-
11th May 2012, 02:45 PM
#3311
Senior Member
Seasoned Hubber
அன்பு நண்பர்களே,
நடிகர் திலகத்தின் பொது நலத் தொண்டுகளைப் பற்றியும் தேசிய இயக்கத்தில் இருந்த போது நாடெங்கும் அவர் அமைத்துத் தந்த ஏராளமான படிப்பகங்கள், அதே போல் திறந்து வைத்த பொது கட்டிடங்கள், கொடி மரங்கள், கல்வெட்டுக்கள், அரங்குகள் உள்ளிட்ட வற்றைப் பற்றி அடுத்த தலைமுறைக்கு விளக்கமாக எடுத்துச் சொல்ல வேண்டும். அவருடைய எண்ணற்ற நற்செயல்களை நாடு முழுதும் ஏராளமான கல்வெட்டுக்கள் இன்றும் பறை சாற்றிக் கொண்டுள்ளன. அவர் ஒரு நடிகர் மட்டும் என்பதோடு நிறுத்தி விடாமல் இந்த நாட்டில் தேசியம் தழைத்தோங்க வேண்டும் நாட்டுப் பற்றில் நாம் சிறந்து விளங்கவேண்டும் என்ற முனைப்போடு நமது ரசிகர் மன்றங்கள் மற்றும் பிற பொது அமைப்புகள் மூலமாக செய்துள்ள காரயங்களுக்கு இந்த கல்வெட்டுக்களே அத்தாட்சி. எனவே இதன் மூலம் நாம் அனைத்து ரசிகர்களையும் தாழ்மையுடன் வேண்டுவது, தயவு செய்து ஆங்காங்கே தாங்கள் இருக்கும் பகுதியில் எந்தெந்த கல்வெட்டில் நடிகர் திலகத்தின் பெயர் காணப் படுகிறதோ அதனையெல்லாம் நிழற்படமாக இங்கே பகிர்ந்து கொள்ள வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன். இந்தக் காலகட்டத்தில் இது கடினமாக இருக்காது. ஏனெனில் கிட்டத் தட்ட அனைத்து கைப்பேசிகளிலும் காமிரா இருக்கக் கூடும். எனவே இதனை ஒரு தவமாக மேற்கொண்டு அனைவரும் செயல் பட வேண்டும் என வேண்டுகிறேன்.,
தொடக்கமாக, நமக்கு கிடைத்த ஒரு நிழற்படத்தை இங்கே பகிர்ந்து கொள்வதில் மகிழ்வுறுகிறேன். புதுச்சேரி ராஜா திரையரங்கினை 1968ம் ஆண்டு நடிகர் திலகம் தலைமையில் அப்போதைய ஆளுநர் அவர்கள் திறந்து வைத்த படத்தை இங்கே காணலாம்.
-
11th May 2012 02:45 PM
# ADS
Circuit advertisement
-
11th May 2012, 05:10 PM
#3312
Junior Member
Newbie Hubber
Welcome back Mr.karthick.We missed you a lot.It is not same without your contributions.
-
12th May 2012, 02:23 AM
#3313
Senior Member
Veteran Hubber

Originally Posted by
mr_karthik
அன்பு நண்பர்கள் அனைவருக்கும் நல்வாழ்த்துக்கள்.
கடந்த நான்கு மாதங்களாக ஒரு ரிமோட் ஏரியாவில் பணிக்கு அனுப்பப்பட்டதால் திரியில் தொடர்ந்து பங்கேற்காத சூழ்நிலையில் சிக்கிக்கொண்டு, மூன்று நாட்களுக்கு முன்பே மீண்டு வந்தேன். அன்றைக்கே திரிக்கு வந்து விட்டேன். விட்டுப்போன பக்கங்களனைத்தையும் படித்த பின்பே பதிவிட வேண்டும் என்ற எண்ணத்தில், இன்றுதான் படித்து முடித்தேன்.
இடையிடையே திரியில் பெரிய பெரிய புயல்கள் அடித்து ஓய்ந்தது போல தெரிகிறது. அதன் காரணமாக திரியின் முக்கிய பங்கேற்பாளர்களான அன்புச்சகோதரர் வாசுதேவன் போன்றவர்கள் ஒதுங்கியிருப்பது மனதுக்கு வருத்தமளிக்கிறது.
விடைபெறும் வேளையிலும் கூட என்னை மறவாமல் திரிக்கு திரும்ப அழைத்து விட்டுச்சென்றிருக்கும் அந்த நல்ல இதயம் திரும்பவும் திரிக்கு திரும்பி தனது அதிரடி பதிவுகளால் திக்குமுக்காடச்செய்ய வேண்டும்.
