-
28th September 2015, 08:06 PM
#321
Junior Member
Veteran Hubber
Glycerin songs !! கண்ணீர் கான மதுரங்கள்!
சிரித்தாலும் கண்ணீர் வரும் ...அழுதாலும் கண்ணீர் வரும்......
சிரிக்காமலும் அழுகாமலும் கண்ணீர் வருமா... ? வருமே...
வெங்காயம் உரித்தாலும் ! பதுக்கி வைத்த வெங்காயம் அழுகும் போதும் ...வெங்காயத்தின் விலை பட்டம்போல ஏறிப் பறக்கும் போதும்....!
GG starrer பெண் என்றால் பெண் திரைப்படத்தில் ..
Last edited by sivajisenthil; 28th September 2015 at 08:13 PM.
-
Post Thanks / Like - 0 Thanks, 3 Likes
-
28th September 2015 08:06 PM
# ADS
Circuit advertisement
-
28th September 2015, 08:55 PM
#322
Senior Member
Seasoned Hubber

Originally Posted by
vasudevan31355
ராஜேஷ்ஜி!
ஸ்வீட் குரல் சுசீலாம்மாவின் புதுத் தொடருக்கு வாழ்த்துக்கள். பெண்ணின் பெருமை பேசிய பாடல் மூலம் துவங்கியிருக்கிறீர்கள். பாடலின் ஆரம்பக் காட்சியைக் கண்டு அரண்டே ஏன் மிரண்டே போய் விட்டேன்.

இப்படியா எடுத்தவுடன் பயமுறுத்துவது? சி.க கங்கணம் கட்டிக் கொண்டிருக்கிறார் என்றால் நீங்களுமா?

சும்மா... ஜாலியாய் சொன்னேன். ம்ம்...ஜமாயுங்கள் தல.
நீங்கள் மட்டுமல்லா நானும் தான் மிரண்டே போனேன் .. போக போக பரவாயில்லை ...
வாழ்த்துக்களுக்கு நன்றி.. பல மிரட்டும் பதிவுகளூடே என் பதிவுகளை இடுகிறேன்
-
28th September 2015, 09:10 PM
#323
Senior Member
Seasoned Hubber
இசையரசியின் கீதங்கள் -2
நமது எதிர் நீச்சல் தெலுங்கில் திரு சலம் அவர்களே தயாரித்து நடித்த சம்பராலா ராம்பாபு.
சாரதா ஜெயந்தி வேடமேற்றார்.
கீதாஞ்சலிக்கு செளகார் வேடம்
வி.குமார் இசை தெலுங்கிலும்.
பொருகிண்டி மீனாட்சம்மன - அடுத்தாத்து அம்புஜத்த பாத்தேளா
தமிழில் இல்லாத ஒருவித சூழல் தெலுங்கில் .. குழந்தை அழுவதை நிறுத்த சலம் பாடுவதாக அமைந்த மாமா சந்தமாமா
இது முதலில் ஒரு முறை தான் பதிவு செய்யப்பட்டது. பாலாவின் குரலில்
பாடலை கேட்ட இசையரசி டியூன் மிக அருமை .. நானும் பாடுகிறேனே என்று வாய் விட்டு கேட்டே விட்டாராம் குமாரிடம்
அப்படி அமைந்தது தான் இந்த பாடல்
மாமா சந்தமாமா .. கேட்டு மகிழுங்கள்
-
28th September 2015, 09:15 PM
#324
Senior Member
Senior Hubber
//நீங்கள் மட்டுமல்லா நானும் தான் மிரண்டே போனேன் .. // (சாலமன் பாப்பையா குரலில்) ஏம்ப்பா.. குளிச்சா தப்பாய்யா..சங்ககாலப் புலவர் சின் கண்ணர் என்ன சொல்லியிருககார்னு தெரியுமாய்யா..
தென்றலில் குளித்த பூக்கள்
...தீஞ்சுவை கொண்டு ஆங்கே
வண்ணமாய் பொலியும் மேலும்
...வாசமும் மனதை அள்ளும்
பண்ணென இடியைக் கொண்டு
..பாங்குடன் விளக்கிற் காக
மின்னலை மழையும் கூட்டி
..மேதினி குளிக்க வைக்கும்
வழமையாய் வண்ணக் கண்ணன்
...வாகுடன் குழலில் நன்றாய்
சலசல அருவி போல
...தக்கன இசைக்க அங்கே
பழமையும் மறந்து போக
..பக்குவம் வந்து சேர
கலகலப் பான கானம்
..குளித்தது காதில் அன்றோ
ம்ம் நடத்துங்க..
..
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
28th September 2015, 09:16 PM
#325
Senior Member
Seasoned Hubber

