-
6th May 2011, 10:04 AM
#1831
Senior Member
Seasoned Hubber
அமரகாவியம் படத்திற்கு கிரிஜா அவர்களும் அடியேனும் செய்திருந்த அட்டைப் பதாகைகள் பெரும் வரவேற்பைப் பெற்றன.
Ragavendra sir,
Do you still have these posters? If so can we see it? I believe Girija madam may have it as she got so much of NT collections.
Cheers,
Sathish
-
6th May 2011 10:04 AM
# ADS
Circuit advertisement
-
6th May 2011, 10:23 AM
#1832
Senior Member
Senior Hubber

Originally Posted by
Murali Srinivas
சதீஷ்,
நடிகர் திலகத்தையும் அவரது ரசிகர்களையும் பற்றி என்னவோ ஏதோ என்று நினைத்து வந்த மணியன் அண்ட் கோவிற்கு சரியான அடியாக அமைந்தது படத்திற்கு திரண்டிருந்த கூட்டமும் அவர்கள் அரங்கில் செய்த அலப்பறையும். அதுவரை எதிர்மறையாக எழுதிக் கொண்டிருந்த இதயம் பேசுகிறது இதழ் அந்த சிறப்புக் காட்சியை பற்றி எழுதும்போது குறிப்பிட்டிருந்தது இன்றும் நினைவில் நிற்கிறது. "மதுரையில் இப்போதும் சிவாஜிக்கு வலிமையான ரசிகர் மன்றங்கள் இயங்கி வருவது நிதர்சனமாக கண்ணுக்கு தெரிந்தது. அவர்கள் சிவாஜிக்காக எதையும் செய்ய தயாராய் இருக்கிறார்கள்."
ரசிகர் ஒருவர் எழுதியிருந்த ஸ்லோகனும் சுவையான ஒன்று. "சரித்திரங்கள் மறைவதில்லை.சகாப்தங்கள் முடிவதில்லை." அதே போல் இந்த படத்திற்கு ஆனந்த விகடன் எழுதிய விமர்சனத்தில் ஒரு வரியும் எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. "திரைக்கதை பாதி வேலையை பார்த்துக் கொள்ள கல்தூணாய் நின்று சிவாஜி படத்தை தாங்க,டைரக்டர் என்ற கோட் அணிந்து மேஜர் செய்திருப்பது ஒரு மைனர் ஆபேரஷன்தான்."
நன்றி சதீஷ். நினைவலைகளில் மீண்டும் நீந்த வாய்ப்பளித்த உங்களுக்கு. Tidbits வழங்கிய சாரதிக்கும் நன்றி
அன்புடன்
அன்புள்ள திரு. முரளி அவர்களே,
கல்தூண் திரை அரங்குகளில் வெளியாகி சரியாக ஓரிரண்டு வருடங்கள் முடிந்தவுடன் என்று நினைவு. சென்னை தூர்தர்ஷனில் ஒளிபரப்பினார்கள். வீட்டில் அந்தப் படத்தைப் பார்த்துக் கொண்டிருந்தபோது "வளத்த கடா முட்ட வந்தா" பாடல் துவங்கப் போகிறது... எனது தந்தை திடீரென்று என்னைக் கூப்பிட்டு "சைக்கிளை எடுத்து வெளியில் வை நான் கொஞ்சம் வெளியில் செல்ல வேண்டும்" என்று கூறினார். நான் வேண்டா வெறுப்புடன் முணுமுணுத்துக் கொண்டே (முக்கியமான காட்சியல்லவா!) சைக்கிளை எடுத்து வெளியில் வைத்து ஸ்டாண்ட் போட்டு, ஞாபகமில்லாமல், சைக்கிளைப் பூட்டாமல் வீட்டினுள் ஓடி வந்து விட்டேன். அற்புதமான பாடலையும், காட்சியையும் தவற விடக்கூடாதே என்று! என் வீட்டிலுள்ள அனைவரும் - என் தந்தையையும் சேர்த்து - அந்தக் காட்சியில் ஐக்கியமாய் விட்டுக் கடைசியில் பாடல் முடிந்தவுடன் திடீரென்று நினைவு வந்தவனாய் வெளியில் ஓடினால், வாசலில் சைக்கிளைக் காணவில்லை! அது என் நீண்ட நாள் கனவு சைக்கிள் - BSA Deluxe - ரொம்ப ஆசையாய் வைத்திருந்த சைக்கிள். அதற்கப்புறம் கிடைக்கவேயில்லை.
அன்புடன்,
பார்த்தசாரதி
-
6th May 2011, 10:35 AM
#1833
Senior Member
Seasoned Hubber

Originally Posted by
parthasarathy
அன்புள்ள திரு. முரளி அவர்களே,
கல்தூண் திரை அரங்குகளில் வெளியாகி சரியாக ஓரிரண்டு வருடங்கள் முடிந்தவுடன் என்று நினைவு. சென்னை தூர்தர்ஷனில் ஒளிபரப்பினார்கள். வீட்டில் அந்தப் படத்தைப் பார்த்துக் கொண்டிருந்தபோது "வளத்த கடா முட்ட வந்தா" பாடல் துவங்கப் போகிறது... எனது தந்தை திடீரென்று என்னைக் கூப்பிட்டு "சைக்கிளை எடுத்து வெளியில் வை நான் கொஞ்சம் வெளியில் செல்ல வேண்டும்" என்று கூறினார். நான் வேண்டா வெறுப்புடன் முணுமுணுத்துக் கொண்டே (முக்கியமான காட்சியல்லவா!) சைக்கிளை எடுத்து வெளியில் வைத்து ஸ்டாண்ட் போட்டு, ஞாபகமில்லாமல், சைக்கிளைப் பூட்டாமல் வீட்டினுள் ஓடி வந்து விட்டேன். அற்புதமான பாடலையும், காட்சியையும் தவற விடக்கூடாதே என்று! என் வீட்டிலுள்ள அனைவரும் - என் தந்தையையும் சேர்த்து - அந்தக் காட்சியில் ஐக்கியமாய் விட்டுக் கடைசியில் பாடல் முடிந்தவுடன் திடீரென்று நினைவு வந்தவனாய் வெளியில் ஓடினால், வாசலில் சைக்கிளைக் காணவில்லை! அது என் நீண்ட நாள் கனவு சைக்கிள் - BSA Deluxe - ரொம்ப ஆசையாய் வைத்திருந்த சைக்கிள். அதற்கப்புறம் கிடைக்கவேயில்லை.
அன்புடன்,
பார்த்தசாரதி
Sarathy sir,
Its funny, but can understand your pain and feeling.
Sathish
-
6th May 2011, 11:16 AM
#1834
Senior Member
Seasoned Hubber
goldstar;
Ragavendra sir,
Do you still have these posters? If so can we see it? I believe Girija madam may have it as she got so much of NT collections.
Cheers,
Sathish
Dear Sathish,
Unfortunately, not. It was one of the most charts that came to my satisfaction in full, which took nearly 15 days for me to prepare. It was an AO size (I usually prepare charts in AO drawing boards). An outline of Taj Mahal was drawn with the structures like windows, door, etc. There were around 24 windows I put each pasted with a small color image of NT (sold in match box size cardboards those days). With the centre door portion pasted with a standing pose of NT. The reason for designing Taj Mahal being to match the title of the film "Amara Kaviyam" and to my surprise the house of Sripriya looked somewhat like my design. It was placed in the gallery of Devi Theatre on 23rd April 2011 and the Manager of the Theatre very much acclaimed it and gave special attention to see that it is displayed in a prominent place. The reason being I had pasted some jaris and chumkeys along side the borders of the windows and door and it gave a glittering view from a distance.
Unfortunately the banner had attracted too much fans and somebody had been very fortunate and eager to take it away to give me happiness as well as disappointment.
Hope it is with somebody now.
Thank you for the opportunity to recollect the days.
Raghavendran
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
6th May 2011, 12:05 PM
#1835
Senior Member
Devoted Hubber
DEAR BALA SIR and MURALI SIR,
Thankyou for your guidance.
I reside in RTnagar
TAMIL THAAYIN THALAIMAGAN NADIGARTHILAGAM
-
6th May 2011, 12:28 PM
#1836
Senior Member
Veteran Hubber
ராகவேந்தர் சார்,
தங்களின் பதிவு 1981 ஆண்டின் துவக்க மாதங்களுக்கு இட்டுச்சென்றன. அமரகாவியம் திரைப்படத்துக்கு சென்னை தேவி தியேட்டரில் நீங்கள் அமைத்திருந்த 'தாஜ்மகால்' டிசைன் அட்டைப்பதாகை இன்றும் என் நினைவில் இருக்கிறது.
முரளி சார்,
உங்கள் மலரும் நினைவுகள் எனது நினைவலைகளையும் தூண்டி விட்டன. சத்திய சுந்தரம் படத்தில் நடிக்க முடியாமல் போனதால் அப்படி ஒரு பேட்டியளித்த சௌகார்ஜானகி, பின்னர் அப்படம் வெளிவர இருந்த நேரத்தில் நடைபெற்ற விஸ்வரூபம் 100-வது நாள் விழாவில் கலந்துகொண்டு, கலைஞர்களுக்கு வெற்றிக்கேடயங்களை வழங்கினார். (சாந்தியில் விஸ்வரூபம் படத்துக்கு அடுத்த படமாக சத்திய சுந்தரம் வெளியானது). பின்னர் நடிகர்திலகம் 1988-ல் 'தமிழக முன்னேற்ற முன்னணி' துவங்கியபோது, அக்கட்சியில் சேர்ந்து ஆதரவளித்தார்.
'இதயம் பேசுகிறது' பத்திரிகையின் நடவடிக்கை பற்றிச் சொன்னீர்கள். அப்போதைய பத்திரிகைகளில் பெரும்பாலானவை நடிகர்திலகத்தின் எதிர்ப்புப் பத்திரிகையாகவே விளங்கின. குமுதம், இதயம் பேசுகிறது, தினத்தந்தி, மாலைமுரசு, ராணி, பிலிமாலயா போன்ற பல பத்திரிகைகள் அவரைக் குறைசொல்லியே செய்திகளை வெளியிட்டு வந்தன. விகடன், கல்கி, பொம்மை, பேசும் படம், தினகரன் போன்றவை மட்டுமே நடுநிலையோடு எழுதி வந்தன. அதிலும் இதயம் பத்திரிகை மிகவும் மோசம்.
1978 இறுதியில், பைலட் பிரேம்நாத் வெளியாகி ஓடிக்கொண்டிருந்தபோது 'இதயம்' பத்திரிகையில், "இனியும் சிவாஜி நடிக்கத்தான் வேண்டுமா?" என்ற தலைப்பில் மிகவும் மோசமாக அவரை விமர்சித்து கட்டுரை எழுதியதோடு, நடிகர்திலகத்தின் முகத்தை கோரமாக ஒரு கேலிச்சித்திரம் ஒன்றையும் அக்கட்டுரையின் மத்தியில் பிரசுரித்திருந்தது. இதைப்பார்த்து வெகுண்டெழுந்த கல்லூரி மாணவர்களாகிய நாங்களும், சாந்தி வளாக சிவாஜி ரசிகர்களும் சுமார் 150 பேர் கூடி, சென்னை அண்ணாசாலை பல்லவன் போக்குவரத்து அலுவலகத்தின் எதிரே, பெருந்தலைவர் காமராஜர் சிலையருகே, இதயம் பேசுகிறது வார இதழ் பிரதிகளை குவித்துப்போட்டு தீ வைத்துக் கொளுத்தினோம். அதோடு மணியனின் கொடும்பாவி எனப்படும் உருவ பொம்மையும் எரிக்கப்பட்டது. உடனே போலீஸார் வந்து தடியடி நடத்தி எங்களை விரட்டியடித்தனர்.
பின்னர், 1981-ல் அமரகாவியம் படம் வெளியாக பத்து நாட்களுக்கு முன்னர், அப்போது தமிழக அமைச்சராக இருந்த கா.காளிமுத்து, பிரதமர் இந்திராகாந்தியை "வில்லி" என்று விமர்சித்திருந்ததை எதிர்த்து, சாந்தி வளாக ரசிகர்களும், திருவல்லிக்கேணி, சேப்பாக்கம், சிந்தாதிரிப்பேட்டை ரசிகர்களும் காமராஜர் சிலையருகே உண்ணாவிரதம் இருக்க அனுமதிகேட்டோம். போலீஸ் அனுமதி மறுத்தது. இருப்பினும் போலீஸ் தடையை மீறி மறுநாள் காலை எட்டு மணிக்கு உண்ணாவிரதத்தை தொடங்கினோம். சிறிது நேரத்தில் போலீஸ் எங்களைக் கைது செய்து வேனில் ஏற்றி எழும்பூர் போலீஸ் கமிஷனர் அலுவலக காம்பண்டுக்குள் உட்காரவைத்து, சுற்றிலும் போலீஸார் காவலுக்கு நின்றனர்.
ரசிகர்கள் கைதான விஷயம் நடிகர்திலகத்துக்கு எட்டியதும், அவரும், அகில இந்திய ரசிகர்மன்ற தலைவர் தளபது சண்முகம், செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான ராஜசேகரன் ஆகியோரும் கமிஷனர் அலுவலகத்துக்கு விரைந்து வந்தனர். வரும் முன்பே நடிகர்திலகம் போன் மூலம் ஸ்பென்ஸர் கம்பெனிக்கு குளிர்பானத்துக்கு ஆர்டர் கொடுத்து விட்டு வந்தார். வந்ததும் ரசிகர்கள் கைது செய்யப்பட்டு மண்ணில் உட்கார வைக்கப்பட்டிருப்பதைப் பார்த்து உணர்ச்சி வசப்பட்டு கண்கலங்கினார். அதற்குள் குளிர்பானமும் வந்துவிடவே, அவர் எங்களைப்பார்த்து 'இந்த மாதிரி விஷயங்களை மேல்மட்டத்தில் நாங்கள் பார்த்துக்கொள்கிறோம். போலீஸ் அனுமதி மறுத்திருக்கும்போது உண்ணாவிரதம் இருந்திருக்கக்கூடாது. எனக்காகவும் காங்கிரஸுக்காகவும் நீங்கள் இவ்வளவு அன்பு வைத்திருப்பது எனக்கு பெருமையாக இருக்கிறது' என்று சொல்லி அவர் கையாலேயே எல்லோருக்கும் குளிர்பானம் வழங்கி உண்ணாவிரதத்தை முடித்துக்கொள்ளும்படி கேட்டுக்கொண்டார்.
பின்னர் உள்ளே சென்று கமிஷனரிடம் பேசி, சில தஸ்தாவேஜுகளில் நடிகர்திலகம் கையெழுத்திட்ட்பின், பிற்பகலில் நாங்கள் விடுவிக்கப்பட்டோம். இப்போது அவற்றையெல்லாம் அசைபோட வாய்ப்பளித்த முரளி சார், மற்றும் ராகவேந்தர் சார் ஆகியோருக்கும் நன்றி.
-
6th May 2011, 12:42 PM
#1837
Senior Member
Diamond Hubber

Originally Posted by
mr_karthik
ரசிகர்கள் கைதான விஷயம் நடிகர்திலகத்துக்கு எட்டியதும், அவரும், அகில இந்திய ரசிகர்மன்ற தலைவர் தளபது சண்முகம், செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான ராஜசேகரன் ஆகியோரும் கமிஷனர் அலுவலகத்துக்கு விரைந்து வந்தனர். வரும் முன்பே நடிகர்திலகம் போன் மூலம் ஸ்பென்ஸர் கம்பெனிக்கு குளிர்பானத்துக்கு ஆர்டர் கொடுத்து விட்டு வந்தார். வந்ததும் ரசிகர்கள் கைது செய்யப்பட்டு மண்ணில் உட்கார வைக்கப்பட்டிருப்பதைப் பார்த்து உணர்ச்சி வசப்பட்டு கண்கலங்கினார். அதற்குள் குளிர்பானமும் வந்துவிடவே, அவர் எங்களைப்பார்த்து 'இந்த மாதிரி விஷயங்களை மேல்மட்டத்தில் நாங்கள் பார்த்துக்கொள்கிறோம். போலீஸ் அனுமதி மறுத்திருக்கும்போது உண்ணாவிரதம் இருந்திருக்கக்கூடாது. எனக்காகவும் காங்கிரஸுக்காகவும் நீங்கள் இவ்வளவு அன்பு வைத்திருப்பது எனக்கு பெருமையாக இருக்கிறது' என்று சொல்லி அவர் கையாலேயே எல்லோருக்கும் குளிர்பானம் வழங்கி உண்ணாவிரதத்தை முடித்துக்கொள்ளும்படி கேட்டுக்கொண்டார்.
