-
1st May 2016, 10:46 AM
#2561
Senior Member
Senior Hubber
நன்றி..வாழ்த்துச் சொல்லிய கோபால் ராகவேந்தர் மதுண்ணா ராஜ்ராஜ் வாஸ்ஸூ சிவாஜி செந்தில் கோபு அனைவருக்கும் என் சிரம் தாழ்ந்த நன்றி..
மேதினம் பற்றிய பாடல் என்றால் நினைவுக்கு வருவது சிவப்பு மல்லி..மேதினம் உழைப்பவர் சீதனம் எரிமலை எப்படிப் பொறுக்கும் சிங்கக் கூட்டம் நிமிர்ந்தால் அந்த ..க்தவு திறக்கும் நாம் கண்ணீர் விற்கும் ஜாதி இனி அழுதால்வராது நீதி என சிவந்த கண்களுடன் விஜயகாந்த் தாடி ஒட்டியகன்னமாய் சந்த்ரசேகர்..(அ காலப் படங்களில் சாவதற்காகவே இவரைப் போட்டுப் படுத்துவார்கள்) இதுவும் ஸ்ரீதேவி தியேட்டர் தான்..ஒரு மதியக்காட்சி போய் வீட்டிற்கு வந்து இரண்டு மெடாசின் போட்டாலும் தலைவலி போகவில்லை..
ஷாந்தி கிருஷ்ணா ஒல்லி ஒல்லியாய் கொஞ்சம் ஏதோ வியாதியோ என்று என்னும்படி வெளிறி இருப்பார்.. பன்னீர் புஷ்பங்களில் அறிமுகம் இது இரண்டாவது என நினைக்கிறேன் பின் மணல்கயிறு பின் ஸ்ட்ரெய்ட்டாக விஜயோ சூர்யாவோ யாருடைய அக்காவாக நேருக்கு நேர்..ஹப்புறம் இன்று என்ன ஆனார் எனத் தெரியாது (இதான் சிக்காங்கறது.. கொக்கி போட்டுட்டோம்ல)
எனில் அந்த மிக மனம் கவர்ந்த எரிமலை எப்படிப் பொறுக்கும் பாட்டாளி பாட்டை நான் இங்கே உங்களுக்காக...போடமாட்டேன்...போங்க..அதுக்குப் பர்த்தியா...
உங்க்ளுக்குல்லாம்லீவ் எனக்கு வொர்க்காக்கும்..
Last edited by chinnakkannan; 1st May 2016 at 10:48 AM.
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
1st May 2016 10:46 AM
# ADS
Circuit advertisement
-
1st May 2016, 10:57 AM
#2562
Senior Member
Diamond Hubber
கோபால் சாருக்காக மீள்பதிவு. ('மனதை மயக்கும் மதுர கானங்கள்' பாகம் 1)
இன்றைய ஸ்பெஷல் (5)
மிக மிக அரிய பாடல்
1973 -ல் வெளிவந்த, தாயகம் பிக்சர்ஸ் தயாரித்த 'வள்ளி தெய்வானை' படத்தின் மிக மிக அபூர்வ பாடல். அபூர்வ பாடகர்கள் இப்பாடலைப் பாடியுள்ளார்கள். தனசேகர், மல்லிகா என்ற பாடகர்கள்தான் அவர்கள்.

'மலர்களின் ராஜா
அழகிய ரோஜா'
என்று தொடங்கும் மிக அழகிய பாடல்.]

