-
9th October 2015, 07:29 PM
#11
Senior Member
Seasoned Hubber
பாடலைப் பாடியவர் லதாவாம். சூ
அதுதான் வாசு சார், கண்ணா நீ வாழ்க...லதா எ புஷ்பலதா...
அம்மாவும் அப்பாவும் வெள்ளைப் பூனைகள் ... இது கூட அவங்க தானே...
இந்தப் பாட்டில் கூட தலைவரும் மெல்லிசை மன்னரும் விளையாடி இருப்பார்கள்..
மெல்லிசை மன்னர் இப்பாட்டிற்கு வித்தியாசமான லயத்தை உபயோகித்திருப்பார். அந்தத் தாளக் கட்டே மிகவும் ரம்மியமாக இருக்கும். இசைக் கருவிகளே வேண்டாம், அதையே கேட்டுக் கொண்டிருந்தாலே போதும் எனத் தோன்றும்.
தலைவரோ கேட்கவே வேண்டாம். அந்தத் தாளக்கட்டிற்கேற்ப அந்தக் குழந்தையின் இடுப்பில் தாளம் போடும் காட்சி கண்கொள்ளாக் காட்சி...
அதுவும் அந்தக் குழந்தை மாமாவின் மனசோ வெள்ளை மனசு, மறந்தும் அதிலே களங்கமில்லை என்ற வரிகளின் போது தியேட்டராக இருந்தால் அவ்வளவு தான்...உடனே தாளம் சற்றே மாறி பாடல் சிறிது ஸ்லோவாகி மீண்டும் சகஜ நிலைக்குத் திரும்பும்.
அந்த சரணம்... நினைத்தாலே மெய்சிலிர்க்கும்..
ஊருக்கு அவரோ கோமாளி
இந்த உறவுக்கு அவரோ ஏமாளி
நாளைக்கு அவர் தான் மேதாவி
என் நாக்கினில் சொல்பவள் ஸ்ரீதேவி...
இந்த வரிகளை தலைவர் ஆமோதிப்பது போல் தன் முகத்தில் காட்டும் பாவனை.,..
இனிமேல் இப்படி ஒரு இசையமைப்பாளரும் இப்படி ஒர் மக்கள் தலைவனும் கிடைப்பார்களா..
...
மன்னிக்கவும் நடிகர் திலகம் திரியில் போட வேண்டிய பதிவை லதாவுக்காக இங்கே போட்டு விட்டேன்...
அதனாலென்ன ... அங்கேயும் போட்டால் போச்சு...
.... மதுரகானம் திரியில் போட்ட பதிவு... மீள் பதிவாக இங்கே...
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
Post Thanks / Like - 1 Thanks, 4 Likes
-
9th October 2015 07:29 PM
# ADS
Circuit advertisement
Bookmarks