Page 157 of 400 FirstFirst ... 57107147155156157158159167207257 ... LastLast
Results 1,561 to 1,570 of 3992

Thread: மனதைக் கவரும் மதுர கானங்கள் - பாகம் 4

  1. #1561
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    ரவி சார்!

    'பாபு' படத்தில் 'இதோ எந்தன் தெய்வம்' பாடலின் அருமை அலசலில் உங்கள் உழைப்பும், எழுத்தும் பளிச்சிடுகிறது. சிறியவர் பெரியவர் என்றில்லாமல் அனைத்து வயதினரையும் கவர்ந்த அற்புதப் பாடல் இது.

    அது போல தந்தை மகள் பாடல்களில் நடிகர் திலகம் பாடல்கள் அதிகம் இடம் பெறுவது தவிர்க்கவே முடியாது. ஒரு சிறு வேண்டுகோள்.

    அண்ணன் தங்கை பாடல்களை தனி தொடரில் நீங்கள் பதித்தால் நன்றாக இருக்கும். தந்தை மகள் உறவுப் பாடல்களில் அண்ணன் தங்கை பாடல்களைக் கலக்க வேண்டாமே! என்னதான் அண்ணன் தந்தை ஸ்தானத்தில் இருந்தாலும் ரத்த உறவு மாறுபடுமல்லவா?

    தந்தைக் கருவிற்கு உங்களால் ஆயிரம் பாடல்கள் தர முடியும். தொடருங்கள். வாழ்த்துக்கள். நல்ல பாடல்களுக்கு நன்றிகள்.
    நடிகர் திலகமே தெய்வம்

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #1562
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Aug 2006
    Posts
    1,200
    Post Thanks / Like
    தந்தை/மகன்/மகள்/தாய் பந்தம்...

    தாய் சொன்ன தாலாட்டு
    தலைமுறையா தமிழ் மறையா
    முல்லையே கேளு மூவேந்தர் பாட்டு
    நீர் தூங்க நிலம் தூங்க
    கொடி தூங்க செடி தூங்க
    தென்றலே பாடும் பாவேந்தர் பாட்டு... ஹொய்
    நிலா காயும் நேரம் தானே மடி மீது தூங்கு
    ஒச்சேவல் கூவும் வரையில்
    ஜோஜோஜோ ஆரீரோ ஜோஜோஜோ ஆரீரோ
    ரோஜாவே...
    வரும் காலம் அரசாடும் ராஜாவே...


    !
    Last edited by raagadevan; 2nd July 2015 at 08:16 AM.

  4. Thanks uvausan thanked for this post
    Likes rajeshkrv, uvausan liked this post
  5. #1563
    Senior Member Veteran Hubber rajraj's Avatar
    Join Date
    Oct 2004
    Posts
    3,364
    Post Thanks / Like
    RD: I hope to see you more here !
    " I think there is a world market for may be five computers". IBM Chairman Thomas Watson in 1943.

  6. Likes rajeshkrv liked this post
  7. #1564
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Aug 2006
    Posts
    1,200
    Post Thanks / Like
    Quote Originally Posted by rajraj View Post
    RD: I hope to see you more here !
    நன்றி ராஜ்! I am going to try; within my limitations (as you know!)...

  8. #1565
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Cameroon
    Posts
    0
    Post Thanks / Like
    வாசு , உங்கள் கருத்துக்களுக்கு என் மனமார்ந்த நன்றி - தந்தையின் பரிமாணங்களாக - அண்ணன் -தங்கை உறவைப்பார்க்கிறேன் - ரத்த சம்பந்தம் குறுக்கே வருவதில்லை - பாசம் பரிவு உள்ளவர்கள் எந்த வடிவத்திலும் இருக்கலாம் - பெற்றால் தான் பிள்ளையா ? தன் தங்கையை ஒரு மகளாக பார்க்கும் அண்ணன்களை தேடிப்பிடித்து பதிவு செய்தேன் அவ்வளவே - தனி திரி தேவைதானா ??

  9. #1566
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    Quote Originally Posted by g94127302 View Post
    வாசு , உங்கள் கருத்துக்களுக்கு என் மனமார்ந்த நன்றி - தந்தையின் பரிமாணங்களாக - அண்ணன் -தங்கை உறவைப்பார்க்கிறேன் - ரத்த சம்பந்தம் குறுக்கே வருவதில்லை - பாசம் பரிவு உள்ளவர்கள் எந்த வடிவத்திலும் இருக்கலாம் - பெற்றால் தான் பிள்ளையா ? தன் தங்கையை ஒரு மகளாக பார்க்கும் அண்ணன்களை தேடிப்பிடித்து பதிவு செய்தேன் அவ்வளவே - தனி திரி தேவைதானா ??
    ரவி சார்,

    நன்றி! நன்றாக கவனியுங்கள். (கவனிக்க மறந்து விட்டீர்கள் என்று நினைக்கிறேன்) தனித் திரி என்று கூறவில்லை. தனித் தொடர் என்றுதான் கூறியுள்ளேன். தந்தை மகள் பந்தம் என்று தலைப்பு இட்டதனால்தான் அந்தக் கருத்தை முன் வைத்தேன். அண்ணன் தங்கை பாசப் பாடல்கள் அதில் ஒட்டாதது போலத் தோன்றியது. அதுதான் சொன்னேன். தவறிருந்தால் மன்னிக்கவும். மற்றபடி ஒன்றுமில்லை.
    நடிகர் திலகமே தெய்வம்

  10. #1567
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடிய பழைய பாடல்கள்



    (நெடுந்தொடர்)

    13

    'இறைவன் என்றொரு கவிஞன்'

    பாலா தொடரில் அடுத்து வருவது 'ஏன்' திரைப்படத்தின் அருமையான பாடல்.

    இப்போது உங்களுக்கு 'ஏன்?' படத்தின் கதையை ஏன் நேற்று பதித்தேன் என்று புரிந்திருக்கும்.

    தன் தாயின் உடல்நலம் கருதி மண்ட மாருதம் வீசும் மூலிகை சூழ்ந்த மலைப்பகுதியில் அவளை அழைத்து வந்து அவளைக் குணப்படுத்த முயல்கிறான் அந்தக் கவிஞன்.

    தனிமையில், தூய தமிழில், மிக அமைதியான சூழ்நிலையில் இயற்கை வளங்கள் கொஞ்சி மலையருவி வழிந்தோடும் ஒரு நீரோடை அருகே அமர்ந்து ஒரு அற்புதமான கவிதை இயற்றி அதைப் பாடலாகவும் இசைக்கிறான் அவன் .

    அந்தப் பாடலில் மயங்கி தன்னையறியாமல் அங்கு வருகிறாள் ஒரு மங்கை. இள நங்கை. அவனுடைய தமிழில், அவன் சொல்லும் கருத்தில் மயங்கி நிற்கிறாள்.



    இந்த மனிதக் கவிஞன் இறைவனான கவிஞனை வியந்து பாடுகிறான்.


    இறைவன் என்றொரு கவிஞன்
    அவன் படைத்த கவிதை மனிதன்
    இறைவன் என்றொரு கவிஞன்
    அவன் படைத்த கவிதை மனிதன்
    அதில் அறிஞனும் மூடனும் உண்டு
    ஆனால் தொடக்கமும் முடிவும் ஒன்று

    இறைவன் என்றொரு கவிஞன்
    அவன் படைத்த கவிதை மனிதன்

    கடவுளின் படைப்பிலே கவிதையும் உண்டு
    காந்தியைப் போலவே காவியம் உண்டு

    (காந்தியைக் காவியமாக்கிப் பார்க்கும் கவிஞரின் வரிகள் அருமை.)

    முடிவு விளங்காத தொடர்கதை உண்டு
    முடிக்க வேண்டுமென்று முடிப்பதும் உண்டு.

    (எதற்குப் பொருந்துகிறதோ இல்லையோ 'ஏன்? படத்திற்கு இவ்வரிகள் மிகப் பொருந்தும்)

    இறைவன் என்றொரு கவிஞன்
    அவன் படைத்த கவிதை மனிதன்

    கண்களில் தொடங்கி கண்களில் முடித்தான்
    பெண்ணிடம் பிறந்ததை பெண்ணிடம் கொடுத்தான்
    கண்களில் தொடங்கி கண்களில் முடித்தான்
    பெண்ணிடம் பிறந்ததை பெண்ணிடம் கொடுத்தான்
    மண்ணிலே நடந்ததை மண்ணுக்கே அளித்தான்
    மண்ணிலே நடந்ததை மண்ணுக்கே அளித்தான்
    வானத்திலிருந்தே கவிதையை முடித்தான்.

    இறைவன் என்றொரு கவிஞன்
    அவன் படைத்த கவிதை மனிதன்

    கருவிலிருந்தே கவிஞனின் பிறப்பு
    காலத்தின் பரிசே கவிதையின் சிறப்பு
    கற்பனை என்பது கடவுளின் படைப்பு
    கடவுளை வென்றது கவிஞனின் நினைப்பு

    இறைவன் என்றொரு கவிஞன்
    அவன் படைத்த கவிதை மனிதன்
    அதில் அறிஞனும் மூடனும் உண்டு
    ஆனால் தொடக்கமும் முடிவும் ஒன்று

    இறைவன் என்றொரு கவிஞன்
    அவன் படைத்த கவிதை மனிதன்

    கண்ணதாசனின் அருமையான வரிகள். டி.ஆர் பாப்பா என்ற அற்புத இசையமைப்பாளரின் அமைதியான மனதை வருடும் இசை.




    பாலா மிகவும் அமைதியாக சிறிதும் ஆர்ப்பாட்டாம் இல்லாமல் இப்பாடலை இப்பாடலின் வரிகள் போலவே கவிதை ஆக்கியிருப்பார் தன் சுகமான குரலால். அதுவரை பாலா பாடிய பாடல்களில் இது ஆர்ப்பாட்டமில்லாமல் மிக மென்மையாகத் தவழ்ந்து வந்து நம் மனதை மிருதுவாக சுகமாக வருடி விடுகிறது. ஆர்ப்பாட்டம் இல்லையென்றாலும் தமிழை பாலா அழுத்தம் திருத்தமாக, சுத்தமாக உச்சரிப்பதை நாம் நன்றாக உணரலாம்.

    டி.ஆர் ராமண்ணாவின் ஆஸ்தான நாயகன் ரவி கவிஞனாக, அமைதியாக செய்திருப்பார். லஷ்மி கவிஞனைத் துரத்தும் காதலி.

    பாடலின் துவக்க இசையில் பொங்கி ஓடும் அருவியை மட்டும் வெளிப்புறப் படப்பிடிப்பாய்க் காட்டிவிட்டு, பாடல் முழுதையும் ஸ்டுடியோவில் செட் போட்டு நாசம் செய்திருப்பார்கள். இவ்வளவு அற்புதமான பாடலை முழுதும் இயற்கை எழில் கொஞ்சும் பிரதேசங்களில் படமாக்கி இருந்தால் இப்பாடலின் வெற்றி மேலும் பரிமளித்திருக்கும்.

    'ஏன்' படம் ஒரு குப்பை என்றாலும் அந்தக் குப்பையில் மின்னும் வைரங்களாய் பாப்பாவின் இசையில் அருமையான சில பாடல்கள். இந்தப் பாடல்களாலேயே இந்தப் படத்தை மறப்பதற்கில்லை. இதை மறுப்பதற்கும் இல்லை.

    இதே படத்தின் இன்னொரு அற்புதமான பாலாவின் பாடல் அடுத்த தொடரின் பதிவில்.

    சந்திப்போம்.
    Last edited by vasudevan31355; 2nd July 2015 at 08:54 AM.
    நடிகர் திலகமே தெய்வம்

  11. Likes adiram, uvausan, Russellmai liked this post
  12. #1568
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Cameroon
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by vasudevan31355 View Post
    ரவி சார்,

    நன்றி! நன்றாக கவனியுங்கள். (கவனிக்க மறந்து விட்டீர்கள் என்று நினைக்கிறேன்) தனித் திரி என்று கூறவில்லை. தனித் தொடர் என்றுதான் கூறியுள்ளேன். தந்தை மகள் பந்தம் என்று தலைப்பு இட்டதனால்தான் அந்தக் கருத்தை முன் வைத்தேன். அண்ணன் தங்கை பாசப் பாடல்கள் அதில் ஒட்டாதது போலத் தோன்றியது. அதுதான் சொன்னேன். தவறிருந்தால் மன்னிக்கவும். மற்றபடி ஒன்றுமில்லை.
    வாசு - திருத்திக் கொள்வதர்க்குள் உங்கள் பதில் பதிவு வந்துவிட்டது - அண்ணன் - தங்கை என்று பார்க்காதீர்கள் - அந்த பரிவில் , பாசத்தில் , அரவணைப்பில் , அன்பின் ஆழத்தில் , உணர்ச்சிகளைக் கொட்டும் விதத்தில் , ஒரு தந்தையின் ஆதங்கம் /பாதிப்பு /தாக்கம் நிழாலடுவது உங்கள் கண்களுக்குத் தெரியவில்லையா ?? "கல்லில் மறைந்தது மா மத யானை " என்று சொல்வார்கள் - அப்படித்தான் இதுவும் - நீங்கள் சிற்பி செதுக்காத சிலையாக ( அண்ணன் -தங்கை ) பாடல்களை பார்க்கிறீர்கள் - நான் அதில் மறைந்திருக்கும் மா மத யானையை ( தந்தையை ) பார்க்கிறேன் - இதில் தவறுகள் இருப்பதாக புலப்படவில்லை - மீறி இருக்கிறது என்று நீங்கள் இன்னும் சொன்னால் தனித்தலைப்பு ரெடி .....:-d

  13. Likes rajeshkrv liked this post
  14. #1569
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    ரவி சார்!

    //நீங்கள் சிற்பி செதுக்காத சிலையாக ( அண்ணன் -தங்கை ) பாடல்களை பார்க்கிறீர்கள்//

    இல்லை. மறுக்கிறேன். வன்மையாக மறுக்கிறேன். நீங்கள் அவசரப்படுகிறீர்கள். முழுவதும் ஒரு வரி விடாமல் படித்து, புரிந்துதான் பார்க்கிறேன். ஓரளவிற்கு புரிந்து கொள்ளும் தன்மையும் உண்டு என்று நினைக்கிறேன்.

    //இதில் தவறுகள் இருப்பதாக புலப்படவில்லை//

    நான் தவறென்றே சொல்லவில்லையே! 'தந்தை' 'கருவின் கரு' தலைப்பு தந்து விட்டு ,அதே மாதிரி பாச உணர்வுகளோடு வேறு உறவு உள்ள பிற பாடல்கள் அந்தத் தலைப்போடு ஒட்டவில்லை என்றுதானே கூறினேன். 'தாயின் கரு'வில் அக்காள் தங்கை உறவை சேர்க்க முடியாதல்லவா? என்னதான் அக்கா தாய் போன்று அன்பு செலுத்தினாலும்.

    அதற்கு தனிப்பட்ட முறையில் தாய், தந்தை என்று தனித்தனி தலைப்புகளே தேவை இல்லையே. வெறும் 'பாசம்' என்ற தலைப்பு மட்டும் போதுமே!

    உங்கள் பதிவுகளையோ, திறமைகளையோ நான் கொஞ்சமும் குறைத்து மதிப்பிட வில்லையே? மதிப்பிடவும் முடியாது.
    நடிகர் திலகமே தெய்வம்

  15. Thanks uvausan thanked for this post
  16. #1570
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    இதுவரை பாலாவின் பாடல்கள்.

    1.'மல்லிகைப் பூ வாங்கி வந்தேன்' (பால் குடம்)

    http://www.mayyam.com/talk/showthrea...53#post1223953

    2. 'ஆயிரம் நிலவே வா.. ஓராயிரம் நிலவே வா'(அடிமைப் பெண்)

    http://www.mayyam.com/talk/showthrea...67#post1224467

    3. 'இயற்கை என்னும் இளைய கன்னி' (சாந்தி நிலையம்)

    http://www.mayyam.com/talk/showthrea...59#post1226259

    4. 'ஆரம்பம் யாரிடம்' (மிஸ்டர் சம்பத்)

    http://www.mayyam.com/talk/showthrea...AF%8D-4/page35

    5. 'கற்பனையோ கைவந்ததோ' (மாலதி)

    http://www.mayyam.com/talk/showthrea...AF%8D-4/page62

    6. 'சிட் சிட் சிட் சிட் சிட் சிட் சிட் சிட் எங்கே போவோம்' (மாலதி)

    http://www.mayyam.com/talk/showthrea...AF%8D-4/page69

    7. 'உன்னைத் தொட்ட காற்று வந்து என்னைத் தொட்டது' (நவக்கிரகம்)

    http://www.mayyam.com/talk/showthrea...52#post1230352

    8. 'நீராழி மண்டபத்தில்' ('தலைவன்')

    http://www.mayyam.com/talk/showthrea...F%8D-4/page112

    9.' நிலவே நீ சாட்சி' (நிலவே நீ சாட்சி)

    http://www.mayyam.com/talk/showthrea...F%8D-4/page112

    10.'பொன்னென்றும் பூவென்றும்' (நிலவே நீ சாட்சி)

    http://www.mayyam.com/talk/showthrea...21#post1233121

    11.'வெற்றி மீது வெற்றி வந்து என்னைச் சேரும்' (தேடி வந்த மாப்பிள்ளை')

    http://www.mayyam.com/talk/showthrea...=1#post1233667

    12.'அங்கம் புதுவிதம் அழகினில் ஒருவிதம்' (வீட்டுக்கு வீடு)

    http://www.mayyam.com/talk/showthrea...80#post1234280

    13.'இறைவன் என்றொரு கவிஞன்' (ஏன்)

    http://www.mayyam.com/talk/showthrea...=1#post1235169
    Last edited by vasudevan31355; 23rd July 2015 at 07:48 AM.
    நடிகர் திலகமே தெய்வம்

  17. Thanks raagadevan thanked for this post
    Likes adiram, Russellmai, uvausan liked this post

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •