-
25th June 2015, 07:17 PM
#1401
Junior Member
Diamond Hubber
-
25th June 2015 07:17 PM
# ADS
Circuit advertisement
-
25th June 2015, 07:26 PM
#1402
Senior Member
Senior Hubber
மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்கள் உடல் நலம் பெற பிரார்த்திப்போம்.
.........-`҉҉-
-`҉҉..)/.-`҉҉-
....~.)/.~
........~.
-
25th June 2015, 08:13 PM
#1403
Senior Member
Senior Hubber

Originally Posted by
Varadakumar Sundaraman
''கண்ணை நம்பாதே
உன்னை ஏமாற்றும் உன்னை ஏமாற்றும்
நீ காணும் தோற்றம்
உண்மை இல்லாதது
அறிவை நீ நம்பு
உள்ளம் தெளிவாகும் அடையாளம் காட்டும்
பொய்யே சொல்லாதது.''
மக்கள் திலகம் எம்ஜிஆர் .
அனந்தராமன் என்கிற திரு ஆதிராம் அவர்களே
உங்கள் விளக்கத்தை படித்தேன் . கடந்த 8 ஆண்டுகளாக எல்லா திரிகளையும் படித்தவன் என்ற முறையில்
எனக்குள் எழுந்த சில கேள்விகளுக்கு பதில் இது வரை கிடைக்கவில்லை .இருந்தாலும் உங்களுடைய பதிவை மேற்கோள் காட்டி என்னுடைய பதிவினை உங்கள் முன் வைக்கிறேன் .
''என்னுடைய பதிவுக்கு நேரடியாக பதில் சொல்ல முடியாதபோது' - ஆதிராம் 1
என் பதிவு .1
நீங்கள் அப்படியென்ன உலகத்தில் யாரும் கேட்காத சட்ட கேள்விகள் கேட்டு விட்டீர்கள் உங்களுக்கு பயந்து மற்றவர்கள் தப்பிக்க உபாயம் தேடுவதற்கு.
''இதற்கு கல்நாயக் போன்ற சிலர் விளக்கம் அளித்திருக்கிறார்கள்'' - ஆதிராம் -2
என் பதிவு -2
நீங்கள் சொல்பவரே நீங்கள்தான் என்று சொல்கிறார்கள். அதுவும் நான் சொல்லல அய்யா!அதுவும் உங்கள் திரியிலேயே பலர் சொல்லி நான் படித்திருக்கிறேன். அது உண்மையாய் இருந்தால் உங்களுக்கு நீங்களே விளக்கம் கொடுத்துக் கொள்வது போல ஆகி விடுமே! அது உண்மையில்லாமல் இருக்க வேண்டும் என்பதுதான் என் விருப்பமும் இல்லை இல்லை உங்கள் விருப்பமும். ஆனால் நான் நம்பவில்லை ஆதி . நீங்கள் வெவ்வேறு ஆள்தான்.
நீங்களே ஒரு பெயரில் பதிவிட்டு ஒரு கால் மணி நேரமோ அரை மணி நேரமோ சென்றபின் நீங்களே உங்களுக்குண்டான வேறு பெயரில் (பெயர்களில்) உங்களுக்கு லைக்குகள் போட்டுக் கொள்கிறீர்களாமே! சிரிக்கிறார்கள். ஆனால் நான் நம்பவில்லை ஆதி . நீங்கள் வெவ்வேறு ஆள்தான்.
ஆனால் நான் கூட பல சமயங்கள் பார்த்திருக்கிறேன். who is online பார்க்கும் போது நீங்கள் குறிப்பிட்ட அந்த வேறு ஒருவரும் பச்சை விளக்கில் இருக்கிறார் அடுத்த வினாடி உங்கள் பெயர் லாகின் ஆகி பச்சை விளக்கில் மின்னுகிறது. உடன் நாயகர் லாக்-ஆப் ஆகி பச்சை விளக்கு அணைகிறது. அப்புறம் உங்களுடையது அணைந்து பரணி சாம்ராஜ்யம் என்று லாகின் ஆகி விளக்கு எரிகிறது.
இதுமட்டுமல்லாமல் 'ஊர்வசி', கிரிஜா என்று பொம்பளைகள் பெயரில் அடிக்கடி வேறு உங்கள் பின்னாலேயே விளக்குகளாய் லாகின் ஆகி மாறி மாறி மின்னி மின்னி அணைகின்றன. நண்பர்கள் தங்கள் 'எண்ணங்கள் எழுத்துக்களை' சொல்கிறார்கள். ஆனால் நான் நம்பவில்லை சார். நீங்கள் வெவ்வேறு ஆள்தான்.
