரம் ஒதுக்குவதில்லை. வருவாய்க்கு இருக்கும் முன்னுரிமை அவர்களின் வாரிசுகளுக்கு இல்லை. ஆனாலும் பொருளாதாரத்தில் என்னதான் கீழே இருந்தாலும் அங்கே பாசம் விலகியதில்லை.

    இவற்றையெல்லாம் மீறி சென்ற தலைமுறை வரையிலும் நடுத்தரக் குடும்பங்களிலும் குடும்ப உறவுகளும் பந்த பாசங்களும் நல்ல நிலையில் தான் இருந்து வந்தன. ஆனால் தற்போதைய தலைமுறை தான் திசையின்றி போகும் பாதையின்றி, வழிகாட்ட பெற்றோரின்றி சென்று கொண்டிருக்கிறது.

    எனவே தாங்கள் சுட்டிக்காட்டியுள்ள சமூக கோளாறுகளுக்கு பெற்றோர்களே காரணமாவர் என்பது என் தாழ்மையான கருத்து.

    இவற்றையெல்லாம் தாண்டி, இன்னும் எத்தனை தலைமுறையானாலும் பெற்றோர் செய்யத் தவறியதை, தவறுவதை, செய்து காட்ட, குடும்ப உறவுகளைப் பற்றி மக்களுக்குப் புரிய வைக்க, தாய் தந்தை மட்டுமின்றி சகோதர பாசத்தையும் மக்களுக்கு உணர்த்த, அதன்படி அவர்கள் நடந்து கொள்ள, பல்வேறு சமூகப் பள்ளிகள் செய்ய முடியாதவற்றை, பல்வேறு தலைமுறைகள் கூற முடியாததை,

    திரைப்படங்கள் செய்து காட்டும்..

    ஆமாம்..

    நடிகர் திலகம் என்னும் கலைவாணியின் வடிவம், மேற்கூறிய அனைத்து சமுதாயப் பணிகளையும் தன் திரைப்படங்களின் மூலம் இன்னும் பல்வேறு தலைமுறைகளுக்கு உணர்த்திக் கொண்டேயிருக்கும்.

    அப்போது, உலகெங்கிலும் உறவுமுறை பற்றிய பாடங்களுக்கு இலக்கணமாய் நடிகர் திலகத்தின் நடிப்பு அமைந்து வழிகாட்டிக்கொண்டே யிருக்கும்.

    எனவே கவலை வேண்டாம்.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  7. #1396
    Member Senior Hubber
    Join Date
    Jan 2008
    Location
    Saudi Arabia
    Posts
    32
    Post Thanks / Like
    Quote Originally Posted by kalnayak View Post
    என்ன அது? முழுவதும் பார்த்து விட்டு வருகிறேன். கோபால்.
    அது ஒன்றும் பெரிய விஷயமில்லை. கொஞ்ச நாட்களுக்கு ஒருமுறை தலைதூக்கும் விஷயம்தான்.

  8. #1397
    Senior Member Senior Hubber kalnayak's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Chennai
    Posts
    136
    Post Thanks / Like
    ஓ!

    புதிதாய் மதுர கானத் திரிக்கு வருகை தந்துள்ள அண்ணன் வரதகுமார் சுந்தராமன் அவர்களின் எல்லாம் தெரிந்த ஆனால் அவரே நம்பாத பதிவில், ஆதிராமிற்கு அர்ச்சனை ஆரம்பித்து என்னை கலாய்த்திருக்கிறார். வருகிறேன், அவருக்கான பதிலோடு விரைவில். பெயரை நான் சொல்லாமல் இருக்கலாம். ஆனால் சொல்லும் பெயரைக்கூட ஒழுங்காக சொல்லத்தெரியாத அண்ணன்? நான் அண்ணன் சொன்னால்... ? பலருக்கு இங்கே புரிந்திருக்கும். ஆனால் என்னுடைய பதில் முந்தைய என் அண்ணன் பதிவுகளாக இராது. எனக்கு இங்கே நண்பர்கள் இருக்கிறார்கள். அவர்கள் மனம் வருத்தமுறாதவாறு சற்று யோசித்து பதில் தருகிறேன். அதற்கு முன் ஒன்றை சொல்ல விரும்புகிறேன். காமாலைக் கண் கொண்டவனுக்கு காண்பதெல்லாம் மஞ்சள்.
    Last edited by kalnayak; 25th June 2015 at 06:38 PM.
    .........-`҉҉-
    -`҉҉..)/.-`҉҉-
    ....~.)/.~
    ........~.

  9. #1398
    Member Senior Hubber
    Join Date
    Jan 2008
    Location
    Saudi Arabia
    Posts
    32
    Post Thanks / Like
    கல்நாயக் சார்,

    வேண்டாம் விடுங்கள். இப்போதுதான் திரி அமைதியடைந்து அதன் பாதையில் சீராக போய்க்கொண்டிருக்கிறது. இந்த நிலையில் மீண்டும் சர்ச்சை வேண்டாம்.

