-
15th September 2015, 02:14 PM
#11
Junior Member
Seasoned Hubber

Originally Posted by
vasudevan31355
கலை சார்,
பொதுவாக நான் வசூல் போன்ற விவரங்களில் அதிகம் தலையிடுவதில்லை. வாக்குவாதங்களிலும் ஈடுபடுவதில்லை. ஆனால் சமீபத்திய 'சிவந்த மண்' பற்றிய தங்களது பதிவுகள் என்னையே நோக வைத்தது என்பது உண்மை. 'ஓஹோ' என்று ஓடிய ஒரு படத்தை, வசூலில் பிரளயம் நடத்திய ஒரு படத்தை, கண்கூடாக அதன் வெற்றியை நம்மைப் போன்றவர்கள் நேரிடையாக பார்த்த ஒரு படத்தை நஷ்டமடைய வைத்த படம் என்றும், தோல்விப் படம் என்றும் அதுவும் நீங்கள் முத்திரை குத்த முயற்சிப்பது வருத்ததிற்குரியது. ஆயிரம் ஆதாரங்கள் கிடக்கட்டும். நாம் அந்தக் காலக் கட்டத்தில் அதன் வெற்றியை நேரிடையாகப் பார்த்தவர்கள். அதை நாம் இப்போது உள்ள தலைமுறைக்கு சரியான முறையில் சொல்லுவதே சிறந்த கடமையாகும். பைத்தியக்காரத்தனமாக செட்களைப் போட்டு, வரைமுறை இல்லாமல் செலவு செய்து விட்டு அத்தனை செலவுகளுக்கும் 'சிவந்த மண் 'ஓடி, 'நடிகர் திலகம்' என்ற அட்சயப் பாத்திரம் வசூல் செய்து, அதற்கு மேல் லாபம் ஈட்டி, கல்லா நிறைய வேண்டும் என்பது ஸ்ரீதரின் ஆசை. அந்த ஆசையை அவருடைய எதிர்பார்ப்புகளுக்கு மேலாகவே ஈடு செய்தது 'சிவந்தமண்'.
இதற்கெல்லாம் மேலே ஒன்று.
'நடிகர் திலகம்' பொய் பேச மாட்டார். மனதில் பட்டதை சரியென்றாலும், தவறென்றாலும் முகத்துக்கு நேரே உண்மையை உரைத்து விடுவார். அவருடன் பழகியவன் என்ற முறையில் இதை நன்கறிந்தவன் நான்.
அவர் 'சிவந்தமண்' படத்தைப் பற்றி சொல்லியிருக்கும் கருத்து.
'அள்ளி அள்ளிக் கொடுத்த மக்களுக்கு கை சிவந்தது
ஆனந்தந்தால் ஸ்ரீதருக்கு கண் சிவந்தது'.
திரு.வாசு சார்,
நேற்று நான் திரியை பார்க்க முடியவில்லை. அதனால், பதில் அளிக்க முடியவில்லை. தாமதத்துக்கு மன்னிக்கவும்.
சிவந்த மண் திரைப்படத்தை தோல்விப்படம் என்று நான் சொல்லவில்லை சார். நன்கு வசூல் ஆன படமும் கூட. ஆனால், முதலீடு அதிகம் என்பதால் எதிர்பார்த்த அளவு வசூல் ஆகவில்லை. சொல்லப்போனால் நம்நாடு திரைப்படத்தை விட வசூல் குறைவுதான். அதுவும் கூட நாங்களாக ஆரம்பிக்கவில்லை. திருச்சி பாஸ்கர் அவர்களும், ஆதிராம் அவர்களும் தேவையின்றி இரண்டு படங்களையும் ஒப்பீடு செய்ததால்தான் இந்த பதிலை அளிக்க வேண்டி வந்தது.
அதிலும் கூட சிவந்த மண்ணை விட நம்நாடு அதிகம் வசூல் என்பதற்கு எங்கள் நண்பர்கள் வெளியிடும் ஆவணங்கள் ஒருபுறம் இருக்கட்டும். அவர்கள் மீது எனக்கு நம்பிக்கை உண்டு என்றாலும் சிவாஜி ரசிகர்களால் ஆவணத் திலகம் என்று போற்றப்படும் திரு.பம்மல் சுவாமிநாதன் அவர்களே சிவந்தமண்ணை விட நம்நாடு திரைப்படம்தான் (ஓவர் ஆல் தமிழ்நாடு) அதிகம் வசூல் செய்தது என்று திரு.எஸ்.வி.யிடம் ஒப்புக் கொண்டிருக்கிறார்.
