-
19th October 2015, 08:03 AM
#11
Senior Member
Diamond Hubber
ராகவேந்திரன் சார், மதுண்ணா,
ராமன் தேடிய சீதை திரைப்படத்தில் திரைப்படத்தில் 'ஏன்னா நீங்க எங்கே போறேள்?' என்று ஒரு சூப்பர் பாடல் ஒன்று உண்டு. ('மெல்லிசை மன்னர்' பிய்த்து உதறி பேயாட்டம் ஆடிவிடுவார் விடுவார் இந்தப் பாடலில்). 'பத்ரகாளி' படத்தில் சிவக்குமாரிடம் ராணி சந்திரா அவர் வெளியே பார்த்த ஆட்டத்தை வீட்டிலேயே 'கேட்டேளே அங்கே அதப் பார்த்தேளா இங்கே' என்று பாடி ஆடிக் காட்டுவாரே. அதே காட்சியமைப்புத்தான் இந்தப் பாடலுக்கும். ஆனால் 'ராமன் தேடிய சீதை' முன்னாலேயே வந்து விட்டது.
எம்.ஜி.ஆர் அவர்கள் ஒரு நாடகத்திற்குத் தலைமை தாங்க நாடகத்தில் ஆடுபவர் மேடம். அவரது கணவனாக ராகினி ஆண் வேடத்தில் கோட் சூட் போட்டுக் கொண்டு தண்ணி அடிப்பார் விக்கிக் கொண்டே.
வெளியிலே ஹோட்டலில் கேபரே பார்த்துவிட்டு அதே போல ஆட்டத்தை மனைவி ஜெயாவிடம் ராகினி எதிர்பார்ப்பார். ஆச்சாரமாய் சேலை அணிந்திருக்கும் ஜெயா கணவர் ராகினியின் ஆசையை நிறைவேற்ற அதே போல நாகரீக உடை மாற்றி ஆடிக் காட்டுவார். (மேடம் அநியாயத்துக்கு கிளாமர்.)
இதுதான் நாடகக் காட்சி.
ஜெயா மேடத்திற்கு வழக்கம் போல ராட்சஸி குரல் தந்து கலக்கல்.
இப்போதுதான் ஒரு சந்தேகம். நீங்கள் தீர்த்து வைக்க வேண்டும்.
ஆண் வேடம் போட்டிருக்கும் ராகினிக்கு குரல் தந்த பாடகி யார்?
அந்தக் குரல் நம் ஆச்சி மனோரமாவின் குரல் போல் உள்ளதே! (குறிப்பாக 'முடியுமா நீ முன்னாலே... நீ முடிஞ்சா ஆடு என் முன்னாலே').....அந்தக் குரல் ஆச்சியுடையதுதானே?
அந்தப் பாடலில் ஆச்சி கிடையாது. ஆனால் படத்தில் உண்டு. ஒருவேளை ஆச்சியே ஜெயாவுடன் அந்த நாடகக் காட்சியில் நடிக்க இருந்து பின் அதில் ராகினி நடித்தாரா? அதனால் முன்னமேயே மனோரமா பாடலைப் பாடி விட்டாரா?
அல்லது அது மனோரமா குரல் இல்லாமல் வேறு யாருடைய குரலாவதா? டைட்டிலில் பின்னணி பாடியவர்கள் பட்டியலில் ஆச்சி பெயர் இல்லை.
ஆனால் குரல் ஆச்சி குரல் போலவே இருக்கு.
நான்தான் குழம்புகிறேனா?
தெளிவுபடுத்தவும். ப்ளீஸ். வரலாறு தெரிந்து கொள்ள வல்லிய ஆசை. ஸ்கூலில் படிச்சப்ப கூட வரலாற்றை இப்படி புரட்டியதில்லை.
Last edited by vasudevan31355; 19th October 2015 at 08:07 AM.
நடிகர் திலகமே தெய்வம்
-
Post Thanks / Like - 0 Thanks, 3 Likes
-
19th October 2015 08:03 AM
# ADS
Circuit advertisement
Bookmarks