எழுத்தாளர் சுஜாதா ஆண் என்று அனைவருக்கும் தெரியும்.ஆனால் பெண் பெயரில் எழுதுவார். ஆனால் அவர் பெண்ணாக மாற முடியுமா? ஜீன்ஸ் பேன்ட் போட்டு அத்தை மகனுடனோ சித்தி பையனுடனோ பின்னாடி பைக்கில் கால் தூக்கிப் போட்டு எறி குஜாலாக படம் பார்க்க போக முடியுமா? குளித்துக் கொண்டிருக்கம் போது ரவிச்சந்திரன் மேட்டர் வந்தால் அப்படியே வர முடியுமா? பெண் புனைப் பெயர்தானே .ஆனால் அவர் ஆண்தானே! ஆனா ஆணே இங்கு பெண்ணாக மாறி விட்ட அதிசயமெல்லாம் நடந்துது என்று நான் சொல்லி சிரிக்கல சார். சொல்றாங்க. ஆனால் நான் நம்பவில்லை ஆதி . நீங்கள் வெவ்வேறு ஆள்தான். பெண் இல்ல.
அது எப்படி உங்கள் பெயர் வரும் போது மட்டும் இவர்கள் பின்னாலேயே உங்களைத் தொடர்ந்து வருகிறார்கள் என்பது மட்டும் புரியாத புதிராகவே உள்ளது. ஒருவேளை உங்களுக்கும் மிஞ்சிய ஒற்று வேலை பார்ப்பவர்கள் போல் இருக்கிறது. நீங்கள் எப்போது ஹப்பில் அமர்வீர்கள் என்று வேலை வெட்டி இல்லாமல் இவர்கள் பார்த்துக் கொண்டு நீங்கள் வந்ததும் உங்கள் பின்னாடியே ஓடி வந்து விடுகிறார்களே! அப்படி என்று சொல்கிறார்கள். ஆனால் நான் நம்பவில்லை ஆதி . நீங்கள் வெவ்வேறு ஆள்தான்.
நாயகர் பதிவிடும் போது ஆதிராமும் லாகினில் இருக்கிறார். ஆனால் உஷாராக பதிவு போடாமல் இருக்கிறார். அப்புறம் சந்தேகம் கொண்டு யாராவது கேட்டால் அரை மணி நேரத்தில் ஆதிராம் ஓடி வந்து நாயகருக்கு லைக் போட்டு விட்டு தற்காப்பு நாடகம் நடத்தி ஓடி விடுகிறார்..அப்போது நாயகர் லாக்-ஆப் ஆகி விடுவார். ஏனென்றால் நாயகருக்கு நான் லைக் போட்டேன் என்று சொல்லி நாங்கள் இருவரும் வெவேறு நபர்கள் என்று தப்பித்துக் கொள்ளலாம் அல்லவா! அப்படின்னு சொல்கிறார்கள். ஆனால் நான் நம்பவில்லை சார். நீங்கள் வெவ்வேறு ஆள்தான்.
''இந்த குற்றச்சாட்டு வந்த துவக்கத்திலேயே மாடரேட்டர்கள் தீர ஆராய்ந்து, புகாரில் உண்மையில்லை என்று கண்டறிந்து என்னை தொடர அனுமதித்துள்ளனர்'' - ஆதிராம் -3
என் பதிவு -3
ஓஹோ! இந்தக் குற்றச்சாட்டு துவக்கத்திலேயே வந்து விட்டதா? நான் ஒரு மாங்கா. இப்பத்தான் உங்களை மாதிரி துப்பு துலக்கி கண்டு பிடிச்சுட்டேன்னு பெருமைபட்டா மக்கா ஆரம்பத்திலேயே கண்டு பிடித்து விட்டார்களா? சதிகாரர்கள். இவர்களை சும்மா விடக் கூடாது நாயகரே சாரி ஆதிராம் . சாரி அனந்த ராமன்
அது சரி.எந்த மாடரேட்டர்கள் ஆராய்ந்து சொன்னார்கள் என்று சொல்ல முடியுமா? ஆதாரம் இருந்தால் கொடுங்கள். நான் உங்களை குறை சொல்பவர்களை உண்டு இல்லை என்று ஆக்கி விடுகிறேன். ஒரு மனுஷரை இப்படியா சந்தேகப்படுவது? இருந்தாலும் மாடரேட்டர்கள் உங்களையேவா பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்? அவர்கள் ஆதிராம் ஒருவர்தான் வேறு பெயரில் வரவில்லை என்று எங்காவது அறிவித்திருக்கிறார்களா? அப்படி என்று நான் கேட்கவில்லை. கேட்கிறார்கள். சொல்கிறார்கள். ஆனால் நான் நம்பவில்லை ஆதி . நீங்கள் வெவ்வேறு ஆள்தான்.