இது எனது அன்பான மற்றும் உரிமையான வேண்டுகோள். (பணியின் காரணமாக ஒதுப்க்கியிருப்பின், அவ்வப்போது வந்து சிறு சிறு பதிவௌகளையாவது தந்து எங்களுக்கு தெம்பூட்ட வேண்டும்). மின்னஞ்சல் மூலம் பம்மலார அவர்கள் வழியாக இடும் பதிவுகளை இங்கே நேரடியாக இட்டு பம்மலார் அவர்களின் சிரமத்தைக் குறைக்க வேண்டும்.
நமது ஒரே நோக்கம் நடிகர்திலகத்தின் புகழ் பரப்புவதே. அதனை எந்த வித மனமாச்சரியங்களையும் வென்று தொடருவோம்.
டியர் mr_karthik,
WELCOME BACK ! IT IS GREAT TO HAVE YOU HERE, ONCE AGAIN !
தங்களது பதிவுகளைக் கண்டவுடன் எனக்கு புதுத்தெம்பு வந்துவிட்டது என்று கூறுவதோடு ஒரு யானைபலமும் வந்துவிட்டது என்று கூறுவதே சரியாக இருக்கும். கடந்த நான்கு மாதங்களாக தாங்கள் இன்றி இத்திரி வெறிச்சோடிக்கிடந்தது என்பது மறுக்க முடியாத உண்மை. தவிர்க்க இயலாத காரணங்களினால் தாங்கள் பதிவுகளை அளிக்க இயலவில்லை என்பது புரிந்திருந்தாலும், இவ்வளவு நீண்ட இடைவெளி விடமாட்டாரே, ஏன் இப்படி என்று ஒரு பதைபதைப்பும் இருந்தது. [வாசு சாரும், நானும் கைபேசியில் பேசும் போது இதுகுறித்தும், தங்களையும், சகோதரி சாரதா அவர்களைப் பற்றியும், தங்கள் இருவரது பொன்னான பதிவுகளைப் பற்றியும் பேசாத நாட்களே இல்லை]. தாங்கள் எப்படியும் திரியைப் பார்ப்பீர்கள் என்ற நோக்கத்தில்தான், இரண்டரை மாதத்திற்கு பிறகு நான் திரிக்கு மறுபிரவேசம் செய்த சில தினங்களில், நந்தன வருட தமிழ்ப்புத்தாண்டு பிறந்த சமயத்தில், தங்களையும், சாரதா அவர்களையும் மீண்டும் பதிவுகளை அளிக்க வருமாறு அன்புடன் அழைத்திருந்தேன். இதே போல நமது வாசு சாரும், புதுப்புயல் கோபால் சாரும் தங்களிருவருக்கும் அழைப்பு விடுத்திருந்தார்கள். இவற்றைத் தாங்கள் நிச்சயம் பார்த்திருப்பீர்கள், படித்திருப்பீர்கள். எங்கள் அன்பு வேண்டுகோளை ஏற்று ரிமோட் ஏரியாவில் இருந்து திரும்பிய உடனேயே நமது திரியைப் படித்துக் களித்ததோடு மட்டுமல்லாமல், தங்களின் இணையில்லாப் பதிவுகளையும் உடனே அளித்தமைக்காக தங்களுக்கு எனது ஆத்மார்த்தமான நன்றிகள் !
அன்புடன்,
பம்மலார்.
Last edited by pammalar; 12th May 2012 at 02:27 AM.
pammalar
-
12th May 2012, 02:52 AM
#3314
Senior Member
Veteran Hubber

Originally Posted by
mr_karthik
அன்புள்ள பம்மலார் சார்,
ஆவணக்களஞ்சியமான தங்களது ஆவணப்பதிவுகள் எப்போதும்போல எங்கள் மனதை நிறைக்கின்றன. தங்களது பணிக்கு ஈடு இணையே கிடையாது. இதனை இதற்கு முன ஆயிரம் தடவை சொல்லியிருப்பினும், ஆயிரத்தோராவது தடவையாக இருக்கட்டும்.
மற்ற அனைவரும் நடிகர்திலகத்தின் அபார நடிப்பாற்றலை ஆராய்ந்து அவர் 'மிகச்சிறந்த திறமையாளர்' என்று (எல்லோரும் ஒப்புக்கொள்ளக்கூடிய விஷயத்தையே) விவாதித்துக் கொண்டிருக்கும்போது.....
நீங்கள் மட்டுமே அவர் திறமையாளர் மட்டுமல்ல "மிகப்பெரிய சாதனையாளர்" என்று (பெரும்பாலோர் பாடுபட்டு மறைக்க முயலும் விஷயத்தை) தாங்கள் சிரமப்பட்டு சேகரித்து அளிக்கும், யாராலும் மறுக்க முடியாத பொன்னுக்கும் மேலான பொக்கிஷ ஆதாரங்களால் ஆணித்த்ரமாக உலகுக்கு அளித்து மிகச்சிறந்த தொண்டாற்றி வருகிறீர்கள். (உண்மையை சொன்னால், நான் தீவிர ரசிகனாயிருந்தும் 'வியட்நாம் வீடு' 100-வது நாள் விளம்பரங்களையெல்லாம் இப்போதுதான் பார்க்கிறேன்).
இடையில் தாங்களும் ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் ஓய்வில் அல்லது வேறு பணியில் இருந்ததால், பொங்கல் மற்றும் குடியரசு தின சாதனை வெளியீடுகளைக் கண்ணுறும் வாய்ப்பு எங்களுக்கு கிடைக்கவில்லை. இப்போது பருவம் தப்பியிருப்பினும் 'ராஜா' போன்ற சாதனைப்படங்களின் 100-வது நாள் விளம்பரங்களை மட்டுமாவது வெளியிட்டு எங்களது ஆர்வத்தை பூர்த்தி செய்யலாமே.
செய்வீர்கள் என்று எதிர்பார்க்கிறோம்.
டியர் mr_karthik,
வான்மழை போன்ற தங்களின் பாராட்டுப்பதிவுக்கு எனது இதயபூர்வமான எண்ணிலடங்கா நன்றிகள் !
தங்களை மீண்டும் 'வருக ! வருக !' என உளமார வரவேற்கிறேன் ! இதேபோல் சகோதரி சாரதா அவர்களின் வருகையையும் ஆவலோடு எதிர்பார்க்கிறேன் !
திரைக்காவிய ரிலீஸ்மேளாவில் விடுபட்டுப் போன மாதங்களின் ஆவணப் பொக்கிஷங்களில் மிக முக்கியமானவற்றை விரைவில் தர முயற்சிக்கிறேன். தங்களுக்காகவும், இங்குள்ள அனைவருக்காகவும் "ராஜா"வின் சாதனைச் செப்பேடுகளை சில தினங்களில் பதிவிடுகிறேன்.
தங்களின் 'முதல் வெளியீட்டு தின திரையரங்கு கொண்டாட்டப்' பதிவுகளை மீண்டும் காண மிகுந்த ஆவல். தொடர்ந்து அசத்துங்கள் !
பாசத்துடன்,
பம்மலார் என்கிற 'ஜீபூம்பா'.
-
12th May 2012, 03:00 AM
#3315
Senior Member
Veteran Hubber

Originally Posted by
Gopal,S.
ராக(வேந்தரே),
இரண்டாயிரம் பதிவுக்கு எனது சிரம் தாழ்ந்த இரண்டாயிரம் வணக்கங்கள்.பத்தாயிரம் வணக்கங்கள் சொல்லும் நாளுக்காக காத்திருக்கிறேன்.
பம்மலார் அவர்களே,
தங்கள் பதிவுளுக்கான பாராட்டுகளை எழுதி எழுதி எங்கள் கைகள் ஓய்ந்தன.கேட்டு கேட்டு உமது செவியும் சாய்ந்தன. ஆனால் உங்கள் மனம் திறந்து அடுத்தவரை பாராட்டும் பெருந்தன்மையை குறிக்கா விட்டால் நான் நன்றி மறந்தவன் ஆவேன்.அடுத்தவருக்கு உதாரணமான உயர்ந்த குணம்.நீங்கள் குடும்பம் கண்டு ஆல் போல் பெருகி தழைத்து வாழ தங்களை விட சிறிதே மூத்தவன் (வயதில்)என்ற வகையில் வாழ்த்துகிறேன்.
தங்களது பாராட்டுக்களுக்கும், வாழ்த்துக்களுக்கும் வளமான நன்றிகள், அடிகளாரே..!
-
12th May 2012, 03:05 AM
#3316
Senior Member
Veteran Hubber

Originally Posted by
RAGHAVENDRA
பட்டிக்காடா பட்டணமா திரைக்காவியம் மே 6, 1972 அன்று வெளியானது. அதனை நினைவூட்டும் வகையில் விளம்பர நிழற்படம் விரைவில் எதிர்பாருங்கள் என்பதைத் தான் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.
தாங்கள் விரும்புவது போல் நடக்காது என சொல்ல முடியாது. அதற்கான காலம் நேரம் சூழ்நிலை எல்லாம் வரவேண்டும்.
டியர் ராகுல், ராகவேந்திரன் சார் குறிப்பிட்டுள்ளதே சரி..!
-
12th May 2012, 03:48 AM
#3317
Senior Member
Veteran Hubber

Originally Posted by
KCSHEKAR
டியர் பம்மலார்,
ஏப்ரல் மாதத்தை பொம்மை கல்யாணத்துடன் மங்களகரமாக நிறைவு செய்து, மே மாதத்தை நல்லதொரு குடும்பத்துடன் துவக்கி சளைக்காமல் ஆவணப் பதிவுகளை அள்ளி வழங்கி வரும் தங்களுக்கு வாழ்த்துக்கள், நன்றி.
தங்களின் பாராட்டுக்கு நன்றி, சந்திரசேகரன் சார்.
ஏப்ரல் மாதத்தில் 'பொம்மை கல்யாண்ம்', அதன்பின் மே மாதத்தில் 'நல்லதொரு குடும்பம்' துவக்கம் என்கின்ற ரீதியில் தங்களது பதிவில் வார்த்தைஜாலம் அர்த்தபுஷ்டியுடன் நன்றாகவே இருக்கிறது. இருப்பினும் "பொம்மை கல்யாணம்" மே மாதம் வெளியான காவியம். கலையுலக ஏஞ்சலின் ஏப்ரல் காவியங்கள் "தர்மராஜா"வோடு நிறைவுற்றது. நயாகரா நகர மேயரின் மே மாத நற்காவியங்கள் "காவல் தெய்வம்" காவியத்தோடு துவங்கியுள்ளது.
Last edited by pammalar; 12th May 2012 at 03:51 AM.
pammalar
-
12th May 2012, 04:14 AM
#3318
Senior Member
Veteran Hubber

Originally Posted by
RAGHAVENDRA
அன்பு நண்பர்களே,
நடிகர் திலகத்தின் பொது நலத் தொண்டுகளைப் பற்றியும் தேசிய இயக்கத்தில் இருந்த போது நாடெங்கும் அவர் அமைத்துத் தந்த ஏராளமான படிப்பகங்கள், அதே போல் திறந்து வைத்த பொது கட்டிடங்கள், கொடி மரங்கள், கல்வெட்டுக்கள், அரங்குகள் உள்ளிட்ட வற்றைப் பற்றி அடுத்த தலைமுறைக்கு விளக்கமாக எடுத்துச் சொல்ல வேண்டும். அவருடைய எண்ணற்ற நற்செயல்களை நாடு முழுதும் ஏராளமான கல்வெட்டுக்கள் இன்றும் பறை சாற்றிக் கொண்டுள்ளன. அவர் ஒரு நடிகர் மட்டும் என்பதோடு நிறுத்தி விடாமல் இந்த நாட்டில் தேசியம் தழைத்தோங்க வேண்டும் நாட்டுப் பற்றில் நாம் சிறந்து விளங்கவேண்டும் என்ற முனைப்போடு நமது ரசிகர் மன்றங்கள் மற்றும் பிற பொது அமைப்புகள் மூலமாக செய்துள்ள காரயங்களுக்கு இந்த கல்வெட்டுக்களே அத்தாட்சி. எனவே இதன் மூலம் நாம் அனைத்து ரசிகர்களையும் தாழ்மையுடன் வேண்டுவது, தயவு செய்து ஆங்காங்கே தாங்கள் இருக்கும் பகுதியில் எந்தெந்த கல்வெட்டில் நடிகர் திலகத்தின் பெயர் காணப் படுகிறதோ அதனையெல்லாம் நிழற்படமாக இங்கே பகிர்ந்து கொள்ள வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன். இந்தக் காலகட்டத்தில் இது கடினமாக இருக்காது. ஏனெனில் கிட்டத் தட்ட அனைத்து கைப்பேசிகளிலும் காமிரா இருக்கக் கூடும். எனவே இதனை ஒரு தவமாக மேற்கொண்டு அனைவரும் செயல் பட வேண்டும் என வேண்டுகிறேன்.,
தொடக்கமாக, நமக்கு கிடைத்த ஒரு நிழற்படத்தை இங்கே பகிர்ந்து கொள்வதில் மகிழ்வுறுகிறேன். புதுச்சேரி ராஜா திரையரங்கினை 1968ம் ஆண்டு நடிகர் திலகம் தலைமையில் அப்போதைய ஆளுநர் அவர்கள் திறந்து வைத்த படத்தை இங்கே காணலாம்.

டியர் ராகவேந்திரன் சார்,
கல்வெட்டு ஐடியா சிறந்த ஒன்று !
இதுமாதிரி விஷயங்களில் நாம் முயற்சிக்க வேண்டும் என்று சென்ற வருடம்கூட ஒரு முறை mr_karthik அவர்கள் ஒரு பதிவு அளித்திருந்தார். [அவர் அதில் குறிப்பிட்டு சொல்லியிருந்தது திரையரங்கில் உள்ள நமது காவியங்களின் சாதனை ஷீல்டுகள் குறித்து..அவற்றை படம்பிடித்து இங்கே இடுகை செய்யலாம் என்று கூறியிருந்தார்].
பாண்டிச்சேரி (இன்றைய புதுச்சேரி) 'ராஜா' திரையரங்கம் மிக மிகப் பழமையான திரையரங்கம். 2000 இருக்கைகளைக் கொண்டது. நமது முழுமுதற் திரைக்காவியமான "பராசக்தி" இவ்வரங்கில் வெளியாகி 50 நாட்கள் மிக வெற்றிகரமாக ஓடியது. எனவே, இத்திரையரங்கம் 1950களின் ஆரம்ப ஆண்டுகளிலேயே இருந்துள்ளது என்பது புலனாகிறது. அப்படியிருக்க, கல்வெட்டில் 'OPENED ON 14TH JULY 1968' என்றுள்ளதே. 'REOPENED AFTER RENOVATION.........' என்றுதானே இருக்க வேண்டும். என்னுடைய தகவலில் ஏதேனும் பிழை இருக்கிறதா..?! இதற்கு தங்களின் மேலான பதில் தேவை.
அன்புடன்,
பம்மலார்.
-
12th May 2012, 05:34 AM
#3319
Senior Member
Veteran Hubber
நமது வாசு சாரின் மின்னஞ்சல் மடல்:
அன்பு பம்மலார் சார்,
மகிழ்ச்சியான செய்தியை பகிர்ந்து கொள்வோம். நாம் நீண்ட நாட்களாக ஆவலுடன் எதிர்பார்த்த நம் கார்த்திக் சார் வந்து விட்டார். அவரை நம் சார்பாக வருக வருக என வரவேற்போம்.
'நல்லதொரு குடும்பம்' முதல் வெளியீட்டு விளம்பரம் நல்லதொரு விளம்பரம்.
மூக்கைய்யா தேவர் என் கணினியின் desktop ஐ அலங்கரித்துக் கொண்டிருக்கிறார். நன்றிகள் பல.
'பட்டிக்காடா பட்டணமா' சாதனைகள் தங்கள் கைவண்ணத்தில் பட்டிதொட்டி முதல் பட்டணங்கள் வரை பட்டையைக் கிளப்பப் போவது நிஜம்.
vasudevan.
உண்மை, வாசு சார் ! mr_karthik அவர்களின் வருகை நமக்கு எல்லையில்லா மகிழ்ச்சியைத் தருகிறது. சகோதரி சாரதாவும் விரைவில் வருவார்கள் என்று நம்புவோம் !
நமது திரி தங்களையும் விடாது. 'மாறுவது மனம் சேருவது இனம்' என்ற கவியரசரின் வாக்கிற்கிணங்க தாங்களும் கூடிய விரைவில் இங்கு வந்தே தீருவீர்கள்..!
தங்களது பாராட்டுதல்களுக்கு எனது கனிவான நன்றிகள்..!
-
12th May 2012, 05:40 AM
#3320
Senior Member
Veteran Hubber

Originally Posted by
KCSHEKAR
பணியிருப்பினும் பம்மலார் மூலம் பதிவுகளை அளிக்கும் வாசுதேவன் அவர்களுக்கும், சுகமான சுமையாக அதனைப் பதிவேற்றும் பம்மலார் அவர்களுக்கும் நன்றி.
வாசு சார் இங்கே பதிவுகளை அளிக்க வரும் வரை, அவரது மின்னஞ்சல் மடல்களை இங்கே இடுகை செய்வது எனக்கு ஒரு சுகமான சுமையா - அல்ல - ஒரு மெய்யான ஆறுதல்....!
Bookmarks