மலர்களின் ராஜா
அழகிய ரோஜா
இளமங்கை வாழ்வின்
தங்கராஜா ராஜா ராஜா மகராஜா
காதலின் ராணி
கலைதரும் வாணி
என் இதய வானில்
இன்ப ராணி ராணி ராணி மகராணி
மலர்களின் ராஜா
அழகிய ரோஜா
இளமங்கை வாழ்வின்
தங்கராஜா ராஜா ராஜா மகராஜா
ஊரினில் உறவைத் தேடிடும் நினைவு
பருவத் தேரினில் ஆடும் தெய்வத்தின் கனவு
ஆசையின் பாசம்
பேசிடும் உரிமை
தன்மானத்தில் விளையும்
உலகினில் பெருமை
பூங்கொடி முகத்தில் புன்னகை வெள்ளம்
அமுதத் தமிழிசை பாடும் கவிதைகள் சொல்லும்
தலைமுறை புகழின் குலம் நலம் காப்போம்
ஓராயிரம் காலத்து பயிர்வளம் சேர்ப்போம்.
பாரத வீரர் மார்பினில் இணையும் (தேசிய நடிகர் சசிகுமாருக்கு புகழ்க் கிரீடம்)
பாவையின் மனமே கனி போல் கனியும்
வேதங்கள் ஓதி வளர்த்திடும்
பேதம் அதை வென்றிட வேண்டும் தேசிய கீதம்
மலர்களின் ராஜா
அழகிய ரோஜா
என் இதய வானில்
இன்ப ராணி ராணி ராணி மகராணி
லா ல லா லாலா....லா ல லா லாலா
கேட்க கேட்க அவ்வளவு இனிமை.
மல்லிகாவின் மந்திரக் குரல். (அதுவும் 'பாரத வீரர் மார்பினில் இணையும்' எனும் போது ஒரு ஹை பிட்ச் தூக்குவார் பாருங்கள்! வார்ரே வா!)
சற்றே நடுங்கும் குரலில் எம்.எல்.ஸ்ரீகாந்தை நினைவு படுத்தும் தனசேகரன்.
என்.எஸ்.தியாகராஜன் என்பவர் இப்படத்தின் இசையமைப்பாளர்.
இப்பாடலை வீடியோவில் அப்லோட் செய்த TFM Lover அவர்களுக்கு மிக்க நன்றி!
இப்பாடலுக்கு youtube ல் comment பட்டியலைப் பார்க்கும் போது ஒரு இன்ப ஆச்சர்யம்.
இப்பாடலுக்கு இசை அமைத்திருந்த என்.எஸ்.தியாகராஜன் அவர்கள் தன் கருத்தை இங்கு பதிவு செய்து TFM Lover அவர்களுக்கு நன்றி தெரிவித்திருந்த போது என் நெஞ்சு நெகிழ்ந்தது உண்மை.
(I am the music director N.S.Theyagarajan of this song and was looking for it.Thanks a lot for uploading TFML!)
அதுவும் பாடலின் ஆரம்ப இசையும், இடையிசையும் அட்டகாசமான அட்டகாசம். இப்படிப்பட்ட திறமைசாலிகள் எல்லாம் எங்கு போனார்கள்?
அதுவும் மல்லிகா 'மலர்களின் ராஜா' என்று கொஞ்சுவதும் தொடர்ந்து
அழகிலே 'ர்ர்ர்ர்ரோஜா'... என்று ரோஜாவுக்கு அழுத்தம் தந்து பாடுவதும் நம்மை வியக்க வைத்து விடும்.
தேசிய நடிகர் சசிகுமாரும், குமாரி பானுமதியும் பாடும் டூயட் பாடல் இது. நான் கூட இப்பாடலைப் பார்ப்பதற்கு முன் பயந்தேன் அருமையான இப்பாடலை எப்படிப் படமாக்கியிருப்பார்களோ என்று. நல்லவேளையாக பாடலைக் கெடுக்காமல் எடுத்திருப்பார்கள். ]
'அகத்தியர்' திரைப்படத்தில் சிவக்குமாருடன் பானுமதி.