''முத்துராமன் என்ற பெயரில் ஒருவர் இந்த சந்தேகத்தை கொளுத்திப்போட்டார்'' -ஆதிராம் 4
என் பதிவு 4
முத்துராமன் மட்டுமா கொளுத்திப் போட்டார். அதற்கு முன்னும் பின்னும் பலர் கண்டு பிடித்து விட்டார்களே. உங்களுக்கும் பாரிஸ்டர் என்று அப்போது இருந்த ஒருவருக்கும் இது சம்பந்தமாக பக்கம் பக்கமாக வாக்குவாதம் நடந்ததே. சொல்கிறார்கள். ஆனால் நான் நம்பவில்லை சார். நீங்கள் வெவ்வேறு ஆள்தான்.
''இந்த ஆராய்ச்சி இன்றோடு முடியட்டுமே'' -ஆதிராம் -5
என் பதிவு - 5
ஏன் பயப்படுகிறீர்கள் சார். நீங்கள்தான் மற்றவர்கள் இல்லையே. யாராவது ஏதாவது ஆராய்ச்சி பண்ணிவிட்டுப் போகட்டுமே. நீங்கள்தான் யோக்கியர் ஆயிற்றே. அப்புறம் ஏன் இந்த நடுக்கம். பயப்படாதீர்கள். நாங்கல்லாம் இருக்கோம். விட்டுத் தள்ளுங்கள். நீங்கள் இப்படி பயப்பட்டால் நீங்கள் செய்வது எல்லாம் உண்மை என்று ஆகிவிடும். இன்னும் வகையாக மற்றவர்கள் பேச நீங்களே வழி செய்து கொடுத்தது போல் ஆகி விடும்.
உங்கள் தலைவர் நடித்த ராஜா ராஜ சோழன் படத்தில் ஒற்று வேலை பார்க்க நம்பியார் சிவாஜியின் நம்பிக்கைக்கு பாத்திரமாவது போல் நடிப்பார். ஆனால் மனோரமாவை வைத்து நம்பியாரையே ஒற்றும், வேவும் பார்த்து அவரை கையும் களவுமாக பிடிப்பார் சிவாஜி. அது மாதிரி நீங்க எங்க மக்கள் திலகம் எம்ஜிஆர திரியில் வந்து ஒற்று வேலை பார்க்கும் போது உங்களைப் பற்றி எங்க திரியிலே இருந்து வந்து ஒற்று வேலை செஞ்சி எங்க ஆளுங்க கண்டு பிடிச்சதுதான் இவ்வளவு விஷயமும். என்ன தைரியம் இருந்தா அந்த ஆளு இங்கே வந்து ஒற்று வேலை பார்த்திருப்பாரு அப்படின்னு இங்க உள்ளவங்க கேக்குறாங்க. ஆனால் நான் நம்பவில்லை ஆதி . நீங்கள் வெவ்வேறு ஆள்தான்.
''என் உண்மைப்பெயர் கூட ஆதிராம் இல்லை. அனந்தராமன்'' - ஆதிராம் -6
என் பதிவு -6
ஓ...இருக்கிற பேரெல்லாம் போதாது என்று இன்னொரு பேரா. தாங்கல ஆதி ! இப்போ மத்தவங்க சொல்றத நான் நம்பித்தான் ஆகணும் போல இருக்கு. என் பெயரே எனக்கு மறந்துடும் போல் இருக்கு. அஞ்சாறு பெயர்ல நீங்க எப்படித்தான் கில்லாடித்தனமா இவ்வளவு நாள் சாமர்த்தியமா குப்பை கொட்டுறீங்களோ தெரியல. ஒற்றர் வேவு வேலை பார்த்து எங்க திரியை உங்க திரி போல வேகமாக பாகம் கடக்க வச்சதுக்கும், இன்னும் கொஞ்ச நாள்ல உங்களையும் மிஞ்சி நாங்க அடுத்த பாகம் போக உதவி செஞ்சதுக்கும் உங்களுக்கு நன்றி.
ஆமா! நாயகரை ரொம்ப ரெண்டு மூணு நாளா காணோமே. ரொம்ப அப்செட்டோ. நீங்க மட்டுமே வரீங்க. சரி இப்பதான் சொல்லிட்டோமில்ல. அவரும் நீங்களும் இப்போ ஒண்ணா வந்து நாங்க ரெண்டு பெரும் வேற வேற ஆள்னு நம்ப வச்சுடுவீங்க. நவராத்திரி வேஷம் கட்டினவரே உங்களிடம் தோத்துப் போகணும். உங்களையெல்லாம் ரசிகரா வச்சிருந்தாரே..அவரை சொல்லணும்.
சரி வருத்தப்படாதீங்க. சுவிட்சை மாத்தி மாத்தி போடுங்க.