    இதனால் திரியிலுள்ள நண்பர்கள் ராஜேஷ் போன்றவர்களும், 'இது போன்ற சர்ச்சைகள் இங்கு வேண்டாம். எங்களை அமைதியாக பதிவிட விடுங்கள்' .என்று சொல்லி விட்டனர்.

    ஆகவே மீண்டும் சர்ச்சை வேண்டாம். நாம் என்ன கரடியாக கத்தினாலும் அவர்கள் நம்பப் போவதில்லை.

  10. #1399
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    ஜூன் 24 - இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதனின் 87-வது பிறந்தநாள். இந்த பிறந்தநாளைக் கொண்டாடும் விதமாக சமீபத்தில் ‘எம்எஸ்வி டைம்ஸ்.காம்’ சென்னையில் ஒரு இசை அரங்குக்கு ஏற்பாடு செய்திருந்தது. பாடல்கள் மற்றும் பின்னணி இசைக் கோர்ப்பில் எம்.எஸ்.விஸ்வநாதனின் பல்வேறு பரிணாமங்களை எடுத்துக்காட்டிய இந்நிகழ்ச்சியில் எம்.எஸ்.விஸ்வநாதனுடன் பணிபுரிந்த தொழில்நுட்பக் கலைஞர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

    எம்.எஸ்.வி இசையில் வெளியான ‘அன்பே வா’, ‘கௌரவம்’ ஆகிய படங் களில் அவர் பின்னணி இசைக்கோர்ப் பில் செலுத்திய நேர்த்தியை செல்லோ சேகர் (குன்னக்குடி வைத்தியநாதன் மகன்) இந்நிகழ்ச்சியில் விவரித்தார்.

    ‘தூது சொல்ல ஒரு தோழி’, ‘சட்டி சுட்ட தடா கை விட்டதடா’ ஆகிய பாடல்களில் உள்ள தனித்தன்மையை ‘கிடார்’ பாலா விளக்கிப் பேசினார். கரஹரப்ரியா ராகத்தில் எம்.எஸ்.விஸ்வநாதன் வெவ்வேறு நுட்பத்தைப் பயன்படுத்தி இசையமைத்ததை இசையமைப்பாளர் தாயன்பன் எடுத்துக்கூறினார்.

    ‘கலங்கரை விளக்கம்’, ‘உத்தர வின்றி உள்ளே வா’ ஆகிய படங்களில் இடம்பெற்ற டைட்டில் பாடல்களின் வழியே படத்தின் கதையைச் சொல் லும் எம்.எஸ்.வியின் தனித்த அடை யாளத்தை எடுத்துக்கூறினார், ஆடிட்டர் மற்றும் மெல்லிசைப் பாடகர் வி.பால சுப்ரமணியன். எம்.எஸ்.விஸ்வநாத னின் லய வேலைப்பாடல்கள் பற்றிய பரிணாமத்தை ‘வெள்ளிக்கிண்ணம் தான்’ உள்ளிட்ட சில பாடல்களை முன் னிலைப்படுத்தி எம்.எஸ்.சேகர் பேசி னார். நிகழ்ச்சியில் நல்லி குப்புசாமி, திரைப்பட இயக்குநர் எஸ்பி.முத்து ராமன், இசையமைப்பாளரும், எம்.எஸ்.விஸ்வநாதனின் இசைக்குழுவில் பல ஆண்டுகள் பணியாற்றியவரும், லால்குடி ஜெயராமனின் ‘தில்லானா’ இசைத்தட்டு உருவாக்கத்தில் மேற்கத் திய இசையமைத்து பியூஷன் இசைக்கு வழிவகுத்தவருமான ஷ்யாம் ஜோசப் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர். நிகழ்ச்சியை ராம் லஷ்மணன், எம்.எஸ்.வி. வைத்தி ஆகியோர் தொகுத்தளித்தனர்.

    இந்த விழாவில் எம்.எஸ்.விஸ்வ நாதன் பற்றி நல்லி குப்புசாமி பேசிய தாவது:

    30 ஆண்டுகளுக்கு முன்பே எம்.எஸ்.வியோடு நெருங்கி பழகும் அனுபவம் பெற்றவன் நான். ஒவ்வொரு ஆண்டும் நடக்கும் கண்ணதாசன் விஸ்வநாதன் அறக்கட்டளை விழா வுக்கு அவரே நேரில் வந்து அழைப் பிதழ் கொடுப்பார். ‘எதுக்குங்க நீங்க வரணும். சொல்லி அனுப்பினா நான் வந் துடுவேனே’ என்று கூறினால்கூட கேட்க மாட்டார். அவர் வாழ்கிற காலத்தில் நாம் வாழ்வது பெருமையான விஷயம்.