எம்.பானுமதி நடிகர் திலகம் நாடகக் குழுவில் பெரும் அங்கம் வகித்தவர். நிறைய படங்களிலும் நடித்துள்ளார். கோபால் உச்சி குளிர்ந்து மகிழ்வாரே 'காதல் ஜோதி' படத்தில் 'ஓம் மேல கொண்ட ஆச' ன்னு. அந்தப் படத்தில் விதவையான இளம்பெண்ணாக (!) பானுமதி நடித்திருப்பார். சற்று முற்றிய முகம் இவருக்கு. இதனால் இளமை மிஸ்ஸிங். 'வியட்நாம் வீடு' படத்தில் நாகேஷுடன் ஜோடியாக 'மை லேடி... கட் பாடி... நீயே எந்தன் ஜோடி' பாடலுக்கு ஆடியிருப்பார். 'நீலகிரி எக்ஸ்பிரஸ்' படத்தில் சூலமங்கலம் சகோதரிகள் பாடும் புகழ் பெற்ற பாடலான 'திருத்தணி முருகா... தென்னவர் தலைவா!' பாடலுக்கு நாட்டியம் சிறப்பாக ஆடியிருப்பார் பானுமதி. நிறைய தொலக்காட்சி நாடகங்களில் நடித்துள்ளார்.
காதலர்கள் டூயட்டிலேயே நமது தேசியக் கொடிக்கு சல்யூட் அடித்து அஞ்சலி செலுத்துவது அற்புதம். இப்போது படங்களில் தேசியக் கொடியை யார் காட்டுகிறார்கள்? டாஸ்மாக் கடைகளைத் தான் காட்டுகிறார்கள். ]
பல பேர் இப்பாடலைக் கேட்டிருக்க வாய்ப்பில்லை. கேட்டிருந்தாலும் மறந்திருக்கக்கூடும். இப்போது கேளுங்கள். ஜென்மத்திற்கும் மறக்க முடியாது.]
இப்படத்தில் ரவிச்சந்திரன் பிரமிளா இணை. (பூத்திருந்து காத்திருந்தேன் நிலமகள் போலே) திரைக்கதை இயக்கம் தில்லை ராகவன்.
Last edited by vasudevan31355; 1st May 2016 at 11:03 AM.
நடிகர் திலகமே தெய்வம்
-
Post Thanks / Like - 0 Thanks, 3 Likes
-
1st May 2016, 11:09 AM
#2563
Senior Member
Diamond Hubber

Originally Posted by
Gopal,S.
ரவி-பிரமிளா நடிப்பில் வள்ளி தெய்வயானை என்றொரு படம்.1972 அல்லது 1973 வாக்கில்.பிரமிளா இரட்டை வேடம். இந்த படத்தில் டி.ஆர்.பாப்பா போல ரேடியோ இசையில் பிரபலம் ஆன தியாகராஜன் என்பவர் இசை. பூத்திருந்து காத்திருந்தேன் சந்தோசம் -சோகம் என்று இரண்டு முறை. (சோகம் நன்றாக இருக்கும்)
இதுவும் கோபாலருக்காக.
மகிழ்ச்சி
சோகம்
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
1st May 2016, 11:18 AM
#2564
Senior Member
Seasoned Hubber
தாடி ஒட்டியகன்னமாய் சந்த்ரசேகர்..(அ காலப் படங்களில் சாவதற்காகவே இவரைப் போட்டுப் படுத்துவார்கள்)
Yes, அந்தக் காலத்து சௌகார் ஜானகன், ஸ்ரீரஞ்சனன்...
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
Post Thanks / Like - 0 Thanks, 3 Likes
-
1st May 2016, 11:19 AM
#2565
Senior Member
Seasoned Hubber
வாசு சார்
வள்ளி தெய்வானை பாடலைப் பற்றிய தங்கள் மீள்பதிவு, எத்தனை முறை படித்தாலும் சலிக்காத விறுவிறுப்பான நடையில் சுவாரஸ்யமாயிருக்கிறது.
பாராட்டுக்கள்.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
1st May 2016, 02:42 PM
#2566
Senior Member
Diamond Hubber
மதுண்ணா! ராகவேந்திரன் சார்,
நீராட்டுத் தீராமல் தேரோட்டும் புஷ்பங்கள்
பாராட்டிப் பேசட்டுமே
மேலாகக் கிள்ளைகள் ஆராத்தித் தட்டோடு
தாலாட்டுப் பாடட்டுமே.