ஆதிராம்
என்னோட பொது வாழ்க்கையில் உங்களை போன்று பன்முக ஆற்றல் கொண்ட ஒருவரை இப்போதுதான் பார்கிறேன் .
வேண்டுகோள்
உங்கள் அழகு திருமுகத்தை திரியில் பதிவிடுங்களேன் . எல்லோருடைய குழப்பமும் தீரும் .பதிவீர்களா ?
கல் நாயக் சென்னையில் இருப்பதால் அவரை நேரில் சந்திக்கிறேன் .
கடைசியாக மக்கள் திலகத்தின் பொன்னந்தி மாலை - பாடலை பதிவிட்ட திரு கார்த்திக் எங்கே ?
ஆயிரத்தில் ஒருவனை - மிக நேர்த்தியாக விமர்சனம் செய்த சாரதா பல வருடங்களாக காண வில்லையே ?
ஒரே ஒருவரின் சாமர்த்தியம் - பலரை எப்படி அலை கழிக்கிறது ?
மாடரேட்டர்கள் ஏமாறலாம் . பதிவாளர்கள் ஏமாறலாம் . பார்வையாளர்கள் ஏமாறலாம் .
பைபிள் - பகவத் கீதை - குரான் மீது நம்பிக்கை கொண்டவன் நான் .
சிரித்து வாழ வேண்டும் படத்தில் மக்கள் திலகம் பாடுவார்
''யாரும் அறியாமல் செய்யும் தவறென்று
ஏமாற்றும் நினைவை மாற்றுங்கள்
ஒன்றில் ஒன்றாய் எங்கும் நின்றான்
ஒருவன் அறிவான் எல்லாம்
காலம் பார்த்து நேரம் பார்த்து
அவனே தீர்ப்பு சொல்வான் !
அஸ்ஸலாமு அலைக்கும் !
"நன்றாக போய்க்கொண்டிருக்கும் திரியில் வேண்டாம் வம்பு" என்று இருக்க முடியவில்லை. என் மீது சொல்லப்பட்டிருக்கும் அவதூறுக்கு நான் பதில் சொல்லாவிடின், அவதூறு உண்மையாக்கப்படும், என்னுடைய நண்பர்களும் இந்த அவதூறு உண்மையோ என்று எண்ணக்கூடும். முந்தைய கல்நாயக்காக நான் இருந்திருந்தால் "ஆமாம் நானும் ஆதிராமும் ஒருவர்தான்" என்று சொல்லி இருந்திருப்பேன். இப்போதைக்கு நிறைய பதிவுகளை இங்கு நான் இட்ட பிறகும் அவ்வாறு தொடர விரும்ப வில்லை. எனவே இது என்னை தங்கள் நண்பனாக நினைக்கும் நண்பர்களுக்கு மட்டுமே.
ஆதிராமிற்கும், எனது ஊரைச்சேர்ந்த நண்பர் நெய்வேலி வாசுதேவன் அவர்களுக்கும் பிரச்சினை என்றால் அவர்களாகவே தீர்த்துக் கொள்வார்கள். நடந்திருக்கிறது. நண்பர் ஆதிராமும் கண்டிக்கப்பட்டார். முடிந்தது பிரச்சினை. இப்போது ஆதிராம் தொடர்கிறார். வாசு அவர்களை பாராட்டுகிறார். தெரிந்ததுதானே. இதில் இருந்து நான் ஆதிராம் அல்ல என்று எப்படி இவர்கள் தெரிந்து கொள்வார்கள்? யாரேனும் கேட்கலாம்.
ஆதிராம் சில அல்லது பல பெயர்களில் எழுதி இருக்கலாம். அதை அவர் ஒப்புக்கொண்டும் இருக்கிறார். அதற்காக அதில் நானும் ஒருவன் என்பதை எப்போதாவது யாராவது எந்த ஆதாரத்தொடாவது சொல்லி இருக்கிறார்களா என்றால் இல்லை. அதுமட்டுமில்லை. எங்கள் இருவரின் எழுத்துக்களை யாராவது தொடர்ந்து படித்து வந்தால் இருவரின் நடைமுறைகளை (ஸ்டைல்) கட்டாயமாக கவனிக்க முடியும். யாராவது அதை அலசி ஆராய்ந்து செய்து இருவரும் ஒருவர்தான் என்று விஞ்ஞான முறையில் நிருபித்திருக்கிறார்களா? குறை சொல்லும் அண்ணன் கொண்டுவரட்டும் அந்த நிருபணங்களை. யாரோ, எங்கோ பிதற்றுவதை இங்கே எடுத்து வந்து வாந்தி எடுப்பவரை என்னவென்று சொல்வது?
