-
23rd July 2016, 11:39 PM
#11
Junior Member
Senior Hubber
நான் யாரையும் குறை கூறவில்லை. பொதுவாக சொல்கிறேன். நான் சொல்வது தப்பு என்று யாராவது நினைத்தால் மன்னித்துக் கொள்ளுங்கள்.
சமீபத்தில் ஒரு புதிய திரைப்படம் வெளியாகியுள்ளது. அதற்கு செயற்கையாக ஏற்படுத்தப்பட்ட விளம்பரம். அதன் விளைவுகளாக டிக்கட்டுகள் வெளிப்படையாகவே அநியாய விலைக்கு விற்கப்படுகிறது. கடைசியில் படத்துக்கும் நல்ல ரிசல்ட் இல்லை. அதனால் என்ன? படத்தைப் பற்றி மக்களுக்கு உண்மை நிலவரம் தெரியும் முன்பே மக்களிடம் இருந்து காசைப் பிடுங்கிக் கொள்கிறார்கள். சாதாரண மக்களால் அநியாய விலை கொடுத்து படத்தை பார்க்க முடியாது. (ஒவ்வொருவரின் மொபைலிலும் படம் இருக்கிறது என்பது வேறு விஷயம்). அதைப் பற்றி யார் கவலைப்படுகிறார்கள்? எல்லாரும் சேர்ந்து மக்களிடம் பணம் பறிக்கிறார்கள்.
படத்திலும் நல்ல நீதி இல்லை. புரட்சித் தலைவர் படங்களில் வில்லன் செய்ததை இப்போது கதாநாயகர்களே செய்கிறார்கள். மக்கள் திலகம் என்னதான் அநியாயத்தை எதிர்த்துப் போராடினாலும் கூட அநீதி வழியில் வெல்லமாட்டார். தர்ம நியாயமாக சட்டப்படிதான் சமூக விரோதிகளை ஜெயிப்பார்.
அவரது படங்களில் பாடல்கள் கூட டூரிங் கொட்டகையிலும் உள்ளவர்களுக்கும் நன்றாக கேட்க வேண்டும் என்று அக்கறை எடுத்துக் கொண்டார். நாடோடி மன்னன் படத்தை ரத்தத்தை தானம் செய்து பணம் வாங்கி ரசிகர்கள் பார்க்கிறார்கள் என்று தெரிந்து கொண்டு அதைத் தடுத்தார். பணம் வேண்டும் என்றால் எனக்கு கடிதம் எழுதுங்கள் என்று கூறி எத்தனையோ ரசிகர்கள் அவரது விலாஸத்துக்கு கடிதம் எழுதி மணியார்டர் மூலம் பணம் பெற்றுக் கொண்டனர். தன் படம் மூலம் கிடைக்கும் லாபம் எல்லாருக்கும் சமமாக கிடைக்க வேண்டும் என்று மக்கள் திலகம் நினைத்தார். ரசிகர்களிடமும் அக்கறை கொண்டிருந்தார்.
இப்பவெல்லாம் மக்களை பற்றியோ ரசிகர்களை பற்றியோ யாரு கவலைப்படுகிறார்கள். தனக்கு பணம் வந்தால் சரி. எல்லாம் கெட்டு குட்டிச்சுவரா போச்சு. மனது தாங்கவில்லை. மக்கள் திலகத்தை நினைக்காமல் இருக்க முடியவில்லை.
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
23rd July 2016 11:39 PM
# ADS
Circuit advertisement
Bookmarks