-
5th April 2012, 11:43 AM
#2601
Senior Member
Seasoned Hubber

Originally Posted by
abkhlabhi
அவர்களுக்கு எல்லாம் தற்போது தெரிவதெல்லாம் ஒரே நடிகர் Big B தான்.
Where as Big B always hails our NT. Just think of other actor movie running houseful like this, first wasteRaj will give half hour lecture that this movie was big hit and blah blah... and also our Tamil TV will telecast most of times. We need to just forget these biased people.
Cheers,
Sathish
-
5th April 2012 11:43 AM
# ADS
Circuit advertisement
-
5th April 2012, 12:52 PM
#2602

Originally Posted by
KCSHEKAR
திரு.முரளி சார், பார்த்தால் பசி தீரும் நிகழ்ச்சியின்போது சொசைட்டியில் சேருவதற்கான விண்ணப்பத்தை பூர்த்திசெய்து கொடுத்திருந்தேன். அப்போதே கட்டணத்தைச் செலுத்தத் தயாராக இருந்தும் தாங்கள் அதுகுறித்து தகவலைத் தெரிவிப்பதாகக் கூறினீர்கள்.
எனக்கு பலே பாண்டியா திரையிட்டது குறித்து எந்த தகவலும் (Through Mobile or Email or even through Hub) இல்லாதது வருத்தமளிக்கிறது.
உறுப்பினர்கள் சேர்க்கை என்னவாயிற்று - மற்றும் NT FAnS [Nadigar Thilagam Film Appreciation Association] செயல்பாடுகள் குறித்து தகவல்களை எதிர்பார்க்கிறேன்.
Thanks
Dear Chandrasekar,
The Association's [earlier called as society] second programme was arranged in a hurry as we had to honour our word of screening one film once in two months due to which many of the prospective members were missed out. Sorry for the communication gap. Would get in touch with you and explain.
Regards
-
5th April 2012, 02:56 PM
#2603
Senior Member
Senior Hubber

Originally Posted by
vasudevan31355
அதே போல இன்னொரு ஆதங்கம்.
கர்ணனின் ஆர்ப்பரிக்கும் வெற்றி தமிழ்த் திரையுலகையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. ஆனால் சிறு நடிகர்கள் முதல் பெரும் நடிகர்கள் வரை எதுவும் கருத்துச் சொல்லாமல் 'கப் சிப்'. இது ஏன்?... எல்லோரும் சந்தோஷப் பட வேண்டிய விஷயம் தானே! "நான் சிறு வயது முதற்கொண்டே சிவாஜி ரசிகன்... அவர் படங்களை முதல் ஷோவே பார்த்துவிடுவேன்" என்று பெரும்பான்மையான நடிகர்கள் பேட்டிகளில் கூறியுள்ளார்கள். அப்படியிருக்கையில் கர்ணனின் வெற்றியைப் பற்றி நடிக நடிகைகள் யாரும் 'மூச்' விடவில்லையே? படம் பிய்த்துக் கொண்டு போகிறதே என்ற கர்வத்திலோ, அகம்பாவத்திலோ இதைக் குறிப்பிடுவதாக தயவு செய்து யாரும் நினைத்து விட வேண்டாம். உலகிலுள்ள நடிகர்களுக்கெல்லாம் வழிகாட்டியாகத் திகழ்ந்த அந்த மாபெரும் கலைஞரின் இறப்புக்குப் பின்னரும் தொடரும் இறவாப் புகழ் வெற்றியை ஒரு மூத்த கலைஞன் என்ற முறையில் இன்றுள்ள இளம் நடிகர்கள் அவரை சிறப்பித்துப் போற்ற வேண்டாமா? எல்லோரும் வாய்மூடி மௌனியாக இருப்பதேன்?
நடிக நடிகையருக்கு ஒரு அன்பு வேண்டுகோள். நடிகர் சங்கத்தின் வாயிலாக நீங்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து ஒருநாள் ஞாயிற்றுக் கிழமை கர்ணன் படம் பாருங்கள். எங்கெங்கோ உலகமெல்லாம் சுற்றுகிறீர்கள். எத்தனையோ மேடை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறீர்கள். குத்தாட்டம், குதியாட்டமெல்லாம் போடுகிறீகள். ஆனால் உங்கள் தொழிலில் உங்களை மேம்படுத்திக் கொள்ள அந்த நடிப்புலக பிரம்மாவின் இந்த காவியத்தைக் கண்டு நடிப்பென்றால் என்ன என்பதை முதலில் பாடம் கற்றுக் கொள்ளுங்கள். நடிகர்திலகத்தை மட்டுமல்ல. ஏனைய அனைத்து நடிகர்களும் இந்தக் காவியத்தில் எத்துணை சிறப்பாக ஏற்ற பாத்திரத்தை திறம்பட செய்திருக்கிறார்கள் என்பதனையும் கூர்ந்து கவனியுங்கள். நடிப்பு தானாய் உங்களை வந்து ஆட்கொள்ளும்.
அன்புடன்,
வாசுதேவன்.
அன்புள்ள திரு. வாசுதேவன் அவர்களே,
அற்புதமான சாட்டையடி! சில ஆண்டுகளுக்கு முன் ஆல்பர்டில் நாடோடி மன்னன் மறு வெளியீட்டின் போது, சில கலைஞர்கள் (பெயர் குறிப்பிட விரும்பவில்லை) எந்த அளவுக்கு அதைப் பெரிதாகக் கொண்டாடினார்கள்! தியேட்டர் விஜயம் என்ன! பெரிய பேட்டி என்ன!!
தான் சார்ந்திருக்கும் மண்ணில், இந்தச் சிங்கம் இன்றும் சாகசம் செய்து கொண்டிருப்பதை ஒரு வார்த்தையாவது, இந்தக் கலைஞர்கள் மட்டுமல்ல மற்ற பிரபலங்கள் பேசுகிறார்களா?
சரியான நேரத்தில் தங்களது ஆழ்ந்த கருத்துக்கள் வெளிப்பட்டிருக்கின்றன.
அன்புடன்,
இரா. பார்த்தசாரதி
-
5th April 2012, 02:57 PM
#2604
Senior Member
Senior Hubber
அன்புள்ள திரு. சந்திரசேகர் அவர்களே,
மறைக்கப்பட்ட உண்மைகளை ஒரு பிரபல நாளிதழ் மூலம் தாங்கள் எடுத்துரைத்ததற்கு நன்றி. எறும்பூரக் கல்லும் தேயும் என்பதைப் போல அடிக்கடி இது போன்ற உண்மைகள் பிரபல நாளிதழ் மற்றும் சஞ்சிகைகளில் வர வர, நடிகர் திலகம் நாம் எல்லோரும் எப்போதும் சொல்லி வரும், அவர் ஒருவர் தான் ஒரே நேரத்தில் மிகப் பெரிய நடிகர் மற்றும் மிகப் பெரிய நட்சத்திரம் என்பது இந்த உலகுக்கு பெரிய அளவில் தெரிய வரும்.
அன்புடன்,
இரா. பார்த்தசாரதி
-
5th April 2012, 03:01 PM
#2605
Senior Member
Senior Hubber
Dear Mr. Mohan Subramanian / Mr. Sivajidhasan,
We extent to you a warm welcome to this glorious thread. Please share your valuable inputs, experiences and references of our beloved Actor, enjoy your stay here and make us enjoy too.
Regards,
R. Parthasarathy
-
5th April 2012, 03:16 PM
#2606
Senior Member
Senior Hubber

Originally Posted by
raghavendra
ராஜ் டி.வி. வீரபாண்டிய கட்டபொம்மனை டிஜிட்டலில் எடுப்பதைப் பற்றி நமக்கு ஆட்சேபணை இல்லை. ஆனால் அவர்கள் எந்த அளவிற்கு விசுவாசமாக நடிகர் திலகத்தின் படங்களுக்கு விளம்பரம் செய்வார்கள் என்பது கேள்விக் குறி. சூப்பர் டூப்பர் ஹிட்டாக ரூ. 200 விலையிலும் விற்பனையாகி வரும் கர்ணன் டிவிடியின் விற்பனையைப் பற்றி மூச்சு விடாத நிறுவனமாச்சே... பதிபக்தி டிவிடியின் அட்டையில் ஜெமினி கணேசன் அவர்களின் படத்தைப் பிரதானமாக போட்டு விளம்பரம் செய்பவர்களாச்சே. மூச்சுக்கு முன்னூறு தரம் ... வேறு டி.வி.டி.க்கு விளம்பரம் செய்யும் நிறுவனமாச்சே... இவர்கள் நடிகர் திலகத்தை முன்னிலைப் படுத்தி அப்படத்தை விளம்பரப் படுத்துவார்களா என்பது...
Million dollar question...
எனவே இதை வேறு யாராவது தயாரித்தால் நடிகர் திலகத்திற்கு உரிய மரியாதை தந்து விளம்பரப் படுத்துவார்கள் என்பதே என் எதிர்பார்ப்பு...
நம்முடைய இந்த ஆதங்கம் அந்த நிறுவனத்திற்கு எட்ட வேண்டும். அவர்கள் இது வரை செய்யாத அளவிற்கு விளம்பரத்தில் நடிகர் திலகத்தை முன்னிலைப் படுத்த வேண்டும். இது வரை அவர்கள் புறக்கணித்து வந்தது போன்று இனிமேலும் செய்தார்களானால், அதற்குரிய பலனை அவர்கள் அனுபவித்தே தீர வேண்டும்.
அன்புள்ள திரு. ராகவேந்தர் அவர்களே,
தங்களின் ஆதங்கம் நூற்றுக்கு நூறு சரி. இப்போதும் அந்த நிறுவனக் கடைக்கு சென்றோமானால், வெளியே, மாற்று நடிகரின் புகழ் பாடும் dvd-க்களின் விளம்பரங்கள் தான் நிறைய இருக்கும். அவர்கள் கைக்கு வீரபாண்டியக் கட்டபொம்மன் மறு வெளியீடு சென்றால், திவ்யா பிலிம்ஸ் அளவிற்கு செய்வார்களா என்பது சந்தேகம் தான்!
"புதிய பறவை" மறு வெளியீட்டிற்கு தாங்கள் தெரிவித்த கருத்துகளும் அருமை. பழைய படங்கள் மற்றும் இசை கணினி மூலம் மெருகேற்றப் படும்போது, இது வரை, ஒரு முயற்சி கூட வெற்றியடையவில்லை என்பது தான் உண்மை. இவர்கள் எவ்வளவு முடியுமோ அந்த அளவிற்கு மூலத்தை கெடுத்து விடுகிறார்கள். எண்ணற்ற முயற்சிகளைப் பார்த்து விட்டேன்.
மாயா பஜார் தெலுங்குப் படம் மறு வெளியீடாக கலரில் மறு வெளியீடு செய்யப் பட்ட dvd என்னிடமுள்ளது. கலர் நன்றாக வந்திருந்தாலும், பின்னணி இசையும் பாடல்களில் வரும் வாத்தியங்களின் இசையும் புதிய முறையில் கோர்க்கப் பட்டு மூலத்தின் அழகைப் பெரிய அளவில் கெடுத்து விட்டிருந்தன. அதிலும், படத்தின் டைட்டிலின் போதே வரும் அந்த அற்புத பிரம்மாண்ட இசை, புதிய வடிவில், துவக்கத்திலேயே கெடுக்கப் பட்டு - முதல் கோணல் முற்றும் கோணல் என்பது போல், துவக்கத்தில் ஏற்பட்ட ஏமாற்றம் படம் நெடுகிலும் தொடர்ந்தது.
கர்ணன் படத்தில் இடம் பெற்ற பாடல்களிலும், ஓரளவிற்கு இந்த நிலை தான். இருப்பினும், நடிகர் திலகம் என்ற பிரம்மாண்டத்தில், இந்தக் குறைகள் முற்றிலும் மறக்கடிக்கப் பட்டுவிட்டது. ஆனால், புதிய பறவை அப்படியல்ல. அந்தப் படத்தின் ஜீவன்கள் இரண்டு. ஒன்று, நடிகர் திலகம் மற்றொன்று இசையமைப்பு. அந்தப் படம் முழுக்க முழுக்க ஒரு மேற்கத்தியப் படம் போல் அமைந்ததற்குக் காரணம் நடிகர் திலகத்தின் மிகக் கவனமான நடிப்பு, மற்றும் உடல் மொழி. இரண்டாவது, படம் நெடுகிலும் அமைந்த மேற்கத்திய பாணி இசை மற்றும் பாடல்கள். நல்ல வேளை, நடிகர் திலகத்தின் நடிப்பை இவர்களால் ஒன்றும் செய்து விட முடியாது. ஆனால், இசை? ஒரு கை பார்த்து விடுவார்கள்.
புதுப்பிக்கப்பட்ட திருத்திய பிரம்மாண்டமான மறு வெளியீடுகளில், (முகலே ஆசாம், மாயா பஜார் ஹம் தோனோ..........), கர்ணன் படம் மட்டுமே மிகப் பெரிய வெற்றியைக் கண்டிருக்கிறது. இது சாத்தியமானது, நடிகர் திலகம் என்கின்ற அற்புதக் கலைஞனின் திரையால் மட்டுமே!
அன்புடன்,
இரா. பார்த்தசாரதி
-
5th April 2012, 03:53 PM
#2607
Senior Member
Diamond Hubber
நன்றி திரு சிவாஜி தாசன் அவர்களே!
தாங்கள் கூறியுள்ளது முற்றிலும் சரி! நீங்கள் ஏன் 'தெய்வ மகன்' வரைக்கும் போய் விட்டீர்கள்? இப்போதுள்ள நடிகர்களில் யாரையாவது 'பூப்பறிக்க வருகிறோம்' அந்த 'தாத்தா' ரோலை செய்யச் சொல்லுங்கள் பார்ப்போம்.
அன்பு பாலா சார்,
மிக்க நன்றி! நீங்கள் கூறியுள்ளது போல் இந்த நடிகர்களை எல்லாம் ஒரு நடிகராக பார்ப்பதே / மதிப்பதே தவறு என்ற எண்ணத்தைத்தான் அவர்கள் அறியாமல் நம்மிடம் ஏற்படுத்துகிறார்கள். ஒரு வார்த்தையானாலும் நச்'சென சொல்லிவிட்டீர்கள்.
டியர் சதீஷ் சார்,
மிக அழகாக என் மனதின் ஆதங்கத்தை தங்கள் பதிவின் மூலமாகத் தீர்த்து விட்டீர்கள். அப்படி ஒரு படம் இப்படி வெற்றி பெற்றிருந்தால் அந்த சத்திய நடிகர் மட்டுமல்ல.இன்னும் எத்தனை பேர் எப்படியெல்லாம் ஆட்டம் போட்டிருப்பார்கள்? எல்லாம் சுய லாபத்திற்காகவும், சுய விளம்பரத்திற்காகவும் தான்.
அப்படிப்பட்ட போலித்தனமான பற்றுதல்கள் நமக்குத் தேவையில்லைதான்.
தான் சார்ந்திருக்கும் மண்ணில், இந்தச் சிங்கம் இன்றும் சாகசம் செய்து கொண்டிருப்பதை ஒரு வார்த்தையாவது, இந்தக் கலைஞர்கள் மட்டுமல்ல மற்ற பிரபலங்கள் பேசுகிறார்களா?
அன்பு பார்த்தசாரதி சார் அவர்களே!
ஒரு சிறு இடைவெளிக்குப் பின்னர் திரியில் அமர்க்களமாகப் புகுந்துள்ளீர்கள். தங்களை அன்புடன் வருக வருக என வரவேற்கிறேன். அன்பு பம்மலாரும் வந்தாகி விட்டது. தாங்களும் வந்து விட்டீர்கள். இனி சாரதா மேடமும், அன்பு கார்த்திக் சாரும் தான் பாக்கி. மிகுந்த சந்தோஷமாய் இருக்கிறது. அதை விட மிகுந்த சந்தோஷம் தங்கள் பாடல் திறனாய்வு மூலம் எங்களுக்கு கிடைக்கப் போகிறது என்பதுதான். எதிர்பார்த்துக் காத்திருக்கிறோம். அசத்துங்கள். தங்கள் அன்புப் பாராட்டிற்கு என் இதயபூர்வமான நன்றிகள்.
அன்புடன்,
வாசுதேவன்.
Last edited by vasudevan31355; 5th April 2012 at 03:59 PM.
-
5th April 2012, 04:35 PM
#2608
Senior Member
Seasoned Hubber

Originally Posted by
Murali Srinivas
Dear Chandrasekar,
The Association's [earlier called as society] second programme was arranged in a hurry as we had to honour our word of screening one film once in two months due to which many of the prospective members were missed out. Sorry for the communication gap. Would get in touch with you and explain.
Regards
Thanks Murali Sir. Don't mistake me for raising this question.
-
5th April 2012, 04:36 PM
#2609
Senior Member
Seasoned Hubber

Originally Posted by
parthasarathy
அன்புள்ள திரு. சந்திரசேகர் அவர்களே,
மறைக்கப்பட்ட உண்மைகளை ஒரு பிரபல நாளிதழ் மூலம் தாங்கள் எடுத்துரைத்ததற்கு நன்றி. எறும்பூரக் கல்லும் தேயும் என்பதைப் போல அடிக்கடி இது போன்ற உண்மைகள் பிரபல நாளிதழ் மற்றும் சஞ்சிகைகளில் வர வர, நடிகர் திலகம் நாம் எல்லோரும் எப்போதும் சொல்லி வரும், அவர் ஒருவர் தான் ஒரே நேரத்தில் மிகப் பெரிய நடிகர் மற்றும் மிகப் பெரிய நட்சத்திரம் என்பது இந்த உலகுக்கு பெரிய அளவில் தெரிய வரும்.
அன்புடன்,
இரா. பார்த்தசாரதி
Dear Parthasarathy Sir. Thanks for your appreciation. What you said is 100% correct
-
5th April 2012, 04:36 PM
#2610
Senior Member
Diamond Hubber
Mughal-E-Azam ஒரு அற்புதமான படம் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. அவ்வளவு அருமையான படம் அது. பிரம்மாண்டத்தின் மறு வடிவம். கிட்டத்தட்ட இரண்டரை ஆண்டுகள் பல லட்சங்கள் செலவு செய்து பல வெளிநாட்டு தொழில் நுட்ப வல்லுனர்களை வைத்து புதுப்பிக்கப் பட்டது அந்தப் படம். ஒவ்வொரு காட்சிகளும் இழைத்து இழைத்து செதுக்கப் பட்டும் திரு பார்த்தசாரதி அவர்கள் சொன்னது போல் படத்தின் உயிர்நாடியான இசை மற்றும் பின்னணி இசை பாழடிக்கப் பட்டிருந்தது. படமும் ரீ -ரிலீசில் அவுட். மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கிடையே புஸ்வாணமாகி போனது அப்படம்.
ஆனால் கர்ணன் அப்படியல்ல. Mughal-E-Azam அளவிற்கு பிரம்மாண்டத் தயாரிப்பல்ல. ஆனால் பிரம்மாண்ட வெற்றி. காரணம் ஊருக்கே தெரியும். உலகத்திற்கே தெரியும். நடிகர் திலகம்...நடிகர் திலகம்...நடிகர் திலகம். அங்கே புகழ்க் கொடி நாட்டிய திலீப் குமார், பிருதிவிராஜ்கபூர், மதுபாலா ஆகியோர் இருந்தும் படம் எதிர்பார்த்த வெற்றி இல்லை. ஏனெனில் நடிகர் திலகத்தின் உயிர்த்துடிப்பான நடிப்பு அங்கு இல்லை. இறுகிய ஒரே முக பாவனைத் தோற்றத்துடன் திலீப் குமார். நல்ல நடிகர் தான். ஆனால் கம்பீரத் தோற்றமும், கர்ஜனை நடிப்பும் மிஸ்ஸிங்.
அது பிரம்மாண்டத் தயாரிப்பானாலும் சரி, பிரம்மாண்டம் இல்லாவிட்டாலும் சரி. எப்படிப்பட்ட பிரம்மாண்டங்களையும் தன் உயரிய நடிப்பால் விழுங்கி ஏப்பம் விட்டு விடுபவர் நடிகர் திலகம் மட்டுமே.
Mughal - E - Azam படத்தில் மிக பிரம்மாண்டமாய் எடுக்கப்பட்ட, திரு.நவ்ஷாத் அவர்களின் மயக்கும் இசையில் உருவான 'Pyar Kiya To Darna Kya' என்ற லதா அவர்களின் இனிய குரலில் ஒலிக்கும் காலத்தை வென்ற அற்புதமான பாடல். பாடல் காட்சியின் பின்னணியில் தெரியும் பிரம்மாண்டத்தைப் பாருங்கள்!
அன்புடன்,
வாசுதேவன்.
Bookmarks