இரண்டாவதாக 'ஆதிராமும், நானும் ஒருவர்தான் என்று பலர் சொல்கிறார்கள், பலர் சொல்கிறார்கள்' என்று சொல்லி வம்பிழுக்கும் அண்ணன், நடிகர் திலகம் திரியில் திரு முரளி ஸ்ரீநிவாசன் அவர்கள் என்னைப் பற்றி சொல்லி இருந்தார் - எனது கணிப்பொறியில் இருந்து கல்நாயக் என்ற பெயரில் மட்டுமே பதிவுகள் இடப் படுகிறது என்று. அதை கவனிக்க கண்கள் கெட்டுப் போய்விட்டனவா அந்த பிரகஸ்பதிக்கு?
மூன்றாவதாக இந்த திரியில் பலரும் உற்றுக் கவனித்திருந்தால் தெரிந்திருக்கும் - நண்பர் ரவி அவர்களின் கருவின் கரு தொடரில் உருக்கமாக தாயைப் பற்றி அவர் எழுத ஆரம்பித்த போது, ஆதிராம் சொல்லியிருந்தார் - தனது தாயை நினைத்து, அவர்களை உடன் இருந்து கவனித்து கொள்வதற்காக தனது வேலையை விட்டுவிட்டு தாயகம் கூட திரும்பி வந்துவிடலாம் என்று நினைப்பதாக என்று. பின்பு நான் எழுதி இருந்தேன் - எனது தாய் மறைந்து எட்டு வருடங்களுக்கு மேலாகி விட்டன, எனது நினைவில் என்றும், எப்போதும் இருக்கிறார்கள் என்று. இதை படித்தவர்களுக்கு தெரிந்திருக்கும் - உண்மை எது, பொய்மை எது என்பது. இதற்கு மேலும் நானும் ஆதிராமும் ஒருவர் என்று நினைக்கும் வரதக் குமார்களை நீங்களே கேட்டுக் கொள்ளுங்கள். இல்லாவிட்டால் நானே புதிய திரியில் சந்திக்கிறேன்.
எங்களுக்காக எழுதவந்து பல்பொடி விளம்பரத்திற்கு உதவிய எங்கள் நடிகர் திலகம் குழாம் நண்பர் கோபால் அவர்களுக்கு நான் மிகவும் நன்றி கடன் பட்டிருக்கிறேன். நான் கடலூர்காரன் என்பதை நன்றாக அறிந்தவர் வாசு. என்னை முதன் முதலில் எழுத வைத்து அழகு பார்த்தவர் அவர்தான். அவரும் உண்மைகளை நன்றாக அறிந்திருப்பார் என்றே கருதுகிறேன். நான் எழுதாத சமயத்தில் எனக்கு அழைப்பு விடுக்கின்ற நண்பர்கள் ரவி மற்றும் கலைவேந்தன் அவர்களுக்கும் எனது நன்றிகள். எனக்கு கவிதை எழுத கற்றுக் கொடுத்து, இங்கே நிறைய எழுத உற்சாகம் கொடுக்கும் சி.க. வை என்னால் மறக்க முடியாது. எனக்குத் தெரியாத பல விவரங்களை சொல்லி என்னைத் தேற்றிக் கொண்டிருக்கும் நண்பர்கள் ராஜேஷ் ஜி அவர்களுக்கும், திரியில் வந்து நல்ல பல விவரங்களை பகிர்ந்து கொண்டிருக்கும் கிருஷ்ணா அவர்களுக்கும், ஜுகல் பந்தி மூலம் கலக்கிக் கொண்டிருக்கும் சீனியர் ராஜ்ராஜ் அவர்களையும் நான் நினைவில் கொள்ளவேண்டி உள்ளது நன்றி சொல்வதற்கு. நடிகர் திலகம் புகழ் பரப்புவதே தன் பணி எனக்கொண்டிருக்கும் எங்கள் சீனியர் நண்பர் திரு ராகவேந்திரா அவர்களுக்கும் எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். அதே போல திரு. வினோத் அவர்களையும், மற்றும் யுகேஷ் பாபு அவர்களும்(எங்களுக்குள் முன்பு மோதல் இருந்ததால் - நாங்கள் அரிதாகவே ஒருவரை ஒருவர் பாராட்டிக் கொள்வோம்.) நான் நினைத்துப் பார்க்கிறேன். ஒருவர் சொன்னதால் மட்டுமே இருவர் ஒருவராக முடியாத நண்பர் ஆதிராமுக்கும் எனது நன்றிகள். கல்யாணப் பரிசு தங்கவேலு எழுத்தாளர் பைரவன் போல வேடமிட்டது நினைவிற்கு வருகிறது, இவர்கள் என்னை உங்களையாக வேடமிடுவது.
