-
5th May 2011, 05:18 PM
#1821
Senior Member
Veteran Hubber

Originally Posted by
goldstar
how was the initial few days in Chennai on release time?
Cheers,
Sathish
மெல்லிசை மன்னரின் சொந்தப்படம் 'அமர காவியம்' சென்னை தேவி தியேட்டரில் வெளியான சரியாக ஏழாவது நாளில் தேவியின் பக்கத்து தியேட்டரான பிளாசாவில் மேஜர் இயக்கத்தில் 'கல்தூண்' ரிலீஸானது. அவ்வளவுதான் ரசிகர்கூட்டம் முழுக்க கல்தூண் பக்கம் திரும்ப, அமரகாவியம் அனாதையானது. இதற்கு முன் வெளியான 'சத்திய சுந்தரம்' ஏற்கெனவே சாந்தியில் ஓடிக்கொண்டிருக்கும்போது இந்தக்கூத்து. அடுத்த ஒரு மாதத்தில் ஏ.வி.எம்.ராஜனின் சொந்தப்படமான 'லாரி டிரைவர் ராஜாக்கண்ணு' ரிலீஸாக, கூடவே பின்தொடர்ந்து கலைஞரின் கதை வசனத்தில் 'மாடி வீட்டு ஏழை' மிட்லண்டில் ரிலீஸ்.
உருப்படுமா..?. ஒவ்வொன்றும் எவ்வளவு முக்கியமான படங்கள் இப்படியா கியூவில் ரிலீஸ் பண்ணுவது..?.
ஒன்று மெல்லிசை மன்னரின் சொந்தப்படம்
அடுத்தது மேஜரின் இயக்கத்தில் முதல் படம்
அதையடுத்து ஏ.வி.எம்.ராஜனின் சொந்தப்படம்
அதைத்தொடர்ந்து இருவர் உள்ளத்துக்குப்பின் கலைஞரின் வசனத்தில் வரும் படம்.
என்ன அழகாக பிளான் பண்ணி ரிலீஸ் பண்ணியிருக்கலாம். என்னதான் நல்ல படமென்றாலும் ஒரே சமயத்தில் நாலு படமென்றால் ரிபீட்டட் ஆடியன்ஸும், ரசிகர்களின் ஆதரவும் குறையத்தானே செய்யும்?.
-
5th May 2011 05:18 PM
# ADS
Circuit advertisement
-
5th May 2011, 05:21 PM
#1822
Senior Member
Devoted Hubber
Harish,
google .com / transliterate site டில் தமிழ் மொழியை select செய்து தமிழில் பேசுவது போல் type செய்யவும். type செய்து முடித்தஉடன், copy செய்து இங்கு paste செய்யும். Save செய்ய முடியாது.
Dear Harish where are you staying in B'lore ? I think Karthik also residing in b'lore ?
Last edited by abkhlabhi; 5th May 2011 at 05:23 PM.
-
5th May 2011, 07:31 PM
#1823
Senior Member
Seasoned Hubber
பராக்...பராக்...பராக்...
திருவருட்செல்வர் சாந்தி திரையரங்க கொண்டாட்டங்களின் காணொளி....
பராக்...பராக்...பராக்...
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
5th May 2011, 08:18 PM
#1824
Senior Member
Veteran Hubber

Originally Posted by
tacinema
Barring EVP and Anbe Vaa, all MGR 175+ days were from his own banner.
Dear tac,
"Anbe Vaa(1966)" was a Superhit film of Makkal Thilagam but it was not a Silver Jubilee film. It ran for over 100 days at 4 centres(6 theatres) in TN and its maximum run was at Chennai Casino [154 days].
There was no Silver Jubilee film for the Tamil Tinsel World in 1966.
Madurai Veeran(1956), Enga Veettu Pillai(1965), Maattukkaara Velan(1970) & Urimaikkural(1974) were the Silver Jubilee films of Makkal Thilagam which would not come under his own banner/production category.
Warm Wishes & Regards,
Pammalar.
-
5th May 2011, 09:19 PM
#1825
Senior Member
Veteran Hubber
Thanks for your accolades, Mr.Satish.
டியர் பார்த்தசாரதி சார், பாராட்டுக்கு நன்றி !
டியர் ராகவேந்திரன் சார்,
முதற்கண் பாராட்டுக்கு நன்றி !
தவிர்க்க இயலாத காரணங்களினால், ஞாயிறு (1.5.2011) மாலையன்று ஸ்டாருக்கு என்னால் முன்னதாகச் செல்ல முடியவில்லை. அடியேன் செல்வதற்கும் திரைக்காவியம் தொடங்குவதற்கும் சரியாக இருந்தது. அதனால் காட்சி தொடங்குவதற்கு முன் நிகழ்ந்த ஆரவாரங்களை அடியேனால் பதிவு செய்ய இயலவில்லை. மாலைக்காட்சிக்கு முன், தாங்கள் கூறியது போல், சிவாஜி தம்பதியரின் மணநாளை முன்னிட்டு கேக் வெட்டி கொண்டாடப்பட்டு அனைவருக்கும் வழங்கப்பட்டிருக்கிறது. அதன் பின்னர் வாலாக்களும் வெடிக்கப்பட்டுள்ளன. தீபாராதனைகளும் வெகு விமரிசையாக நடந்தேறியிருக்கிறது. அன்புள்ளங்களின் ஆட்டம், பாட்டம், கொண்டாட்டங்களினால் ஒரு ஐந்து நிமிடம் திருவல்லிக்கேணி நெடுஞ்சாலையே ஸ்தம்பித்திருக்கிறது. பின்னர், அரங்கினுள் காட்சியின் போது ஒரே அமர்க்களம்தான் !
டியர் mr_karthik,
மனமார்ந்த நன்றி !
தாங்கள் கூறியவற்றை [அரங்கினுள் சூடம் ஏற்றுவது பாதுகாப்புக்கு உகந்ததல்ல என்பதை] நாங்களும் நமது நல்லிதயங்களிடம் சொல்லிக் கொண்டுதானிருக்கிறோம். அவர்களும் கட்டுப்படுத்திக் கொள்கிறோம் என்று கூறியிருக்கிறார்கள்.
நன்றி செந்தில் சார்.
அன்புடன்,
பம்மலார்.
Last edited by pammalar; 5th May 2011 at 09:36 PM.
pammalar
-
6th May 2011, 12:49 AM
#1826
சதீஷ்,
கல்தூண் வெளியான நேரத்தில் நான் மதுரையில் இல்லை.ஆகவே சிந்தாமணியில் ஓபனிங் ஷோ பார்க்க முடியவில்லை. ஆனால் நண்பர்கள் மூலம் அறிந்த செய்தியின்படி படத்திற்கு பெரிய அலப்பறை இருந்தது என்று கேள்விப்பட்டேன். அந்த வருடம் [1981] ஜனவரியில் பொங்கலன்று முதல் படமான மோகனப் புன்னகைக்கு அபிராமியில் ஓபனிங் ஷோவிற்கு வரவேற்பு அமர்களமாக இருந்தது. அதன் பிறகு பிப்ரவரி 21 சென்ட்ரலில் சத்திய சுந்தரம் ரிலீஸ். படத்திற்கு பெரிய எதிர்பார்ப்பு இல்லாததால் ஓபனிங் ஷோ அலப்பறை கொஞ்சம் கம்மி. அமர காவியம் படத்திற்கும் நான் இல்லை. ஆனால் சரியான கூட்டம் என்று செய்தி வந்தது. இதற்கிடையில் ஒரு சின்ன விஷயம் நடந்தது. சத்திய சுந்தரம் படத்தின் மூலப் பதிப்பான தெலுங்கு படத்தில் சௌகார் நாயகியாக நடித்திருந்தார். தமிழில் நடிகர் திலகத்தின் குடும்ப டாக்டர் பாலகிருஷ்ணன்தான் rights வாங்கியிருந்தார். நடிகர் திலகம்,சௌகாரே தமிழில் நடிக்கட்டும் என்று சொல்லியிருந்தார். ஆனால் விநியோகஸ்தர்களோ விஜயாவை கதாநாயகியாக ஒப்பந்தம் செய்யும்படி வற்புறுத்தவே தயாரிப்பாளர் ஒத்துக் கொண்டார். நடிகர் திலகமும் வியாபார விஷயம் என்பதால் தலையிடவில்லை. ஆனால் சௌகார் இதை தவறாக புரிந்துக் கொண்டு கோவம் அடைந்தார்.அந்த நேரத்தில் கல்கி இதழில் சிவாஜி சகாப்தம் முடிந்து விட்டது என்று பேட்டி கொடுத்தார். இதை பார்த்துவிட்டு ஏன் என்று தெரியாமல் வருந்திய சிவாஜி, சௌகாரை வரவழைத்து உண்மையை விளக்கினார்.
விகடனிலிருந்து வெளியே வந்து மணியன் ஆசிரியராக இருந்து நடத்திய இதழ் இதயம் பேசுகிறது. இது யார் ஆதரவு பத்திரிக்கை எனபது அனைவருக்கும் தெரியும். அவர்கள் பத்திரிக்கை தொடங்கிய 1978 முதல் நடிகர் திலகத்திற்கு எதிராகவே செய்திகளை வெளியிட்டு வந்தனர். 1981, அதாவது கல்தூண் வெளியான காலக் கட்டத்தில் அவர்கள் புதிய தமிழ் படங்கள் வெளியாகும் போது முதல் வாரத்தில் ஞாயிறன்று ஒரு காட்சிக்கு தியேட்டருக்கு வருகிறோம் என்று அறிவிப்பார்கள். அந்த காட்சியில் அந்த இதழ் சார்பாக ஒரு பெட்டி வைக்கப்படும். அங்கே இருக்கும் கூப்பனில் பொதுமக்கள் தங்கள் கருத்துக்களை எழுதி போடலாம். சுவையான விமர்சனங்களை பத்திரிக்கையில் வெளியிடுவார்கள். இது சென்னையில் மட்டுமல்லாது தமிழகத்தின் அனைத்து முக்கிய நகரங்களிலும் நடைபெற்றது. அப்படி அவர்கள் தேர்ந்தெடுத்த படம் கல்தூண், மதுரை சிந்தாமணி, 03-05-1981 ஞாயிற்றுக்கிழமை மதியக் காட்சி.
நடிகர் திலகத்தையும் அவரது ரசிகர்களையும் பற்றி என்னவோ ஏதோ என்று நினைத்து வந்த மணியன் அண்ட் கோவிற்கு சரியான அடியாக அமைந்தது படத்திற்கு திரண்டிருந்த கூட்டமும் அவர்கள் அரங்கில் செய்த அலப்பறையும். அதுவரை எதிர்மறையாக எழுதிக் கொண்டிருந்த இதயம் பேசுகிறது இதழ் அந்த சிறப்புக் காட்சியை பற்றி எழுதும்போது குறிப்பிட்டிருந்தது இன்றும் நினைவில் நிற்கிறது. "மதுரையில் இப்போதும் சிவாஜிக்கு வலிமையான ரசிகர் மன்றங்கள் இயங்கி வருவது நிதர்சனமாக கண்ணுக்கு தெரிந்தது. அவர்கள் சிவாஜிக்காக எதையும் செய்ய தயாராய் இருக்கிறார்கள்."
ரசிகர் ஒருவர் எழுதியிருந்த ஸ்லோகனும் சுவையான ஒன்று. "சரித்திரங்கள் மறைவதில்லை.சகாப்தங்கள் முடிவதில்லை." அதே போல் இந்த படத்திற்கு ஆனந்த விகடன் எழுதிய விமர்சனத்தில் ஒரு வரியும் எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. "திரைக்கதை பாதி வேலையை பார்த்துக் கொள்ள கல்தூணாய் நின்று சிவாஜி படத்தை தாங்க,டைரக்டர் என்ற கோட் அணிந்து மேஜர் செய்திருப்பது ஒரு மைனர் ஆபேரஷன்தான்."
நன்றி சதீஷ். நினைவலைகளில் மீண்டும் நீந்த வாய்ப்பளித்த உங்களுக்கு. Tidbits வழங்கிய சாரதிக்கும் நன்றி
அன்புடன்
செந்தில், இப்போது நமது ஹப்பிலேயே பாலா சொன்னது போல நீங்கள் தமிழில் டைப் செய்யலாம்.
Plum எல்லாவரையும் பற்றி சொன்னீர்கள். அந்தமான் காதலி சந்திரமோகனை விட்டு விட்டீர்களே!
Last edited by Murali Srinivas; 6th May 2011 at 12:53 AM.
-
6th May 2011, 04:59 AM
#1827
Senior Member
Seasoned Hubber
நகரங்களிலும் நடைபெற்றது. அப்படி அவர்கள் தேர்ந்தெடுத்த படம் கல்தூண், மதுரை சிந்தாமணி, 03-05-1981 ஞாயிற்றுக்கிழமை மதியக் காட்சி.
நடிகர் திலகத்தையும் அவரது ரசிகர்களையும் பற்றி என்னவோ ஏதோ என்று நினைத்து வந்த மணியன் அண்ட் கோவிற்கு சரியான அடியாக அமைந்தது படத்திற்கு திரண்டிருந்த கூட்டமும் அவர்கள் அரங்கில் செய்த அலப்பறையும். அதுவரை எதிர்மறையாக எழுதிக் கொண்டிருந்த இதயம் பேசுகிறது இதழ் அந்த சிறப்புக் காட்சியை பற்றி எழுதும்போது குறிப்பிட்டிருந்தது இன்றும் நினைவில் நிற்கிறது. "மதுரையில் இப்போதும் சிவாஜிக்கு வலிமையான ரசிகர் மன்றங்கள் இயங்கி வருவது நிதர்சனமாக கண்ணுக்கு தெரிந்தது. அவர்கள் சிவாஜிக்காக எதையும் செய்ய தயாராய் இருக்கிறார்கள்."
ரசிகர் ஒருவர் எழுதியிருந்த ஸ்லோகனும் சுவையான ஒன்று. "சரித்திரங்கள் மறைவதில்லை.சகாப்தங்கள் முடிவதில்லை." அதே போல் இந்த படத்திற்கு ஆனந்த விகடன் எழுதிய விமர்சனத்தில் ஒரு வரியும் எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. "திரைக்கதை பாதி வேலையை பார்த்துக் கொள்ள கல்தூணாய் நின்று சிவாஜி படத்தை தாங்க,டைரக்டர் என்ற கோட் அணிந்து மேஜர் செய்திருப்பது ஒரு மைனர் ஆபேரஷன்தான்."
நன்றி சதீஷ். நினைவலைகளில் மீண்டும் நீந்த வாய்ப்பளித்த உங்களுக்கு. Tidbits வழங்கிய சாரதிக்கும் நன்றி
Nantri Murali sir.
We could see most of TN news paper always biased against our NT and NT records and his box office collections.
One more thing it worries for long time, Dinamalar news paper used to have other side actor photo on their "Varamalar" quite often but never published our NT. I have written an email to them asked why, but no response. These kind of activities really hurt me a lot.
But whole world know that, our NT does not need any publicity like others.
Long live NT fame.
Cheers,
Sathish
-
6th May 2011, 05:02 AM
#1828
Senior Member
Seasoned Hubber

Originally Posted by
mr_karthik
மெல்லிசை மன்னரின் சொந்தப்படம் 'அமர காவியம்' சென்னை தேவி தியேட்டரில் வெளியான சரியாக ஏழாவது நாளில் தேவியின் பக்கத்து தியேட்டரான பிளாசாவில் மேஜர் இயக்கத்தில் 'கல்தூண்' ரிலீஸானது. அவ்வளவுதான் ரசிகர்கூட்டம் முழுக்க கல்தூண் பக்கம் திரும்ப, அமரகாவியம் அனாதையானது. இதற்கு முன் வெளியான 'சத்திய சுந்தரம்' ஏற்கெனவே சாந்தியில் ஓடிக்கொண்டிருக்கும்போது இந்தக்கூத்து. அடுத்த ஒரு மாதத்தில் ஏ.வி.எம்.ராஜனின் சொந்தப்படமான 'லாரி டிரைவர் ராஜாக்கண்ணு' ரிலீஸாக, கூடவே பின்தொடர்ந்து கலைஞரின் கதை வசனத்தில் 'மாடி வீட்டு ஏழை' மிட்லண்டில் ரிலீஸ்.
உருப்படுமா..?. ஒவ்வொன்றும் எவ்வளவு முக்கியமான படங்கள் இப்படியா கியூவில் ரிலீஸ் பண்ணுவது..?.
ஒன்று மெல்லிசை மன்னரின் சொந்தப்படம்
அடுத்தது மேஜரின் இயக்கத்தில் முதல் படம்
அதையடுத்து ஏ.வி.எம்.ராஜனின் சொந்தப்படம்
அதைத்தொடர்ந்து இருவர் உள்ளத்துக்குப்பின் கலைஞரின் வசனத்தில் வரும் படம்.
என்ன அழகாக பிளான் பண்ணி ரிலீஸ் பண்ணியிருக்கலாம். என்னதான் நல்ல படமென்றாலும் ஒரே சமயத்தில் நாலு படமென்றால் ரிபீட்டட் ஆடியன்ஸும், ரசிகர்களின் ஆதரவும் குறையத்தானே செய்யும்?.
Karthik sir,
Yes, all these movies are minimum 100 days movies and just because of so many movies on same time spoiled the records. LDR is one of my favourite movie because his hair style and way of speech is beautiful to watch.
Cheers,
Sathish
-
6th May 2011, 07:24 AM
#1829
Senior Member
Seasoned Hubber
டியர் பம்மலார்,
ஸ்டார் திரையரங்க நிகழ்வுகளின் பதிவு அங்கு இல்லாத குறையை போக்கி விட்டது. சதீஷ் அவர்கள் கூறியது போல் இனியேனும் நடிகர் திலகத்தின் சாதனைகளையும் வெற்றிகளையும் இருட்டடிப்பு செய்வோரும் இழிப்போரும் தங்களுடைய தவறை மறந்து நடுநிலையோடு நேர்மையாக எழுத முற்படுவர் என நம்புவோம்.
முரளி சார்,
கல்தூண் நினைவுகள் நம் எல்லோருக்கும் அந்த நாட்களுக்கு அழைத்து செல்கின்றன. இங்கு சென்னையில் தேவியில் அமர காவியம், சாந்தியில் சத்ய சுந்தரம் என நடிகர் திலகத்தின் படங்கள் ஓடிக் கொண்டிருந்த போதே கல்தூண் வெளி வந்தது. சங்கராபரணம் படத்தை மேஜர் அவர்கள் எஸ்.எஸ்.கம்பைன்ஸ் என்கிற பெயரில் விநியோக நிறுவனத்தைத் தொடங்கி அப்பெயரில் தமிழகத்தில் வெளியிட்டு அப்படத்தின் மாபெரும் வெற்றியின் மூலம் பெரும் புகழ் அடைந்தார். அதே நிறுவனத்தின் பெயரில் கல்தூண் படத்தையும் சென்னையில் விநியோகம் செய்து அதிலும் அவர் வெற்றி பெற்றார். ஆனால் எங்களுக்கெல்லாம் கல்தூண் வெளிவந்து அமர காவியத்தின் வெற்றியைப் பாதித்தது தான் மிகப் பெரிய சோகம். மெல்லிசை மன்னரின் சொந்தத் தயாரிப்பு, செல்வமே, தன் வானத்தை, போன்ற இனிமையான பாடல்கள் இருந்தும் மூலப் படத்தை ஒப்பிட்டு தவறாக பிரச்சாரம் செய்து அப்படத்தை குறைத்து மதிப்பிட்டது சோகம். வழக்கம்போல் மெல்லிசை மன்னர் பாடல்களை தன் சொந்த மெட்டிலேயே அமைத்திருந்தார். அமரகாவியம் படத்திற்கு கிரிஜா அவர்களும் அடியேனும் செய்திருந்த அட்டைப் பதாகைகள் பெரும் வரவேற்பைப் பெற்றன. அவையெல்லாம் இன்னும் பசுமையாக நினைவில் உள்ளன.
வாய்ப்புக்கு நன்றி
அன்புடன்
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
6th May 2011, 09:44 AM
#1830
Senior Member
Senior Hubber

Originally Posted by
HARISH2619
dear parthi sir,
excellent writeup on thangapadhakkam.It wouldhave definitely rekindled the memories of watching that great movie in theatres with so much alapparai.I have seen that more than 15 times in theatres and whenever it was rereleased in bangalore the theatres such as sangeeth, sri,lavanya,devi,aruna wore festive look(bala sir may know).TP and vasantha maaligai were the two NT films which had more frequent releases in bangalore than any other films(kudiyirundha koyil and USV for mgr).
Dear Mr. Harish,
Thanks for your appreciation and regret for my delayed acknowledgement. It's really slipped my attention, which normally, wouldn't. I also remember watching Thangapadhakkam on the first day. I couldn't get ticket for the opening show in spite of making it very early to Shanthi but managed to see it the next show. What a performance and what a jubilation!
Thanks once again & Regards,
R. Parthasarathy
Bookmarks