    எம்.எஸ்.விக்கு நடிக்க வேண்டும் என்பதில்தான் அதிக ஆர்வம் இருந்தது. ஒரு நாடகத்தில் கோவலன் வேடம் போடும் வாய்ப்பு அவருக்கு கிடைத்திருக்கிறது. ஆனால் கடைசி நேரத்தில் எம்.எஸ்.வி குட்டையாக இருப்பதால் அவர் தேர்வாகாமல் போய் விட்டார். ‘என்னை குட்டை என்று தவிர்த் தவர்கள், கண்ணகி வேடம் போட்டவரை நெட்டை என்று கூறி நீக்க வேண்டியது தானே’ என்று கோபப்பட்டார். ‘அதெல் லாம் விடுங்க சார். அந்த வாய்ப்பு கிடைத்திருந்தால் இன்னைக்கு நாங்க இப்படி சிறப்பான பாடல்களை கேட்டி ருக்க முடியாதே’ என்று சொன்னோம்.

    1973-74களில் தினம் ஜவுளிக் கடைக்கு போகிறேனோ இல்லையோ, கண்ணதாசனைப் பார்ப்பதற்காக கவிதா ஹோட்டலுக்கு சென்றுவிடு வேன். எம்.எஸ்.விக்கும் தனக்கும் உள்ள நெருக்கம், வேடிக்கையான அனுபவங் களை எல்லாம் கவிஞர் மணிக்கணக்கில் சொல்வார். அதுதான் நட்பு.

    இவ்வாறு அவர் பேசினார்.

    எஸ்பி.முத்துராமன் பேசும்போது, “ஜெய்சங்கர் நடிப்பில் ‘துணிவே துணை’ படத்தை இயக்கினேன். படத் தில் முதல் சில காட்சிகளில் வசனம் இல் லாமல் எம்.எஸ்.வியின் திகில் இசை தான் முக்கிய அங்கமாக இருக்கும். அந்த இசை, படத்தை அவ்வளவு நேர்த்தியாக நகர்த்திச் செல்லும்.

    ஒருமுறை, கண்ணதாசன் இறந்து விட்டார் என்று எம்.எஸ்.வி வீட்டுக்கு செய்தி வருகிறது. மார்பிலும், தலை யிலும் அடித்துக்கொண்டு கதறி அழுத படி கண்ணதாசன் வீட்டுக்கு போகிறார், எம்.எஸ்.வி. அங்கே ‘வாப்பா விசு’ என்று கண்ணதாசன் குரல் கேட்கிறது. ‘ஏண்ணே.. இப்படி!’ என்று படபடத்து நிற்கிறார்.

    ‘நான் இறந்துபோனால் நீ எப்படி கதறி அழுவாய் என்பதை நான் பார்க்க வேண்டும் என்பதற்காகத்தான் இப்படி செய்தேன்’ என்று கண்ண தாசன் கூறியிருக்கிறார். அதுதான் நட்பு. கவியரசருக்கு சிலை வைத்த பெருமை எம்.எஸ்.விக்குத்தான் சேரும்’’ என்றார்.

    ஷ்யாம் ஜோசப் பேசும்போது, “பாட்டை பாமர மக்களும் கேட்க வேண்டும். கேட்ட மாத்திரத்திலேயே அதை அவர்கள் பாட வேண்டும் என்கிற நோக்கம் அவருக்கு அவசியமாக இருந்தது. இசையில் இன்ஸ்ட்ரூமென்ட்ஸ் ரேன்ஞ் என்று ஒரு கட்டத்தை சொல்வோம்.

    அதை எந்த அளவில் கொடுக்க வேண்டும் என்கிற வித்தை அறிந்தவர், எம்.எஸ்.வி. சங்கீதத்துக்கு என்ன செய்ய வேண்டுமோ அதற்கு மேல் செய்தவர் எம்.எஸ்.வி’’ என்றார்.

  11. Likes vasudevan31355, Russellmai, adiram liked this post
  12. #1400
    Member Senior Hubber
    Join Date
    Jan 2008
    Location
    Saudi Arabia
    Posts
    32
    Post Thanks / Like
    யுகேஷ் சார்,

    மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி பற்றிய சிறப்பான பதிவுக்கு நன்றி

    விழாவில் மெல்லிசை மன்னர் கலந்து கொண்டாரா?. (அவருக்கு உடல்நலம் சரியில்லைஎன்று சொன்னார்களே. அதனால் கேட்டேன்).

    வழக்கமாக வருடா வருடம் இந்த நாளில் கண்ணதாசனின் சிலைக்கு எம்.எஸ்.வி. மாலை அணிவிக்கும் செய்தி தொலைக்காட்சிகளில் வரும். நேற்று அந்த செய்தியையும் காண முடியவில்லை.

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •