-
5th August 2015, 10:44 AM
#2421
Senior Member
Diamond Hubber
"வாசு ஜி..
சூப்பர் சூப்பர் சூப்பரே !
ஆனால் ஒரு சந்தேகம். அன்பைக் குறிப்பது ஆனா இடம் பெற்றது "என்ன முதலாளி சௌக்கியமா? படம் என்று நினைக்கிறேன்.
( ஏனென்றால் நான் சங்கமம் படம் பார்த்ததில்லை. ஆனால் என்ன முதலாளி சௌக்கியமா பார்த்திருக்கிறேன். இது நான் பார்த்த பாடல் காட்சி என்பதால் இந்த சந்தேகம் )
எதற்கும் இன்னொரு தடவை சந்தேகத்துக்கு சங்கமமத்தையும் செக் பண்ணிடுவோம்.
-
Post Thanks / Like - 1 Thanks, 2 Likes
-
5th August 2015 10:44 AM
# ADS
Circuit advertisement
-
5th August 2015, 11:31 AM
#2422
Senior Member
Seasoned Hubber
வாசு ஜி பாலா தொடர் அருமை அருமை.
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
-
5th August 2015, 11:35 AM
#2423
Senior Member
Seasoned Hubber
ஜி
இதோ ஒரு கன்னட பாடல்
ஏக் துஜே கேலியேவில் படங்களின் பெயரில் வ்ந்த பாடல் போல்
கன்னடத்தில் ஹம்சலேகாவின் இசையில் (ஹிந்தி ஹீரோவின் டியூனை அப்படியே சுட்டுவிட்டார்)
இசையரசியுடன் ரமேஷ் பாடிய பாடல்
ரவிச்சந்திரன் குஷ்பு
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
5th August 2015, 11:43 AM
#2424
Senior Member
Diamond Hubber
மதுண்ணா!
நன்றி! நான்தான் (ஸ்ட்ரைக்) குழப்பத்தில் மாற்றி எழுதி விட்டேன். கண்டிப்பாக என்ன முதலாளி சௌக்கியமா தான் சந்தேகமே இல்லை. எனக்கே நன்றாகத் தெரியும். இரண்டுமே ஜெமினி. இரண்டுமே விஜயா. இரண்டுமே கலர். யோசிக்கவே இல்லை. தெளிவு படுத்தியதற்கு நன்றி. மாற்றி விட்டேன். மீண்டும் நன்றி தங்களுக்கு.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
5th August 2015, 11:52 AM
#2425

Originally Posted by
vasudevan31355
மதுண்ணா!
நானும் கேட்டிருக்கிறேன். உங்கள் பல்லவி சரியேதான். நன்றாக நினைவிருக்கிறது. ஆனால் படம் தெரியவில்லை. கண்டு பிடிப்போம். வச்சீங்களே அருமையான வேலை.

யப்பா! செம ஞாபகசக்தி. ராயல் சல்யூட் உங்களுக்கு.
வாசு சார்.. நீங்கள் எப்படி மறந்தீர்கள்..
அமுதா திரைப் படம் தான் அது...
சுந்தரபாண்டியன்
-
Post Thanks / Like - 2 Thanks, 1 Likes
-
5th August 2015, 12:10 PM
#2426
Senior Member
Senior Hubber
ஹாய் குட்மார்னிங்க் ஆல்..
வாசு.. தாங்க்ஸ் ஃபார் வீராதி வீரன்..ஹப்பா இவ்ளோ டீடெய்ல்ஸா.. கிருஷ்ணகுமாரிங்கற பெயர் நெஞ்சுக்குழில்ல நின்னுக்கிட்டு இருந்துச்சு இருந்துச்சா..சரி நீங்க சொல்வீங்கன்னு விட்டுட்டேன்..அதே மாதிரி சொல்லிட்டேள்.. ஹப்புறம் எ.மு.செள பார்த்ததில்லை..ஆனா அனா பாட் சங்கமம் இல்லைஎன்பது தெரியும்..கொஞ்சூண்டு ம.காய வைச்சுட்டேள்..தெலுகு பாட்டுக்குஎப்படி லிரிக்ஸ் எழுதறது.. எனகுகு தெரியாதே..
சி.செ ஊஞ்சல் எக்கச்சக்கமா இருக்குதுங்க்னா வார்த்தைல
மழைக்கால மேகம் ஒன்று மடி ஊஞ்சல் ஆடியது
ஊஞ்சலுக்குப் பூச்சூட்டி ஊர்வலத்தில் விட்டாரோ
தில் தில் தில் மனதில் ஒரு ஜல் ஜல் ஜல் ஊஞ்சல்
உலாவும் உன் இளமை தான் ஊஞ்சலாடுது
ஒயிலே ஒயிலே உன் ஊஞ்சல் இங்கே..
உன்னாலே என்தன் உள்ளம் ஊஞ்சல் போல ஆடுதே பின்னாலே குத்திக் குத்தித் தாளமெல்லாம் போடுதே
சரி கடைசிப் பாட் ஃபாஸ்ட் சாங்க் கறதால போட்டுக்கலாம்.. (பாகம் மூணுல அறுபத்திரெண்டாம் பக்கம் போட்டதும் நான் என்பதால் ப்
நானே போட்டாச் சொல்லிக்கலாம்!)
பின்ன வாரேன்
-
Post Thanks / Like - 2 Thanks, 2 Likes
-
5th August 2015, 12:59 PM
#2427
Senior Member
Diamond Hubber

Originally Posted by
sss
வாசு சார்.. நீங்கள் எப்படி மறந்தீர்கள்..
அமுதா திரைப் படம் தான் அது...
சுந்தரபாண்டியன்
நன்றி சுந்தரபாண்டியன் சார். ஏனோ டக்கென்று நினைவுக்கு வரவில்லை.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
sss liked this post
-
5th August 2015, 01:15 PM
#2428
Senior Member
Diamond Hubber
நன்றி சுந்தர பாண்டியன் சார்... யெஸ்... எஸ்.பி. இசைத்தட்டின் ஒரு பக்கம் "அன்பே அமுதா" . இன்னொரு பக்கம் இந்தப் பாட்டு...
யூடியூபில் செக் செஞ்சால் அமுதா முழு திரைப்படத்தின்( part 3) மூன்றாம் பகுதியில் முதலிலேயே இந்தப் பாட்டு வருது. ஆனால் என்ன காரணத்தாலோ ஒலியே இல்லை. வாயசைப்பை வைத்து உறுதி செய்து கொண்டேன்.
மீண்டும் நன்றி.
வாசு ஜி... விரைவில் உங்கள் பணியில் உண்டாகியிருக்கும் குழப்பங்கள் எல்லாம் தீர்ந்து மகிழ்ச்சி நிலவ வேண்டும் என்று இறைவனிடம் வேண்டுகிறேன்.
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
sss liked this post
-
5th August 2015, 01:18 PM
#2429
வாசு சார் ... போராட்டம் தீவிரமாகிறது போலிருக்கிறது ... சீக்கிரம் நல்ல முடிவு வர வேண்டுகிறேன்.
இந்த பாட்டு உங்களுக்கு " அங்கே " காத்திருக்கிறது...பெற்றுக்கொள்ளவும் ...
அமுதா படத்தின் டைட்டில் காட்சியில் வாணி ஜெயராம் பெயர் வரும்.. ஆனால் படத்திலோ பாடல் எதுவும் இல்லை...காரணம் தெரியவில்லை...
-
5th August 2015, 02:05 PM
#2430
Senior Member
Diamond Hubber

Originally Posted by
sss
வாசு சார் ... போராட்டம் தீவிரமாகிறது போலிருக்கிறது ... சீக்கிரம் நல்ல முடிவு வர வேண்டுகிறேன்.
சுந்தரபாண்டியன் சார்,
நேற்று இப்பாடல் பற்றி சுக்ராவில் கேட்டிருந்தேன். பிறகு பார்க்கவில்லை. நன்றி! பெற்றுக் கொள்கிறேன்.
இன்று 17ஆவது நாளாக ஸ்ட்ரைக் தொடர்கிறது.
நேற்றும் இன்றும் மறியல் போராட்டம் நடத்தி தொழிலாளர்கள் ஆயிரம் பேர்களுக்கு மேல் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். போராட்டம் தீவிரமடைந்து வரும் வேளையில் நிர்வாகத்துடன் இன்று உச்சக்கட்ட பேச்சு வார்த்தை நடைபெறுகிறது. நிர்வாகம் கொஞ்சமும் வளையாமல் முரண்டு பிடிக்கிறது. எல்லோர் முகங்களிலும் கவலை ரேகை. பத்து சதவீத ஊதிய உயர்விலேயே பிடிவாதமாக நிற்கிறது நிர்வாகம். ஆனால் சென்றமுறை முப்பது சதம் முடிந்தது. அடுத்த ஐந்தாண்டுகள் முடிவடையும் நிலையில் நிர்வாகம் இப்படி வெறுமனே 10 சதவீதம்தான் என்று முரண்டு பிடிப்பது அனைவரையும் எரிச்சல் அடையச் செய்துள்ளது. காவல்துறை குவிக்கப்பட்டுள்ளது. அரெஸ்ட் ஆன தொழிலாளர்களுக்கு காவல்துறையால் மூன்று வேளை உணவு கூட வழங்க முடியவில்லை. நேற்று பசி மயக்கத்தில் சிலர் மயக்கமடைந்து விட்டனர். கைது செய்யப்பட்ட தொழிலாளர்கள் கல்யாண மண்டபங்களிலும், சமுதாயக் கூடங்களிலும் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.
இன்று பேச்சு வார்த்தை தோல்வியில் முடிந்தால் நாளை கார்பரேட் ஆபீஸ் முன்பு தொழிலார்கள் திரளாகச் சென்று மறியல் நடத்த இருப்பதாக தெரிகிறது. நெய்வேலி நகரமே பதட்டமாக உள்ளது. ஆனால் அமைதியாக உள்ளது. தொழிலாளிகள் கட்டுக்கடங்கியே இருக்கிறார்கள். ஆனால் நிர்வாகம் அதைப் புரிந்து கொள்வதாகவே இல்லை.
இத்தனை நாள் தாக்குப் பிடித்த நிலையில் இப்போது மின்சார உற்பத்தி சிறிது சிறிதாக பாதிக்கப்பட ஆரம்பித்துள்ளது. ஆனால் எந்தப் பாதிப்பும் எங்களுக்கு இல்லை என்று நிர்வாகம் அறிக்கை விடுக்கிறது. நிலக்கரி வெட்டி எடுப்பதும் குறைந்துள்ளது. அதிகாரிகளும், ஒப்பந்தத் தொழிலாளிகளும் வேலைக்குச் செல்வதால் நிர்வாகம் நிரந்தரத் தொழிலார்கள் மேல் வஞ்சம் தீர்க்க நினைக்கிறது.
இந்த 17 நாட்களும் அனைவருக்கும் சம்பளம் கட். இது போனஸ், இன்சென்டிவ் என்று எல்லாவற்றிலும் பாதிப்பைத் தரும்.
பொறுத்திருந்து பார்ப்போம். இது பற்றி அக்கறையுடன் விசாரிக்கும் அனைத்து நண்பர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி. தங்கள் அனைவரின் வேண்டுதல்களால் நிச்சயம் விரைவில் விடிவு ஏற்படும்.
Bookmarks