Originally Posted by
chinnakkannan
//நீங்கள் மட்டுமல்லா நானும் தான் மிரண்டே போனேன் .. // (சாலமன் பாப்பையா குரலில்) ஏம்ப்பா.. குளிச்சா தப்பாய்யா..சங்ககாலப் புலவர் சின் கண்ணர் என்ன சொல்லியிருககார்னு தெரியுமாய்யா..
தென்றலில் குளித்த பூக்கள்
...தீஞ்சுவை கொண்டு ஆங்கே
வண்ணமாய் பொலியும் மேலும்
...வாசமும் மனதை அள்ளும்
பண்ணென இடியைக் கொண்டு
..பாங்குடன் விளக்கிற் காக
மின்னலை மழையும் கூட்டி
..மேதினி குளிக்க வைக்கும்
வழமையாய் வண்ணக் கண்ணன்
...வாகுடன் குழலில் நன்றாய்
சலசல அருவி போல
...தக்கன இசைக்க அங்கே
பழமையும் மறந்து போக
..பக்குவம் வந்து சேர
கலகலப் பான கானம்
..குளித்தது காதில் அன்றோ
ம்ம் நடத்துங்க..

..
குளிச்சா தப்புன்னு யார் சொன்னது. ஹ்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்
-
28th September 2015, 09:21 PM
#326
Senior Member
Senior Hubber
மாமா சந்தமாமா பாட்கு தாங்க்ஸ் ராஜேஷ்.. நல்ல சோகப் பாடல்..குரல் காதுகளில் ரீங்கரிக்கிறது..ஆனாக்க ஜெயந்த் ஜெயந்த் தான்..இல்லியோ ( நான் ரோலைச் சொன்னேன்..)
-
28th September 2015, 09:25 PM
#327
Senior Member
Seasoned Hubber