இப்போது நான் அந்த மோதல் முறைகளை கைவிட்டதால் மட்டுமே இப்படி ஒரு பதிவு. இல்லை எப்போதும் போல மோதல் பதிவுகள் வேண்டுமென்றால் கொடுக்க நான் தயார். நீங்கள் தடை செய்யாமல் இருக்க வேண்டுமே. இது போதவில்லை என்றால், அண்ணன் வரதக் குமார் அவர்களே, உங்கள் பதிவை எடுத்துக் கொண்டு அலசி ஆராய்ந்து எனது பதில் பதிவை கொடுக்கிறேன்.
நீண்ட பதிவாகி விட்டது. மன்னிக்கவும். அடுத்த முறை இவ்வளவு நேரம் கிடைத்தால், மற்றவர்களின் பிரத்யேக பதிவுகளை படித்து எனது கருத்துக்களை பகிர்வதுடன் எனது பூவின் பாடலுடன் வருகிறேன். அதுவரை வணக்கம்.
Last edited by kalnayak; 6th July 2015 at 03:06 PM.
.........-`҉҉-
-`҉҉..)/.-`҉҉-
....~.)/.~
........~.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
26th June 2015, 03:50 AM
#1404
Senior Member
Seasoned Hubber
ரவி
ஆஹா திரையில் பக்தியே பேசுவதாக என்ன அருமையாக ஒரு கேள்வி கேட்டுள்ளீர்
சில காரணங்களால் வர இயலவில்லை. திரையில் பக்தி எங்கும் போகவில்லை. தொடரும்.
-
26th June 2015, 05:22 AM
#1405
Junior Member
Platinum Hubber
இனிய நண்பர் திரு கல் நாயக்
நீண்ட நாட்களுக்கு பிறகு உங்கள் விரிவான பதிவில் என் பெயரையும் குறிப்பிட்டு இருந்ததற்கு நன்றி .நம் இருவருக்கும் என்றுமே கருத்து மோதல் வந்ததில்லையே . திரு குமார் எழுப்பிய கேள்விகளுக்கு உங்கள் பதில் மிகவும் நகைச்சுவையாக இருந்தது . சென்னயில் இருக்கும் நீங்கள் ஒரு முறைசென்னயில் வசிக்கும் திரு குமாரை நேரில் சந்தித்து விட்டால் எல்லோருடைய குழப்பங்களும் தீர்ந்து விடும் .செய்வீர்களா கல்நாயக் ?
-
26th June 2015, 06:56 AM
#1406
Junior Member
Newbie Hubber

Originally Posted by
esvee
இனிய நண்பர் திரு கல் நாயக்
நீண்ட நாட்களுக்கு பிறகு உங்கள் விரிவான பதிவில் என் பெயரையும் குறிப்பிட்டு இருந்ததற்கு நன்றி .நம் இருவருக்கும் என்றுமே கருத்து மோதல் வந்ததில்லையே . திரு குமார் எழுப்பிய கேள்விகளுக்கு உங்கள் பதில் மிகவும் நகைச்சுவையாக இருந்தது . சென்னயில் இருக்கும் நீங்கள் ஒரு முறைசென்னயில் வசிக்கும் திரு குமாரை நேரில் சந்தித்து விட்டால் எல்லோருடைய குழப்பங்களும் தீர்ந்து விடும் .செய்வீர்களா கல்நாயக் ?
எஸ்வி,
எங்கள் திரியில் எல்லோருமே கௌரவமான நபர்கள். அவர்கள் தங்கள் இருப்பை நிரூபிக்கும் அவசியம் வேண்டாதவர்கள். ஒருவர் என்ன பொய் சொன்னாலும் தாய் இல்லை என்று பொய் சொல்ல மாட்டார்கள். இனியாவது ,எங்கள் திரி சார்ந்தவர்களை அனாவசியமாக காய படுத்தாதீர்கள்.
அப்படி நிரூபணம் அவசியமானால், நான் ஒரு இடத்தில் ரிஜிஸ்தர் வைக்கிறேன். போட்டோ ஐடீ காண்பித்து ,உங்கள் திரியை சார்ந்த எல்லோரும் கையெழுத்து போட்டு விட்டு போன பிறகு(கலைவேந்தன்,ராஜா,மசானம், உட்பட) ,ஆதிராம், கல்நாயக் போன்றோர் ஒன்றாக ஒரே மேடையில் தோன்ற ஏற்பாடு செய்கிறேன்.
-
26th June 2015, 07:16 AM
#1407
Senior Member
Diamond Hubber

Originally Posted by
adiram
டியர் வாசு சார்,
'வெற்றி மீது வெற்றி வந்து என்னைச் சேரும்' பாடலை மிக அருமையாக அலசியிருக்கிறீர்கள். அதிசயமில்லை, அது உங்களுக்கு கைவந்த கலை.
பாலாவின் அந்த நாளைய குரலில் பாடல்களைக் கேட்பது தனிச்சுவை. (இப்போது எஸ்.பி.பி.சரண் அந்த்பாடல்களைப் பாடும்போது பாலாவின் அன்றைய குரல் எட்டிப் பார்க்கிறது).
தேடிவந்த மாப்பிள்ளையின் பாடல்கள் அனைத்தும் வித்தியாசமாக மனத்தைக் கவர்பவை. 'மாணிக்கத்தேரில்' ஒன்றுதான் சற்று வழக்கமான ஒன்று. அந்தப்பாடலுக்காக சாத்தனூர் அணை பூங்கா முழுவதும் சீரியல் செட் அலங்காரம் செய்யப்பட்டு இரவுக்காட்சியாக படமாக்கப்பட்டிருக்கும். படப்பிடிப்பு முடிந்தபின்னும் இரண்டு நாட்கள் அந்த அலங்காரம் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்ததாக கேள்விப்பட்டிருக்கிறேன்.
வெற்றி மீது பாடலை மெல்லிசை மன்னர், பாலா இவர்களோடு சேர்ந்து எம்.ஜி.ஆரும் அதிகப்படியான சுறுசுறுப்பால் களைகட்டச்செய்வார். அதனால் அந்தப்படத்திலேயே அதிக ஹிட் ஆன பாடலாக இது அமைந்துவிட்டது.
பாடல் ஆய்வின் இடையே நடிகர்திலகத்தின் கர்ணனை செருகியதன்மூலம் உங்கள் எல்லா நடவடிக்கைகளிலும் நடிகர்திலகம் ஆக்கிரமித்திருக்கிறார் என்பது தெளிவாகிறது.
இன்னொரு திரியில் உங்கள் 'என்னதான் முடிவு' அலசல் அருமை.
அடுத்த பாடல் என்ன?. "பௌர்ணமி நிலவில் பனிவிழும் இரவில் கடற்கரை மணலில் இருப்போமா'" தானே?.
நன்றி ஆதிராம் சார்.
உண்மைதான். 'மாணிக்கத் தேரில்' பாடல் படப்பிடிப்பு முடிந்ததும் அலங்கார ஒளிவிளக்குகள் பொதுமக்களின் பார்வைக்காக இரண்டு நாட்கள் வைக்கப்பட்டிருந்தது.
இந்த மேலதிக தகவலை இங்கு நினைவுபடுத்தியதற்கு நன்றி!
இதற்குத்தான் நீங்கள் வேண்டுமென்பது. அருமையான சுவையான தகவல்களை தருவதில் உங்களுக்கு நிகர் நீங்களே.
'என்னதான் முடிவு? படித்து ரசித்ததற்கும் என் நன்றிகள்.
'பௌர்ணமி நிலவு' விரைவில் ஒளி வீசும்.
வேலைப்பளுவால் தாமதமான நன்றி சொல்ல வேண்டியதாயிற்று. மன்னிக்கவும்.
-
26th June 2015, 07:22 AM
#1408
Senior Member
Diamond Hubber
ராகவேந்திரன் சார்!
பதினாறு அடி பாய்கிறீர்கள். மிக அபூர்வமான 'அம்மா அப்பா' படத்திலிருந்து 'மாப்பிள்ளை நீயல்லவோ' என்ற சூப்பர் பாடல் அளித்து திக்குமுக்காடச் செய்து விட்டீர்கள். அடேயப்பா! எத்தனை நாட்கள் ஆயிற்று இந்தப் பாடலைக் கேட்டு? நிஜமாகவே அனுபவித்துக் கேட்டும், பார்த்தும் மகிழ்ந்தேன். நன்றி சொல்ல வார்த்தை இல்லை வேந்தரே!
என் ராட்சசியின் குரல் அல்லவா!
அதே போல அபூர்வ ஜோடியாய் ஜெய், விதுபாலா பாடும் ராசி நல்ல ராசி படப் பாடலுக்கும் நன்றி! இதுவும் மறைந்து போன ஒரு பாடலே!
'மலைச்சாரலில் ஒரு பூங்கொடி'பற்றி சொல்லவும் வேண்டுமோ!