படம் வரும்போதோ, அதற்கு முன்னாலோ மேற்கண்ட வரிகளில் ஒரு வார்த்தை மாறி இருந்ததா? அது பற்றி சர்ச்சை எதுவும் எழுந்ததா? ரொம்ப நாள் சந்தேகம் எனக்கு. 'கண்மணி ராஜா'க்களாக உங்களை நினைத்துக் கேட்கிறேன். சந்தேகம் தீர்க்க. ப்ளீஸ்.
-
1st May 2016, 04:16 PM
#2567
Junior Member
Newbie Hubber
பாடல்களால் ஒரு பாலம் : இரயிலில் ஓர் ஒயில்
- அபுல் கலாம் ஆசாத் [azad_ak@yahoo.com]
Save as PDF | Bookmark in Del.icio.us | | Printable version | URL |
தமிழில்,
திரைப்படம்: சிவகாமியின் செல்வன்
பாடலாசிரியர்: புலமைப்பித்தன்
இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்
பாடியவர்: டி.எம்.சௌந்தரராஜன்
திரையில்: சிவாஜி கணேசன், ஏ.வி.எம்.ராஜன், வாணிஸ்ரீ.
இந்தியில்,
திரைப்படம்: ஆராதனா
பாடலாசிரியர்: ஆனந்த் பக்ஷி
இசை: எஸ்.டி.பர்மன்
பாடியவர்: கிஷோர் குமார்
திரையில்: ராஜேஷ் கன்னா, சுஜித் குமார், ஷர்மிளா டாகூர்
'சலசல சலசல இரட்டைக்கிளவி
தகதக தகதக இரட்டைக்கிளவி
உண்டல்லோ தமிழில் உண்டல்லோ' என இரட்டைக்கிளவியை எல்லாருக்கும் அறிமுகம் செய்துவைத்தவர் வைரமுத்து.
பல்லவியின் இரண்டு அடிகளின் கடைசியிலும் இரட்டைக்கிளவிகள். தொடர்ந்த இரண்டு சரணங்களின் கடைசி அடிகளிலும் இரட்டைக்கிளவிகள். அவற்றின் முன்னே கச்சிதமாகப் பொருந்துகின்ற முதலடிகள். இப்படி நகாசு வேலையை திரைப்பாடலில் செய்துவைத்தவர் புலமைப்பித்தன்.
ஜிகுஜிகு, ஜிலுஜிலு, குளுகுளு, கிளுகிளு இவையே அந்த இரட்டைக்கிளவிகள்.
அது ஒரு குளிர்ப்பிரதேசம். கண்ணுக்கெட்டிய தூரம் வரையில் பசுமை படர்ந்திருக்க, அதனிடையே கோடு கிழித்தாற்போல இருப்புப்பாதை. இருப்புப் பாதையையொட்டி அதனுடன் இணையாகச் செல்லும் சாலை. அங்கே செல்லும் இரயிலின் வேகம் ஒன்றும் காற்றைக் கிழித்துப் பறப்பதாக இல்லை. சாலையில் செல்லும் எந்த வாகனமும் இரயிலின் வேகத்தோடு கூடவே செல்வதற்குத் தோதுவான வேகம்.
இரயிலின் சன்னலின் ஓரத்தில் ஓர் ஒயில் அமர்ந்திருக்கிறாள். தடிமனான புத்தகத்தைக் கையில் வைத்துக்கொண்டு புரட்டிக்கொண்டே வருகிறாள். புத்தகத்தை ஒயில் படித்தாளோ இல்லை படிப்பதாகப் பாவனை செய்தாளோ எவரும் அறியார். ஆனால், இரயிலுடன் கூடவே சாலையில் வாகனத்தில் வந்த இளஞன் ஒருவன் ஒயிலைப் படித்துக்கொண்டே வந்தான். அவள் புத்தகத்தின் பக்கங்களைப் புரட்டும்போது ஓரக்கண்ணால் அவனைப் பார்த்து அவனது மனதையும் புரட்டிப் போட்டாள். அவள் புரட்டிப் போட்டதில் அவனது மனதில் காதல் விழித்துக்கொண்டது. காதல் வந்தால் கவிதையும் கூடவே வரவேண்டுமல்லவா, வந்தது.