Originally Posted by
chinnakkannan
மாமா சந்தமாமா பாட்கு தாங்க்ஸ் ராஜேஷ்.. நல்ல சோகப் பாடல்..குரல் காதுகளில் ரீங்கரிக்கிறது..ஆனாக்க ஜெயந்த் ஜெயந்த் தான்..இல்லியோ ( நான் ரோலைச் சொன்னேன்..)
ஜெயந்தி சாரதா எல்லாமே நல்ல நடிகர்கள் தான் சி.க
ஜெயந்தி ஒரு ரகம் சாரதா ஒரு ரகம்
எனக்கு சாரதாவின் நடிப்பு ( நேச்சுரல் ரொம்ப பிடிக்கும்)
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
28th September 2015, 10:23 PM
#328
Junior Member
Veteran Hubber
நடிகர்திலகத்தின் பிறந்தநாள் நினைவலைகள்
பார்ட் 3 நடிகர்திலகத்தின் கம்பீர உச்சரிப்பால் பெருமை பெற்ற ஆங்கில வார்த்தைகள் !!
NT's songs with English interludes!!
Never ...I don't care....No peace of Mind....To be or Not to be ..You too Brutus ....Twinkle Twinkle Little Star .....I am a little tea pot ....Get Out!!
முறையான பள்ளிவழி ஆங்கிலக் கல்வி கற்றவறல்ல என்றாலும் தனது உச்சரிப்புத் தனித் தன்மையாலும் அபார ஞாபகசக்தி திறனாலும் பகுத்தறியும் தன்மையாலும் ஆங்கிலத்தையும் ஆர்வத்துடன் கற்றுத் தேர்ந்தவர் நடிகர் திலகம் !
கௌரவம் திரைப்படத்தில் ஒரு MGM சிங்கம் போல அவர் கர்ஜிக்கும் NEVER என்னும் வார்த்தையும், சாந்தி திரைப்படத்தில் தனது தர்ம சங்கடமான சூழலில் அந்தக் கால ராமராஜனான எஸ் எஸ் ஆர் திரும்பி வந்து தன்னுடன் வாக்குவாதம் முற்றும் பொது உறுமும் I don't care வார்த்தைகளின் ஏற்ற இறக்க Modulation ...ஞான ஒளி திரைப்படத்தில் போலீஸ் நண்பனால் இம்சிக்கப் படும் போது மனம் வெறுத்து பாடும் No peace of Mind..... உதட்டசைவு...பிரஸ்டிஜ் பத்மநாபனின் மணிப் பிரவாள ஆங்கில வசன நடை ...புதிய பறவையின் Pleasure is mine சௌகாரிடம் வெளிப்படுத்தும் மிடுக்கு......தங்கப் பதக்கத்தின் Twinkle Twinkle Little Star........என்னைப் போல ஒருவனில் I am a Little Tea Pot....ராஜபார்ட் ரங்கதுரையின் To be or Not to be.....சொர்க்கம் திரைப் படத்தில் இறுதிக் கட்ட ஜூலியஸ் சீசரின் You too Brutus.....
இதற்கெல்லாம் சிகரம் பாசமலரில் பல்லைக் கடித்துக் கொண்டு ஆத்திரத்தையும் கோபத்தையும் பென்சில் சீவுவதில் வெளிப்படுத்தி காதல் மன்னரை Get Out என்று விரல் சுட்டி விழியால் வெளியே வழிகாட்டும் காட்சியே !
(காதல் மன்னரின் Each for All and All for Each முறையான மேற்கத்திய பாணி ஆங்கில உச்சரிப்பு அவரது பள்ளிவழி ஆங்கில போதனையாலும் பின்னாளில் அவரது கல்லூரி விரிவுரையாளர் பணி மூலமும் இயற்கையாக அமைந்ததே !)
என்னதான் மேஜர் சுந்தரராஜனும் வி எஸ் ராகவனும் ஆங்கிலத்திலும் தமிழிலும் மாறி மாறி பீட்டரடித்தாலும் நடிகர்திலகத்தின் தனித் தன்மையான ஆங்கில உச்சரிப்பு பாராட்டுதலுக்குரியதே!!
மறக்க முடியாத நினைவலைகள் தலைவா!! RIP (Rest in Peace but Return If Possible)
செந்தில்
Last edited by sivajisenthil; 28th September 2015 at 10:43 PM.
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
28th September 2015, 10:35 PM
#329
Junior Member
Diamond Hubber
படம்:காவலுக்கு கெட்டிக்காரன்
இசை :இளையராஜா
நடிப்பு:பிரபு,நிரோசா
பாடியது:மனோ.சித்ரா
ஸஸஸஸஸ நிஸ*
ஸஸஸஸஸ நிஸ*
ரிரிரிரிரி ஸ ரி*
ரிரிரிரிரி ஸ ரி*
கக ரி ரீஸஸ*
கக ரி ரீஸஸ*
ஸஸஸஸஸ நிஸ*
ரிரிரிரிரி ஸ ரி*
ஸ ரி க க ரி ரீ ஸஸ சா*
ஹும்ம் ஹும்ம் ஹும்ம் ஹும்ம்*
சோலை இளைங்குயில் யாரை எண்ணி எண்ணி*
ராகங்கள் பாடுதோ.... ஆஹா....... ராகங்கள் பாடுதோ*
வானவில்லில் ஒரு மாலை கட்டி வந்து*
யாரென்று தேடுதோ.... ஆஹா.....யாரென்று தேடுதோ*
ஏதேதோ சங்கீதம் எண்ண எண்ண சந்தோஷம்*
நான் பாடவோ உனைத்தான் தீண்டவோ*
சோலை இளைங்குயில் யாரை எண்ணி எண்ணி*
ராகங்கள் பாடுதோ.... ஆஹா....... ராகங்கள் பாடுதோ*
காதலில் வானத்து சந்திரனோ*
வாலிப தேசத்துச் சூரியனோ*
காதலில் வானத்து சந்திரனோ*
வாலிப தேசத்துச் சூரியனோ*
தோளில் தாவிடும் தாரகையே*
வானத்தில் ஏறிடும் தாமாரையே*
இசையே மீட்டிடு எனையே*
கனலே மூட்டிடு தினமே*
பூமகளே உனைத் தேடுகிறேன்*
பூவில் வண்டென கூடிடத்தானே*
சோலை இளைங்குயில் யாரை எண்ணி எண்ணி*
ராகங்கள் பாடுதோ.... ஆஹா....... ராகங்கள் பாடுதோ*
வானவில்லில் ஒரு மாலை கட்டி வந்து*
யாரென்று தேடுதோ.... ஆஹா.....யாரென்று தேடுதோ*
பாலோடு தேனூரும் பாத்திரம்*
நாள்தோறும் நான் அள்ள மாத்திரம்*
பாலோடு தேனூரும் பாத்திரம்*
நாள்தோறும் நான் அள்ள மாத்திரம்*
நான் என்றும் நீ என்றும் வேறில்லையே*
வாலிபம் போகுது வா முல்லையே*
நான் என்றும் நீ என்றும் வேறில்லையே*
வாலிபம் போகுது வா முல்லையே*
உயிரே காதலின் சுடரே*
கிளியே பாடிடும் கவியே*
ஆயிரம் பூமழைத் தூவிடுதே*
வானமும் பூமியும் வாழ்த்துக்கள் சொல்ல*
சோலை இளைங்குயில் யாரை எண்ணி எண்ணி*
ராகங்கள் பாடுதோ.... ஆஹா....... ராகங்கள் பாடுதோ*
வானவில்லில் ஒரு மாலை கட்டி வந்து*
யாரென்று தேடுதோ.... ஆஹா.....யாரென்று தேடுதோ*
ஏதேதோ சங்கீதம் எண்ண எண்ண சந்தோஷம்*
நான் பாடவோ உனைத்தான் தீண்டவோ*
சோலை இளைங்குயில் யாரை எண்ணி எண்ணி*
ராகங்கள் பாடுதோ.... ஆஹா....... ராகங்கள் பாடுதோ*
சோலை இளைங்குயில் யாரை எண்ணி எண்ணி*
ராகங்கள் பாடுதோ.... ஆஹா....... ராகங்கள் பாடுதோ
-
Post Thanks / Like - 0 Thanks, 4 Likes
-
29th September 2015, 01:59 AM
#330
Senior Member
Veteran Hubber
summa saappida vaanga
From iru sagotharigaL(1957)
summaa saappida vaanga ammaa kooppiduraanga.......
" I think there is a world market for may be five computers". IBM Chairman Thomas Watson in 1943.
-
Post Thanks / Like - 0 Thanks, 4 Likes
Bookmarks