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
-
26th June 2015, 07:52 AM
#1409
Junior Member
Seasoned Hubber
Good Morning
-
26th June 2015, 08:01 AM
#1410
Junior Member
Seasoned Hubber
கருவின் கரு - 114
பாகம் 2 - தந்தை
உண்மை சம்பவம் 16
(பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன )
என் நண்பன் சீனு - ஒரு அரசாங்க உத்தியோகத்தில் இருக்கிறான் - அவனுடைய புத்திசாளித்தனதிர்க்கும் , செய்யும் உழைப்பிற்கும் தனியார் துறையில் வேலை செய்திருந்தால் இன்று அவன் வாழும் நிலைமை பல மடங்கு உயர்ந்திருக்கும் ........என்னவோ அவன் தன் மனதை மாற்றிக்கொள்ளவே இல்லை . அவன் என்னுடன் பேசும்போதெல்லாம் அவன் திறமையை எண்ணி வியர்ந்திருக்கிறேன் - அவன் ஆசைகள் அளவானவை - எதற்குமே அவனிடம் ஒரு எல்லை இருந்தது - அவனுக்கு இரண்டு மகன்கள் - முதல்வன் பள்ளியை முடித்துவிட்டு இன்ஜினியரிங் காலேஜ் செல்லவேண்டும் - இரண்டாவது இப்பொழுதுதான் 10வது ...... அவன் மனைவியும் அவனைப்போல - தன் குழந்தைகள் தான் அவர்கள் உலகம் - விருந்தோம்பலில் அவர்களுக்கு எந்த விதத்திலும் நான் இணயாக மாட்டேன் ..
அன்று வெள்ளிக்கிழமை - சீனுவின் வீட்டிருக்கு சென்றிருந்தேன் - அவன் மனைவி மட்டும் தான் இருந்தாள் .. " வாங்க இன்னும் கொஞ்ச நேரத்தில் அவர் வந்துவிடுவார் - நீங்கள் வந்தால் இருக்கச்சொன்னார் !"
" ஆமா சீனு தனக்கு வெர்டிகோ problem என்று சொன்னானே ! இப்ப எப்படி இருக்கு ? "
" எங்க கேட்கிறார் - நேற்று பையனின் interview க்கு அவன் தூங்கின பிறகு கூட இவர் முழித்திருந்து படித்துக்கொண்டு இருக்கிறார் - laptop தான் அவருக்கு முதல் மனைவி "
சீனு வந்துவிட்டான் " ஏய் நீ எப்படா வந்த ? " - மிகவும் தளர்ந்து இருந்தான் - முகத்தில் அழிக்கமுடியாத ஒரு சோகம் . கண்கள் சரியான தூக்கத்தைப்பார்த்து பல நாட்கள் ஆகியிருக்கும் "
"சீனு ! நான் உன் உயிர் நண்பன் - என்ன problem உனக்கு - இரண்டு நாளா ஆபீஸ்க்கு கூட போகல ---- "
" அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை --- everything is fine ........ யாருக்கு என்று புரியாமல் குழம்பினேன் ....
சீனுவாக சொல்லாமல் , அவனிடம் இருந்து ஒன்றையும் கறக்க முடியாது .......
சீனுவின் மகன் மகிழ்ச்சி கலந்தும் கலக்காமலும் ஓடி வந்தான் " அங்கிள் எனக்கு சென்னை SRM இல் seat கிடைத்துவிட்டது - அப்பாவிற்கு உடம்பு முடியவில்லை - ஆஸ்பத்திரிக்கு கூடிக்கொண்டு போகிறோம் -----
நானும் கண்ணு முண்ணு தெரியாமல் சீனுவைப்பார்க்க ஓடினேன் --- பல மருத்துவர்கள் புடை சூழ நடுவில் என் சீனு படுத்திருக்கிறான் --- சீனு உனக்கு என்ன ?? உதடுகள் மனதுடன் சேர்ந்து புலம்பின ..
சில நாட்கள் ஓடின -- சீனுவை அவன் வார்டில் பார்க்கப்போயிருந்தேன் --- " என் கைகளை கண்களில் ஒற்றிக்கொண்டான் -- " ரகு ! நான் என் மகனைப்பற்றி வெறும் கனவுகள் தான் கண்டேன் - நீ அந்த கனவுகளில் வரவில்லை - ஆனால் நீதான் என் கனவுகளுக்கு உயிர் கொடுத்தாய் - இரண்டு இலக்ஷம் யார் தருவார்கள் இந்த காலத்தில் ??? "
"சீனு -- எனக்கு பிள்ளையா குட்டியா - நான் ஒரு தனி மரம் -- இந்த உதவி கூட அதுவும் உனக்கு நான் செய்யமாட்டேனா ?? இது நமக்குள் இருக்கட்டும் - உன் மகன் நன்றாக படித்து பெரிய ஆளாக வரவேண்டும் - அதுதான் என் விருப்பமும் .... பிள்ளைகளுக்காக தன்னையே மெழுகுவர்த்தியாக பண்ணிக்கொண்டவன் சீனு - அவனுக்கு ஒரு சிறிய முறையில் உதவி செய்யக்கூடிய அந்த பாக்கியத்தை கொடுத்த இறைவனை நான் என்றுமே மறப்பதில்லை ....
இந்த பாடல் திரு ராஜ் ராஜ் அவர்களுக்கும் ராஜேஷ் அவர்களுக்கும் பிடிக்கும் பாடல் என்று நினைக்கிறேன்
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
Bookmarks