-
1st May 2016, 09:18 PM
#2571
Senior Member
Senior Hubber
குழந்தை போல மனவளர்ச்சி குன்றிய, கள்ளம் கபடம் அறியாத, 'வெடுக் துடுக்' நாயகி சாவித்திரி மேல் ஊர் களங்கப்பழி சுமத்த, அந்தக் குழந்தையைப் பற்றி எல்லாம் அறிந்த 'நடிகர் திலகம்' மனம் ஒடிந்து, அதே சமயம் அந்தக் குழந்தைக்கு ஆதரவாக குரல் தருவதைப் பாருங்கள். //
வாஸ்ஸூ..கொஞ்சம் லேட்டு தான்..பதிலிடுவதற்கு..பட்..வெகுளி வேற மனவளர்ச்சி குன்றியங்கறது வேறயோல்லியோ.. அந்தப் பொண்ணுக்கு வெகுளியான வெள்ளந்தியான சுபாவம்.. கட்டக் கடோசில எஸ் எஸ் ஆர் கிட்டக்க சீறுவார் பாருங்க நதி.. நானா இருந்தா அந்தாளைத் தேடிப் பிடிச்சு வெட்டிப் போட்டிருப்பேன்..உன்னைமாதிரி ஓடி வந்திருக்க மாட்டேன் என.. அது ஒரு வாவ் காட்சியோன்னோ.. அதே போல ஒல்லி ஒல்லி ஹைஹை விஜயாவையும் தன்னையும் சம்பந்தப் படுத்தி மற்றவர்கள் பேசுவதை எஸ் எஸ் ஆரிடம் பொங்குவது.. இன்னொரு வாவ்.. கடோசில்ல சாவித்ரியை அனாவசியமா சாகடித்திருக்க வேண்டாம் என்பது எனக்கு அந்தக்காலத்திலிருந்தே ஒரு எண்ணம்..
பேஸிக்கா பார்த்தா அந்தப் பெரிய மனிதரோட பொண்ணு சரியில்லைன்னு ஊர் சொல்றதுக்கெல்லாம் பெம ரங்காராவ் வேதனைப்படறதும் சரியில்லைன்னு தான் படறது இப்போ.. ஆள்படை அம்பு இருக்கறச்சே எம் ஆர் ராதாவை ஆள் விட்டாவது அடிச்சுருக்கலாமில்லை அந்தப் பெரியவர்..
ம்ம் மறுபடிஒருக்கா பாக்கணும்..
-
1st May 2016 09:18 PM
# ADS
Circuit advertisement
-
2nd May 2016, 04:42 AM
#2572
Senior Member
Diamond Hubber

Originally Posted by
vasudevan31355
மதுண்ணா! ராகவேந்திரன் சார்,
நீராட்டுத் தீராமல் தேரோட்டும் புஷ்பங்கள்
பாராட்டிப் பேசட்டுமே
மேலாகக் கிள்ளைகள் ஆராத்தித் தட்டோடு
தாலாட்டுப் பாடட்டுமே.
படம் வரும்போதோ, அதற்கு முன்னாலோ மேற்கண்ட வரிகளில் ஒரு வார்த்தை மாறி இருந்ததா? அது பற்றி சர்ச்சை எதுவும் எழுந்ததா? ரொம்ப நாள் சந்தேகம் எனக்கு. 'கண்மணி ராஜா'க்களாக உங்களை நினைத்துக் கேட்கிறேன். சந்தேகம் தீர்க்க. ப்ளீஸ்.
எனக்குத் தெரிந்த வரை இந்தப் பாடலில் "போராட்டிப் பேசட்டுமே" என்று எஸ்.பி.பி.பாடியிருந்தார். அது பற்றிய சர்ச்சைகள் வெகு நாள் வரை நடந்து கொண்டுதான் இருந்தன. படம் ரிலீசானபோது நான் பார்க்கவில்லை. பல காலம் சென்று நான் பார்த்த சமயத்திலும் அது போராட்டி என்றுதான் இருந்தது. அந்த ஒரிஜினல் வெர்ஷன் இங்கே http://shakthi.fm/ta/album/show/d87d1c99. எப்போது மாற்றினார்கள் என்று தெரியவில்லை
ஆடியோவில் போராட்டியவர் வீடியோ வெர்ஷனில் பாராட்டுகிறார்
Last edited by madhu; 2nd May 2016 at 04:53 AM.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
2nd May 2016, 05:03 AM
#2573
Senior Member
Diamond Hubber

Originally Posted by
chinnakkannan
கடோசில்ல சாவித்ரியை அனாவசியமா சாகடித்திருக்க வேண்டாம் என்பது எனக்கு அந்தக்காலத்திலிருந்தே ஒரு எண்ணம்..
எனக்கும் அதே எண்ணம்.. ( ந.தி. தாலி கட்டியதும் சாவித்திரி கண்ணைத் திறந்து சிரித்து அவர் கண்ணையும் துடைப்பார் என்று எதிர்பார்த்தபடி இருந்தேன் ) இப்படி ஒரு எண்ணத்தை எல்லார் மனசிலும் வரவழைத்ததுதான் படத்தின் வெற்றி.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
2nd May 2016, 07:43 AM
#2574
Senior Member
Diamond Hubber
-
2nd May 2016, 07:44 AM
#2575
Junior Member
Newbie Hubber
Telugu version of Sivagamiyin selvan- Direction S.S.Balan- My dear Uncle. But it is a mokkai version.
-
2nd May 2016, 07:51 AM
#2576
Senior Member
Seasoned Hubber
வாசு சார்
பாராட்டி போராட்டி... இதோடு சிலோன் ரேடியோ போராடியே விட்டது. ரிக்கார்டில் போராட்டி என்று தானிருக்கும். ஏதோ ஒரு அறிவிப்பாளர் புண்ணியவான் போனால் போகட்டும் என்று ஒரு சப்பைக்கட்டு விளக்கம் கூட கொடுத்தார். யார் ஞாபகமில்லை. வைக்கோல் போரை அவர்கள் ஆட்டும் போது அது எப்படி ஆடுகிறதோ அது போல மனம் காதல் வசப்பட்டவர்களை ஆட்டிப்பார்க்கும் என்று ஒரு விளக்கம். இதையறிந்தவுடன் படத்தில் மாற்றி விட்டார்கள். இசையமைப்பாளரின் கவனத்திற்கு இந்த விவாதம் போனவுடன் படத்தில் அவர்களே மாற்றி விட்டார்கள் எனக் கேள்விப்பட்டிருக்கிறேன்.
இதைப் போல பல பாடல்கள்.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
Post Thanks / Like - 1 Thanks, 2 Likes
-
2nd May 2016, 07:56 AM
#2577
Senior Member
Seasoned Hubber
வீசு தென்றலே வீசு பாட்டைப் பற்றியும் வேறு சில பாட்டுக்களைப் பற்றியும் கேட்டிருந்தீர்கள்.
பி.பி.எஸ்.ஸாகட்டும், எஸ்.பி.பாலாவாகட்டும், ஜேசுதாஸாகட்டும்... தமிழ் உச்சரிப்பு என்பது சற்று யோசிக்கவேண்டிய விஷயம் தான். ஆனால் பாலாவைப் பொறுத்த மட்டில் துவக்க காலத்தில் சற்று தடுமாற்றம் இருந்திருந்தாலும் போகப் போகத் திருத்திக் கொண்டு அருமையாகப் பாடப் பழகி விட்டார். திருச்சி லோகநாதன், டி.எம்.எஸ்., சீர்காழி கோவிந்தராஜன் போன்ற பலரின் தாய்மொழி தமிழாக இருந்ததால் அவர்களின் உச்சரிப்பில் சிறிதும் பிழை இருக்காது. ஆனால் பி.பி.எஸ். அவர்களைப் பொறுத்த மட்டில் சில எழுத்துக்கள் தடுமாற்றமே. ல ர வாக மாறலாம். பல எழுத்துக்கள் துல்லியமாக உச்சரிக்கப்பட்டிருக்க மாட்டாது. இன்றும் அவற்றை கவனித்தால் தெரியும். ஜேசுதாஸ் கேட்கவே வேண்டாம். இதர மொழியைத் தாய் மொழியாய்க் கொண்டு தமிழில் மிகத் தெளிவாய் உச்சரித்துப் பாடக் கூடியவர்களில் குறிப்பிட்டுச் சொல்லக் கூடியவர்கள், ஜெயச்சந்திரனும் மலேசியா வாசுதேவனும் ஆவர்.
பெண் பாடகியரைப் பொறுத்தமட்டில் உச்சரிப்பில் பிழை செய்வர்கள் அவ்வளவாக இல்லை.
Last edited by RAGHAVENDRA; 2nd May 2016 at 07:58 AM.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
Post Thanks / Like - 1 Thanks, 2 Likes
-
2nd May 2016, 07:59 AM
#2578
Senior Member
Seasoned Hubber
'பாடு கோகிலம் பாடு
பாசமாக நீ பாடு'
நல்லவேளை மோசமாக நீ பாடு என்று சொல்லாமல் விட்டார்களே..
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
2nd May 2016, 08:47 AM
#2579
Senior Member
Diamond Hubber
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
2nd May 2016, 09:09 AM
#2580
Senior Member
Diamond Hubber
வாசு ஜி..
சில பாடல்களில் உச்சரிப்பு சரியாகக் கேட்காத காரணத்தால் சரியாகப் பாடி இருந்தாலும் கூட தவறான வார்த்தையாக காதில் விழ சான்ஸ் உண்டு. அந்த வகையில் சுசீலா, ஈஸ்வரி போன்றோரின் குரல் தெளிவால் பாட்டை பதிவு செய்கையில் ஏதேனும் காரணத்தால் தவறாக உச்சரித்திருந்தால் கூட அப்போதே கண்டுபிடித்து சரி செய்திருப்பார்கள்.
பாலுவுக்கு கொடுத்த பாடல் வரிகளில் தவறு இருந்திருக்கலாம். போராட்டி என்பது தமிழ் வார்த்தையா இல்லையா என்பது பற்றி அவருக்குத் தெரிய நியாயமில்லை. அத்னால் எழுதிக் கொடுத்ததைப் பாடி இருப்பார். அல்லது அவர் தெலுங்கில் எழுதிப் படித்திருந்தாலும் தவறு நடந்திருக்க வாய்ப்பு உண்டு.
அந்தமான் காதலியின் பாடல் "திருக்கோயிலா" அல்லது "தெருக்கோயிலா" என்று ஒரு ஆராய்ச்சி வெகு நாள் நடந்தது. ( எனக்கென்னவோ திருக்கோயில் என்று தான் கேட்கும்..).
// அன்பு சகோதரர்கள் பாடல் நான் கேட்கவில்லை. முதல் முறை கேட்டதுமே மறந்து விட்டேன் //
Last edited by madhu; 2nd May 2016 at 09:12 AM.
Bookmarks