-
24th October 2015, 03:59 PM
#11
Senior Member
Senior Hubber
//சின்னக்கண்ணன் சார்
உங்களுக்காக
ஓபனிங்இசையில் உற்சாகத்தை அளித்த பாடல் முடியும் வரை உற்சாகத்தை கூட்டினாலுமஅந்தஓபனிங் இசையே காதில் ரீங்காரமிட்டுக்கொண்டிருக்கும்.
இசைக்கப்பட்ட வாத்தியங்கள்தான்.ஆனாலும் புதிது புதிதாக வித்தியாசமாக கொண்டு வந்தார் பாருங்கள் அங்கே தான் இளையராஜா இனியராஜா.பாடலின் சிறப்பே வித்தியாசமான இசை சேர்ப்புகள்.//
தாங்க்ஸ் செந்தில்வேல் ஷார்ட் அண்ட் ஸ்வீட்.. நமக்கு இசையும் பிடிக்கும்..பட் லிரிக்ஸ் கொஞ்சம் பார்ப்பேன்..
ஒட்டப்பாலம் சாத்து நாயருக்கும் பாப்புல்லி அம்மாளுவிற்கும் மலேஷியாவில் பிறந்தவர் மலேஷியா வாசுதேவன் என அழைக்கப்பட்ட வாசுதேவன்.. குடும்பத்தில் எட்டாவது பையன்..இருப்பினும் என்ன பாடலில் இண்ட்ரஸ்ட்
அப்படி இப்படி என்று இருந்துவிட்டு சென்னையில் நடித்த படம் ரத்தப் பேய்... வந்ததா தெரியாது..
முதலாய் ப் பாடிய பாடல் பாலு விக்கிற பத்மா.. என்ற பாட்டாம்..கேட்டீர்கள் என்றால் ஏ. எல் ராகவன் என்று நினைப்பீர்கள்..
ஏதோ ஒரு பேட்டியில் சொன்ன நினைவு.. ரஜினிக்காக முதன் முதலாகப் பாடிய பாடல் ஆசை நூறு வகை வாழ்வில் நூறு சுவை பார்.. யூ நோ..அடுத்த வாரிசு இல் ஆரம்பத்தில் கொஞ்சம் சீரியஸ் ரஜினியாய் வித்யாசமாக இருப்பார் ரஜினி..அப்படி ஆடும் பாடல் இந்த ஆ. நூ. வ.. கொஞ்சம் பயந்து பயந்து தான் பாடினாராம் ம.வா.. ( எனப் படித்த நினைவு)
தங்கச் சங்கிலி மின்னும் பைங்கிளி தானே கொஞ்சியதோ... என்னும் பாட்டில் திறமை நன்னாவே தெரியும்..காடு பொட்டக்காடு பாட்டில் டிஃபரண்ட்டாகப் பாடியிருப்பார்..
சரி.. நமக்கு ஆசை நூறுவகை பாட் போட்டுடலாமா..
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
24th October 2015 03:59 PM
# ADS
Circuit advertisement
Bookmarks