உள்ளம் ரெண்டும் ஒன்றை ஒன்று
மிஞ்சும் வண்ணம் ஓடும் வேகம் ஹே
ஜிகுஜிகு ஜிகுஜிகு ஜிகுஜிகு ஹே!
பெண்மை என்னும் தென்றல் ஒன்று
என்னைத் தொட்டுக் கொஞ்சும் இன்பம் ஹே
ஜிலுஜிலு ஜிலுஜிலு ஜிலுஜிலு ஹே!
காத்திருந்தாள் ஒரு ராஜாத்தி - இரு
கண்களில் மையெழுதி!
கண்டுகொண்டாள் என்னை நெஞ்சில் நிறுத்தி - அவள்
கோடியில் ஓரழகி!
தொட்டுத் தொட்டு கட்டுக் கதை
இட்டுச் சொல்லும் பட்டுக் கண்கள்! ஹோ!
குளுகுளு குளுகுளு குளுகுளு ஹே!
நேற்றிரவு நல்ல பால்நிலவு - எந்தன்
நெஞ்சினில் ஓர் கனவு!
வந்தவள் யார் இந்தத் தேவதையோ - இவள்
வார்த்தைகள் தேன்மழையோ!
செல்லக் கன்னம் வெல்லம் என
மெல்லமெல்ல கிள்ளக்கிள்ள! ஹோ!
கிளுகிளு கிளுகிளு கிளுகிளு ஹே!
தமிழ்த் திரையில் இரயிலில் ஒயிலாகத் தோன்றியவர் வாணிஸ்ரீ. உடன் செல்லும் வாகனத்தில் சிவாஜியும் ஏ.வி.எம். ராஜனும். புத்தகத்தைப் பார்ப்பதும், சிவாஜியைப் பார்ப்பதும், பின்பு அலட்சியமாக முகத்தைச் சுழித்துவிட்டு மீண்டும் புத்தகத்தைப் படிப்பதுமான பாவனையில் துவங்கி, மெல்லமெல்ல பாடலில் ஒலிக்கும் வர்ணனைகளை ரசிக்கத் துவங்கி, இதழோரத்தில் தோன்றும் புன்னகையுமாக வாணிஸ்ரீ.
Rajesh Kanna, Sharmilaஆராதனாவில் ஷர்மிளா டாகூர் புத்தகத்தில் முகம் மறைத்து விளையாட்டுக் காட்டுவதைப் பார்த்தபின் சிவகாமியின் செல்வனைப் பார்க்க நேர்ந்தால், அந்தக் காட்சியின் நேர்த்திக்காக வாணிஸ்ரீ எத்தனை சிரமப்பட்டிருப்பார் என்பதைப் புரிந்துகொள்ளலாம்.
அலட்சியமாகப் பார்க்கும் பார்வையை ஓரிரு வினாடிகள் வீசுவாரென்றால், அடுத்த வினாடி பொய்யான கோபப் பார்வையை வீசுவார். பிறகு புத்தகத்தில் முகம் புதைத்துக்கொள்ளும் பாவனையில் சில வினாடிகளும், மெதுவாகப் புத்தகத்தை விலக்கி அவனது பாட்டில் இருக்கும் நாயகி தான்தானா என்னும் சந்தேகம் தன்னை ஆட்கொண்டது போன்ற முகபாவனையில் சில வினாடிகளாகளுமாக உட்கார்ந்த இடத்திலிருந்தே பல உணர்வுகளை வெளிப்படுத்துவார்.
