-
21st June 2016, 08:39 PM
#11
Senior Member
Diamond Hubber
கோ,
அருமை. திலகத்திற்கு அடுத்து நாம் நிறைய மாயவநாதனைப் பற்றி செல்லில் பேசியிருக்கிறோம் இன்று உட்பட. மதுரகானங்களிலும் மாயவனாதன் பற்றிய முழுத் தகவல்களும் தந்திருக்கிறோம். நிஜமாகவே அற்புத திறமை கொண்ட பாடலாசிரியர். அவருடைய பாடல்களை அற்புதமாகப் பதிவிட்டு இன்று தூங்க விடாமல் செய்து விட்டீர்கள்.
எனக்கு 'வணங்கிடும் கைகளின் வடிவத்தைப் பார்த்தால்' ரொம்பவும் பேவரைட். வெகு வித்தியாசமான பாடல். சூலமங்கலத்தின் பாடல்களிலேயே இதுதான் எனக்கு மிகப் பிடித்தம். உடன் இசையரசி வேறு. கைகளின் வடிவத்தை வேலாக்கிப் பார்த்த இந்த மகா கவிஞன் உண்மையிலேயே ஆச்சர்யப்பட வைக்கிறான். இந்தப் பாடலுக்கு இசை அமைத்த டி.பிராமச்சந்திரனைப் பற்றியும் சொல்லியாக வேண்டும். 'கற்பூரம்' படத்தில் கற்பூரம் போல மனதில் தீப்பிடிக்க வைக்கும் பாடல்கள். 'நிலவே உனக்கு குறையேது' ஒன்றே போதும். ஸ்ரீகாந்த், மணிமாலா நெருக்க ஜாஸ்தி பாடலின் இசை பரணி பாடற்குரியது. தாராபுரத்தாரின் விரும்பத்தக்க நடுங்கல்கள் இன்னொரு புறம். ஒரிஜினல் காதல் மணம் புரிந்த ஜோடி இன்னொரு புறம். அப்போதைய அலட்டலில்லாத இளம் ராஜன். நாடக சினிமாக்கம். 'அழகு ரதம் பொறந்து அது அசைஞ்சி அசைஞ்சி' மனதில் நடந்தது. விந்தனின் ஒளிப்பதிவு. 'கற்பூரம்' திறமைகளின் சங்கமம். முடிந்தால் டி.பி.ஆரைப் பற்றியும் சொல்லவும்.
-
Post Thanks / Like - 1 Thanks, 3 Likes
-
21st June 2016 08:39 PM
# ADS
Circuit advertisement
Bookmarks