வாவ் . உங்களைப் போன்றவர்கள் பழைய நிகழ்வுகளை புத்தகங்களாக வெளியிடும் அளவுக்கு நேரடி பங்களிப்பும் அனுபவமும் உள்ளவர்களாக இருக்கிறீர்கள் ..உங்களைப் போன்றவர்கள் எங்களை போன்றோரோடு ஒன்றாக ஒரே மன்றத்தில் சக உறுப்பினராக இருப்பதும் , பரஸ்பரம் விவாதிப்பதும் உண்மையிலேயே என் போன்றோருக்கு பெருமை .
-
6th May 2011, 01:36 PM
#1838
Senior Member
Diamond Hubber

Originally Posted by
joe
வாவ் . உங்களைப் போன்றவர்கள் பழைய நிகழ்வுகளை புத்தகங்களாக வெளியிடும் அளவுக்கு நேரடி பங்களிப்பும் அனுபவமும் உள்ளவர்களாக இருக்கிறீர்கள் ..உங்களைப் போன்றவர்கள் எங்களை போன்றோரோடு ஒன்றாக ஒரே மன்றத்தில் சக உறுப்பினராக இருப்பதும் , பரஸ்பரம் விவாதிப்பதும் உண்மையிலேயே என் போன்றோருக்கு பெருமை .
+1. Precious memories. The sacrifices fans make
" நல்ல படம் , சுமாரான படம் என்பதையெல்லாம் தாண்டியவர் நடிகர் திலகம் . சிவாஜி படம் தோற்கலாம் ..சிவாஜி தோற்பதில்லை." - Joe Milton.
-
6th May 2011, 02:41 PM
#1839
Senior Member
Senior Hubber

Originally Posted by
goldstar
Sarathy sir,
Its funny, but can understand your pain and feeling.
Sathish
Dear Mr. Sathish,
These things are only fond memories. Yes, the pain was there due to the loss of my pet property but; it got vanished quickly when my Father got me one more new cycle. However, before NT, these things are simple.
Regards,
R. Parthasarathy
-
6th May 2011, 03:44 PM
#1840
Senior Member
Platinum Hubber
+2.
I was in Madurai when kalthUN was released...dont wait for earth shattering revealations...I just happened to be there and I remember because of my father lamenting that the very responsibility that I was to him becoming a constraint in him going for the FDFS and associated festivities and amaLi thumaLis. One of the reasons I so love this thread is a lot of you remind me of my (late) father in devotion to NT and anecdotes of fandom.
Murali, Reg this
Plum எல்லாவரையும் பற்றி சொன்னீர்கள். அந்தமான் காதலி சந்திரமோகனை விட்டு விட்டீர்களே!
The answer is here:

Originally Posted by
mr_karthik
ரிஷிமூலம் படத்தில் நடிகர்திலகம் அறிமுகத்தைவிட, அவர் மகன் அறிமுகத்தை பெரிய பில்டப் கொடுத்து எடுத்திருப்பார்கள். பலவருடங்களுக்குப்பிறகு மகனைக் காண ஆவலோடு கே.ஆர்.விஜயா காத்திருக்க, திடீர்னு வந்து தரிசனம் தரும் சக்கரவர்த்தியைப் பார்த்ததும் நமக்கு என்னவோ போலிருக்கும். ஏன் அந்த நேரத்தில் வேறு ஆள் கிடைக்கவில்லையா?.
Deep Impact Chakravarthy had. I mean, as mr_k said, what ye build-up for the son...and then..when that culminates in Mr Basket-Head in all his glorious mediocrity being introduced, the trauma caused is a life-long memory. Chandramohan is relatively benign and ignorable. Similarly, kalthUN Thilakji gets additional ridicule for daring to use that movie name as a moniker and reminding me of ghastly moments he induced in the movie every time I utter his name.
Bookmarks