இப்படியான முகபாவங்கள் அன்று முதல் இன்று வரையில் தமிழ்த் திரையில் வந்துகொண்டே இருக்கின்றன. துவக்கத்தில் கொஞ்சம் விலகி நிற்கவேண்டுமென நினைப்பதும், பிறகு இணைந்துகொள்வதுமாக பார்க்கின்ற படங்களிலெல்லாம் ஒன்றிரண்டு காட்சிகள் வந்துபோனாலும் அலுப்புத் தட்டாமல் இருப்பதற்குக் காரணம் நமது மனதில் இயல்பாகவே வேர்விட்டிருக்கும் மென்மையான உணர்வுகளும், திரையில் தோன்றுகின்ற நடிக நடிகையர் மேலிருக்கும் அபிமானமுமே. இந்த அபிமானங்கள் வளர்ந்து சார்பு நிலையை உருவாக்காமலிருந்தால் அது நடுநிலை.
காட்சியில், திறந்த ஜீப்பினை ஓட்டிக்கொண்டு ஏ.வி.எம்.ராஜன் சிவாஜியின் நண்பராக அவ்வப்போது சிந்தும் புன்னகையுடன் வர, தனக்கே உரிய அற்புதமான உதட்டசைவில் சிவாஜி, புலமைப்பித்தன் - எம்.எஸ்.விஸ்வநாதன் கூட்டணிக்கு உயிரூட்டிக்கொண்டு வர, மூன்று நிமிடங்களில் பெரிய காதல் நாடகத்தையே திரையில் அரங்கேற்றிக் காட்டிய பாடலிது.
இந்தியில் இதன் மூலவடிவில் ராஜேஷ் கன்னாவும், சுஜித் குமாரும் ஜீப்பில் வர, இரயிலில் ஷர்மிளா டாகூர்.
இந்தித் திரையில் எழுபதுகளில் ராஜேஷ் கன்னாவுக்கு இருந்த அங்கீகாரம் அபாரமானது. கொஞ்சம் தேசபக்தி, கொஞ்சம் அம்மா பாசம், கொஞ்சம் தங்கைப் பிரியம், கொஞ்சம் காதல், மிகமிகக் கொஞ்சம் வீரம் இப்படியான கலவையில் வெற்றிப் படங்களின் நாயகனாகவே அவர் வலம் வந்துகொண்டிருந்தார்.
இந்தப் பாடல் காட்சியில் ராஜேஷ் கன்னாவின் நண்பராக வண்டியை ஓட்டிக்கொண்டு வருகின்ற சுஜித் குமார் வங்காளத்தைச் சேர்ந்தவர். மிதுன் சக்ரபோர்த்தியின் வருகைக்கு முன்பு வரையில் வங்காளத்திலிருந்து வந்து பிரபலமாகக் காலூன்றிய நடிகர் என சுஜித் குமாரைச் சொல்லலாம். பின்னாளில் சுஜித் வில்லனாகிப்போனார்.
ஷர்மிளா டாகூருக்கும் வாணிஸ்ரீக்கும் இயல்பாகவே பொருந்துகின்ற உயரமான சிகை அலங்காரமும், இந்தியில் இருந்ததைப் போலவே தமிழிலும் ஆண்களின் உடையமைப்பில் நேபாளபாணித் தொப்பியும், ஜிகுஜிகுவென பாடலுடன் சேர்ந்து ஒலிக்கும் இரயிலின் சத்தமும், சிலநேரங்களில் இந்தியைப் பார்க்கிறோமா தமிழைப் பார்க்கிறோமா என யோசிக்கச் செய்யும்.
தமிழில் சரணத்தில் கவிஞர் சொல்கிற கனவில் வந்த தேவதை, இந்தியில் பாடலின் பல்லவியிலேயே வந்துவிடுகிறாள்.
மேரே சப்புனோன்கி ரானி கப் ஆயேகி தூ
ஆயே ருத்து மஸ்தானி கப் ஆயேகி தூ
பீத்து ஜாயே ஸிந்தகானி கப் ஆயேகிதூ
சலே ஆ தூ சலே ஆ!
எந்தன் கனவினில் வந்த தேவதையும் நீயோ
இந்த வசந்தத்தின் மொத்த சுகந்தமும் நீயோ
என்னில் வாழவந்த காவியப்பெண்ணாக நீயோ
வருவாய்! நீ வருவாய்!
(இது வார்த்தைக்கு வார்த்தையான மொழிமாற்றம் அன்று. பொருளை உள்வாங்கிக்கொண்டு பாடலின் வரிகளைத் தமிழில் அதே மெட்டிற்குப் பொருந்தும்படியாக மாற்றி எழுதியது. ஓரளவிற்குதான் வரிகள் பொருந்தும். இனி தொடரப்போகும் எல்லா மொழிமாற்றங்களும் இப்படித்தான் இருக்கும்.)
காதலின் வீதியும் தோட்டத்து மலர்களும்
எங்கும் தோன்றும் வண்ணமயமும்
உன் காதலின் கீதத்தைக் கேட்கத் துடிக்கும்!
(என் கனவில் வந்த தேவதையும் நீயோ)
ப்யார்கி கலியான் பாகோன்கி கலியான்
சப்ரங்கு ரலியான் பூச்ரஹிஹை
கீத் பன்ஹட்டுபே கிச்தின் காயேகி தூ
(மேரே சப்புனோன்கி ரானி கப் ஆயேகி தூ)
இந்தியில் இந்தப் பாடலில் ஒலித்த ஒரு குறும்பு தமிழில் ஒலிக்கவில்லை. அவளை வர்ணித்துக்கொண்டே செல்லும் பாடலின் முடிவில் நாயகன் நாயகியை செல்லமாகச் சீண்டிப்பார்ப்பான். 'என் கனவில் வந்த தேவதையே நீ எப்போது என்னுடன் வருவாயோ, எப்போது காதலின் கீதம் பாடுவாயோ' என்றெல்லாம் கேட்டுக்கொண்டே, கடைசியில், 'எனக்கு நம்பிக்கையில்லை, உன்மேல் உண்டானது போலவே இன்னொருத்தியின் மீதும் காதல் உண்டாகாது என்று உறுதியாகச் சொல்லமுடியாது. அப்படி உண்டாகிவிட்டால் நீ வருத்தப்படுவாய்' என்று சொல்கிறான்.
க்யா ஹை பரோஸா ஆஷிக் தில்கா
அவுர் கிஸிபே யே ஆஜாயே
ஆகயாதோ பஹூத் பச்தாயேகி தூ
(மேரே சப்புனோன்கி ரானி கப் ஆயேகி தூ)
நாளையென் கனவில் இன்னொரு கீதம்
தோன்றும் வேளை பாதை மாறும்
நீ கனலாகி என்னை அன்று சூழக்கூடும்!
(என் கனவில் வந்த தேவதையும் நீயோ)
இப்படிக் காதலில் துடித்த அவர்கள் சிருங்காரத்தில் துடித்த பாடல் ஒன்றும் இதே திரைப்படத்தில் இருக்கின்றது.