சிவாஜி ரசிகரே சொல்லிவிட்டாரே, அதுவும் ஆவணங்களை வைத்திருப்பவர் என்ற அடிப்படையில்தான் துணிந்து தைரியமாக சொன்னேன். இப்போதும் சொல்கிறேன். திரு.எஸ்.வி.யிடம் பம்மலார் சிவந்தமண்ணை விட நம்நாடு வசூல் அதிகம் என்று ஒப்புக் கொண்டிருக்கிறார் என்றுதான் எனக்கு தகவல். ஆனால், சில மணி நேரங்களில் திரு.ஆர்.கே.எஸ்.பதிவை பார்த்ததும் இதென்ன புதுக்குழப்பம்? என்று நினைத்தேன். எங்கோ தவறு நடந்திருக்கிறது. அது என்னவென்று தெரியவில்லை.
பொய் சொல்வது மனசாட்சிக்கு விரோதம் என்பது இருக்கட்டும். ஒரு முறை பொய் சொன்னோம் என்று தெரிந்து விட்டால், நமது முகம் தெரியாவிட்டாலும் கூட, அதன் பிறகு நமது எழுத்துக்கு என்ன மரியாதை கிடைக்கும்?
இனி நான் என்ன சொன்னாலும் அது சரியாக இருக்காது. ஒரே வழி, திரு.பம்மல் சுவாமிநாதன் அவர்கள் உண்மையை வெளியிடுவதுதான். இதற்காக அவர் திரிக்கு வரவேண்டும் என்று அவசியம் இல்லை. செப்டம்பர் 21ம் தேதி அன்று அவருக்கு பிறந்தநாள். அவருக்கு எல்லாரும் வாழ்த்து தெரிவிப்போம். அதற்கு நன்றி சொல்ல அவர் வருவார். கடந்த ஆண்டு நான் பிறந்த நாள் வாழ்த்து சொன்னபோது எங்கள் திரிக்கு வந்து எனக்கு நன்றி தெரிவித்தார். 22ம் தேதி வரை நான் காத்திருக்கிறேன்.
தங்கள் மீதும் திரு.ராகவேந்திரா சார் மீதும் எனக்கு மிகுந்த மதிப்பும் மரியாதையும் அன்பும் உண்டு. உங்கள் இருவருக்கும் நான் வாக்குறுதி அளிக்கிறேன்.
நம்நாடு படம் சிவந்தமண்ணை விட அதிகமாக வசூல் செய்தது என்று திரு.எஸ்.வி.யிடம் பம்மல் சுவாமிநாதன் அவர்கள் ஒப்புக் கொண்டிருக்கிறார். இந்த தகவல் எனக்கு கிடைத்தது. அதனால்தான், துணிந்து அதை நான் பகிர்ந்து கொண்டேன். நானாக கற்பனை செய்து சொல்லவில்லை. அப்படி நான் பொய் சொல்வது உறுதியானால், மக்கள் திலகம் திரியிலும், மதுரகானம் திரியிலும், இங்கும் வந்து ‘நான் பொய் சொல்லிவிட்டேன். எல்லாரும் என்னை மன்னித்து விடுங்கள்’ என்று பகிரங்கமாக கோரி அத்துடன் திரியில் இருந்தும் வெளியேறி விடுகிறேன். நன்றி.
திரு.ராகவேந்திரா சார், நண்பர்களுக்குள் மன்னிப்பு கோருவது தேவையில்லை என்று கூறியுள்ள உங்கள் பெருந்தன்மைக்கு நன்றி சார். இருந்தாலும் தவறு செய்தால் மன்னிப்பு கோர தயங்க மாட்டேன். வாசு சாருக்கு அளித்துள்ள வாக்குறுதியை உங்களுக்கும் நான் அளிக்கிறேன்.
இந்த விவகாரத்தில் உண்மை வெளிவந்த பிறகாவது நீங்கள் கூறியுள்ளதை போல திரு.பாஸ்கர் அவர்களும் திரு.ஆதிராம் அவர்களும் தேவையற்ற ஒப்பீடுகளை தவிர்க்க வேண்டும். நன்றி.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
-
15th September 2015 02:14 PM
# ADS
Circuit advertisement
Bookmarks