-
1st May 2016, 04:30 PM
#2568
Junior Member
Newbie Hubber
C.V.Rajendran Films
Anubavam Pudhumai (1967) Galatta Kalyanam (1968) Nil Gavani Kadhali (1969) Veettuku Veedu (1970) Pudhiya Vazhkai (1971) Sumathi En Sundari (1971) Nawab Naarkali (1972) Raja (1972) Needhi (1972) Nyayam Ketkirom (1973) Ponnunjal (1973) Manidharil Manikkam (1973) En Magan (1974) Sivagamiyin Selvan (1974) Vani Rani (1974) Thrimurthy (1975) Dulhan (1975) Maalai Sooda Vaa (1975) Unakkaga Naan (1976) Galate Samsara (1977) Kittu Puttu (1977) Singaporenalli Raja Kulla (1978) Vazhthungal (1978) Preethi Madu Thamashe Nodu (1979) Adalu Badalu (1979) Kamala (1979) Ullasa Paravaigal (1980) Usha Swayamvara (1980) Garjanai (1981) Garjane (1981) Garjanam (1981) Do Dil Diwane (1981) Thyagi (1982) Sangili (1982) Lottery Ticket (1982) Prema Mathsara (1982) Sandhippu (1983) Naane Raja (1984) Vaazhkai (1984) Raja Veettu Kannukkutty (1984) Sahachariyam (1984) Ungal Veetu Pillai (1984) Hum Nahin Jhukenge (1985) Unakkaga Oru Roja (1985) Perumai (1985) Puthiya Theerppu (1985) Chiranjeevi (1985) Poi Mugangal (1986) Raja Nee Vaazhga (1986) Anand (1987) Poorna Chandra (1987) Chinnappadass (1989)
-
1st May 2016, 05:07 PM
#2569
Senior Member
Seasoned Hubber
வாசு சார்
சிவகாமியின் செல்வன் தெலுங்கில் கன்னவாரி கல்லலு என்ற பெயரில் தெலுங்கில் வெளிவந்தது. 1975 ஜனவரி 1 என நினைக்கிறேன் (வருடம் துல்லியமாக நினைவிலில்லை). அன்று நாங்கள் திருப்பதிக்கு சாமி தரிசனம் சென்று விட்டு திரும்பும் போது மறுநாள் மாலையாகி விட்டிருந்தது. அங்கு பிரதாப் தியேட்டரில் கன்னவாரி கல்லலு என்ற படம் அப்போது தான் வெளியாகி இருந்தது. போஸ்டர் பார்த்தால் நம்ம சிவகாமியின் செல்வன் காட்சிகளைப் போன்றே இருந்தது. அதிலும் வாணிஸ்ரீ ஆனால் நாயகன் ஷோபன் பாபு. எப்படித் தான் இருக்கிறது பார்ப்போமே என்று உள்ளே போனது தப்பாகிப் போனது. நமக்கும் அதற்கும் ரொம்ப தூரம். அநியாயத்திற்கு வாணியை வீணடித்திருந்தார்கள். அவர் ஒருவர் மட்டுமே ஆறுதல். பாடல்கள் கொஞ்சம் பரவாயில்லை. கொடுமை என்னவென்றால், உள்ளம் ரெண்டும் பாடல் காட்சியை நாயகன் தண்ணீரில் ஸ்கேட்டிங் செய்வது போலவும், நாயகன் படகில் அமர்ந்து பார்ப்பது போலவும்... வாழ்க்கையே வெறுத்து விட்டது. பாடல் காட்சிகளை மட்டும் பார்த்து விட்டு தூங்கி விட்டோம். வாழ்க்கை வெறுத்துப் போவது என்றால் என்ன என்பதை அன்று தான் தெரிந்து கொண்டோம்.
யாம் பெற்ற இன்பத்தை (இன்பமா அது ... துன்பத்திலும் துன்பம் பெருந்துன்பம்).. நீங்களும் பார்க்க வேண்டும் என்பதற்காக யூட்யூபில் தேடினால் கிடைக்கவில்லை. இரு பாடல்கள் மட்டும் காணொளிகள் உள்ளன. ஆனால் அதில் ஆடியோ ஒலிக்கவில்லை.
பார்த்து தான் வையுங்களேன்..
இனியவளே பாடல் தெலுங்கில்
மேள தாளம் பாடல் தெலுங்கில்..
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
1st May 2016, 05:13 PM
#2570
Senior Member
Seasoned Hubber
சில பாடல்கள் ஆடியோவில் உள்ளன
எத்தனை அழகு கொட்டிக் கிடக்குது
உள்ளம் ரெண்டும்
-
ஆடிக்குப் பின்னே ஆவணி மாதம்
என் ராஜாவின் ரோஜா முகம்
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
Bookmarks